Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தனித்தனி இரு அரசியல் அமைப்புக்கள்

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் அவைகளும் தனித்தனி இரு அரசியல் அமைப்புக்கள் என விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தோம்.

இக் கருத்துப்பரிமாற்றம் 5.02.2010 வரை இடம் பெற்றபின் மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி 10ம் திகதியளவில் அறிக்கை முழுமைப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துப் பரிமாற்றங்களையும், அதற்குரிய கலந்துரையாடல்களையும் நாம் இப்போது நடத்தி வருகிறோம்.

இதுவரை கிடைத்துள்ள கருத்துக்கள் இவ் அறிக்கையினை மேலும் செழுமைப்படுத்தத் துணைபுரிபவையாக உள்ளன.

மேலும் கூடுதல் பங்களிப்பை வழங்குவதற்காக கருத்துப் பரிமாற்றக்காலத்தைச் சற்று நீடிக்குமாறும் எமக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன. அதற்கமைய கருத்துப் பரிமாற்றக்காலத்தை 15.02.2010 வரை நீடிப்பதென முடிவு செய்துள்ளோம்.

மக்களிடமிருந்து வரும் கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கையினை முழுமை செய்யவென எமது மதியுரைஞர்குழு பெப்ரவரி மாதம் 20-22 திகதிகளில் கூடவுள்ளது.

முழுமையான அறிக்கை PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

TGTEPressRelease_05Feb10.pdf

Edited by Aalavanthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதோ எட்டு மாதமாய் திட்டம் போடுறீங்கள்.... எப்ப இனவெறி சிங்களவனை இரண்டு இலட்சம் மக்களை கொன்று மாதம் 7000 மக்களை கொன்று கொண்டிருக்கும் உலக சட்ட மேடையில் கொண்டுவரத்திட்டம்? எப்போது அங்கு முகாம்களில் வாடும் மக்களுக்கு உதவ திட்டம்? எப்போது இராணுவத்தை மக்கள் பகுதிகளில் இருந்து விடுவிக்க திட்டம்? எப்போது மலையக மக்களின் வாழ்கையை உயர்த்த குரல் குடுக்க திட்டம்? எப்போது 50000 குழந்தைகளை வைத்து தொழில் செய்யும் சிங்கள சுற்றுலாத்துறையை காட்டிக்கொடுக்க திட்டம்? சும்மா கண்ட பாட்டுக்கு மீட்டின்க் போட்டு கோப்பி குடிக்காமல் ஸ்ரீ லங்கா என்றால் ஜெனோசைட் எண்ட முக்கிய செய்தியை பரப்புங்கோ. ஸ்ரீ லங்கா ஜெனோசைட் என்ற வார்த்தைகள் இல்லாமல் ஒரு நாடு இரண்டாக பிரிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எதோ எட்டு மாதமாய் திட்டம் போடுறீங்கள்.... எப்ப இனவெறி சிங்களவனை இரண்டு இலட்சம் மக்களை கொன்று மாதம் 7000 மக்களை கொன்று கொண்டிருக்கும் உலக சட்ட மேடையில் கொண்டுவரத்திட்டம்? எப்போது அங்கு முகாம்களில் வாடும் மக்களுக்கு உதவ திட்டம்? எப்போது இராணுவத்தை மக்கள் பகுதிகளில் இருந்து விடுவிக்க திட்டம்? எப்போது மலையக மக்களின் வாழ்கையை உயர்த்த குரல் குடுக்க திட்டம்? எப்போது 50000 குழந்தைகளை வைத்து தொழில் செய்யும் சிங்கள சுற்றுலாத்துறையை காட்டிக்கொடுக்க திட்டம்? சும்மா கண்ட பாட்டுக்கு மீட்டின்க் போட்டு கோப்பி குடிக்காமல் ஸ்ரீ லங்கா என்றால் ஜெனோசைட் எண்ட முக்கிய செய்தியை பரப்புங்கோ. ஸ்ரீ லங்கா ஜெனோசைட் என்ற வார்த்தைகள் இல்லாமல் ஒரு நாடு இரண்டாக பிரிக்க முடியாது.

யாருங்க நீங்கள்? அமெரிக்கனோ ?? தமிழராக பிறந்த நீங்கள் விமர்சிக்க மட்டுமா லாயக்குடையவர்?? :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதோ எட்டு மாதமாய் திட்டம் போடுறீங்கள்.... எப்ப இனவெறி சிங்களவனை இரண்டு இலட்சம் மக்களை கொன்று மாதம் 7000 மக்களை கொன்று கொண்டிருக்கும் உலக சட்ட மேடையில் கொண்டுவரத்திட்டம்? எப்போது அங்கு முகாம்களில் வாடும் மக்களுக்கு உதவ திட்டம்? எப்போது இராணுவத்தை மக்கள் பகுதிகளில் இருந்து விடுவிக்க திட்டம்? எப்போது மலையக மக்களின் வாழ்கையை உயர்த்த குரல் குடுக்க திட்டம்? எப்போது 50000 குழந்தைகளை வைத்து தொழில் செய்யும் சிங்கள சுற்றுலாத்துறையை காட்டிக்கொடுக்க திட்டம்? சும்மா கண்ட பாட்டுக்கு மீட்டின்க் போட்டு கோப்பி குடிக்காமல் ஸ்ரீ லங்கா என்றால் ஜெனோசைட் எண்ட முக்கிய செய்தியை பரப்புங்கோ. ஸ்ரீ லங்கா ஜெனோசைட் என்ற வார்த்தைகள் இல்லாமல் ஒரு நாடு இரண்டாக பிரிக்க முடியாது.

