Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாக்குகளுக்கான நீண்ட இழுபறிப் பேரம் முடிவுக்கு வந்தது: சரத் பொன்சேகாவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு

Featured Replies

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அதன் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது.

இந்த முடிவு - நாளை செவ்வாய்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

அரசுத் தலைவர் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்ற திங்கட்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடினர்.

கூட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான போது இரு முதன்மை வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாகக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

இதனை அடுத்து - கூட்டமைப்பு உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. ஆனாலும், முதல் கட்ட கலந்துரையாடலில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை; அதனால், மாலை 4.00 மணியின் பின்னரும் கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்றது.

மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

அப்போது - சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதையிட்டு சம்பந்தன் விளக்கிக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் சம்பந்தனுடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் - கூட்டமைப்பின் கூட்டம் நாளை செவ்வாய்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தின் பின்னர் கூட்டமைப்பின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனாலும் - சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்பது தான் கூட்டமைப்பின் நிலைப்பாடு என, இன்று மாலை சரத் பொன்சேகாவைச் சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அவருக்கு உறுதியளித்துவிட்டதாக புதினப்பலகை அறிகின்றது.

http://www.puthinappalakai.com/view.php?20100104100272

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

----தணிக்கை

உங்களின் தனிப்பட்ட ஊகங்கள் செய்திகளோ தகவலோ ஆகாது. ஆதாரம் இருப்பின் தரவும். பிரதான திரிக்கு மாறாக் எழுதுவது எச்சரிக்கை புள்ளிகளையும், தற்காலிக தடையையும் பின் நிரந்தர தடையையும் கொண்டு வரும். : நிழலி

Edited by நிழலி

நிழலி! மதிவதனங் சேணை இழுக்கிறார். பண வரவு நிற்கும் என்கிற நினைவில் முன்னுக்கு பின் முரணாக எழுதுவார்.ஆனாலும் நீங்கள் விழிப்போடு இருப்பது மகிழ்ச்சி. இவரைப்போல் ஒரு குழுவே இணையங்களில் ஊடுருவி எதிர்ப்பிரச்சார வேலைகளை செய்கிறார்கள். எல்லாவற்றையும் எமக்கு சார்பாக மாற்ற நாம் பழக வேண்டும்.

கொஞ்சம் பொறுங்கோ...... தேர்தலில் சரத் வேண்டல்.... காசுக்கு கருத்தேளுதுறாக்களுக்கு பஜட் கட் வரும் வந்தாப்பிறகு பாப்பம்....

இப்பவே தணிக்கை கினிக்கை எண்டு தொடங்க வேண்டாம்....

நல்லதோ கெட்டதோ.... நான் தணிக்கைக்கு எதிரானவன்...

இப்பவே தணிக்கை கினிக்கை எண்டு தொடங்க வேண்டாம்....

கருத்துகளுக்கு தணிக்கை இல்லை...ஆனால் ஊகத்தின் அடிப்படையில் ஒருவரை அல்லது ஒரு சாராரை தூற்றுவது தவறு; ஆதாரம் இல்லாக் குற்றச்சாட்டுக்கு யாழில் இடமில்லை இனி

Edited by நிழலி

சர்வதேச அரசியல் யதார்த்தங்களும், அரசியல் இராஜதந்திரங்களும் ஒருபுறம். உணர்ச்சி சார்ந்த அரசியல் எதிர்பார்ப்புக்கள் ஒருபுறம். இரண்டு பக்கமும் நியாயங்களும், விளக்கங்களும் என்னதான் கொடுக்கப்பட்டாலும், கடைசியாக துன்பப்படும் ஓரினம் அவல நிலையிலிருந்து விடுபட என்னதான் வழி? உணர்ச்சி பொங்கி வழிவதாலும், அரசியல் மேதாவித்தனமான வாதங்களாலும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிட்டிவிடாது. அப்படியானால், நடைமுறை சாத்தியமான வழிதான் என்ன?

தமது நலன்களுக்காக யாரும் பரிந்து பேசுவார்கள் என உலகில் எந்தவொரு நாட்டு மக்களும் சர்வதேசத்தை எதிர்பார்த்து நிற்க முடியாது. தமது அவலங்களைக் கண்டு மனம் இரங்குவார்கள் என்று சர்வதேச அரசியல் இராஜதந்திரத்திடம் மனிதாபிமானத்தை எதிர்பார்த்திருப்பதிலும் பயனில்லை.

இந்த சர்வதேச அரசியல் நலன்களுக்குள் பொருந்தக்கூடிய வகையில் தமது நலன்களை இராஜதந்திர ரீதியாக நிலைநிறுத்திக்கொள்வதொன்றே, உலக அரசியல் ஒழுங்குக்குள் எந்தவொரு நாடோ, இனமோ தன்னுடைய நலன்களை வென்றெடுப்பதற்கான நடைமுறை சாத்தியமான ஒரே வழிமுறை.

கருத்துகளுக்கு தணிக்கை இல்லை...ஆனால் ஊகத்தின் அடிப்படையில் ஒருவரை அல்லது ஒரு சாராரை தூற்றுவது தவறு; ஆதாரம் இல்லாக் குற்றச்சாட்டுக்கு யாழில் இடமில்லை இனி

நன்றி நிழலி...

உங்கள் பதில் பலரின் சந்தேகங்களை தீர்க்கும் என்று நம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.