Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர்ந்த்வர்கள் வடக்கை கட்டியெழுப்ப உதவலாம் - யாரும் வந்து போகலாம் - பிரசாத் சமரசிங்க

Featured Replies

புலம் பெயர்ந்த்வர்கள் வடக்கை கட்டியெழுப்ப உதவலாம் - யாரும் வந்து போகலாம் - பிரசாத் சமரசிங்க

வவுனியா நிருபர்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 16, 2010

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு உதவுவார்களேயானால் அது வரவேற்கக் கூடிய விடயமாகும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்கள் தவிர ஏனைய பகுதிகளில் இரவு பகல் பாராமல் எந்த வேளையிலும் எந்தப் பகுதிக்கும் சென்று இலங்கையர்கள் சென்றுவரலாம். யுத்தம் காரணமாக வெளிநாடு சென்றவர்கள் இனம்,மதம்,மொழி பிரிவினைகளைத் தவிர்த்து வடக்கின் அபிவிருத்திக்கு உதவுவார்களேயானால் வரவேற்கத் தக்கதாகும்.

கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்கள் தவிர கிளிநொச்சி,முல்லைத் தீவு உள்ளிட்ட வடக்கின் எந்தப் பகுதிக்கும் எந்தவொரு இலங்கையரும் சுதந்திரமாகச் சென்றுவரலாம்.ஆரம்ப காலங்களில் வடக்குக்கு செல்வதற்கு வரிகள் அறவிடப்படும். வரிப் பணத்தை கொடுத்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் அங்கு சென்றுவர முழுச் சுதந்திரம் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் கூட எமது அனுமதியின்றி செல்லலாம். வெளிநாட்டில் நிரந்தர வதிவிடம் பெற்றவர்கள் இலங்கையில் பிறந்திருந்திருப்பின் அவர்கள் செல்வதற்கும் நாம் தடைகள் எதுவும் விதிப்பதில்லை.

ஆனால் இலங்கையில் பிறக்காத வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே சென்றுவர முடியும். வெளிநாட்டவர்கள் தொடர்பில் நாம் சில நடைமுறைகளை பின்பற்றுகிறோம்" என்றார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95

புலம்பெயர் தமிழர்களால் போதியளவு அன்னியச்செலவாணியை ஈட்டிக்கொள்கிறது அரசு அதனால் தடையில்லை, வெளி நாட்டில் பிறந்தவர்களால் அரசுக்குஇலாபமில்லை அதனால்தான் கெடுபிடியை விதித்திருக்கிறது.

ஏன் காணும் நீங்கள் அடித்து உடைத்து சூறையாட அதை நாங்களா திருத்தவேண்டும்? சமரசிங்க :wub:

கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்கள் தவிர ஏனைய பகுதிகளில் இரவு பகல் பாராமல் எந்த வேளையிலும் எந்தப் பகுதிக்கும் சென்று இலங்கையர்கள் சென்றுவரலாம்.

கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்கள் தவிர கிளிநொச்சி,முல்லைத் தீவு உள்ளிட்ட வடக்கின் எந்தப் பகுதிக்கும் எந்தவொரு இலங்கையரும் சுதந்திரமாகச் சென்றுவரலாம்.

பலாலி வசாவிளான் பக்கமும் இரவிலை போகலாமே மோனை சமரசிங்கா என்னப்பு சும்மா கொளுத்தி போடுறாய்

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இலங்கையர்கள் இலங்கையர்கள் என்று அடிக்கடி சொல்வதன் அர்த்தம்

சிங்களவனை போகச்சொல்லித்தான்

Edited by விசுகு

தமிழரும் இப்போது தாராளமாகப் போகின்றார்கள். வீகளைப் புதுப்பித்தல், வாடகைக்கு இருப்பவர்களிடம் புது ஒப்பந்தம். தமது தோட்ட நிலங்களைப் பயன்படுத்தியவர்களிடம் குத்தகை எல்லாம் அறவிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, குடாநாட்டில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாம். முடிந்தவரை அதை விற்றுவிட்டு, கொழும்பில் சொத்துத் தேடுகிறார்கள். புலம் பெயர்ந்தோர்.

உரிய நேரத்தில் கொழும்பிலும் தமிழர் அடித்து விரட்டப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்படும்.

"சம்பிக்க ரணவக்க - கொட்டகதெனிய - கோத்தபாய திட்டம்" 2 வருடங்களின் முன்னர் எதிர்பாராத சிங்கள உயர் அநீதி மன்றத் தலையீட்டால் நின்றுபோனது.

மீண்டும் உரிய நேரத்தில் "சம்பிக்க ரணவக்க - கொட்டகதெனிய - கோத்தபாய திட்டம்" கொழும்பில் 1983 வடிவில் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.

எனவே நிறைய காசுள்ள தமிழ் மக்கள், தமது தாயக சொத்துக்களை விரைவில் வித்து, கொழும்பில் சொத்துக்களை விரைவில் வாங்கினால், சிங்கள பயங்கரவாதிகளிடம் அவற்றை பறிகொடுக்க வசதியாக இருக்கும்.

சிங்கள மனிதவுரிமை கூட்டத்தால் பெரும்பாலான பணக்கார தாயக தமிழனிடம் கப்பம் வாங்கி முடிந்துவிட்டது.

இனி புலம் பெயர் தமிழன் வரலாம், போகலாம். அதில் பிரச்சினை இல்லை.

ஆனால் இடையில் கடத்தப்பட்டு, வேண்டியதை கொடுக்க உடன்பட்டால் சமரசிங்கவின் சிங்கள மனித உரிமைக் கூட்டத்தால் அன்பாக உபசரிக்கப்படுவர். இல்லை என்றால், சிங்கள மனிதவுரிமை கூட்டத்தால் சிரமம் இன்றி சொர்க்கம் காட்டப்படும் அல்லது முகவரி தொலைக்கப்படும்.

குறிப்பு:

பான் கி மூன், கருணா நிதி, சோனியா கூட்டம் உள்ளவரை இதற்கு உத்தரவாதம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.