உங்களுக்கு தமிழ் சினிமா நன்றாக பிடிக்கும் போல இருக்கின்றது. இரண்டு மணி நேரத்தில் எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து விடும். அப்படியே சினமாவை பார்ப்பதை விட்டு விட்டு ஏன் அரசியல் பேச வருகின்றீர்கள்?

போராட்டக்களத்தில் 30 வருடம் கட்டிக்காத்த போராட்ட வடிவத்தை தொலைத்து விட்டு அடுத்து உங்கள் அவசரத்துக்கு எல்லாம் செய்து மீண்டும் தடை, பயங்கரவாதி, என்று மேற்க்கு நாடுகள் இதையும் தடை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?

சொல்வதை விட செய்ய முனையுங்கள்... ஒற்றுமையுடன்..

இந்தச் சிக்கல் தீர்வதாகத் தெரியவில்லை, நா. க. த. ஈ அரசிற்கும், மக்கள் அவைக்கும் ஒரேநாளில் தேர்தல் வைக்கலாம் என்ற கருத்தை, அண்ணன் உருத்திரகுமார் அவர்கள் முன்வைத்துள்ளார். காலம் கடந்து எடுக்கப்பெற்ற தவறான முடிவு. மக்களவைகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற நாடுகளில் மக்களின் எழுச்சியான, பெரும் திரட்சியாக வாக்களிப்பிற்குத் தடையாக இருந்தவர்கள் யார் என்று பார்த்தால் நா. க. த. ஈ. அரசு அமைப்பதற்கு உங்களால், உங்களைக் கைகாட்டிவிட்டு சென்றவரால் நியமிக்கப் பெற்றவர்களாகவே இருந்தார்கள். இவர்கள் உண்மையாக இணைந்து வேலை செய்வார்களா? தினம் உட்குத்து அரசியல்தான் செய்வார்கள்?

ஐயா ஒரு உறைக்குள் பல வாள்கள் இருக்கமுடியாது. தயவு செய்து இரு பிரிவினரும் தனித்தே செயற்படுவதுதான் நல்லது. திறமையான, உண்மையான செயற்பாடு, அமைப்பின் நிலையான தன்மையை உறுதிசெய்யட்டும். கடந்த காலத்தில் புலத்தில் செயற்பாட்டாளர்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்ப்பதில் பெரும் பகுதி சமாதான காலத்தை விரயமாக்கினார் கள்வன்னியில் இருந்த பொறுப்பாளர்கள். இப்போது அவர்களும் பிணக்குத் தீர்க்கும் நிலையிலில்லை. அவர்கள் இருந்தாலும் இவர்கள் கேட்கப்போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரர்கள் நிதர்சன், நுனாவிலன்: அருமையான ஒரு கேள்வியை கேட்டீர்கள். நான் ஒரு தனி மனிதன் தான் ஆனால் என்னால் முடிந்த பல விடயங்களை நமது மக்களுக்காக செய்திருக்கிறேன்/செய்துகொண்டிருக்கிறேன். . சில உதாரணங்கள். கடந்த இரண்டு வருடங்களாக எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலர் இறந்தனர். சும்மா தமிழ் பேப்பரில விளம்பரம் போட்டு, பின் வண்டியும் தொந்தியுமாக இருக்கும் நம்மவர்களை அந்தியட்டிக்கு கூப்பிட்டு சோத்தை போடாமல். மற்றைய மொழி நாழிதழ்களில் "ஸ்ரீ லங்கா போரில் கொல்லப்பட்டவர்கள்" என்று விளம்பரம் குடுத்தேன். பின் எனது சுற்றம், வேலை போன்ற இடங்களில் இருக்கும் தமிழர் அல்லாதோரை அழைத்து உணவு கொடுத்தோம். அப்போதும் ஸ்ரீ லங்கா இன அழிப்பை பற்றி தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், டொச் மொழிகளில் துண்டு தயாரித்து வந்தவர்களுக்கு நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களை உணர்த்தினோம். நான் வாழும் நகர் ஒரு இலட்சம் மக்களை கொண்டது.

இப்போது எனது நகரில் வந்து ஸ்ரீ லங்கா என்றால் உடனே ஜெனோசைட் தான். சட்டி ஆறிய பின் தோசையை ஊத்தாமல், சூட்டோடு சூடாக களத்தில் இறங்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. மற்றும் ஒரு குழுவை கட்டியெழுப்ப வாய்ப்பேச்சு மட்டும் சரி வராது, ஏதாவது குழுவாக செயல்பட வேலைத்திட்டம் தேவை. அங்கு மக்கள் அழியும் போது இங்கே பதவிக்கு போட்டி வைத்து மெனக்கேடுவது நல்லதாக தெரியவில்லை. இது மற்றும் சிங்கள/பார்சி கூட்டத்திற்கு இன்னும் திட்டம் தீட்டி நம்மை குழப்ப வழிவகுக்கும்.

நான் இந்த முறை ஸ்ரீ லங்கா/பார்சி இன அழிப்பு கூட்டத்தால் கொல்லப்பட்ட எனது குடும்பத்தினரின் திவசத்தையும் அதே முறையில் செய்யபோகிறேன். நாம் அரை கோடி தமிழர் எழுநூறு கோடி உலக மக்களுக்கு நமக்கு நடந்த நடக்கும் அநியாயத்தை எடுத்து கூறு மட்டும் நமக்கு நாடில்லை.

பிறகென்ன, இடைவெளிதான் நல்லாகத் தெரிகிறதே. தேவையானவனெல்லாம் பூந்து விளையாடப் போகிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.