Jump to content

சுருதி மாறுகிறதா தமிழோசை ?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுருதி மாறுகிறதா தமிழோசை ?!

ஆனந்தி, ஷங்கர், தாசீசியஸ் போன்ற ஈழத்து செய்தி அமைப்பாளர்களின் காலத்தின் பின்னர், லண்டன் பி.பி.ஸி இனது தமிழோசை தமிழர் ஆதரவுத் தளத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் சிங்கள அரசின் இனவழிப்பை அப்படியே நியாயப்படுத்துமளவிற்கு தனது செய்திகளை அமைத்தும் ஒளிபரப்பியும் வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் உச்சகட்டமாக கருணா பிளவின்போது அது நடந்துகொண்ட விதம் மற்றும் 2008 இன் ஆரம்பக் காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் கடைச் நாட்கள் வரையிலும் அவ்வாறே இலங்கை சனாதிபதித் தேர்தல் காலம் வரையிலும் அதனது செய்திகள் கேட்பவர்கள் உளரீதியாக சோர்வடையச் செய்து ஒரு சரணாகதி நிலையாடையச் செய்வதாகவே இருந்து வந்தது.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலின் பின்னர் அது எழுதிய இரு ஆய்வுக்கட்டுரைகள் அதன் சுருதி மாறி வேறு திசையில் பYஅணிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தவகையான முதலாவது கட்டுரை நேற்று தயா அவர்களால் இங்கே இணைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டுரை தமிழோசை செய்தித் தயாரிப்பாளரான எதிராஜன் அன்பரசன் அவர்களால் தேர்தலின் பின்னரான யாழ் மக்களின் மனோநிலை என்ன என்பது பற்றி அலசுகிறது.

Link to comment
Share on other sites

RAW வின் ஊதுகுழல் என்பதை புல்மோட்டையில் வைத்து வெளிப்படையாக தமிழோசை காட்டிக்கொண்டது... இப்போவரும் செய்திகள் இலங்கையை சாடி வருவது கொஞ்சம் மாற்றமாக இருக்கிறது...

தமிழர்களுக்கு வெளிப்படையாக எதிரியாக காணப்படும் இந்தியா மீண்டும் இரட்டை வேடம் போட தயாராவது போல இருக்கு... எங்கட ஆக்கள் அடுத்த முறை சோனியா ஆட்ச்சிக்கு வரவேண்டும் எண்டு சொல்லும் அளவுக்கு கொண்டு வந்து விடுவாங்கள்... ( தமிழர்கள் இண்றும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் செயற்படுகிறார்கள் எண்டது வேறு விடயம்... )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயமும் மனக் கிலேசமும் யாழ் மக்களை வாட்டுகின்றன..என்கிற தலைப்பில் இவர் ஒரு கட்டுரையை வரைந்திருக்கிறார்.

அக்கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே தர முயற்சிக்கிறேன்.

கடந்த சனாதிபதித் தேர்தலின் பின்னர், தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தில் மக்களிடையே உள்ளார்ந்த பயமும், கலக்கமும் நிறைந்து காணப்படுகிறது.

மகிந்த பெரும் வாக்கு வித்தியாசத்தில் அந்தத் தேர்தலில் வென்றிருந்தார்.ஆனால் அவர் தனது எதிரி வேட்பாளரான சரத் பொன்சேக்காவைக் காட்டிலும் மிகவும் குறைந்த வாக்குகளையே தமிழர் பிரதேசங்களில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெற்றிருந்தார்.

"நாங்கள் இந்தத் தேர்தல் முடிவுகளால் மிகவும் அதிருப்தியடைந்திருக்கிறோம்.நாங்கள் பொன்சேக்கா வெல்லவேண்டுமென்றே விரும்பியிருந்தோம்.இனித் தமிழர்களை இந்த அரசு எப்படி நடத்தப்போகிறதோ என்று எமக்குத் தெரியவில்லை என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறினார்.

முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த தமிழ்க் கட்சியான தமிழர் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் சரத் பொன்சேக்காவை ஆதரித்திருந்தது.

Link to comment
Share on other sites

சுருதி மாறுகிறதா தமிழோசை ?!

ஆனந்தி, ஷங்கர், தாசீசியஸ் போன்ற ஈழத்து செய்தி அமைப்பாளர்களின் காலத்தின் பின்னர், லண்டன் பி.பி.ஸி இனது தமிழோசை தமிழர் ஆதரவுத் தளத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் சிங்கள அரசின் இனவழிப்பை அப்படியே நியாயப்படுத்துமளவிற்கு தனது செய்திகளை அமைத்தும் ஒளிபரப்பியும் வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் உச்சகட்டமாக கருணா பிளவின்போது அது நடந்துகொண்ட விதம் மற்றும் 2008 இன் ஆரம்பக் காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் கடைச் நாட்கள் வரையிலும் அவ்வாறே இலங்கை சனாதிபதித் தேர்தல் காலம் வரையிலும் அதனது செய்திகள் கேட்பவர்கள் உளரீதியாக சோர்வடையச் செய்து ஒரு சரணாகதி நிலையாடையச் செய்வதாகவே இருந்து வந்தது.

ஆனால், அண்மையில் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலின் பின்னர் அது எழுதிய இரு ஆய்வுக்கட்டுரைகள் அதன் சுருதி மாறி வேறு திசையில் பYஅணிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தவகையான முதலாவது கட்டுரை நேற்று தயா அவர்களால் இங்கே இணைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டுரை தமிழோசை செய்தித் தயாரிப்பாளரான எதிராஜன் அன்பரசன் அவர்களால் தேர்தலின் பின்னரான யாழ் மக்களின் மனோநிலை என்ன என்பது பற்றி அலசுகிறது.

என்னதான் அரச சார்பற்றவர்கள், நடுநிலையானவர்கள் என்று தம்மை மேற்கத்தைய ஊடகங்கள் சொல்லிக்கொண்டாலும், அவை அந்தந்த அரசுகளின் பிரதான அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்வர். ஈராக் யுத்தத்திற்கு பிபிசி கருத்தியல் தளத்தில் தன் முழுப்பங்களிப்பையும் கொடுத்து ஆதரவு நல்கியது ஒரு சிறந்த உதாரணம். எம் பிரச்சனையிலும் சமாதான காலத்திற்கு முன் ஒரு முகத்தையும், பின் மேற்கத்தைய நாடுகள் புலிகளை ஒடுக்க முழுமுயற்சியில் இருக்கும் போது இன்னொரு முகத்தையும் பிபிசி (தமிழோசை உட்பட) காட்டியது. இன்று மேற்கத்தைய நாடுகளின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு சரத் வெல்லவில்லை என்பதால் மகிந்த தலைமையிலான இலங்கை அரசின் ஒவ்வொரு விடயத்தையும் விமர்சிக்க ஆரம்பித்து அவர் மீதான் கூட்டு எதிர்ப்பு மனநிலையை தோற்றுவிகக் முயல்கின்றது. மகிந்த வென்ற சில மணி நேரத்திலேயே, சரத் மகிந்தவின் வெற்றியை Challenge பண்ணுகின்றார் எனும் விதத்தில் தான் செய்தியின் தலைப்பை இட்டு இருந்தது. இன்றும் காணாமல் போன சிங்களப் பத்திரிகையாளரின் மனைவியின் வேண்டுகோளை முதன்மையாக வெளியிட்டு இருந்தது.

