Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவிலும் இனவாதம் பேசும் வட இந்தியர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவிலும் இனவாதம் பேசும் வட இந்தியர்

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவில் இந்தியர் மேல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவர்களே ஊடகங்களுக்கும் பொலீசிலும் முறைப்பாடு செய்துவருவது அனைவரும் தெரிந்ததே. இவ்வாறு இந்தியர்கள் முறையிடும் தாக்குதல் சம்பவங்கள் அநேகமானவை தங்களுக்குள்ளேயோ அல்லது தமக்குத் தாமேயோ செய்தவைதான் என்பது பின்னர் நிரூபணமானது வேறுகதை.மனைவியின் கழுத்தை மரக்கறி வெட்டும் கத்தியால் அறுத்துவிட்டு மெல்பேனுக்கு பஸ்ஸேறிய கணவன், காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரித்து விட்டு அதில் தானே மாட்டிக்கொண்டு இனவாதிகள்தான் தாக்கினார்கள் என்று முறையிட்ட இந்தியன்......இப்படிப்பல உதாரணங்களும் "இனவாதிகளின் தாக்குதல்கள்" பட்டியலில்த்தான் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இதனால் கொதிப்படைந்த வட இந்திய ஊடகங்களும் இவ்விவகாரத்தை ஊதிப் பெருப்பித்து ஏதோ "ஈழத்து அளவில்" அவுஸ்த்திரேலியாவில் இனக்கொலை நடப்பதாக எழுத அங்குள்ள இனவாதிகளுக்கும் தீனி கிடைத்தமாதிரி ஆகிவிட்டது.ஆளாளுக்கு மட்டைகளையும் தூக்கிக்கொண்டு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் தமது மாணவர் ஏற்றுமதி வருவாய்க்கு ஆப்பு விழுந்துவிடுமே என்று பயந்த இந்திய வெளிநாட்டுக் கல்விவாய்ப்புக் கம்பனிகளும் அவுஸ்த்திரேலிய அரசும் சேர்ந்து ஏ. ஆர். ரகுமான் மூலம் நட்புறவுப்பாலம் என்கிற இசை நிகழ்ச்சி ஒன்றை சிட்னியில் நடத்துவது என்று முடிவு செய்தனர். இதன் மூலம் இந்தியா பற்றிய நல்ல அபிப்பிராயத்தை அவுஸ்த்திரேலியாவில் வளர்க்கவும், இந்திய மாணவர்களின்(தாமே வளர்த்துவிட்ட) கொதிப்பை அடக்கலாம் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முடிவு செய்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சிக்காக சிட்னியில் பரமட்டா பகுதியில் உள்ள பாரிய பூங்கா தெரிவுசெய்யப்பட்டு சுமார் ரெண்டு வாரகாலமாக தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுவந்தன.இசை நிகழ்ச்சிக்கென பாரிய மேடையும், அகன்ற திரைகளுமாக அப்பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது.இசை நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம் என்று செய்தி வர நிகழ்ச்சிக்கான கூட்டம் ஒரு லட்சத்தையும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதனால் கலக்கமடைந்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் நேர எல்லைகளை அறிவித்தனர். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் நிகழ்சிக்கு வருவது அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவித்தனர்.

