Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பட்டியலிலிருந்து தீபச்செல்வன் விலக்கப்பட்டுள்ளார்

Featured Replies

தமிழ்மக்களின் ஆகக்குறைந்தஉரிமைகளுக்குக்கூட எதிர்ப்புத்தெரிவித்து அரசியல்செய்யும்கட்சி ஜே.வி.பி.

சுனாமிமீள்கட்டுமாண இணைந்தவேலைத்திட்டத்துக்கும்,வடக்கு-கிழக்கு இணைப்புக்கும் எதிராக நீதிமன்றம்வரை சென்று தடைவாங்கியவர்கள் ஜே.வி.பி.

எழுத்தில்தன்னும் தமிழர்தாயகம்,சுயநிர்ணயம் என்றுஇருப்பவர்கள் தமிழர்கூட்டமைப்பினர்.

இவர்கள் இருவரும் ஒரேநபரை வேட்பாளராக்கதுடிக்கினம் என்றால் அவரின் கொள்கை என்னவாக இருக்கமுடியும்.

இதுக்குமுதலே ஒரு தமிழன் ஜே.வி.பி ன் பாராளுமன்றஉறுப்பினராக இருந்து விட்டஅறிக்கைகளும்,பேட்டிகளும் பார்த்துpர்கள்தானே..?? :D

இதே ஜேவிபி தான் வடக்கு கிழக்கை பிரிக்க வழக்கு தொடர்ந்தவர்கள். இப்ப வாக்குக்காக நீலிக்கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள்.

என்னை கேட்டால் சொல்வேன். உண்மையில் ஒற்றுமைதான் கூட்டமைப்பின் இண்றைய பிரச்சினை எண்றால் கூட்டமைப்பு தேர்தலில் இருந்து விலகி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கட்டும்.

  • Replies 71
  • Views 5.3k
  • Created
  • Last Reply

நாராயணா!!.... விடிய விடிய ராமர் கதை, விடிந்தபின் ...??? ..... இன்று நீங்கள், நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேசம் ஒரு ஜனநாயக செயற்பாட்டின் மூலம் வரும் பிரதிநிதிகளையே என்னத்துக்கும் எதிர்பார்க்கிறது. அது நல்லதோ/கெட்ட்தோ/கறுப்போ/வெள்ளையோ என்பதற்கு மேலாக!!!

ஆரம்பத்தில் சிறிலங்கா தேர்தல்கள் தேவையில்லை/புறக்கணிப்போம் என்று புராணம் பாடித்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய வாக்குகள் பெற்ற டக்லஸை பிரதிநிதியாக்கி ... உலக வலமும் வரவிட்டோம்!!! இந்தப் பன்னாடையை இன்று ஏதோ ஒரு பிரதிநிதியாக்கியதில் எம் பங்கை மறைக்க முடியாது!!!!! ... கேட்டவர்களையும் போட்டோம் ... பின்புதான் அரசியல் ஓரளவு புரிந்து ஈரோஸ் என அனுமதித்தோம் .... நினைவில்லையா??????

என்ன புதுசா ஒண்டை சொல்கிறீர்கள் .? ஈரோசை புலிகள் இந்திய இராணுவ காலங்களிலேயே அங்கீகரித்து இருக்கிறார்கள் பிரேமதாசா காலங்களில் ஈரோஸ் பாராளுமண்ற உறுப்பினர்கள் புலிகளால் அங்கீகரிக்க பட்டு இருந்தார்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தேர்தல் நடக்காமைக்கு காரணம் புலிகள் கட்டுப்பாட்டு நிலங்களின் அரசாங்கம் தேர்தலை நடத்த அனுமதிக்க இல்லை எண்டதுதான் உண்மையான காரணம். நடக்க முடியாத தேர்தலை புலிகள் எப்படி எதிர்க்க முடியும்.?