முடிந்தால், இந்த 'சரத்' வெல்லாத காலமதில் தமிழர்கள் எமக்கு கிடைக்கக் கூடிய ஆகக்குறைந்த அனுகூலங்களையாவது பெறுவதற்கு ஒன்றுபடுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள ராணுவத்தல் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரிய அழிவினைச் சந்தித்த தமிழினத்தை நோக்கி சனாதிபதி எந்தவொரு நேசக்கரத்தையோ அல்லது சமரசத் தீர்வையோ இதுவரை வழங்கவில்லை என்கிற ஆத்திரமும் ஏமாற்றமுமே இந்த வாக்களிப்பில் தமிழர் நடந்துகொண்ட முறைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

ஊரடங்கு உத்தரவுகள் கெடுபிடிகள் என்று ஒருவருட காலத்துக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாண நகர் இன்று வேறு நகராகக் காட்சியளிக்கிறது.நீண்ட நேரம் கடைகள் திறக்கப்பட்டிருப்பதோடு கலாச்சார நிகழ்வுகளும் இப்போது ஆங்காங்கே நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. தென்னிலங்கையிலிருந்து இங்குவரும் சிங்கள உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆனால் பலரும் இந்த அரசாங்கத்தின்மீது பல்வேறு காரணங்களுக்காக அதிருப்தியடைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அதில் பிரதானமானது, போரின் இறுதிக்கட்டத்தின்போது அகதிகளாக்கப்பட்ட லட்சக்கனக்கான மக்களின் மீள்குடியேற்றம் என்றால் மிகையாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்டப் போரின்போது அகதிகளாக்கப்பட்ட லட்சக்கண்க்கான மக்களில் பெரும்பாலானோர் இன்று விடுவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் 80,000 தமிழர்கள் வவுனியா நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.விடுவிக்கப்பட்ட மக்களின் பெரும்பான்மையானவர்கள் இன்றும் தமது அன்றாட உணவிற்குக் கஷ்ட்டப்படுவதையே காண முடிகிறது.இவ்வாறு யாழ்ப்பாணம் வந்திறங்கிய சுமார் 60,000 தமிழர்கள் தமது உறவினர் நண்பர்களின் வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ தங்குவதைத்தான் கான் முடிகிறது. வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் இவர்கள் வாடகை கொடுப்பதுவும் கடிணமாகத்தான் இருக்கிரது.

"இடம்பெயர்ந்த மக்களுக்கான வசதிகள் எதுவும் செய்துகொடுக்கப்படாமையினால் அவர்கள் கவலையுடனேயே இருக்கின்றனர்.வன்னி பெரு நிலப்பரப்பில் அவர்களிடமிருந்த எல்லா வளங்களையும் அவர்கள் இன்று இழந்து விட்டனர்" என்று யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவிக்கிறார்.

இவ்வாறு யாழ்ப்பானம் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு தம்பதியினர் கடும் வறுமை தாங்காது தற்கொலை செய்துகொண்ட செய்தியும் சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதனால் ஏற்பட்ட துயரம் இவர்களின் மனதில் ஆழத்திலிருந்ததியும் அறிந்துகொள்ள முடிந்தது......

இவ்வாறு மக்கள் தற்போதிஅய் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்று எழுதும் அன்பரசன், இறுதியில் டக்கிளசின் பொன் மொழிகலையும் சேர்த்திருக்கிறார்." சந்தர்ப்பங்களைத் தவரவிட்டு விட்டோம், 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம்..என்றதில் தொடங்கி இன்று சனாதிபதிய நிராகரித்து வரை தமிழர்கள் சந்தர்ப்பங்கலைத் தவர விட்டு விட்டார்கள்" என்று புலம்பியிருக்கிறார் டக்கிளஸ்.இதனால் தமிழருக்கு இன்னும் அழிவுதான் சேரப்போகிறது என்று பயமுறுத்தியிருக்கிறார்.

ஆக, எமது தார்மீகப் போராட்டம் இந்தியாவையும் மேற்குலகையும் பொறுத்தவரை சதுரங்கம். தமக்குத் தேவையென்றால் அரசாங்கத்தி விமர்சிப்பார்கள், இல்லையென்றால் எம்மைப் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சம் தீர்ப்பதில் தமிழர்களை வெல்ல எவராலும் முடியாது.

