Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழ் மக்களை புரிந்து கொள்ளும் மேற்குலகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்களை புரிந்து கொள்ளும் மேற்குலகு

புலம்பெயர் தமிழர்கள் பரந்து வாழும் தேசம் எங்கும் ஒரு நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது.

இலங்கைத் தமிழர்களின் தனித்துவத்தை எடுத்து ரைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக் களிப்பே அந்த நடவடிக்கையாகும்.

இந்த வரிசையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் னர் டென்மார்க்கில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்களிப்பில் பங்குகொண்ட இலங்கையரில் 98 வீதத் துக்கும் அதிகமானோர், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அங்கீகரித்துத் தமது முடிவை ஒப்புவித்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது.

1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகு தியில் உள்ள பண்ணாகத்தில் இடம்பெற்ற தமிழர் விடு தலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் தமிழீழத் தனியரசை நிறுவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதுவே இன்றுவரை வட்டுக்கோட்டைத் தீர்மானம் எனக் குறிப்பிடப்பட்டு வருகின்றது.

"இலங்கைத் தமிழ் மக்கள், ஐரோப்பிய ஆக்கிரமிப் பாளர்களின் ஆயுத பலத்தால் வெற்றி கொள்ளப்படும் வரை சிறப்பு வாய்ந்த பழம்பெரும் மொழி, மதங்கள், தனித்துவமான பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டிருந்ததோடு, பல நூற்றாண்டுகளாக ஒரு தனித் துவமான பிரதேசத்தில் தனியரசை அமைத்து சுதந்தி ரமாக வாழ்ந்த வரலாறும் உடையவர்கள். இவற்றிற்கு மேலாக, தங்கள் சொந்த மண்ணில் தனி இனமாகத் தங் களைத் தாங்களே ஆட்சிபுரிந்து வாழ வேண்டும் என்ற உறுதிப்பாடுடையவர்கள். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள் என்பதால் தமிழர்கள் சிங்களவர்களிட மிருந்து வேறுபட்ட தனித்துவமான தேச அமைப்பைக் கொண்டவர்கள்' என்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூறுகின்றது.

ஆனால், " இலங்கையின் 1972 ஆம் ஆண்டின் குடி யரசுக்கான அரசமைப்பு, புதிய குடியேற்ற எஜமான் களாகிய சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் தமிழர்களை ஓர் அடிமை இனமாக மாற்றியுள்ளது. தவறான வழியில் பெற்றெடுத்த ஆட்சியதிகாரத்தைக் கொண்டு, சிங்களவர்கள் தமிழ் மக்களின் நிலவுரிமை, மொழியுரிமை, குடியுரிமை, பொருளாதார வாழ்வுரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை ஆகியவற்றை மறுத்து அவர்க ளது தேசியக் கட்டமைப்பின் அடிப்படைகளை அழித்துள்ளனர்.' என்று சுட்டிக்காட்டும் அத்தீர்மானம் இப் பிரச்சினைக்கான ஒரு முடிவை அறுதியிடுகின்றது.

"தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு தேசத்துக்கும் உரித்தான சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய, மதசார்பற்ற, சோஷலிஸ தமி ழீழ அரசு மீளப்பட்டு மீள்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.' என்ற முடிவை அத்தீர்மானம் வலியுறுத்து கின்றது.

ஈழத் தமிழர்களின் இந்த 34 ஆண்டுகால விடுதலைப் போர் வரலாறும் இந்தத் தீர்மானத்தின் மையத்திலி ருந்தே கட்டவிழ்ந்தது என்று கூறினால் அது தவறாகாது.

