Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம்

Featured Replies

இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம்

இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேஷிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

244 இலங்கை அகதிகளின் பேச்சாளராக முன்வந்த அவர் தமது கப்பலை சுற்றி ரோந்து வரும் படகுகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தார்.இதனால்தான் அவர் இந்தோனேஷிய அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .

அவர் படகில் இருந்து தப்பிசென்றுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. எனினும் படகை சுற்றிலும் பாரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரால் தப்பிச்செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை காணப்படவில்லை.

இந்த நிலையில் அவர் தப்பிச்சென்றிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது எனவே அவர் கடத்தி செல்லப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

http://www.alaikal.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை சிறிலங்காவுக்கு கடத்தப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தோனேசியா ஐநா அதிகாரியளும் சேப்போ கடத்தலில? அவைக்கு தெரியாமல் கடத்த ஏலாது.

அவர் உடலில் இருக்கும் ஒரு மின்காந்த கருவி மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பது அதை கவனிப்பவர்களுக்கு மட்டும் தெரியும். சிங்களவன் கடத்தினாலொ , அல்லது வேறு ஏதாவது நடந்தாலொ ஆதாரங்கலுடன் உறுதி படுத்தபடப்போவது தெரிந்து அதனுடன் சம்பந்தம்பட்டவர்கள் கதிகலங்கி நிக்கினமாம்

  • கருத்துக்கள உறவுகள்

:D அண்மையில் அவுஸ்த்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவில் ஆப்கானிஸ்த்தான் அகதிகளுக்கும் தமிழ் அகதிகளுக்கும் நடந்த கைகலப்பு நாம் அறிந்ததே. ஆப்கானியர்களால் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த மோதல்களில் சுமார் 35 தமிழ் அகதிகள் காயமடைந்ததாகச் செய்திகள் வந்திருந்தன. இதன் பிறகு நடந்த விசாரணைகளில் 9 ஈழத்தமிழ் அகதிகள் கிரிமினம் குற்றம் சாட்டப்பட்டு தனியாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் மீது கிரிமினல் குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வழக்குத்தொடர அவுஸ்த்திரேலிய அரசு முடிவெடுத்திருக்கிறது. இவாளவிற்கும் இவர்கள் தற்காப்பிற்காக வைத்திருந்த தடிகளே காரணம் என்று அடைத்து வைக்கப்பட்ட ஒருவர் தொலைபேசி உரையாடல் ஒன்றில் குறிப்பிட்டார்.

தனது மனைவி பிள்ளைகள் இன்னும் மலேஷியாவில் தங்கியிருப்பதாகவும், அவர்களைப் பிரிந்து வெகு நாட்களாகி விட்டன என்றும் அவர் ஆதங்கப்பட்டார். தனக்கும் பலமான அடி காயங்கள் ஏற்பட்டதாகவும், தடிகள் வைத்திருந்த குற்றத்திற்காகவே தாம் வேண்டுமென்று அடைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் வருத்தப்பட்டுக் கூறினார்.

இவர்க்கள் தொடர்பாக செயல்ப்பட்டு வரும் யாராவது இருந்தால் இவர்களது நிலை பற்றி ஆவன செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.