Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வர்த்தக வலயம் எனும் போர்வையில் தமிழர் வளங்களை சுருட்டும் சிறீலங்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்விடங்களில் தென்னிலங்கை முதலீட்டாளர்களை குவிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் யாழ்ப்பாணத்தில் பெருமளாவான தென்னிலங்கை வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொண்டு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை யாழப்பாண மக்களின் வளங்களை சுரண்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

தென்னிலங்கை வணிகர்களின் வருகையினை தொடர்ந்து யாழ்பாண மக்களின் பணங்கள் தென்னிலங்கை சிங்கள மக்களிள் வங்கிக் கணக்குகளுக்கு செல்வதாக பெருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் வடக்கில் சுதந்திர வர்தக வலயங்களை அமைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளத்தினை முதன்மையாக கொண்டு வன்னிப்பகுயில் சுதந்திர வர்தக வலயம் ஒன்றையும், திருகோணமலை மாவட்டத்தை முதன்மையாக கொண்டு இன்னுமோர் வர்தகவலயம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு முலீட்டாளர்களையும் தென்னிலங்கை முதலீட்டாளர்களையும் கவரும் நோக்கில் இவ்விரு வர்தக வலயங்களும் அமைக்கப்படவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

http://www.varudal.com

:D
:D:lol::lol:

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த் பிரிட்டிஸ்காரர் தான் சுருட்டினவர்கள். இப்ப சிங்களவன். நாங்கள் ஏன் தென்னிலங்கையில் போய் சுருட்ட கூடாது

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் எப்படியாவது வெளிநாட்டுக்கு வர வேண்டும் என்று ஒற்றை காலில் நிக்குதுகள்.எனது நன்பன் ஒருவன் அங்குள்ள தனது சகோதரங்களுக்கு ஒரு கோடி ருபா பெறுமதியான முதலீட்டை செய்து கொடுத்துள்ளான்.ஆனால் அவங்கள் இங்கே தான்(புலத்துக்கு)வர வேண்டும் என்று அடம் பிடிக்குறாங்கள்.அப்ப இருக்கிற இடத்தை மற்றவன் நிரப்புவன் தானே :D

எங்கட சனம் எப்படியாவது வெளிநாட்டுக்கு வர வேண்டும் என்று ஒற்றை காலில் நிக்குதுகள்.எனது நன்பன் ஒருவன் அங்குள்ள தனது சகோதரங்களுக்கு ஒரு கோடி ருபா பெறுமதியான முதலீட்டை செய்து கொடுத்துள்ளான்.ஆனால் அவங்கள் இங்கே தான்(புலத்துக்கு)வர வேண்டும் என்று அடம் பிடிக்குறாங்கள்.அப்ப இருக்கிற இடத்தை மற்றவன் நிரப்புவன் தானே :rolleyes:

புலம் பெயர் உறவுகள் தொடர்ந்து தமது உறவுகளை வெளிநாட்டுக்கு ஈர்ப்பதை உடன் நிறுத்தி, அவர்கள் ஊரில் தொழில் செய்யும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழரின் காணிகள் பிறர் கைக்கு போகாது சமயோசித முடிவுகளை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கொலைஞரும் இதுக்கு தான் அடிச்சு பிடிச்சு கொண்டு சிலோன் வரப்போறன் எண்டு சொன்னவரே? அவருக்கு சிங்களவன் குடுக்க இன்னும் லஞ்சம் இருக்கு. அது தான் தமிழர் நிலத்தை சுருட்டுவம் எண்டு வர திட்டம் போடுறார் போல இருக்கு.

பிறகு, "ஐயோ எனது ஈழ கண்மணிகளை காண நெஞ்சம் துடிக்கிறது. அவர்களுக்காக ஸ்ரீ பார்சி பொம்மை சிங்கிற்கு கவிதை வடிக்கபோகிறேன்" என்று போலிக்கண்ணீர் வடிப்பார்.

போல் சொன்னது போல: புலம் பெயர் உறவுகள் தொடர்ந்து தமது உறவுகளை வெளிநாட்டுக்கு ஈர்ப்பதை உடன் நிறுத்தி, அவர்கள் ஊரில் தொழில் செய்யும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழரின் காணிகள் பிறர் கைக்கு போகாது சமயோசித முடிவுகளை எடுக்க வேண்டும்.

மேலும் புலம் பெயர் உறவுகள், வடக்கில்,கிழக்கில்

* விவசாயம் சார் உற்பத்திகளை, ஏற்றுமதிகளை,

* மீன் பிடி சார் உற்பத்திகளை, ஏற்றுமதிகளை,

* படகுகள், கடல் சார் போக்குவரத்து உற்பத்திகளை, ஏற்றுமதிகளை,

* பனை வளம் சார் உற்பத்திகளை, ஏற்றுமதிகளை,

* பால் சார் உற்பத்திகளை, ஏற்றுமதிகளை,

* கோழிப்பண்ணை சார் உற்பத்திகளை, ஏற்றுமதிகளை,

* கட்டிட தொழில் சார் நிறுவனங்களை,

* கணினி மென்பொருள் சார் நிறுவனங்களை,

* கேந்திர இடங்களில் சுற்றுலா விடுதி சார் கட்டமைப்பில்,

* வங்கி சார் நிறுவனங்களை,

* கல்வி (CIMA, Technical, Computer, skilled labourer... ) சார் நிறுவனங்களை,

* மருத்துவம் சார் நிறுவனங்களை,

* வரலாறு சார் ஆய்வு நிறுவனங்களை,

* …………………

* …………………

* …………………

உடன் நிறுவி, அதை அவர்கள் உறவினர் உதவியுடன் முன்னெடுத்துச் செல்வது அவசியம்.

Edited by Aasaan

சுற்றுலாதுறை வழி காட்டிகளாக தமிழர் பயிற்சி பெற்று, களத்தில் இறங்க வேண்டும்.

யாழ் சுற்றி பாக்க விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு, உரிய உயர் தர சுற்றுள்ள சேவையை வழங்குவதன் மூலம், சிங்களவனின் ஆக்கிரமிப்புக்களை நாசூக்காக இனம் காட்ட முடியும். உதையும் விட்டால் சிங்கள சுற்றுலா வழிகாட்டிகள் உது சிங்களவன் பூமி, தமிழன் அவனை துரத்திவிட்டது, தங்கள் 3௦௦ விகாரைகளை காணவில்லை என்று பொய்களை கூறி வழமை போல் இது சிங்கள நாடு என்று வெள்ளைகாரனை நம்ப வைத்துவிடுவான். பிறகு புலம் பெயர் உறவுகள் வெளிநாடுகளில் தலைகீழாக நிண்டு ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவன் நம்பமாட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.