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் தேசங்கள், தேசங்களாக வாக்கெடுப்புகளை நடத்தி, அத்தீர்மானம் அறுதியிடும் வாசகத்தின் மீது தமிழீழத் தனியரசு நிலவும் உறுதிப் பாட்டின் மீது தங்களது தீராத விருப்பையும் வேணவாவையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார்கள். இத்தீர்மானம் மீதான வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்பில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வரும் செய்திகள் அதைத்தான் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி யளித்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத் தபாய ராஜபக்ஷவோ, பெரும்பான்மையான புலம்பெயர் தமிழர்கள் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், அவர்களில் அதிகமானோர் தாயகம் திரும்பி அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர் என் றும் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

தமிழரின் உரிமைகளுக்காக ஆயுத வழியில் போரா டிய புலிகள் இயக்கத்தை சர்வதேசம் "பயங்கரவாத அமைப்பு' என்று கண்டித்தது. அந்தப் புலிகள் இயக்கம் சிதைவடைந்த நிலையில், இப்போது உலகத் தமிழர் பேரவை போன்ற தமிழர்களின் சர்வதேச அமைப்போடு பகிரங்கமாக இணைந்து செயற்பட பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் தயாராகி வருகின்றன. அதற்கு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது தமக்குள்ள உறுதியைப் புலம்பெயர் தமிழர்கள் ஜனநாயக முறை யில் வெளிப்படுத்தி வருகின்றமையை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதும் ஒரு காரண மாகும்.

தத்தமது புலம்பெயர் தேசங்களில் இருந்தபடி ஜன நாயக மார்க்கங்களில் தமிழர்கள் வெளிப்படுத்தும் கருத்து நிலைப்பாட்டை உள்வாங்கி அதற்குரிய பிரதி பலிப்பைக் காட்டுவதற்கு மேற்குலகு தயாராகிவிட்டது.

மேற்குலகுக்குப் புரிந்த இந்த விடயம் இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு விளங்காமல் இருப்பது அல்லது விளங்காதமைபோலக் கதை விடுவது விந்தையே!

நன்றி - உதயன் இணையம்

ஆரோக்கியமான அடி எடுத்து வைத்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

ஆனால் தாயகத்தில் கூட்டமைப்பினரால் புலம்பெயர்ந்தவர்களின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை... தாயகத்தில் தேர்தலில் வெல்பவர்கள் புலம்பெயந்தவர்களின் நடவடிக்கையை புறந்தள்ளி செல்வார்களானால் எதுவும் பயன் அற்றது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" இலங்கையின் 1972 ஆம் ஆண்டின் குடி யரசுக்கான அரசமைப்பு, புதிய குடியேற்ற எஜமான் களாகிய சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் தமிழர்களை ஓர் அடிமை இனமாக மாற்றியுள்ளது. "

இந்த 1972, தமிழரின் வாழ்வில் முக்கியமான ஆண்டு. அந்த வருடம் தான் சிங்கள வானரங்களும் ஸ்ரீ பேர்சி கொங்கிரஸ் குடும்பத்தின் ஆசியுடன் "ஸ்ரீ" லங்கா வென்று பெர்சிய தலைப்பை வைத்ததுகள்.

நமது பார்சி ஹிண்டுசத்தில் இருக்கும் அசுரர், அரக்கர், ராட்சதர்கள் என்பவை பார்சி மொழியால் சிந்து நதிப்பள்ளத்தாக்கு "திரு" நாடார்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அழைக்கப்பட்டார்கள் . அதற்கு காரணம் சிந்து நதி நாகரிகத்தில் அங்கிருந்த திராவிட மக்கள் அமைதியாகவே இருந்தார்கள் ஆனால் போர் என்று வந்தால் புலியாக, சேவலாக, சுறா மீனாக பெர்சியரை(இரான்) வறுத்து எடுத்தார்கள்.

இப்போது கடந்த முப்பது வருடங்களாக நமக்கு புதுப்பெயர்களாக தீவிரவாதி, பயங்கரவாதி, தற்கொலைதாரி என்று புது யுக பேர்சி "ஸ்ரீ" கள் கொடுத்திருந்தார்கள், ஆனால் கடந்த எட்டு மாதங்களாக "ஸ்ரீ" என்றால் ஜெனோசைட், மனித உரிமை மீறல், சீனாவின் கைப்புள்ள என்ற நல்லா பெயர்களை வெளிநாட்டு தமிழரின் அரசியல் போராட்டமும், சிங்கள்ள கூட்டத்தின் குரங்கு சேட்டையும் பெற்று கொடுத்திருக்கிறது!

கலி காலம் மாறுகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.