Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மாவட்ட M.P சதாசிவம் கனகரட்னம், மகிந்தராஜபக்ஷவினை ஆதரிக்க முடிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவினை ஆதரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் சனாதிபதி வேட்பாளர் மகிந்தராஜபக்ஷவினை ஆதரிக்க முன்வந்துள்ளார்.

நேற்றும் இன்றும் வன்னியில் மல்லாவி, யோகபுரம், துணுக்காய் போன்ற இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இடம் பெயர்ந்து வன்னியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்கவேண்டும். அதன் மூலம் பல அபிவிருத்திகளை (?) ஏற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாளை திங்கள் மல்லாவியில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் திரு கனகரட்ணம் எம்பியும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

கடந்த புதன்கிழமை மாலை இவர் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, வவுனியாவில் குடும்பத்தாருடன் தங்குவதற்கு அரசாங்க விடுதியும் வாகனமும் வழங்கப்பட்டிருந்தது பற்றி EelamTimes ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது விடுதலைப்புலிகளின் தேர்தல் பட்டியல் மூலம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வன்னி எம்பியாக தெரிவானவர்.

தொடர்புபட்டசெய்திகள்:

வவுனியாவில் தங்குவதற்கு, அரசாங்கம் விடுதி வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது

அந்த ஆள் பாவம் என்ன தான் செய்ய முடியும்?

உயிர் பிழைக்க வேண்டுமே.

நன்றாகப் பிழைக்கட்டும். அதற்காக இப்படியா என்று யாரும் கேட்கக் கூடாது. தமிழரின் மிகப் பெரிய ஒற்றுமை ( பலவீனம் ) ஓங்குக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டை பலியிடும் முன்பு அதனிடம் வாக்கு கேட்பார்களாம்.

ஆடு எதற்காக தலையை அசைத்தாலும் அதன் உயிர் பிரிவது நிச்சயம்....

அது போல தான் இவருடைய நிலையும்...

பதவிக்காக எதை எதையோ செய்யும் நிலையில் உயிர் பிழைக்க இவர் மகிந்தாவின் சொல் பேச்சை கேட்பதில் தவறு ஒன்றும் இல்லையே???

Edited by tamil nanban

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மாவட்ட M.P சதாசிவம் கனகரட்னம், மகிந்தராஜபக்ஷவினை ஆதரிக்க முடிவு.

ஐயா மாத்திரமில்ல அங்கையிருக்கிற போராளியளும் உதைத்தான் சொல்லுறதா வவுனியா போய் பாத்துவந்தாக்கள் சொல்லுறினம். :)

ஐயா மாத்திரமில்ல அங்கையிருக்கிற போராளியளும் உதைத்தான் சொல்லுறதா வவுனியா போய் பாத்துவந்தாக்கள் சொல்லுறினம். :)

உண்மை... அவர்களின் நிலைமை அப்பிடி... அடுத்த முறை மகிந்த வெற்றி பெற்றால் விடுதலை தரப்படும் எண்று சொல்லி இருக்கிறார்கள்... வெளிநாடுகளில் வேலை வாய்ப்பும் தரப்படும் எண்று சொல்லப்பட்டு இருக்கிறது...

மகிந்தவை ஆதரிக்க கனகரத்தினத்திற்கு வாகனம் வாசஸ்தலம் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கன கரட்ணம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது.

எட்டு மாதங்களாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தனது சக நாடாளுமன்ற உறுப் பினர்களுக்குத் தொலைபேசியில் தெரி வித்திருந்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே தாம் விடுவிக்கப்பட்டார் என சதாசிவம் கனகரட்ணம் தெரிவித்தார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தெரிவித்தார் எனவும் அதில் குறிப்பிட்டுப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்துக்கு மன்னார், வவுனியா வீதியில் உள்ள வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றை அரசு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு மீள்குடியேற்ற அமைச்சின் வாகனமும் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேற்கோள் காட்டி ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

http://www.alaikal.com/

போரின் நேரடி சாட்சி. உன்னத மனிதர். முள்ளிவாய்க்காலில் வானொலிகள் மூலம் அவர் கொடுத்த நேரடி தகவல்கள் இப்பவும் காதை பிளக்கின்றன.

மக்களுடன் நின்றார்.

அவர் உயிர் பிழைத்ததே பெரிய விசயம் என்று நினைக்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்றால் சிங்கள அரசாங்கம் அவரை எப்போ கொன்றிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலைக்கைதி????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.