Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்: அதிரடி தகவல் .

Featured Replies

அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்: அதிரடி தகவல் .

.சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி சரத் பொன்சேகா தனது அமெரிக்க பிரஜா உரிமைக்கான பத்திரத்தை காலநீடிப்பு செய்வதற்காக அங்கு சென்றிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அவர் அங்கு சென்றிருந்தசமயம், அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தபோதும் விசாரணைகள் எதற்கும் முகம்கொடுக்காமல் நாடு திரும்பியினார் என்று செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால், பொன்சேகா அமெரிக்காவில் தங்கியிருந்த சமயம் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அரச முகவர்கள் சிலருடனும் பல சுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் இந்த பேச்சுக்களின்போது சிறிலங்கா அரசியல் விவகாரம் மற்றும் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் தொடர்பாகவும் விரிவாக பொன்சேகா எடுத்துக்கூறியிருந்தார் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்களில் ஒன்றின்போது, சிறிலங்கா படைகள் வன்னியில் மேற்கொண்ட போர்க்குற்றங்கள், சரணடைந்த விடுதலைப்புலிகளித் தலைவர்களுக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் நிலைகொண்டிருந்த படையணிகளின் விவரங்கள் ஆகியவை உட்பட பல விவரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை பொன்சேகா அமெரிக்க அதிகாரிகளிடம் கையளித்துள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்த சந்திப்புக்களை நிறைவுசெய்த பின்னர், கடந்த நவம்பர் 4 ஆம் திகதி நாடு திரும்பிய பொன்சேகா, கொழும்பில் அமெரிக்க தூதுவர் பற்றிக்கா அம்மையாரை சந்தித்து இரகசிய பேச்சு நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களில் திட்டமிட்டபடியே கடந்த நவம்பர் 12 ஆம் திகதி படைகளின் பிரதானி பதவியிலிருந்து பொன்சேகா இராஜினாமா செய்துகொண்டார் என்றும் அதன் பின்னர் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் என்றும் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஏற்றுக்கொள்ளும்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு அமெரிக்க தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டதாகவும்கூட அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா அமெரிக்காவில் தங்கியிருந்த சமயம் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அரச முகவர்கள் சிலருடனும் பல சுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் இந்த பேச்சுக்களின்போது சிறிலங்கா அரசியல் விவகாரம் மற்றும் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் தொடர்பாகவும் விரிவாக பொன்சேகா எடுத்துக்கூறியிருந்தார் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்களில் ஒன்றின்போது, சிறிலங்கா படைகள் வன்னியில் மேற்கொண்ட போர்க்குற்றங்கள், சரணடைந்த விடுதலைப்புலிகளித் தலைவர்களுக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் நிலைகொண்டிருந்த படையணிகளின் விவரங்கள் ஆகியவை உட்பட பல விவரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை பொன்சேகா அமெரிக்க அதிகாரிகளிடம் கையளித்துள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.

இனி சரத்தை சிறையில் வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க முடியுமே தவிர, வேறு லாபம் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

அமெரிக்கா வெள்விவகாரக் கொள்கையில் (சுய லாபம் தேடும்) மிகத்தெளிவாகவிருப்பவர்கள்,கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி சரத்தை சிறையில் வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க முடியுமே தவிர, வேறு லாபம் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

தங்கள் கருத்தை ஏற்கமுடியவில்லை

இனி சரத்தை வெளியில் விட்டுவிட்டு கல்லால் எறிந்து கொல்லலாம்

தேசத்துரோகம் செய்துவிட்டதாக...

இந்த நிலையில் தேர்தலில் சரத்துக்கு சிங்களவாக்கா........ :):):)

சிற்பி...

இங்கு இந்திய நலனுக்காக அமரிக்கா.. வேலை செய்கிறதேஒழிய.. அமெரிக்கா தன்னிச்சையாக செருகிக்கொண்டிருக்கவில்லை.

தமிழ் அமைப்புக்கள் மீதான உலகளாவியதடை தொடக்கம் காட்டுக்குள் வெட்டி கொல்லப்பட்ட விறகுவெட்டிவரை.. முழுக்க முழுக்க இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழே நடக்கிறது.

வேறு எந்த நாட்டுக்கும் இதில் ஈடுபாடு/ஆதாயம் இல்லை. சீனாவை தவிர.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிற்பி...

இங்கு இந்திய நலனுக்காக அமரிக்கா.. வேலை செய்கிறதேஒழிய.. அமெரிக்கா தன்னிச்சையாக செருகிக்கொண்டிருக்கவில்லை.

தமிழ் அமைப்புக்கள் மீதான உலகளாவியதடை தொடக்கம் காட்டுக்குள் வெட்டி கொல்லப்பட்ட விறகுவெட்டிவரை.. முழுக்க முழுக்க இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழே நடக்கிறது.

வேறு எந்த நாட்டுக்கும் இதில் ஈடுபாடு/ஆதாயம் இல்லை. சீனாவை தவிர.

ஆதாயம் இல்லாமல் மேற்குலகம் இவ்வளவு பணத்தை இறைக்குமா? ஆதாயம் இல்லாமல் கிடைத்த ஆதாரங்களை ஜக்கிய நாடு மறைக்குமா? பன்கீ மூன் ஒரு பொம்மை அவரின் கயிறு அமெரிக்காவில் இருக்கு, ஆட்டுவிப்பவன் அங்குதான் இருகிறான்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'Pயயெபெமயi' னயவநஸ்ரீ'15 குநடிசரயசல 2010 - 08:39 Pஆ' வiஅநளவயஅpஸ்ரீ'1266230367' pழளவஸ்ரீ'567689'ஸ

சிற்பி...

இந்திய நலனுக்காக அமரிக்கா.. வேலை செய்கிறதாக காட்டுகிறதே ஒழிய (சீனா உதியாக இருக்கும் வரை).. அமெரிக்கா தன்னிச்சையாகதான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்னும் எனது தாழ்மையான கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.