நாராயணா!!.... விடிய விடிய ராமர் கதை, விடிந்தபின் ...??? ..... இன்று நீங்கள், நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேசம் ஒரு ஜனநாயக செயற்பாட்டின் மூலம் வரும் பிரதிநிதிகளையே என்னத்துக்கும் எதிர்பார்க்கிறது. அது நல்லதோ/கெட்ட்தோ/கறுப்போ/வெள்ளையோ என்பதற்கு மேலாக!!!

ஆரம்பத்தில் சிறிலங்கா தேர்தல்கள் தேவையில்லை/புறக்கணிப்போம் என்று புராணம் பாடித்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய வாக்குகள் பெற்ற டக்லஸை பிரதிநிதியாக்கி ... உலக வலமும் வரவிட்டோம்!!! இந்தப் பன்னாடையை இன்று ஏதோ ஒரு பிரதிநிதியாக்கியதில் எம் பங்கை மறைக்க முடியாது!!!!! ... கேட்டவர்களையும் போட்டோம் ... பின்புதான் அரசியல் ஓரளவு புரிந்து ஈரோஸ் என அனுமதித்தோம் .... நினைவில்லையா??????

இரோசு கூட்டமைப்பு எல்லாம் பாராளுமன்றம் சென்று எதைப் பெற்றன? எதைச் சாதித்தன? மக்களை விற்பதற்க்கு தான் போட்டி போடுகிறார்கள்.இவர்களைக் கையாள்வதில் மகிந்த பசில் கூட்டணி கில்லாடிகள்.ஈற்றில் மக்களே ஏமாறுவார்கள்.அரசியல் அடிப்படைகள் அற்ற எந்த அரசியற் செயப்படும் எதுவித பலனையும் தராது.அத்தோடு நாங்கள் இங்கிருந்து கருதுக்களைச் சொல்ல முடியுமே தவிர , களத்தில் உள்ள மக்களே தமது அரசியலைத் தீர்மானிக்க முடியும்.

சம்பந்தரின் நடவடிக்கைகளே கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைத்தது.வேட்பாளர்கள் தெரிவு பற்றி அவர் கூறிய காரணக்கள் எதுவுமே உண்மையானவையாக இல்லை என்பது அப்பட்டமாகாத் தெரிகிறது.ஒற்றுமை சிதைவதற்க்கு முழுமுதற் காரணம் சம்பந்தரே.இதனால் எழும் எந்த நிலமைக்கும் சம்பந்தரே பொறுப்பாவார்.ஆகவே தான் சொன்னேன் இவை பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.இந்தியா கொடுக்கும் கயிறே அவருக்கு சுருக்குக் கயிறாகும்.

இந்தியாவைப் பொறுதவரை எவரையுமே பலமாக இருக்க அது அனுமதிக்கப் போவதில்லை.அது சிங்களவராக இருக்கட்டும் தமிழராக இருக்கட்டும்.இதைச் சிங்களவரும் உணருவார்கள்.இந்திய உபகண்டத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டமே அடக்கப்படும் அனைதுத் தேசிய இனங்களுக்குமான விடுதலையைப் பெற்றுத் தரும்.

சம்பந்தர் என்ன செய்ய விளைகிறார் அதன் விபரீதங்களை விபரித்தவர்களைத்தான் இப்போ கூட்டமைப்பின் பிரிவுக்கு காரணம் எண்டு யாழுக்கை சில மேதாவிகள் சொல்லி திரியினம்... சம்பந்தர் விட்டது எல்லாம் பிழை இல்லை... அவரை விமர்சிச்சவைதான் தவறானவை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே ஜேவிபி தான் வடக்கு கிழக்கை பிரிக்க வழக்கு தொடர்ந்தவர்கள். இப்ப வாக்குக்காக நீலிக்கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள்.

