Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சீன முதலீடுகளும் நிதியுதவிகளும்

Featured Replies

இலங்கையில் சீன முதலீடுகளும் நிதியுதவிகளும்

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமானநிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதியுதவிகளை சீனா வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது.

நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது.

அதிகரித்துவரும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் சீனாவிடமிருந்து இருநூறு மில்லியன் டொலர்கள் வரையான நிதி கிடைக்கின்றது.

விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இதற்கு சற்று அயலிலேயே ஹம்பாந்தோட்டையில் பெருந்துறைமுகமொன்றுக்கான நிர்மாணப்பணிகளும் பெருமெடுப்பில் நடந்துவருகின்றன. இதற்கான நிதியும் சீனாவின் பாரிய கடனுதவி வழங்கும் நிறுவனமான ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வேலைத்திட்டங்களின் கட்டுமானப் பணிகளும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவின் இந்த நிதியுதவிகள் மூலம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்திற்கான வீதி அபிவிருத்தி, தலைநகரில் பிரம்மாண்டமான அரங்கமொன்று, நிலக்கரி அனல்மின் ஆலைகள் என இன்னும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த வேலைத்திட்டங்கள் அனைத்திலுமே சீன கட்டுமான ஒப்பந்தக்காரர்களும் பெரும் எண்ணி்க்கையிலான அந்நாட்டு வேலையாட்களுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையினால் இலங்கையிலுள்ள கட்டுமானத்துறை நிறுவனங்களும் தொழிலாளர்களும் தமது வருமான வாய்ப்புகள் இழக்கப்படுவதாக கவலையடைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் அண்டைநாடான இந்தியாவிலுள்ள சில அதிகாரிகளோ, தமது போட்டி நாடு இவ்வாறான பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்வதன் மூலம் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க முயல்வதாக அஞ்சுகின்றனர்.

இந்தியாவோ தன் பங்கிற்கு, இலங்கையின் தெற்கு ரயில்வே கட்டமைப்பை தரமுயர்த்துவதற்காக 70 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

http://www.alaikal.com/

பாவம் இந்தியா. சீன உதவிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறப் போகிறது. விரைவில் சீன உதவிகளால் இலங்கை வளர்ச்சியடைந்த விரைவாக நாடுகளின் பட்டியலில் சேர்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • தொடங்கியவர்

அரசாங்க அதிபருடன் வவுனியாவில் சீனத்தூதுவர் பேச்சுவார்த்தை

கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் நேற்று வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர், வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸையும் சந்தித்து கலந்துரையாடியதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன அரசாங்கத்தினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களையும் சீன உயர்ஸ்தானிகர் பார்வையிட்டதாகவும் வவுனியாச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

.

http://parantan.com/

  • தொடங்கியவர்

அபிவிருத்தியின் பேரால் வாரி வழங்கும் சீனா!

சிறிலங்காவின் மாத்தளைப் பகுதியில் புதிய விமான நிலையமொன்றை அமைப்பதற்காக 190 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா கடனாக வழங்கவுள்ளது.

சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கிக்கு (Exim Bank) ஊடாக வழங்கப்படும் இக்கடன் தொகையை விட, மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவின் தொடருந்துச் சேவைகளை அபிவிருத்தி செய்யவும், விரிவுபடுத்தவும் கடனாக வழங்கவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இவ்விரு கடன் தொகை குறித்த ஒப்பந்தம் இம்மாதம் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளுக்கிடையில் சீனாவில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியுடனான இச்சந்திப்புக்களின் போது போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மேலும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான கடன் வழங்கல்கள் குறித்தும் சிறிலங்காத் தரப்பால் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏ-9 பாதையை விரைவாக புனரமைப்பது குறித்தும் இச்சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதாகவும், இப்பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானதாகவும், சாதகமானதாகவும் அமைந்ததாக சிறிலங்காவின் திறைசேரியின் கலாநிதி பி.ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது நாட்டின் அபிவிருத்தி குறித்து மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் எவ்வித தடையுமின்றி முன்னேற்றத்துடன் மேற்கொள்வதற்கு மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை ந ல்லதொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் துணைத் தலைவர் Zhu Hong Jie க்கு பி.ஜெயசுந்தர எடுத்துக் கூறியதாகவும் சிறிலங்காத் தரப்பால் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்காவின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனா தோளாடு தோள் நின்று வழங்கி வருகின்ற உதவிகளுக்கும் Zhu Hong Jie க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளதாகவும் சிறிலங்காத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இச்சந்திப்புக்களின் போது சீனாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் கருணாதிலக்க அம்முனுகம, வெளிவாரி மூலவளத் திணைக்களத்தின் இயக்குனர் ஜே.ஜெயமகா மூத்த அரச அதிகாரியான அர்ஜீனா ஒபயசேகர மற்றும் தூதரகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் போரால் புனர்வாழ்வுக்காக மேலதிக நிதியுதவிகளை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.

வடபகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக 12.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி கடனாக வழங்க உள்ளது.

இவ்வங்கி தற்போது செயற்படுத்தி வரும் North East Community Restoration and Development திட்டத்தின் கீழ் இந்நிதி செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 26 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் மற்றும் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்ட நன்கொடை, சுவீடன் வழங்கிய 5.9 மில்லியன் டொலர்களைக் கொண்ட நன்கொடை, சிறிலங்கா அரசு வழங்கிய 9.1 மில்லின் டொலர்கள் என்பவற்றைக் கொண்டு North East Community Restoration and Development ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களுக்காக அவுஸ்திரேலியாவின் AusAID எனும் அமைப்பு 7.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக North East Community Restoration and Development க்கு வழங்கி இருந்தது.

வடபகுதி மக்களின் அவசர தேவைகளான விவசாயம், கல்வி, கிராம ரீதியான மின் விநியோகம், கிராமங்களுக்கான போக்குவரத்து, சுகாதாரத் துறையில் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதற்காக இந்த மேலதிக நிதி செலவிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளில் 2009 ஆம் ஆண்டு சீனாவே முதல் இடத்தில் இருப்பதாக சிறிலங்காவின் நிதித்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.

2009ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளும் மற்றும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் இணைந்து 2221.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவுக்கு வழங்குவதற்கு உறுதியளித்திருந்தன. இவ் உதவித்தொகையில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவை சீனாவிடமிருந்தே உறுதியளிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இப்பட்டியலில் சீனாவுக்கு அடுத்ததாக ஆசிய அபிவிருத்தி வங்கி 423.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதியளித்து இரண்டாவது இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://parantan.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்துறைமுகமும் விமான நிலையமுமே எதிர்வரும் காலத்தில் இடம்பெற இருக்கும் கிந்திய - சீன மோதலில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது. தமிழரை அழித்த, அழிக்க உதவிய கிந்தியாவானது, இறுதியில் சிறிலங்காவென்ற முள்ளால் குத்துப்படப்போகிறது. வடக்கிலும் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தலைப்படுவதானது இதனை மேலும் உறுதி செய்கிறது. புலிகளையும் தமிழீழ நடைமுறை அரசையும் அழத்துச் சிங்களத்துக்கு சாமரம் வீசிய கிந்தியா, இனித் தனது தெற்குமூலையில் எதிர்வரும் காலங்களில் பதட்டத்துடனேயே காலம் கழிக்கும் நிலை தோன்றப்போகிறது. தமிழீழ வான்படையும் தமிழர் படையும் அச்சுறுத்தலா? சீனாவுடன் இனைந்துள்ள சிறிலங்கா அச்சுறுத்தலா? என்பதை புரிந்து கொள்ளும் காலம் மிக வரைந்து வரும்போலவே தோன்றுகிறது.

எம்மையழித்த கிந்தியா அழிவதில் எந்தக் கவலையும் இல்லை.

  • தொடங்கியவர்

இந்தியாவுடன் சீனா மோதவேண்டும் என்ற அவசியமேயில்லை. சீனா இந்தியாவின் வாலைச் சுருட்டிக் கொள்ளும்படி செய்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.