Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபய பற்றிய இரகசியங்கள் உள்ளன என்கிறார் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'எனது தேர்தல் வெற்றி சூறையாடப்பட்டுள்ளது. எனது வாழ்வை, அரசியல் வாழ்வை இல்லாதொழிக்க சிறிலங்கா அரசு திட்டமிடுகின்றது' என அடுக்கடுக்காக அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் சரத் பொன்சேகா.

சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே இக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எதிர்க்ட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சரத் பொன்சேகா.

அத்துடன் சிறிலங்கா நாட்டை விட்டு தான் வெளியேறப் போவதில்லை என்றும் உறுதிபட அவர் தெரிவித்தார்.

'நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயார். எனக்கு வாக்களித்தவர்களை ஏமாற்ற நான் தயாரில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

தனது செயலகம் மூடப்பட்டு விட்டதாகவும், 23 உதவிப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தனது செயலகப் பாவனையில் இருந்த 23 கணினிகளை சிறப்பு அதிரடிப்படையின் எடுத்துச் சென்றுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் எனது தேர்தல் செயலகம் சிறப்பு அதிரடிப்படையினரால் மூன்று மணிநேரம் சோதனை இடப்பட்டது என்பதைப் பதிவு செய்ய காவல் துறை மறுத்துவிட்டதாகவும், அதனை ஒரு களவு என்பதாகக் கூட குற்றப் பதிவு செய்ய அவர்கள் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னோடு இணந்து செயற்பட்டு வந்த, உயர் பதவி நிலை படை ஆட்கள் 13 பேர் [2 Brigadiers, 3 Majors and 2 Colonels] தமது படைச் செவையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.

இவர்களில் பிரிகேடியர் கெப்பிற்றிவலான [ Brigadier Keppetiwalana ] ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்க கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆனால் 'இந்த கொலை தொடர்பான உண்மை விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் ரணில் வி்க்கிரமசிங்கவையோ அல்லது தன்னையோ படுகொலை செய்யவே மகி்ந்த தரப்பு எண்ணம் கொண்டிருந்ததாகத் தெரிவித்த பொன்சேகா, அதனால் - பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தாம் சினமென் லேக்சைட் விடுதியில் தங்கியிருந்ததாகவும், ஆனால் அரசுத் தரப்பு கதையைத் திரித்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினதும் பாதுகாப்புச் செயலரினதும் உள் நோக்கங்கள் பற்றிய சிக்கலுக்குரிய இரகசியங்கள் பல உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டு சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

இது பற்றி பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய றம்புக்வல கூறும் போது - தானே வாக்களிக்கப் பதிவு செய்திருக்காத ஒருவருடைய பேச்சுக்களை யாரும் கருத்தில் எடுக்கத் தேவையில்லை என்றார்.

http://www.puthinappalakai.com/view.php?20100131100407

எந்தப்பெரிய புத்திசாலியாகவிருந்தாலும் நீங்க காட்டுவது நாடகம்தான்.எள் அளவும் சந்தேகமில்லை.

நிலமையை சுமூகமாக்காமல் பிரச்சினையை தோண்டி எடுக்கிறார்... விதி யாரை விட்டுது... ஒருகாலத்து சிங்கள கதாநாயகனின் நிலை இப்படியா போச்சு... தமிழ் மக்களின் தலைமை பொறுப்பை ஏற்றபின் அவர்கள் பின்னாலை வந்தால் பிரச்சினையும் கூடவே வருகுது மனுசனுக்கு... :rolleyes:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதை குழிகள் போற்ற தமிழ் மக்களின் கொலைக்கு பொறுப்பானவர் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல."பாம்பின் கால் பாம்பு" அறியும் என்பதால் இவரிடம் இருந்து அரசின் உள்வீட்டு விடயங்கள் வெளியில் வர வாய்ப்புண்டு.

செம்மணி புதை குழிகள் போற்ற தமிழ் மக்களின் கொலைக்கு பொறுப்பானவர் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல."பாம்பின் கால் பாம்பு" அறியும் என்பதால் இவரிடம் இருந்து அரசின் உள்வீட்டு விடயங்கள் வெளியில் வர வாய்ப்புண்டு.

பார்க்கலாம் வெல்லப்போவது அமெரிக்காவா சீனாவா எண்று... :lol: தமிழர் பிரதேசங்களுக்கு இந்த பிரச்சினையின் தாக்கம் பரவாமல் விட்டால் சந்தோசம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொன்றவன் இன்று அனுபவிக்கிறார்....

கொல்ல சொன்னவனுக்கு எப்பவோ????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.