Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்தியாவைவிட ஆஸியில் இந்தியர் பாதுகாப்பாக உள்ளனர்'

Featured Replies

'இந்தியாவைவிட ஆஸியில் இந்தியர் பாதுகாப்பாக உள்ளனர்'

மெல்போர்ன்: இந்தியர்கள், இந்தியாவில் இருப்பதை விட ஆஸ்திரேலியாவில் மிக பாதுகாப்பாகவே உள்ளனர் என்று அந் நாட்டு விக்டோரியா மாகாண போலீஸ்

கமிஷ்னர் சிமோன் ஓவர்லேண்ட் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் கொலைகளும் ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியா.

சிமோன் கூறுகையில், தங்களது சொந்த நாட்டை (இந்தியா) விட, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். வேண்டுமானால், புள்ளி விவரங்களை பாருங்கள். இந்தியர்கள் அவர்களது சொந்த நாட்டை விட இங்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளது தெரியும் என்றார்.

அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சைமன் கிரியேன் கூறுகையில், இது ஒரு மிக சிக்கலான விவகாரம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இவை இனரீதியான தாக்குதல்கள் என்பது இதுவரை நிரூபணமாகவில்லை. இதனால் இந்திய மீடியாக்கள் இந்த விவகாரத்துக்கு இனச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஆஸி அமைச்​சருடன்​ கிருஷ்ணா ஆலோ​சனை:

இந் நிலையில் சைமன் கிரியேனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ​இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள், இரு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணா கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா,​​ ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், விசாரணைகளை விரைவுப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன்.​ குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2010/01/12/australia-says-indians-safer-oz.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஸிக்கு என் வேண்டுகோள்.... இந்தியர்களை தாக்குவதை விட்டு ஆஸிக்கு வரும் இந்திய ஆட்சியாளர்களை தாக்குங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் தாக்கப்படுகிறார்களே என்று அழும் சிலரிடம் சில கேள்விகள்.

அவுஸ்த்திரேலியாவில் பல சமூகங்கள் இருக்கின்றன. சீனர்கள், ஐரோப்பியர்கள், அரேபியர்கள், வியட்நாமியர்கள், இலங்கையர்கள்....என்று ஒரு நூறு இனக்குழுமங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். ஆனால் எவருமே இதுவரை தாக்கப்பட்டதாக செய்திகளில்லை. ஆனால் இந்தியர்கள் மட்டுமே தாக்கப்படுகிறார்களாம், அது ஏன்? மற்ற இனக்குழுமங்களை விடவும் இந்தியர்கள் எந்த விதத்தில் வேறுபடுகிறார்கள்?? இவர்களின் எந்த செயல்ப்பாடு இவர்களை தாக்குதலிற்கு உள்ளாக்குகிறது?? அவுஸ்த்திரேலியாவில் கொல்லப்படும் இந்தியர்கள் எல்லோருமே இந்திய அபிமாணிகள் கூக்குரலிடும் அவுஸ்த்திரேலிய இனவாதிகளால்த்தான் கொல்லப்பட்டார்களா?? தனது மனைவியைக் கட்டிலில் வைத்தே குரல்வளையை அறுத்துவிட்டு மெல்பேணிற்கு பஸ்ஸேறிய சீக்கிய இளைஞனை யாருக்குத் தெரியும்?? குடும்ப மோதலினால் சிட்னியின் பிரபல இந்திய உணவகத்தில் பட்டப்பகலில் நடந்த ரெட்டைக் கொலை பற்றி யாருக்குத் தெரியும்?? தான் விரும்பும் மாணவியைக் காதலித்தான் என்கிற ஆத்திரத்தில் தனது அறையில் வசிப்பவனையே கொன்று குப்பைப் பெட்டியில் வீசிய இந்தியனை யாருக்குத் தெரியும்?

இவையெல்லாம் இந்திய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள்.

இந்தியர்கள் தாக்கப்படுவதற்கான சில காரணங்களை பார்க்கலாம்,

முதலாவது பொதுவான இடத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். தம்மைச் சுற்றி யார் இருக்கிறார்கள் அல்லது தாம் எங்கே இருக்கிறோம் என்கிற சின்ன யோசனை கூட இல்லாமல் சத்தமாக இந்தியில் கத்திப் பேசுவதும், தொலை பேசியில் உறையாடுவதும்.

இந்தியரல்லாத பெண்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். பாலியல் வக்கிரப் பார்வைகளும், சொல்லாடல்களும், சீண்டல்களும். முக்கியமாக வெள்ளைக்காரப் பெண்களுக்கு இந்தியரைக் கண்டாலே ஆத்திரம் வருவதற்கு இது ஒரு காரணம்.

பல இந்திய மாணவர்கள் இரவு வேளைகளில் சிற்றூண்டிச் சாலைகள் உணவு விடுதிகள் என்பவற்றில் வேலை பார்த்துவிட்டுத் தனியே உலாவுவது. விலை உயர்ந்த தொலைபேசிகள், பை நிறையப் பணம் என்று வரும் இந்தியனை கள்வர்களோ அல்லது போதை வஸ்த்துப் பாவனையாளர்களோ தாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

இவை எல்லாவற்றையும் விட, நாம் இந்தியர், எமது நாடுதான் உலகிலேயே சிறந்தது, உங்கள் நாடும் ஒரு நாடா?? என்று மற்றவர்கலைக் கேலி செய்துகொண்டே அவர்களின் தொழிகளையும் சந்தர்ப்பங்கலையும் உறிஞ்சிக்கொண்டு தொடர்ந்தும் அங்கேயிருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் தாக்கப்படுகிறார்களே என்று அழும் சிலரிடம் சில கேள்விகள்.

