Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!?

Featured Replies

புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!?

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான “மலேசியா ராஜன்” சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றின் கூட்டுச்சதி மூலம் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால், இவரை நேற்று காலை கொழும்பில் கைது செய்ததாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முக்கிய – மூத்த – உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42) இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு விமானநிலையம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து விமானநிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்த அந்நாட்டு குடிவரவு மற்றும் புலனாய்வு பிரிவினர் ராஜனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதன்பின்னர், அவர் சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால், நேற்று காலை கொழும்பில் வைத்து அவரை கைது செய்ததாக அறிவித்துள்ள சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர், மலேசியா ராஜனை தாம் பல ஆண்டுகளாக தேடிவந்ததாகவும் – அவர் கண்ணன் என்ற பெயரிலும் செல்லத்துரை சாந்தகுமார் என்ற பெயரிலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார் என்றும் 1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை சாம விகாரைக்கு அருகாமையில் வெடிமருந்துகள் அடங்கிய லேடன் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் முதல் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான இவர் அந்த அமைப்பினருக்கு ஆயுத வழங்கல்களை மேற்கொள்ளுதல், விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினரை கொழும்புக்கு கூட்டிவருதல் போன்ற செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார் என்றும் அவர் கூறினார்.

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி இவர் கைது செய்யப்பட்டாரா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி, தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய பதில்களை தாம் வெளியிடவிரும்பவில்லை என்றார்.

அதேவேளை, குறிப்பிட்ட நபர் எந்த நாட்டிலிருந்து சிறிலங்கா வந்தார் என்பது குறித்தோ எப்போது வந்தார் என்பது குறித்தோ சிறிலங்காவில் விடுதலைப்புலிகள் ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளில் தெரியவந்துள்ளதா என்பது குறித்தோ தன்னால் பதிலளிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கூட்டுச்சதி மூலம் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மலேசியா ராஜன் மலேசியா அல்லது தாய்லாந்து விமானநிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.eelamsoon.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நாடில் வைத்து கைது செய்தார்கள் என்ற மிகப்பெரிய தகவல் ஏன் இங்கே இல்லை? மலேசியா ராஜனை சூசை லெவலுக்கும் பில்டப்பு குடுக்கினம். அண்ணே, இத தமிழ் வின்ல சுட்டநீங்களே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்டிடிஇ முக்கியப் பிரமுகர் மலேசியா ராஜன் கைது

சனிக்கிழமை, ஜனவரி 30, 2010, 9:35[iST]

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகரான மலேசியா ராஜன் என்கிற சுப்பிரமணியம் சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கொழும்பில் வைத்துக் கைது செய்ததாக இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் படையினர் கூறியுள்ளனர். ஆனால் இவரை மலேசியா அல்லது தாய்லாந்தில் கைது செய்து அங்கிருந்து இங்கு கொண்டு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கேபியைக் கைது செய்தது போல இவரையும் மலேசியாவில் வைத்து மடக்கி, பாங்காக் மூலமாக கொழும்பு கொண்டு வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. மேலும் கேபி கொடுத்த தகவலின் பேரிலேயே ராஜன் மடக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மலேசியா ராஜன் (42) இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு விமான நிலையம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து விமான நிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்த அந்நாட்டு குடிவரவு மற்றும் புலனாய்வு பிரிவினர் ராஜனை மட்டும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் அவரை இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், நேற்று காலை கொழும்பில் வைத்து அவரை கைது செய்ததாக அறிவித்துள்ள இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி, மலேசியா ராஜனை தாம் பல ஆண்டுகளாக தேடிவந்ததாகவும் - அவர் கண்ணன் என்ற பெயரிலும் செல்லத்துரை சாந்தகுமார் என்ற பெயரிலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்றும் தெரிவித்தார்.

மேலும், 1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை சாம விகாரைக்கு அருகாமையில் வெடிமருந்துகள் அடங்கிய வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் முதல் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான ராஜன், அந்த அமைப்பினருக்கு ஆயுத கொள்முதல், விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினரை கொழும்புக்கு கூட்டி வருதல் போன்ற முக்கியப் பணிகலை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி மலேசியாவிலிருந்து 'றோ' மற்றும் சிங்களபுலனாய்வுடன் விமானம்ஏறி பாதுகாப்பாக கொழும்புபோனபிறகு

இப்படித்தான் கனக்கா நடக்குது.!!!