Link to comment
Share on other sites

வீழ்ந்து கிடக்கும் ஒரு இனத்தின் அரசியல் இயன்றவரை நலன்களை காப்பாறியபடி எழுகிற சமரசங்கள்தான். எழுந்தால்தான் நடப்பது பற்றியோ ஓடுவது பற்றியோ விடுதலை பற்றியோ பேசமுடியும். நாம் இரு சிறு நகரத்தின் குடித்தொகைக்கும் குறைவான சனத்தைகையைக்கொண்ட ஒரு சிற்றினம் என்பதையும் நமது உழைப்பாற்றலும் கருவளமும் கொண்ட இளய தலைமுறைகளை புலப்பெயர்விலும் போரிலும் இளந்துபோன சிற்றினம். இதை நாம் ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை. போராளிகளின் காலத்திலேயே வீதிகள் நிர்மாணிக்கவும் வீடுகள் கட்டவும் சிங்கள தொழிலாளர்களையும் நிபுணர்களையும் கொண்டு வரவேண்டியிருந்தது. இப்போ உழைப்பவர் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது. எதிர்காலத்தில் சிங்கள தொழிலாளர்கள் திரும்பிப் போக மாட்டார்கள். சிங்களக்குடியேற்றம் தவிர்க்க இயலாத நிகழ்வாகிவிடும். சிங்களத் தொழிலாளர்களும் சீனத் தொழிலாளர்களும் நிபுணர்களுமா அல்லது நாமுன் இந்திய தமிழக தொழிலாளரும் நிபுணர்களா என்கிற கேழ்வி வரலாற்றுக் கேழ்வி எங்கள்முன் நிற்க்கிறது. புலம் பெயர்ந்த அரசுகளோ வேறு அமைப்புகளோ வரலாற்றையும் விடுதலையையும் ஆதரிக்க முடியுமே அல்லாமல் வரலாற்றையும் விடுதலையையும் ஏற்றுமதி செய்ய முடியாது. எங்கள் புலக்குடி (Diaspora) பொருளாதார ரீதியிலும் இறையியல் ரீதியிலும் அனுதாப ரீதியிலும் மேற்றுலகில் செல்வாக்குப்பெற்ற யூத புல்க்குடிபோல எண்ணுவது அபத்தமாகும்.

எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தப்புத் தப்பாக எழுதப் பட்ட பளைய ஏற்ப்பாடு தோற்றுப்போய்விட்டது எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் புதிய ஏற்ப்பாடு எழுதப் படலாம். இப்படித்தானே சோழர் காலத்தில் இருந்து பிராந்திய அரசியல் இயங்குகிறது. இந்தியாவுடன் ஏற்பாடு இருந்தால் மட்டுமே தமிழக அரசால் இந்தியாவை எங்களுக்குச் சாதகமாக அழுத்த முடியும் என்பதும் தெளிவாகி உள்ளது. புலம்பெயர்ந்த எங்களது நடவடிக்கைகலால் அல்ல களத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தலில் சம்பந்தர் றவ்ஹக்கீம் மனோகணசேனின் கூட்டு நிலைபாட்டால் தோல்விக்கு பின் எமது மக்கள தாம் ஒரு அணி என்பதை உலகிற்க்கு சொல்லி இருக்கிறார்கள். அதிதீவிரவாதம் பேசுவதல்ல அவர்கள் அரசியல் ரீதியாக அடுத்த கவடும் வைக்க உதவுவதே இன்றைய காலத்தின் தேவை.