அதன்படி ஜனவரி 16 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. சுமார் 70,000 இந்தியர்களும், சில வெள்ளைக்கார, சீன மக்களுமாக பூங்கா அலை மோதியது.வழமை போல ரகுமான் இந்திய தேசிய கீதத்தை தனது இசையில் கிந்தியில் பாடினார். தொடர்ந்தும் பல கிந்திப் பாடல்கள் அரங்கில் ஒலித்தன. சில மணிநேரத்துக்குப்பின்னர் ஒரு சில தமிழ்ப்பாடல்களும் ரகுமானால் பாடப்பட்டு, இறுதியில் ஸ்லம் டோக் மில்லியனர் படத்தின் ஜை கோ பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி முற்றுப்பெற்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பு சமயத்தில் பல வட இந்திய முகங்களில் சீற்றத்தைத்தான் காண முடிந்தது.பலரும் ரகுமானால் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற தொணியில் பேசிக்கொண்டு போயினர். ஆங்கிலத்தில் சிலருடன்(வட இந்தியர்கள்) பேசும் வாய்ப்புக் கிடைத்தது. நான் என்னை ஒரு வங்களாதேசத்தவர் என்கிற போர்வையில் அவர்களுடன் பேசத் தொடங்கினேன். "இது இந்தியர்களுக்கான இசை நிகழ்ச்சி, பாதிக்கப்பட்டிருப்பது வட இந்திய மாணவர்கள், இங்கிருக்கும் கூட்டத்தில் இருப்பது ஒரு சில தமிழர்கள் மட்டும்தான், அப்படியிருக்க ரகுமான் ரெண்டு தமிழ்ப்பாடல்களைப் பாடியது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்." அதற்கு நான், "ரகுமான் கூட ஒரு தமிழர்தானே?" என்று கேட்டேன், அதற்கு அவர்கள், "இருக்கலாம், ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை கிந்தி பேசும் மக்கள்தான், ரகுமானும் இந்தியில்த்தான் பிரபலமானார்" என்று சொல்ல என்னால் எதுவும் பேச முடியவில்லை. நல்லது, இன்னொருமுறை சந்திக்கலாம் என்று விடைபெற்று வந்தேன்.

அதுசரி, இந்த நிகழ்ச்சி எதற்காக நடத்தப்பட்டது ? இனவாதத்திற்கெதிராகத்தானே??!! அப்படியாயின் அதன் நோக்கம் நிரைவேறியதா இல்லையா??!!!!! அஙு வந்து தனது சொந்த நாட்டுக்காரனான தமிழனை அவமதிக்கும் இந்த வட இந்தியர்களுக்கு இனவாதம் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது ??

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பு சமயத்தில் பல வட இந்திய முகங்களில் சீற்றத்தைத்தான் காண முடிந்தது.பலரும் ரகுமானால் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற தொணியில் பேசிக்கொண்டு போயினர். ஆங்கிலத்தில் சிலருடன்(வட இந்தியர்கள்) பேசும் வாய்ப்புக் கிடைத்தது. நான் என்னை ஒரு வங்களாதேசத்தவர் என்கிற போர்வையில் அவர்களுடன் பேசத் தொடங்கினேன். "இது இந்தியர்களுக்கான இசை நிகழ்ச்சி, பாதிக்கப்பட்டிருப்பது வட இந்திய மாணவர்கள், இங்கிருக்கும் கூட்டத்தில் இருப்பது ஒரு சில தமிழர்கள் மட்டும்தான், அப்படியிருக்க ரகுமான் ரெண்டு தமிழ்ப்பாடல்களைப் பாடியது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்." அதற்கு நான், "ரகுமான் கூட ஒரு தமிழர்தானே?" என்று கேட்டேன், அதற்கு அவர்கள், "இருக்கலாம், ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை கிந்தி பேசும் மக்கள்தான், ரகுமானும் இந்தியில்த்தான் பிரபலமானார்" என்று சொல்ல என்னால் எதுவும் பேச முடியவில்லை. நல்லது, இன்னொருமுறை சந்திக்கலாம் என்று விடைபெற்று வந்தேன்.

அதுசரி, இந்த நிகழ்ச்சி எதற்காக நடத்தப்பட்டது ? இனவாதத்திற்கெதிராகத்தானே??!! அப்படியாயின் அதன் நோக்கம் நிரைவேறியதா இல்லையா??!!!!! அஙு வந்து தனது சொந்த நாட்டுக்காரனான தமிழனை அவமதிக்கும் இந்த வட இந்தியர்களுக்கு இனவாதம் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது ??