என்னை கேட்டால் சொல்வேன். உண்மையில் ஒற்றுமைதான் கூட்டமைப்பின் இண்றைய பிரச்சினை எண்றால் கூட்டமைப்பு தேர்தலில் இருந்து விலகி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கட்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி யாழ்பானத்தில் மட்டும் கேட்கும் கட்சி, கூட்டமைப்பு வடக்கு,கிழக்கிலும் கேட்கும்கட்சி, சென்றமுறை கஜெந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கு ஒரு ஆசனமே கிடைத்து,அதுவும் குமார் பொன்னம்பலத்தின் அனுதாபத்தில். ஒருவர்மட்டும் பாராளமண்றம் போய என்ன பல்லா தீட்டுவது, தனியநின்று தீட்டுவதை விட கூட்டமாய் நின்று தீட்டினால் பேச்சு துணைக்கு ஆள் இருக்கும் அல்லவா? :D:lol:^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில அதிகப் பிரசங்கிகள் கூட்டமைப்பை உடைக்கிறதுக்கே கங்கணம் கட்டிக்கொண்டு திரியினம். மக்கள் இவைக்கும் சேர்த்துதான் தீர்ப்பு வழங்க காத்திருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நாம் என்று யாரைச் சொல்கிறீர்கள்? புலிகலையா?? கூட்டணியின் கடந்தகால அரசியல் எங்களுக்குத் தெரியும். நீங்கள் அதன் தீவிர விசுவாசி என்றால் உங்களுடன் பேசுவதில் எந்தப்பயனுமில்லை. நல்லது நீங்கள் சம்பந்தனைக் கடவுளாகக் கொண்டாடுங்கள். எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால் அவரை நாங்கள் எப்போதுமே தலைவராக ஏற்றுக்கொண்டதுமில்லை, இனியும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எமக்கு எப்பவுமே ஒரே தலைவர்தான். அந்த இடத்தில் ஒரு இந்திய அடிவருடியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடன் முரண்படுவது எனது நோக்கமல்ல

தாங்கள் பாவிக்கும் சொற்பதங்களும் எனக்கு வலிக்கவில்லை

ஏனெனில் தங்கள் கருத்தே எனது கருத்தும்

ஆனால்

நீங்கள் சொல்லும் எமக்கெல்லாம் ஒரு தலைவன் இருக்கும் இடத்தை தாங்கள் எனக்கு காட்டும்வரை

கூட்டமைப்பு என்கின்ற சிறுதுரும்பை நான் பிடித்திருப்பேன்

அதைக்கொண்டு ஏதாவது எனது மக்களுக்கு செய்யமுடியுமா என்று முயற்சிப்பேன்

இங்கு சம்பந்தர் என்று எங்கும் நான் எழுதவில்லை

தமிழர் தேசியக்கூட்டமைப்பு பற்றி மட்டுமே நான் பேசிவருகின்றேன்

பேசிக்கொண்டிருக்கின்றேன்

பேசுவேன்

சில அதிகப் பிரசங்கிகள் கூட்டமைப்பை உடைக்கிறதுக்கே கங்கணம் கட்டிக்கொண்டு திரியினம். மக்கள் இவைக்கும் சேர்த்துதான் தீர்ப்பு வழங்க காத்திருக்கினம்.

timestamp='1267346528' post='571342']

நாராயணா!!.... விடிய விடிய ராமர் கதை, விடிந்தபின் ...??? ..... இன்று நீங்கள், நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேசம் ஒரு ஜனநாயக செயற்பாட்டின் மூலம் வரும் பிரதிநிதிகளையே என்னத்துக்கும் எதிர்பார்க்கிறது.[

இன்று புலம்பெயர் மக்களுடன் சேர்ந்து இயங்கப்போவதாக அமெரிக்கா கூறுகிறது

களத்தில் எவருடன்.......???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன் பாராளுமன்றச் சகதிக்குள் போகாமல் இருப்பது நல்லது. மக்களுக்குச் சேவை செய்யப் பல வழிகள் உள்ளன. தேவையென்றால் ஒரு நேர்மையான அரச சார்பற்ற அமைப்பில் சேர்ந்து செயற்படலாம் அல்லது புதிதாக ஆரம்பிக்கலாம் (நீங்கள் இப்படி ஏதாவது ஒரு/பல அமைப்புக்களுடன் மக்கள் சேவை செய்து வருகின்றீர்கள் என்றே நினைக்கின்றேன்)

கூட்டமைப்பில் இருப்பவர்கள் எப்போது சொந்தமாகச் சிந்தித்தார்கள்?