Link to comment
Share on other sites

இந்தியாவுடன் ஏற்பாடு இருந்தால் மட்டுமே தமிழக அரசால் இந்தியாவை எங்களுக்குச் சாதகமாக அழுத்த முடியும் என்பதும் தெளிவாகி உள்ளது. புலம்பெயர்ந்த எங்களது நடவடிக்கைகலால் அல்ல களத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தலில் சம்பந்தர் றவ்ஹக்கீம் மனோகணசேனின் கூட்டு நிலைபாட்டால் தோல்விக்கு பின் எமது மக்கள தாம் ஒரு அணி என்பதை உலகிற்க்கு சொல்லி இருக்கிறார்கள். அதிதீவிரவாதம் பேசுவதல்ல அவர்கள் அரசியல் ரீதியாக அடுத்த கவடும் வைக்க உதவுவதே இன்றைய காலத்தின் தேவை.

:lol::lol::o

BBC தமிழ் சேவையினுள் இந்திய பயங்கரவாதிகள் "ரோ" ஊடுருவி வலுப்பெற்ற காலம் முதல், வெளிப்படையாக நீதி விரோத, ஈழத்தமிழர் விரோத போக்கு, இனப்படுகொலை ஆதரவுப் போக்கு தொடக்கி கோலோச்சி வந்தது.

அதன் விளைவாக அது தன் நம்பகத்தன்மையை இழக்க, படிப்படியாக அதன் நேயர் வட்டம் குறுகி வந்தது.

இழந்த நம்பகத்தன்மையை பெற பலவருடங்கள் செல்லலாம். முதலில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து வெளிவரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் அரச சார்பற்றவர்கள், நடுநிலையானவர்கள் என்று தம்மை மேற்கத்தைய ஊடகங்கள் சொல்லிக்கொண்டாலும், அவை அந்தந்த அரசுகளின் பிரதான அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்வர். ஈராக் யுத்தத்திற்கு பிபிசி கருத்தியல் தளத்தில் தன் முழுப்பங்களிப்பையும் கொடுத்து ஆதரவு நல்கியது ஒரு சிறந்த உதாரணம். எம் பிரச்சனையிலும் சமாதான காலத்திற்கு முன் ஒரு முகத்தையும், பின் மேற்கத்தைய நாடுகள் புலிகளை ஒடுக்க முழுமுயற்சியில் இருக்கும் போது இன்னொரு முகத்தையும் பிபிசி (தமிழோசை உட்பட) காட்டியது. இன்று மேற்கத்தைய நாடுகளின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு சரத் வெல்லவில்லை என்பதால் மகிந்த தலைமையிலான இலங்கை அரசின் ஒவ்வொரு விடயத்தையும் விமர்சிக்க ஆரம்பித்து அவர் மீதான் கூட்டு எதிர்ப்பு மனநிலையை தோற்றுவிகக் முயல்கின்றது. மகிந்த வென்ற சில மணி நேரத்திலேயே, சரத் மகிந்தவின் வெற்றியை Challenge பண்ணுகின்றார் எனும் விதத்தில் தான் செய்தியின் தலைப்பை இட்டு இருந்தது. இன்றும் காணாமல் போன சிங்களப் பத்திரிகையாளரின் மனைவியின் வேண்டுகோளை முதன்மையாக வெளியிட்டு இருந்தது.

முடிந்தால், இந்த 'சரத்' வெல்லாத காலமதில் தமிழர்கள் எமக்கு கிடைக்கக் கூடிய ஆகக்குறைந்த அனுகூலங்களையாவது பெறுவதற்கு ஒன்றுபடுவோம்

மகிந்த ஆட்சி தொடர்வதே தழிருக்கு நன்று என்று சொன்னபோது என்னை பலபேர் திட்டினார்கள்.

தற்போதைய சுதந்திர தின உரை இன்னும் கொஞ்சம் உறுதுணையாக அமைந்திருக்கின்றது.