அவுஸ்த்திரேலியாவில் பல சமூகங்கள் இருக்கின்றன. சீனர்கள், ஐரோப்பியர்கள், அரேபியர்கள், வியட்நாமியர்கள், இலங்கையர்கள்....என்று ஒரு நூறு இனக்குழுமங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். ஆனால் எவருமே இதுவரை தாக்கப்பட்டதாக செய்திகளில்லை. ஆனால் இந்தியர்கள் மட்டுமே தாக்கப்படுகிறார்களாம், அது ஏன்? மற்ற இனக்குழுமங்களை விடவும் இந்தியர்கள் எந்த விதத்தில் வேறுபடுகிறார்கள்?? இவர்களின் எந்த செயல்ப்பாடு இவர்களை தாக்குதலிற்கு உள்ளாக்குகிறது?? அவுஸ்த்திரேலியாவில் கொல்லப்படும் இந்தியர்கள் எல்லோருமே இந்திய அபிமாணிகள் கூக்குரலிடும் அவுஸ்த்திரேலிய இனவாதிகளால்த்தான் கொல்லப்பட்டார்களா?? தனது மனைவியைக் கட்டிலில் வைத்தே குரல்வளையை அறுத்துவிட்டு மெல்பேணிற்கு பஸ்ஸேறிய சீக்கிய இளைஞனை யாருக்குத் தெரியும்?? குடும்ப மோதலினால் சிட்னியின் பிரபல இந்திய உணவகத்தில் பட்டப்பகலில் நடந்த ரெட்டைக் கொலை பற்றி யாருக்குத் தெரியும்?? தான் விரும்பும் மாணவியைக் காதலித்தான் என்கிற ஆத்திரத்தில் தனது அறையில் வசிப்பவனையே கொன்று குப்பைப் பெட்டியில் வீசிய இந்தியனை யாருக்குத் தெரியும்?

இவையெல்லாம் இந்திய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள்.

இந்தியர்கள் தாக்கப்படுவதற்கான சில காரணங்களை பார்க்கலாம்,

முதலாவது பொதுவான இடத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். தம்மைச் சுற்றி யார் இருக்கிறார்கள் அல்லது தாம் எங்கே இருக்கிறோம் என்கிற சின்ன யோசனை கூட இல்லாமல் சத்தமாக இந்தியில் கத்திப் பேசுவதும், தொலை பேசியில் உறையாடுவதும்.

இந்தியரல்லாத பெண்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். பாலியல் வக்கிரப் பார்வைகளும், சொல்லாடல்களும், சீண்டல்களும். முக்கியமாக வெள்ளைக்காரப் பெண்களுக்கு இந்தியரைக் கண்டாலே ஆத்திரம் வருவதற்கு இது ஒரு காரணம்.

பல இந்திய மாணவர்கள் இரவு வேளைகளில் சிற்றூண்டிச் சாலைகள் உணவு விடுதிகள் என்பவற்றில் வேலை பார்த்துவிட்டுத் தனியே உலாவுவது. விலை உயர்ந்த தொலைபேசிகள், பை நிறையப் பணம் என்று வரும் இந்தியனை கள்வர்களோ அல்லது போதை வஸ்த்துப் பாவனையாளர்களோ தாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

இவை எல்லாவற்றையும் விட, நாம் இந்தியர், எமது நாடுதான் உலகிலேயே சிறந்தது, உங்கள் நாடும் ஒரு நாடா?? என்று மற்றவர்கலைக் கேலி செய்துகொண்டே அவர்களின் தொழிகளையும் சந்தர்ப்பங்கலையும் உறிஞ்சிக்கொண்டு தொடர்ந்தும் அங்கேயிருப்பது.

இந்த இளைஞர்களை சேர்த்து உருவானதுதானே இந்திய இராணுவம். அதை ஈழத்தில் நாம் பாhத்தோம்.

இப்போது அவூஸ்ரேலியாவில் பார்க்கிறார்கள்........................

முதலாவது பொதுவான இடத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். தம்மைச் சுற்றி யார் இருக்கிறார்கள் அல்லது தாம் எங்கே இருக்கிறோம் என்கிற சின்ன யோசனை கூட இல்லாமல் சத்தமாக இந்தியில் கத்திப் பேசுவதும், தொலை பேசியில் உறையாடுவதும்.

இந்தியரல்லாத பெண்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். பாலியல் வக்கிரப் பார்வைகளும், சொல்லாடல்களும், சீண்டல்களும். முக்கியமாக வெள்ளைக்காரப் பெண்களுக்கு இந்தியரைக் கண்டாலே ஆத்திரம் வருவதற்கு இது ஒரு காரணம்.

பல இந்திய மாணவர்கள் இரவு வேளைகளில் சிற்றூண்டிச் சாலைகள் உணவு விடுதிகள் என்பவற்றில் வேலை பார்த்துவிட்டுத் தனியே உலாவுவது. விலை உயர்ந்த தொலைபேசிகள், பை நிறையப் பணம் என்று வரும் இந்தியனை கள்வர்களோ அல்லது போதை வஸ்த்துப் பாவனையாளர்களோ தாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

அது ஏனோ தெரியாது இந்தியாவில் இரண்டு இந்திக்காரனுகள் பொது இடத்தில் சந்தித்தால் சத்தமாக ஆங்கிலத்தில் பின்னுறது... அதே ஆட்கள் இங்கே வந்தால் பொது இடத்தில் கிந்தியில் சளாப்புவது...

ஏன் உந்தக்கோளாறு? இந்தியர்கள் முதலில் மற்றவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்.... நாங்கள் சொன்னால் விளங்காது.... வாங்கினாத்தான் தெளியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.