Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூங்காவில் உறங்கிச் செல்லுகிற வீடற்ற குழந்தைகள் : தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-7111-12672895757986_thumb.jpg

_______________________________________

தூக்கம் கண்களை நிறைத்த பொழுது

குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும்

பூங்காவுக்கு வருகின்றனர்.

கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய்

மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான்.

கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான்.

சிதைக்கப்பட்ட முகத்தையும்

பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும்

புகைப்படங்களாக்கி

உதவி கோரிக்கொண்டிருக்கிறான்.

எல்லாமே

எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது.

அந்தச் சிறுவன்

கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான்.

பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி

மிருகங்களாகிய

படைகளால் வன்புணரப்படுகையில்

இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில்

உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இரத்தம் கொட்டிப் படிந்துகொண்டிருக்கிறது

குழந்தைகளின் புத்தகம்.

இந்தக் குழந்தைகள்

ஐஸ்பழத்தை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இரத்தம் சொட்டச் சொட்ட

பழங்களை தின்றுகொண்டிருக்கிறது காலம்.

அவர்கள் தமக்குள்ளாகவே

எல்லா மீறல்களையும் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

குழந்தைககளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு

மிகப்பெரிய ஏற்பாட்டில்

பழுதாக்கப்பட்ட அவர்களின் உலகத்தை

மிகப்பெரிய செலவில்

பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் கனவுகளை

வைத்துப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன

பூங்காவில் தொடர்ந்து கதையளந்துகொண்டிருக்கும் குரங்குகள்.

வீடற்ற குழந்தைகள்

மாலையானதும் எங்கோ திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

வீடற்ற குழந்தைகள்

எனக்கருகில் அன்றைய பகல் முழுவதும்

விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் வைத்திருந்த

புது உலகத்திற்கான புன்னகையாலும் நம்பிக்கையாலும்

ஈரத்தாலும் விண்ணப்பங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ஒரு நாள் முழுவதும்

அமர்ந்திருந்து எழுதி அனுப்பிய

விண்ணப்பங்களை

பழுதடைந்த புகையிரத வீதியில்

அவசர அவசரமாக

கழிவுகளோடு கழிவுகளாக எறியப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் கொண்டு வந்த புத்தகங்களிலிருந்து

இரத்தம் கசிந்துகொண்டிருப்பதை

கண்டு துடிக்கத் தொடங்குகின்றர் தாய்மார்கள்.

குழந்தைகள் உறங்கிச் சென்ற

பூங்காவின் மரங்கள் வாடி விழுந்து கொண்டிருக்கின்றன.

_______________________

மாசி 2010

உங்கள் அனுபவங்களை, ஈழத் தமிழர் சோகங்களை கவிதையாக வடிக்க முயலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

பல விடயங்களை ஒரு தலைப்பினுள் புகுத்துவதை குறைத்தால் இன்னும் மெருகேறும் என்பது எனது கருத்து.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைககளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு

மிகப்பெரிய ஏற்பாட்டில்

பழுதாக்கப்பட்ட அவர்களின் உலகத்தை

மிகப்பெரிய செலவில்

பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் கனவுகளை

வைத்துப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன

பூங்காவில் தொடர்ந்து கதையளந்துகொண்டிருக்கும் குரங்குகள்.

வீடற்ற குழந்தைகள்

மாலையானதும் எங்கோ திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

நகரில் பிச்சையெடுக்கும் சிறுவர்களைக் காணும்போது உள்ளம் விம்மி வெடித்துப்போகும். தங்கள் குழந்தைப் பருவத்துக்குரிய கனவுகள், விருப்பங்களைத் தொலைத்துவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வெறும் வெட்டிப் பேச்சில் மட்டும் கதையளப்பவர்களுக்கு (கவி)வரிகள் சாட்டையடி கொடுத்து இருக்கிறது. இன்று எமது குழந்தைகளுக்கு நாங்கள் செய்யவேண்டி இருப்பது எவ்வளவோ இருக்கிறது. இழந்துவிட்ட அவர்களின் உலகத்தில் ஒரு சிறுபகுதியையாவது மீட்டுக் கொடுக்கவேண்டியது எமது கடமை.

தீபன், நிகழ்கால நிகழ்வுகளை காலத்தின் குரலாக நின்று சிறப்பாகப் பதிவுசெய்துவருகின்றீர்கள். நாளை எமது அடுத்த சந்ததி வரலாற்றைப் புரட்டும் போது உங்கள் கவிவரிகள் மறைக்கப்பட்ட / மறுக்கப்பட்ட பல உண்மைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும். உங்கள் எழுத்துப்பணி தொடரவேண்டும். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபன் எனது நெஞ்சை கனக்க செய்துவிட்டீர்கள். இந்த குழந்தைகளை ஊனமாக்கி தெருவில் விட்டவர்கள் சனநாய்வாதிகள் ஆனால் இவர்களுக்கு இல்லம் கட்டி பாதுகாத்த புலிகள் பயங்கரவாதிகள்.

பரவாயில்லை நண்பரே, நமது உறவுக்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்க நான் எனது இறுதி மூச்சு வரை உலக அரசியல் களத்தில் போராடுவேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.