கருணாநிதிபோல் தருகிறேன் தருகிறேன் என்பவனைவிட. தரமாட்டேன் எனும் ஜெயா பரவாயில்லை என்ற வாதத்தை எதிர்த்து. மகிந்தவை போக்குவதற்கு சரத்தை தெரிவோம் என்றவர்களின் தற்போதைய கருத்து எதுவாகுமோ?

வஞ்சம் தீர்ப்பதில் தமிழர்களை வெல்ல எவராலும் முடியாது.

குட்ட குட்ட குனியவில்லை என்று ஆதங்கபடுகின்றீர்களா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த ஆட்சி தொடர்வதே தழிருக்கு நன்று என்று சொன்னபோது என்னை பலபேர் திட்டினார்கள்.

தற்போதைய சுதந்திர தின உரை இன்னும் கொஞ்சம் உறுதுணையாக அமைந்திருக்கின்றது.

கருணாநிதிபோல் தருகிறேன் தருகிறேன் என்பவனைவிட. தரமாட்டேன் எனும் ஜெயா பரவாயில்லை என்ற வாதத்தை எதிர்த்து. மகிந்தவை போக்குவதற்கு சரத்தை தெரிவோம் என்றவர்களின் தற்போதைய கருத்து எதுவாகுமோ?

தருவன் என்று சொலி போட்டு தராமல் விடுவதிலும், தரமாட்டேன் என்று சொல்லி தராமல் விடுவதிலும் என்ன வேறு பாடு இருக்கு யாருமே தரப்போவதில்லை என்று ஆன பின்னால் சரத்தை விட மகிந்தர் எப்படி உசந்தவர் நேர்மையாக தரமாட்டேன் என்ற படியாலா?

மொத்தத்தில் பூச்சியம் இதில் என்ன உசத்தியும் தாழ்ச்சியும் இருக்கு? :rolleyes::lol:

