Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைந்து போனவைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொலைந்து போனவைகள்.

போர் சூழலினால் வஞ்சிக்கபட்ட ஒரு இளைஞன் கதை. அமைதியான அந்தக் கிராமத்துக்கு படையினர் உட்புகு மட்டும் மக்கள் சாதாரண வாழ்வு தான் வாழ்ந்தார்கள். அதன்பின்பு தானேல்லாமே தலை கீழாய் போனது. சீர் குலைந்து நிம்மதி இழந்தது.

பால பாஸ்கரன் அந்த கிராமத்தின் , ஊர்ச்சங்க தலைவரின் மகன். ஊர்பள்ளிக்கூடத்தின் உதவித் தலைமை ஆசிரியராய் இருந்தான். காலாகாலத்தில் திருமணம் செய்து ....மனைவி கற்பமாய் இருந்த காலத்தில் தான் ராணுவத்தினர் கிராமத்துள் புகுந்தனர் . சோதனை என்றும் சந்தேகம் என்றும் கைது செய்துகொண்டு சென்றுவிடுவார்கள். இதில் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. பலமுறை கொண்டு சென்றாலும்.பாடசாலையை காரணம் காட்டி வெளிவந்து விடுவான். இவர்களது தொல்லை தாங்க முடியாமல்,வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்றான். பின்பும் ஊர் நோக்கி வரும் போது சோதனைக் கெடு பிடிகள் அதிகரிக்கவே வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி ஐரோப்பிய நாடொன்றுக்கு பயண மாக முடிவெடுத்தான். இதன் போது மனைவிக்கு பேறு காலம் வரவே அவள் அழகிய ஆண் குழந்தயை பெற்று எடுத்தாள். வைத்தியசாலையில்குழந்தையை பார்த்து வந்த போது வெளிநாட்டு பயணம் சரிவந்த்தாக தகவல் வரவே ..மூன்றாம் நாள் மனைவி குழந்தையை தன் தாய் தந்தையின் பாதுகாப்பில் விட்டு புறப்பட்டான். பல அலைச்சல் களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் சுவிஸ் நாட்டுக்கு போய் சேர்ந்தான். காலம் ஓடிக்கொண்டே இருந்தது ஆனாலும் அவனுக்கு அந்நாட்டு வதிவிட் அனுமதி டைக்கவில்லை.......வருடங்கள் எழு உருண்டோடி விட்டன. .

தாயகத்தில் தாயும் சேயும் நலமே வளர்ந்து வரும் காலத்தில், மேலும்மேலும் யுத்தம் மும்முரமடையவே ...பாஸ்கரன் மனைவி திலகா .....குழந்தையுடன் அவளது தம்பியின் ஆதரவுடன் ....கனடா நோக்கி புறப்பட்டாள்....சில தடங்கலுக்கு மத்தியில் ....அவளுக்கும மகனுக்கும் அகதி நிலை அங்கீகரிக்க பட்டது.....மகனின் குரல் கேட்க அடிக்கடி தொலை பேசி அழைப்பு வரும். ....இறுதியில் மகனும் தாயும் தந்தையை பார்க்க புறப்பட்டனர் . பிறந்த போது பார்த்த தன் மகனின் தோற்றங் கண்டு அப்பா பாஸ்கரன் மலைத்து போனான் .மகன் பாலகுமாரனும் ஆசை தீர தந்தைமடியில் விளையாடினான். அவனதுகுழந்தைப்ப் பருவம் ....மழலை பருவம்...பேச்சு ப்பருவம் ..என்பவை எல்லாம்........இழந்து விட்ட சோகம் மட்டும் தந்தை உள்ளத்தினுள்ளே இருந்தது. மூன்றுமாத விடுப்பில் சென்ற தாயும் மகனும் பிரிய மனமின்றி ..........பிரிந்து கனடா வந்து சேர்ந்தனர் .........

பாஸ்கரன் மனைவி .....கணவனை பொறுப்பெடுக்க முடிவு செய்தாள். இங்கு வேலையும் குழந்தையும் காலநிலையும் அவளுக்கு இலகுவாக் இருக்கவில்லை . அங்குசுவிசில வைத்து குடும்ப இணைவு முறையில் செய்ய முடியாததால் அவன் ஒரு சமாதானகால ஒப்பந்தம் வரவே மீண்டும் தாய்நாட்டுக்கு சென்றான். ஒருவாறு குடும்ப இணைவு முறையில் ...சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவன் நாலு வருடத்தில் ...வந்து சேர்ந்தான். மகனுக்கு வயது பதினைந்து ....ஆசைக்கும் அருமைக்கும் ஒரே யொரு குழந்தை .புலம் பெயர் வாழ்வுகள் தந்த சோகம் ...இழப்பு .........வீணாகிய இளமை ........கண்ணீரில் தொலைத்தகாலங்கள். மது மயக்கத்தில் தூங்கிய இரவுகள் ....தனிமை.....மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்த கரங்கள். ..உறவுகளின் ஒத்துழையாமை. அப்பப்பா இனியொரு , யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு .....எம் இனத்துக்கு வேண்டவே வேண்டாம். இது ஒரு சிறு கதை மட்டுமே ....புலம் பெயரும் போது சந்திக்கும் இடர்கள் சோதனைகள் ....அவை எழுத ஒரு ....சரித்திரபுத்தகம் வேண்டும். எழுத்தில் வடிக்க கூடியவை ஒரு சில எழுதாத பல..... உள்ளத்துக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா இனியொரு இ யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு .....எம் இனத்துக்கு வேண்டவே வேண்டாம். இது ஒரு சிறு கதை மட்டுமே ....புலம் பெயரும் போது சந்திக்கும் இடர்கள் சோதனைகள் ....அவை எழுத ஒரு ....சரித்திரபுத்தகம் வேண்டும். எழுத்தில் வடிக்க கூடியவை ஒரு சில எழுதாத பல..... உள்ளத்துக்குள் வாழ்ந்து கொண்டு தான்

உண்மைதான் நிலாமதியக்கா

ஆனால் தங்கள் கதையின் முடிவு...

யுத்தத்தை நாம் தான் ஆரம்பித்தோம் என்ற தோற்றம் தருகிறது

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ளத்துக்குமுறல்கள் பல .......தொடருங்கள் .....உள்ளத்துக்குமுறலை குட்டிக்கதைகளாக

சிலருக்கு வாழ்க்கை ஊரிலையே தொலைஞ்சு போகிது. சிலருக்கு இஞ்ச தொலைஞ்சு போகிது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசு .........புத்தன் ........கலைஞன் ..........உங்களுக்கு.....நன்றி.

விசு........யுத்தம் மக்களுக்கு ...மக்களால் ....மக்களுக்காக ....நடந்தது . அழிவும் மக்களுக்கு தான்.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.