சுவிசுக்கு அடிக்கடி சிங்கள மாமாக்களுடன் வந்து போகிறார்.

கப்பல்கள் கைமாறி கடைசியில் சிறீலங்காதுறைமுகத்துக்கு கொண்டுபோகப்படுகின்றன...

கே.பி உடன் நின்றவர்களும் அடிக்கடி கொழும்புக்கு போகிறார்கள். அதை 'கைது' என்று பில்டப் வேறு.

புலத்திலும் கே.பி க்கு சார்பான கோணங்கிகள் விடுதலையை வெல்ல திட்டம் என்ற பெயரில் கேனைத்தனமான வேலைகள்!!

இப்போது கொஞ்ச புத்திசீவிகள் என்று தம்பட்டம் தமக்குதாமே அடிப்பவர்களும் கே.பி க்கு சார்பாக ஆய்வுகளை செய்யினம்.

எல்லாத்துக்கும் கைமாறுவது மக்கள் பணம்.

வேலை வெட்டிஇல்லாமல் இருப்பவர்களுக்கு கே.பி ஒரு பெரிய பணம்காய்க்கும் மரம்..

நடக்கட்டும்!!தன்னாலே வெளிவரும் கலங்காதே!

உண்மையில் என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தாமல் தானாக அவர் போய் கொழும்பில் சரன் அடைந்தது போல சொல்வது சரியானது அல்ல...

கொழும்பில் அவர் கைது செய்யப்பட்டது போண்ற ஒரு செய்தியை சொல்லி தமிழர்களை குழப்பி விடுவதுக்கு முயலும் சிங்களத்தின் நரித்தனத்தையும் புரிந்து கொள்ளுங்கள்...

புலத்தில் தேடப்படும் நபரை தலைவராக்கி, தேடப்படாத நபர்களை தேடப்படுபவர்களாக்கி, பின்னிருந்து காய் நகர்த்தும் சக்தி தன்னாலே வெளிவருமா?

புலத்து புத்திசீவிகளின் தொல்லை பெரும் தொல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என கருதப்படும் சுப்ரமணியம் சிவகுமார் அல்லது மலேசியா ராஜன் என்பவர் கொழும்பில் நேற்று முன்தினம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள சாம விகாரைக்கு வெடிக்க வைக்கப்பட்ட குண்டு உள்ளிட்ட வெடிக் குண்டுகளை கொழும்புக்கு கொண்டு செல்லுதல், அவற்றை வெடிக்க வைத்தால் போன்ற பணிகளில் சந்தேக நபரை புலிகள் இணைப்பாளராக நியமித்திருந்ததாக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் நிமால் வாகிஸ்ட தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த இவர், காவற்துறையினரால் தேடப்பட்டதை தொடர்ந்து 1991 ஆமு; ஆண்டு ரகசியமாக வெளிநாடு சென்றுள்ளார். இதன் பின்னர் வெளிநாட்டில் இருந்தவாறு கடந்த 2001 ஆம் ஆண்டு வரை புலிகளின் சர்வதேச வலைப்பில் பணியாற்றி வந்துள்ளார். 2001 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடனபடிக்கையை அடுத்து நாடு திரும்பி சிவகுமார் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்துள்ளதுடன் சில தாக்குல் சம்பவங்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக காவற்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மலேசியா ராஜன் சர்வதேச புலனாய்வு வலைப்பின்னலின் உதவியுடன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு செல்லப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவல்கள் இடையே மலேசியா ராஜன் என்ற சுப்பிரமணியம் சிவகுமார் புலிகளின் தோல்விக்குப் பின் கே.பியுடன் இணைந்து வேலை செய்தவர் எனவும் அவர் திட்டமிட்டு அனுப்பப்பட்டவர் எனவும் இப்போ அவரை அரச புலனாய்வுத் துறை அழைத்துச் சென்றுள்ளதாக பிறிதொரு தகவலும் தெரிவிக்கின்றது.

எது எவ்வாறாயினும் இந்தத் தகவல்கள் எதுவும் ஆதாரபூர்வமானவையாக வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஜி.ரி.என்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.