தமிழர் விடுதலை கூட்டணியாக இருந்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வைத்தபின்னர், மக்கள் தந்த ஆணையை அரசியல் ரீதியாக செயற்படுத்த முடியாதவர்கள்தான் தற்போதும் தலைமையில் உள்ளனர். அதன் பின்னர் புலிகளின் பலம் ஓங்கியபோது புலிகள் சொன்னதைக் கேட்டுத்தான் "தமிழ்த் தேசியத்தை" வளர்க்க முன்வந்தார்கள். புலிகளின் பின்னர் தங்கள் முந்தைய எஜமான் இந்தியாவின் விருப்பப்படியே "தமிழ்த் தேசியத்தை" வளர்க்க முயல்கின்றனர். தற்போதைய நிலையில் ஒற்றுமையை விரும்பும் தமிழர்களுக்கு இவர்களை விட்டால் நல்ல தெரிவு இல்லை. எனினும் இவர்கள் தமிழர்களுக்கு தலைமை தாங்கத் தகுதியற்றவர்கள் என்பதை வன்னி மக்களின் அவலங்களைத் தீர்க்க முடியாத கையாலாகத்தனத்தில் இருந்தே அறிந்துகொள்ளலாம். இவர்களைக் கொண்டு மந்திரத்தினால் மாங்காய் பிடுங்குவதுபோல தமிழர்களுக்கு ஏதாவது தீர்வைப் பெறலாம் என்று குருட்டு நம்பிக்கையை வைப்பது வீண். ஒற்றையாட்சிக்குள் அதிகாரம் இல்லாத மாகாண சபையை, இந்தியாவின் ஆலோசனைப்படி, இவர்கள் ஏற்பதும் (அல்லது இவர்களே பிரேரிப்பதும்) எதிர்காலத்தில் நடந்தால் ஆச்சரியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களைக் கொண்டு மந்திரத்தினால் மாங்காய் பிடுங்குவதுபோல தமிழர்களுக்கு ஏதாவது தீர்வைப் பெறலாம் என்று குருட்டு நம்பிக்கையை வைப்பது வீண். ஒற்றையாட்சிக்குள் அதிகாரம் இல்லாத மாகாண சபையை, இந்தியாவின் ஆலோசனைப்படி, இவர்கள் ஏற்பதும் (அல்லது இவர்களே பிரேரிப்பதும்) எதிர்காலத்தில் நடந்தால் ஆச்சரியமில்லை!

இதற்குமேல் ஏதாவது ஆசையுண்டா தங்களுக்கு இன்று தாயகத்திலுள்ளவர்களிடமிருந்து.........???

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குமேல் ஏதாவது ஆசையுண்டா தங்களுக்கு இன்று தாயகத்திலுள்ளவர்களிடமிருந்து.........???

இல்லை!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவால் கொடுக்கக் கூடிய ஒரு தீர்வை ஏற்குமாறு இந்தியா கூட்டமைப்பை வலியுறுத்தும்.அந்த உருப்படியற்ற தீர்வை தானே வலியுறத்தி சிங்கள அரசிடமிருந்து பெற்றுத் தந்த மாதிரி இந்தியா நடிக்கும். அப்படிக் கிடைக்கும் தீர்வினால் தமிழர்கள் இன்றுள்ள நிலையை விட ஒரு கடுகளவு தன்னும் மேலான நிலையை அடையமாட்டார்கள். அப்படி ஒரு நிலையில் எத்தனை பிரதிநிதிகள் பாராளுமன்றம் போயும் ஒன்றும் புடுங்க முடியாது.அதுவும் சம்பந்தன் சுரேஜ் போன்றவர்கள் பாராளுமன்றம் போவதைவிட வேறு யாராவது ஆற்றல் உள்ள இளைஞர்கள் போவதே சிறந்தது.சம்பந்தர் தன் அநுபவத்தை வைத்து இதுவரை சாதித்தது என்ன? கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் கனகரெட்னம் எம்பியின் விடுதலைக்குக் கூட குரல் கொடுக்க முடியாதவர் எப்படி தமழர்களுக்கான தீர்வை அதுவும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பிர்களை வைத்துக்கொண்டு பெற்றுத்தரப்போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை!