இங்கே உள்ளூர் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் வட இந்தியர்கள் இந்தியா என்று தமது பேட்டியில் சொல்லும்போதே ரத்தக்கொதிப்பு எகிறுகிறது. அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்த கிழடு ஒன்று எனக்கு எவ்வாறு இந்தி தெரியாமல் போகலாம் என்று கேட்டதுவேறு என்னைக் கோமா நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. :lol:

இவர்களின் கொழுப்பு அடங்க இவர்களுக்கு வடக்கில் உள்ளவர்கள்தான் மனது வைக்க வேண்டும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை பார்ப்பவர்களில் ஒரு இந்தியத் தமிழரும் இருக்கிறார். தமிழ்நாட்டில்ப் பிறந்து பெங்களூரில் படித்து கிந்தியை ரெண்டாவது மொழியாகப் படித்தவர்.ஆனால், அவரிடம் உள்ள ஒரு நல்ல விடயம், மற்ற கிந்தி பேசும் நபர்களுடன் அவர் எப்போதுமே ஆங்கிலத்தில்தான் பேசுவார். இதனால் சிலவேளை அவர்கள், "உனக்குத்தான் கிந்தி தெரியுமே, எதற்கு ஆங்கிலத்தில் பேசுகிறாய்?" என்று கேட்பார்கள். அதைசி சிரித்துக்கொண்டே சமாளித்துவிட்டு தனது பதிலை ஆங்கிலத்திலேயே கூறுவார். தமிழீழப் போராட்டம் பற்றி மிகுந்த அபிமானமும் அக்கறையும் கொண்டவர். பிராமணிய கொள்கை வகுப்பாளர்களினால்த்தான் இவை நடக்கின்றன என்று அடிக்கடி சொல்லுவார்.

ஆனால் அவுஸ்த்திரேலியர் பற்றி நால் அபிப்பிராயமில்லை. மற்ற இந்தியர்களுடன் சேர்ந்து திட்டுவார். இந்திய கிரிக்கெட் அணி இவருக்கு கடவுள்கள் மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ரகுமானுக்கு பதிலாக ஒரு கிந்திக்காரனை வைத்து நிகழ்ச்சியை

நடத்தியிருக்கலாமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது சொந்த அனுபவத்தைத்தான் நான் இங்கு பதிந்திருக்கிறேன். அதையும் மூன்றாவது பந்தியில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றும் நினைக்கிறேன். இதை விட இதன் மூலத்தை எப்படிப் போடுவது என்று தெரியவில்லை.

நிழலி கேட்டுக்கொண்டதற்காக வேண்டுமானால் நன்றி ரகுனாதன் என்று போட்டு விடுகிறேன்.

மூலம்: ரகுனாதனின் அனுபவங்களிலிருந்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுனாதனுக்கு..,

இந்த இசை நிகழ்ச்சியின் முடிவாக ரகுமான் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது ஆஸ்த்திரேலியாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக தான் உள்ளார்கள் இந்திய ஊடகங்கள் தாம் இங்கு நடக்கும் சிறு சிறு செயல்களுக்கும் இனச்சாயம் பூசுகிறார்கள் என்று சொன்னதாக படித்தேன் அது பற்றியும் தெரிந்தால் எழுதுங்களேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்ச்சியின் முழு வடிவமும் டி.வீ. டி வடிவில் பதிந்து வைத்திருக்கிறேன். மீண்டுமொருமுரை கேட்டுவிட்டு அவர் சொன்னதை எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் உப்படியான நிகழ்ச்சிகளுக்கு நான் போகிறதில்லை. எங்கட சனத்தில சிலர் மாவீரர் தினம், கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டினம், ஆனால் மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் உந்த நிகழ்ச்சிக்கு மதியம் 12 மணிக்கே சென்று விட்டார்கள். காரணம் நல்ல இடமாய் போய் இருக்க வேணும் என்றதற்காகவே சென்றார்களாம். மாவீரர் நிகழ்வு, கவனயீர்ப்பு நிகழ்வு என்றால் எதாவது சாட்டுச் சொல்லுவினாம், போகாத மற்றைய தமிழர்களைத் துரோகி என்றும் சொல்லுவினம். ஆனால் தாங்களும் போக மாட்டினம்.

கந்தப்பு நீங்கள் ரகுமானுடைய ஒத்திகை பார்க்கபோகேல்லையே? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.