Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் சிங்களத்தை நம்பி செயற்படும் முயற்சிகள் தோற்கடிக்கப்படவேண்டும்

Featured Replies

இந்தியாவின் சிங்களத்தை நம்பி செயற்படும் முயற்சிகள் தோற்கடிக்கப்படவேண்டும்

உபகண்ட துணை ஆசிரியர்

ஞாயிற்றுகிழமை, மார்ச் 21, 2010

INDO CHINA

சீனாவுக்கு போட்டியாக இலங்கைக்கு எவ்வளவை கொடுத்தாலும் இந்தியாவினால் அவர்களது இலக்கினை அடைய முடியாது. சீனாவின் இலங்கை மீதான அபிவிருத்தி , முதலீடு ஆகியவற்றின் ஊடான செல்வாக்கினை முறியடிக்க இந்தியாவும் அதே பாணியில் அபிவிருத்தி, முதலீடு, வியாபாரம் என நிதியினை கொட்டி வருகின்றது. இது சிங்களவர்களுக்கு இராஜபோகம் தான். ஏனெனில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு இலங்கைக்கு உதவிகளை செய்து வந்தார்களோ அவ்வாறே இப்போது அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கைக்கு இரு நாடுகளும் அள்ளி கொட்டிக்கொண்டு இருக்கின்றன.

இந்த போட்டியில் நிச்சயமாக இருவரையும் பகைக்காமல் பெரும் நிதிகளை பெற்றுக்கொண்டு இருக்கும் இலங்கை சிங்கள பேரினவாத அரசே கெட்டிக்காரர்கள் என்று கூறுவது மிகை ஆகாது. எந்த மாட்டிடம் எப்படி கறக்கவேண்டும் என்பதில் மஹிந்த கில்லாடி.

சிங்களவர்களின் இந்த கெட்டித்தனத்தால் சீனாவும், இந்தியாவும் கோடிக்கணக்கில் கொட்டினாலும் இந்தியா இதில் தோல்விகளையே சந்தித்துவருகின்றது. காரணம் முக்கியமான பாரிய திட்டங்களையும், திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதனையும் சீனாவே தன்வசம் வைத்திருக்கின்றது. அதாவது தொலைதொடர்பு, வீதிபோக்குவரத்து, துறைமுகம், விமான நிலையம், மின்சாரம் போன்ற துறைகளில் சீனா ஆதிக்கம் மிகையாக உள்ளது. இது இந்தியாவின் முதலாவது தோல்வி. அதாவது ஹம்பந்தோட்டை சர்வதேச விமான நிலையம் அமைப்பு, கொழும்பு துறைமுக நாலாம் கட்ட புனரமைப்பு கூட இந்தியா போட்டியிட்டும் சீன கம்பனிகளே வென்றுள்ளன.

சிங்கள அரசு இந்தியாவிற்கு பொருளாதார முக்கியத்துவம் அல்லாது,கேந்திர நிலையங்களல்லாத இடங்களையே முதலீடு, அபிவிருத்தி செய்ய வழங்கி வருகின்றன. ஆனால் இந்தியா தாம் ஏதோ தந்திரோபாயமாக செயற்படுவதாக இந்தியர்களுக்கு கூறிவருகின்றது.

அதாவது இலங்கை அரசுக்கு கடந்த வருடத்தில் மட்டும் இந்தியா 12.5 பில்லியன் ரூபா உதவியை வழங்கியுள்ளதாக இந்தியத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்கு இந்தியா தனது உதவிகளை அதிகரித்துள்ளது. இந்திய அரசின் இந்த உதவிகளின் அளவு கடந்த ஆண்டு 12.5 பில் லியன் ரூபாவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையிலும், மத்திய பகுதிகளிலும் அதிகளவு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுவரும் இந்தியா, தற்போது கிளிநொச்சி, வவுனியா, திருமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா என அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளை விஸ்தரித்து வருகின்றது.

ஆறு பயிற்சி நிலையங்களை அமைத்து வரும் இந்தியா, பேராதனையிலும் ஒரு கல்வி நிலையத்தைத் நிர்மாணித்துள்ளது. இந்தக் கல்விநிலையத்தை திறந்து வைப் பதற்காக அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் வந்திருந்தார்.எனவும் மார் தட்டுகின்றனர்.

குடா நாட்டில் அனைத்து வீதிகள், பாலங்களை திருத்தும் பணி சீன கம்பனிகளே செய்கின்றன. சீன உதவிகள் ஊடாகவே நடக்கின்றன. சீனாவின் பொருளாதார பலத்திற்கு இந்தியா நீண்ட காலத்திற்கு தாக்கு பிடித்து செயற்படமுடியாது.இது அவர்களின் இறுதி தோல்வியாக இருக்கலாம்.