இதை தாங்கள் சொல்லலாம்

சம்பந்தன் சொன்னால் இந்தியாவின் அருவருடி

ஏதோ அவரால் முடிந்ததை அவர் செய்கிறார் என்று நான் சொன்னால்

சம்பந்தருக்கு வக்காலத்து வாங்குகின்றேன்

இது எந்த ஊர் ஐனநாயகம்

சிறிலங்காவால் கொடுக்கக் கூடிய ஒரு தீர்வை ஏற்குமாறு இந்தியா கூட்டமைப்பை வலியுறுத்தும்.அந்த உருப்படியற்ற தீர்வை தானே வலியுறத்தி சிங்கள அரசிடமிருந்து பெற்றுத் தந்த மாதிரி இந்தியா நடிக்கும். அப்படிக் கிடைக்கும் தீர்வினால் தமிழர்கள் இன்றுள்ள நிலையை விட ஒரு கடுகளவு தன்னும் மேலான நிலையை அடையமாட்டார்கள். அப்படி ஒரு நிலையில் எத்தனை பிரதிநிதிகள் பாராளுமன்றம் போயும் ஒன்றும் புடுங்க முடியாது.அதுவும் சம்பந்தன் சுரேஜ் போன்றவர்கள் பாராளுமன்றம் போவதைவிட வேறு யாராவது ஆற்றல் உள்ள இளைஞர்கள் போவதே சிறந்தது.சம்பந்தர் தன் அநுபவத்தை வைத்து இதுவரை சாதித்தது என்ன? கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் கனகரெட்னம் எம்பியின் விடுதலைக்குக் கூட குரல் கொடுக்க முடியாதவர் எப்படி தமழர்களுக்கான தீர்வை அதுவும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பிர்களை வைத்துக்கொண்டு பெற்றுத்தரப்போகிறார்?

எனக்கும் இப்படித்தான் எழுத ஆசை

ஆனால் ஒருவனுக்கு அடிப்பதற்கு முன் என்னிடமுள்ளதையும் அவனிடம் உள்ளைதையும் பார்ப்பது எனது பழக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இதை தாங்கள் சொல்லலாம்

சம்பந்தன் சொன்னால் இந்தியாவின் அருவருடி

ஏதோ அவரால் முடிந்ததை அவர் செய்கிறார் என்று நான் சொன்னால்

சம்பந்தருக்கு வக்காலத்து வாங்குகின்றேன்

இது எந்த ஊர் ஐனநாயகம்

நீங்கள் முன்னர் இரத்தத் திலகமிட்ட தலைவர்களுடன் கூட இருந்தவர்கள்தானே தற்போதும் தலைவர்களாக உள்ளனர். அவர்களால் ஒன்றும் முடியாது என்பது தற்போதும் உங்களுக்குப் புரியாமல் இருப்பது ஏன் என்பது உங்களுக்கே வெளிச்சம். ஒன்றும் செய்யமுடியாதவர்கள் ஏதோ முடிந்ததைச் செய்கின்றார் என்று நீங்கள் சொல்லுவது அவலை நினைத்து உரலை இடித்த கதை மாதிரித்தான். இந்தியாவின் ஆசியோடு ஒரு மாவட்ட சபையோ, கிராம சபையோ கிடைக்கலாம். அதைக்கூட மகிந்தவுக்குக் குடைபிடித்துத்தான் பெறமுடியும் என்ற நிலை. இதுதான் உங்கள் அபிமானத் தலைவர்கள் பெற்றுத்தருவார்கள் என்றால் தமிழீழக் கோரிக்கையை முன்வைக்காமல் விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முன்னர் இரத்தத் திலகமிட்ட தலைவர்களுடன் கூட இருந்தவர்கள்தானே தற்போதும் தலைவர்களாக உள்ளனர். அவர்களால் ஒன்றும் முடியாது என்பது தற்போதும் உங்களுக்குப் புரியாமல் இருப்பது ஏன் என்பது உங்களுக்கே வெளிச்சம். ஒன்றும் செய்யமுடியாதவர்கள் ஏதோ முடிந்ததைச் செய்கின்றார் என்று நீங்கள் சொல்லுவது அவலை நினைத்து உரலை இடித்த கதை மாதிரித்தான். இந்தியாவின் ஆசியோடு ஒரு மாவட்ட சபையோ, கிராம சபையோ கிடைக்கலாம். அதைக்கூட மகிந்தவுக்குக் குடைபிடித்துத்தான் பெறமுடியும் என்ற நிலை. இதுதான் உங்கள் அபிமானத் தலைவர்கள் பெற்றுத்தருவார்கள் என்றால் தமிழீழக் கோரிக்கையை முன்வைக்காமல் விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் சிலவிடயங்களை எங்கும் நாம் எழுதமுடியாது