சர்வதேசம் வந்து ஏதாவது தரும் என எதிர்பாக்கிறீர்களா? ரெம்ப நல்லவர் போல் தெரியுது எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்க, :D:lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதற்கான வேலையில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
    • "தேயாதே வெண்ணிலவே"     முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும்.   அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவது தான் பார்க்க வேண்டும் என்று அவள் கனவு கண்டாள். பலர் அதை கற்பனையான கட்டுக்கதை என்று கருதினாலும். மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாகாமல், புராணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்கும் தேடலை அவள் தொடங்கினாள்.   அல்லி கிராமப் பெரியவர்களைக் கலந்தாலோசித்தார், அவர்கள் 'சந்திரன் மறையாதே' என்று பேசும் பண்டைய நூல்களின் குறிப்புகளை அவளுடன் பகிர்ந்து கொண்டனர். என்றாலும் சந்திரன் மறைய மறுப்பது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று நூல்கள் சுட்டிக்காட்டின. எனவே பேரழிவு நிகழ்வுகள் குறித்து அவர்கள் எச்சரித்ததுடன் அப்படியான ஒரு நிகழ்வு என்றும் நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.   எது எப்படியாகினும் அல்லி தனது உறுதியால் உந்தப்பட்டு, தனது ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். வானியல் நிகழ்வுகளைப் பற்றி தனது கிராமத்தில் உள்ள நூலகத்தில் பண்டைய நூல்களில், புராணங்களில் எழுதிய பல பழைய குறிப்புகளைக் கண்டுபிடித்தார். அந்த குறிப்பில் சந்திரனின் முழுமையை பாதுகாக்கும் மற்றும் தேயும் வெண்ணிலாவை தடுக்கும் திறன் கொண்ட, இன்று மறந்துபோன சடங்கு பற்றிய ரகசிய குறிப்புகள் இருந்தன. அது அவளுக்கு உத்வேகம் கொடுத்தது. நீண்ட நேரம் வாசித்த களைப்பில் அவள் நூலக மேசையிலேயே கண்ணயர்ந்து விட்டாள்.   அல்லி, புராண கதையில் கூறிய அந்த மர்ம இடத்தை நோக்கி, எவருக்கும் சொல்லாமல் தன்னந் தனிய தனது சவாலான பயணத்தைத் தொடங்கினாள், எவராலும் உள்போகாத, ஆராயப்படாத காடுகள் மற்றும் பயங்கர மலைகளுக்குள் நுழைந்தாள், புராண நூல்களில், வாசித்து அறிந்த, ரகசிய துப்புகளால் அவள் வழிநடத்தப்பட்டாள். அவளுடைய பாதையில், அவளின் தைரியத்தையும் உறுதியையும் சோதிக்கும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டாள். அவள் பயங்கரமான பள்ளத்தாக்குகளை கடந்தாள், புராண கதைகளில் காணப்படும் பல அதிசய உயிரினங்களை எதிர்கொண்டாள், அத்துடன் சக்திவாய்ந்த புயல்களை, மின்னல்களை எதிர்கொண்டாள், என்றாலும் எதற்கும் சற்றும் சளையாது தன் பயணத்தை தொடர்ந்தாள்.   பல வாரங்கள் இடைவிடாத நடைகளின் பின், அல்லி ஒரு கம்பீரமான மலை உச்சியில் ஒரு ஒதுக்குப்புற தோப்புக்கு வந்தடைந்தாள். பழங்கால கல் தூண்களால் சூழப்பட்டு, சந்திரனின் வெள்ளி ஒளியில் அவள் முற்றாக நனைந்தாள். சற்று தேடுதலின் பின், புராணக் குறிப்பில் கூறப்பட்ட சடங்கு செய்ய வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தாள். புராண கதையில் கூறப்பட்ட அறிவுரைகளின் படி புனிதமான பொருட்களை ஏற்பாடு செய்தாள் மற்றும் கடந்த தலைமுறையிலிருந்து வழி வழி வந்த மந்திரங்களை உச்சரித்தாள்.   அல்லி சடங்கை முடித்தவுடன், அவள் பூசை செய்த அமைதியான அழகான தோப்பை சூழ்ந்து, அதன் இயற்கையான சுழற்சியை மீறி, சந்திரன் தனது தேய்தலை இடைநிறுத்தி, அவளுக்கு மேலே பிரகாசமாக பிரகாசித்தது.. அல்லியின் முயற்சிகளை அறியாத கிராமம், தங்களின் வீடுகளின் மேலே தேயாத வெண்ணிலாவின் ஒளிர்வைப் பார்த்து பிரமித்தார்கள்!   அடுத்தடுத்த நாட்களில், கிராமவாசிகள் நிலவின் மறையாத, தேயாத பிரகாசத்தைக் கண்டு வியந்தனர், என்றாலும் வரவிருக்கும் பேரழிவிலிருந்து தங்கள் உலகம் காப்பாற்றப் பட வேண்டும் என்று பெரும் பூசைகள் செய்யத்தொடங்கினர். அதன் முழக்கம் அல்லியின் காதிலும் பல நூறு மைல்கள் தாண்டி கேட்டது. அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். தான் இன்னும் தனது கிராமத்து நூலகத்தில், புராணக் கதைகளின் நடுவில் இருப்பதைக் கண்டு மிக மிக வெட்கப்பட்டு தலை குனிந்தபடி தள்ளாடி தள்ளாடி வீட்டை நோக்கி புறப்பட்டாள், தனது முடியாத தேடுதலை நோக்கி, "தேயாத வெண்ணிலா"வாக!!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • முரளிதரனுக்கு வாழ்த்துக்கள். இதற்கான பயிற்சிகள் எடுத்தாரோ?
    • நல்லதொரு விளக்கம். கையோட கம்மாரிஸ்.அடுத்த தெர்தல் வந்துவிட்டது. இதுவரை தமிழர் கத்தாத கத்துக்களா? நீங்களும் கத்துங்க கத்துங்க.யார் தடுத்தது?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.