அடுத்த தாக இந்தியா நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக தமது தலையீட்டினை செய்ய முனைகின்றது. இந்த விடயத்தில் சீனா கிழக்கில் பிள்ளையான், வன்னியில் ஈ.என்.டி.எல்.எவ், வடக்கில் முடிந்தால் கூட்டமைப்பு மற்றும் தேர்தலில் வெல்லும் உதிரிகளையும் வைத்து செயற்பட நினைக்கின்றது. டக்ளஸ், கருணாவை கொஞ்சம் ஓரமாகத்தான் வைத்திருகின்றது இந்தியா.

இந்தியாவின் இந்த உள்ளூர் அரசியல் விவகாரத்தில் சீனா போட்டிக்கு இறங்கவில்லை காரணம் இரண்டு. ஒன்று சீனாவுக்கு அந்தளவு தமிழர்களுடனான உறவு இல்லை. இரண்டாவது தேவையும் இல்லை ஏனெனில் மஹிந்தவை தமது கட்டுப்பாட்டிற்குள் சீனா வைத்திருக்கின்றது. மேலும் மஹிந்த வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது அதிகாரத்தை முழுமையாக வழங்கவோ மாட்டேன் என வாக்குறுதியும் அளித்துள்ளார் ஆகவே சீனா வடக்கு கிழக்கு உள்ளூர் அரசியலில் பங்கெடுக்க அவசியம் இல்லை.

ஆகவே இந்தியாவின் முயற்சி என்னவெனில் வடக்குகிழக்கில் தாம் சொன்னால் தலையாட்டும் அரசியல் வாதிகள் இருக்க வேண்டும். கூடவே மஹிந்த சில அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். இல்லாவிடில் இந்த அரசியல் வாதிகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பது இந்தியாவிற்கு தெரியும்.

அதற்காகத்தான் இந்தியா வடக்கு கிழக்கிற்கு அதிகார பரவல் வேண்டும் என வற்புறுத்தின் வருகின்றது. ஆனால் தமிழர்களின்புத்திசாலித்தனத்தால் இந்தியாவின் இந்த நகர்வுகளும் தோற்கடிக்கப்படவேண்டும். அவ்வாறு தோற்கடிக்கப்படும் போது இந்தியா - சீன போட்டிகளுக்கு, முறுகல் நிலை வலுக்கும், வலுக்க வேண்டும். அரசியல் ரீதியாகவும் ,அபிவிருத்தி ரீதியாகவும் சிங்கள அரசினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் இந்தியா தோல்வியினை தழுவும் போதுதான் தமிழர்களை முழுமையாக வைத்து அவர்களுக்கென ஒரு தீர்வு முயற்சி, சிங்களத்தினை நம்பி இருக்காமல் ஓர் தீர்வு முயற்சி சூழல் இந்தியாவில் ஏற்படும். ஏற்படவேண்டும்.

ஆகவே இது கூட வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் கையில்தான் உள்ளது. இதனை வன்முறையற்ற வழியில் கூட செய்ய முடியும் எல்லோரும் ஒன்று பட்டால்.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ சிங்களவன் பாடு படு கொண்டாட்டம்.எங்கள் நிலை. :lol:

  • தொடங்கியவர்

எது எப்படியோ சிங்களவன் பாடு படு கொண்டாட்டம்.எங்கள் நிலை. :lol:

இன்னும் சிங்களவனை தூக்கி விடும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டு வருகிறம்...

ஈழத்தமிழ் மக்களை தன் கட்டுக்கை வைத்து கொள்ளும் இந்தியாவின் திட்டம் மட்டும் பலிக்குமாக இருந்தால் சிங்களன் இந்தியாவை முழுமையாக கைகழுவி விட மாட்டாது... தமிழர்களை காட்டி பாரிய பலன்களை இந்தியா அனுபவிக்கும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத்தமிழரை தனது கட்டுக்கள் வைத்திருக் பல வழிகளிலும் தீவிர முயற்ச்சி செய்கிறது இன்னும் செய்யும்.இந்தியாவிடமிருந்து முற்றாக நாம் விடுபட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.இதுக்கு கட்ச்சி அரசியல் மட்டும் போதாது.

மனிதாபிமானம் உள்ளவர்கள், உண்மையான ஜனநாயகவாதிகள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து இந்திய பயங்கரவாதிகளை தோற்கடிக்கவேண்டும்.

தெற்காசியாவின் ஸ்திரத்தன்மைக்கு இந்திய பயங்கரவாதம் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இந்திய பயங்கரவாதம் சகல வழிகளிலும் தோற்கடிக்கப்படவேண்டும்.

அவ்வாறு தோற்கடிக்கப்படும் போது இந்தியா - சீன போட்டிகளுக்கு, முறுகல் நிலை வலுக்கும், வலுக்க வேண்டும். அரசியல் ரீதியாகவும் ,அபிவிருத்தி ரீதியாகவும் சிங்கள அரசினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் இந்தியா தோல்வியினை தழுவும் போதுதான் தமிழர்களை முழுமையாக வைத்து அவர்களுக்கென ஒரு தீர்வு முயற்சி, சிங்களத்தினை நம்பி இருக்காமல் ஓர் தீர்வு முயற்சி சூழல் இந்தியாவில் ஏற்படும். ஏற்படவேண்டும்.

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.