அது எம்மை நாமே பதம்பார்ப்பதாக அமையும்

நான் இங்கு எழுதும் விடயங்கள்

இன்றிருக்கும் நிலையைத்தாண்டி மூச்செடுத்துவெளியே வருவதே ஆகும்

இன்றைய நிலையை விமர்சிப்பதோ அல்லது குற்றம் சாட்டுவதோ எம்மால் முடியாதபோது......

அடுத்ததென்ன வைத்திருக்கின்றோம் என்ற கேள்விக்கு விடைதேடவேண்டியுள்ளது.

அந்த வகையிலேயே கூட்டமைப்பை ஒரு துரும்பாக பாவித்து வெளிவரலாம் என்பது எனது கருத்து.

இதுவே தாயகத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றும்படி கூட்டமைப்பு மட்டுமல்ல எவரும் மகிந்தவின் இரும்புப்பிடியைத்தாண்டி நகர தற்போதைக்கு வழிஇல்லை.மற்றது தாங்கள் சொல்லும் இரத்தத்திலகமிட்டது பற்றயது

உண்மைதான் அவர்களில் பலர் மாவீரதெய்வங்களாகிவிட்டனர் என்பதை மட்டும் நாம் எமக்கு ஏற்றாப்போல் லாவகரமாக மறக்கடிக்கின்றோம்.

அதேநேரம் மாவட்டமோ மாகாணமோ இது கூட இன்றையநிலையில் மகிந்த மனம்வைத்து தரும் பிச்சைதான்....

  • கருத்துக்கள உறவுகள்

இதை தற்போதுதான் பார்த்தேன்

அதையும் இங்கு இணைக்கின்றேன்

நன்றி

தேசம்இ தேசியம்இ இறையாண்மைஇ சுயநிர்ணயஉரிமை எதனையும் கைவிடவில்லை – தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலம் பொருந்திய அமைப்பாக இருந்த பொழுது அவர்களுக்கு பேரம் பேசும் ஆற்றல் இருந்தது. அதன் ஊடு தமிழ் மக்களுக்கு உச்சபட்ச அதிகாரங்களை அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம். மாறாக இராணுவப்பலம் சிறீலங்கா இராணுவத்தால் நிர்மூலம் செய்யப்பட்டது. யுத்தத்தில் வென்ற அரசு தமிழர்களுக்கு எதுவுமே கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. புலிகளும் இல்லை. எமக்கு பேரம் பேசும் வலுவும் இல்லை. இந்த நிலையில் அடுத்த கட்டத்தை நகர்த்துவது என்பதை சிந்திக்கவேண்டும்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் தேசம்இ தேசியம்இ இறையாண்மைஇ சுயநிர்ணய உரிமை எதனையும் விடவில்லை. ஆனால் தந்திரோபாயமாக இன்றிருக்கும் எமக்கு சாதகமாக சர்வதேச சூழலைப்பயன்படுத்தி தீர்வைக்காண முயற்சிக்கின்றோம்.

http://www.eelanatio...-statement.html

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமை எதனையும் விடவில்லை

இப்படி அறிக்கை விட்டால்தான் சில ஆசனங்களாவது கிடைக்கும். இல்லாவிட்டால் கட்டுப்பணமும் போய்விடும் என்கிற நிலைதான்.

கூட்டணிக்கு இந்தியாவுடனும், இலங்கை அரசுடனும் அனுசரித்துப் போகவும் வேண்டும். புலம்பெயர் தமிழருடனும் பகைக்கக்கூடாது. அத்துடன் தாயகத்தில் அல்லலுறும் தமிழ் மக்களின் ஆதரவும் வேண்டும் பாராளுமன்றம் போவதற்கு. இதனால்தான் இராஜதந்திரம் எனும் பெயரில் மூடுமந்திரமாகப் பலவிடயங்களைச் செய்கின்றனர். இதனால் தமிழர்களுக்கு நன்மை விளையும் என்று நம்பும் மந்தைக் கூட்டமாக நாம் இருக்கின்றோம்!

உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை செய்த காத்திரமான விடயங்களைப் பட்டியலிட்டால், எதிர்காலத்தில் என்ன செய்வார்கள் என்பதை ஊகிக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அறிக்கை விட்டால்தான் சில ஆசனங்களாவது கிடைக்கும். இல்லாவிட்டால் கட்டுப்பணமும் போய்விடும் என்கிற நிலைதான்.

கூட்டணிக்கு இந்தியாவுடனும், இலங்கை அரசுடனும் அனுசரித்துப் போகவும் வேண்டும். புலம்பெயர் தமிழருடனும் பகைக்கக்கூடாது. அத்துடன் தாயகத்தில் அல்லலுறும் தமிழ் மக்களின் ஆதரவும் வேண்டும் பாராளுமன்றம் போவதற்கு. இதனால்தான் இராஜதந்திரம் எனும் பெயரில் மூடுமந்திரமாகப் பலவிடயங்களைச் செய்கின்றனர். இதனால் தமிழர்களுக்கு நன்மை விளையும் என்று நம்பும் மந்தைக் கூட்டமாக நாம் இருக்கின்றோம்!

உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை செய்த காத்திரமான விடயங்களைப் பட்டியலிட்டால், எதிர்காலத்தில் என்ன செய்வார்கள் என்பதை ஊகிக்கலாம்!

செய்ய விட்டோமா நாம்?.

விட்டுவிடுவோமா நாம்?.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

செய்ய விட்டோமா நாம்?.

விட்டுவிடுவோமா நாம்?.

:huh::)

அப்படியானால் அவர்கள் சொந்தப்புத்தியில் இதுவரை இயங்க்வில்லை. இனியும் இயங்கமாட்டார்கள் என்று சொல்லுகின்றீர்கள். இப்போது பிடி நம்மிடம் இல்லை, அது இந்தியாவின் கைகளுக்கு எப்போதுமே இருக்கின்றது. அது தெரியாமல் அவர்களின் காவடியாட்டத்தை தமிழர்கள்தான் இழுத்துப் பிடிக்கின்றனர் என்று நீங்கள் நம்புவது நகைப்புக்கிடமானது! :):D

:):D

அப்படியானால் அவர்கள் சொந்தப்புத்தியில் இதுவரை இயங்க்வில்லை. இனியும் இயங்கமாட்டார்கள் என்று சொல்லுகின்றீர்கள். இப்போது பிடி நம்மிடம் இல்லை, அது இந்தியாவின் கைகளுக்கு எப்போதுமே இருக்கின்றது. அது தெரியாமல் அவர்களின் காவடியாட்டத்தை தமிழர்கள்தான் இழுத்துப் பிடிக்கின்றனர் என்று நீங்கள் நம்புவது நகைப்புக்கிடமானது! :):D

என்னண்டு அண்ணை இப்பிடி எல்லாம். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.