Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடு கடந்த தமிழீழ அரசை நிச்சயம் உடைப்போம் :ரோகித போகல்லாகம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்” என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.

இந்த கட்டமைப்புக்களை முற்றாக அழித்தொழிப்பதற்கு பத்து வருடங்களும் ஆகலாம். கடந்த மே மாதம் போர் முடிவடைந்த பின்னரும் நாம், எமது இலக்குகளை மாற்றி அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறோம் என்றார். இலங்கை அரசை ஐ.நா. விளக்கம் கோரியிருப்பது தொடர்பாக கருத்து கூறுகையில் – சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியிருப்பது தமக்கு வியப்பளிக்கிறது.

மிகப்பாரதூரமான ஓரு விடயத்தை ஊடகவியலாளர் ஒருவரிடம் தான் அறிந்துகொண்டதாக அரசியல்வாதி ஒருவர் கூறினார் என்று தெரிவித்து அதனை ஆதாரமாக கொண்டு, ஐக்கிய நாடுகள் சபை எம்மிடம் விளக்கம் கோருகின்றது என்றால், இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு ஒன்றுமே இருக்கமுடியாது.

உண்மையிலேயே ஐ.நா. இந்த செயல் எமக்கு மிகுந்த வியப்பை அளித்துள்ளது. போர் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் கேள்விப்பட்ட சம்பவத்தை போர் முடிவடைந்து எட்டு மாதங்களின் பின்னர் பொன்சேகா வெளியிட்டிருக்கிறார் என்றால், இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை முதலில் உணரவேண்டும் என்றார்.

பாரிஸ் ஈழநாடு நாடுகடந்த அரசு தொடர்பாக அண்மையில் வெளியட்ட கட்டுரைக்கும் ரோகித போகல்லகமவின் செய்திக்கும் உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டுப்பார்த்தால் .........மீதியை நான் சொல்ல விரும்பவில்லை

ரதி,

மூலம் பதிவு என்று போடுவதோடு - ஆக்கத்துக்கான நேரடி இணைப்பையும் கீழே இணைக்கவும்.

நாடுகடந்த தமழீழ அரசு தொடர்பான, ரோகித்த பொகல்லாகம இன் கருத்து நாடுகடந்த அரசு அமைப்பவர்களுக்கு சாதகமனதே.

நீங்கள் இப்படி அப்பமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி அப்பமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை...

எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இப்போதைக்கு அப்பளமாகி எண்ணை சட்டிக்குள் இறங்காவிடாத வரை அவர்களால் உடைக்க முடியாது என்பது மட்டும் உண்மை. இல்லை என்று அவசரபட்டால் துகள்கள் ஆகிவிடும்.

சசிங்களரின் இராஜதந்திர நடவடிக்கைகள் குறைத்து மதிப்பிட முடியாதது. அதைச் செய்வதற்கான வலிமை அவர்களிடமுண்டு. அவர்களிடமிருந்து நாடுகடந்த அரசு தன்னைத் தந்திரமாகக் காத்துக் கொள்ள வேண்டும்.

தமிழர்களின் குறிகோளை திசை மாற்றும் வரைக்கும் கடினமாக இருக்கலாம். கூட்டமைப்பு போண்ற இரண்டக வேலை செய்யும் முகவர்களின் ஆதிக்கத்தில் தனியரசு போண்ற குறிக்கோளில் இருந்து விலகி போகும் ஆக்கள் நாளைடைவில் சிங்களவரின் எண்ணத்தை ஈடேற்றலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடுகடந்த அரசை ஆதரிக்கிறார்கள்.?

புரிந்து கொள்ள வேண்டும் புலத்தில் இருப்பது இன்று இரண்டு துருவங்கள். அது ஒன்றே போதும் உடைக்க நினைப்பவனுக்கு.

புரிந்து கொள்ள வேண்டும் புலத்தில் இருப்பது இன்று இரண்டு துருவங்கள். அது ஒன்றே போதும் உடைக்க நினைப்பவனுக்கு.

அது கட்ந்து போய் இரு வேறு பாதைகளாகி நீண்ட காலம் அண்ணை. இது தற்காலிகமாக யாரை நம்புவது என்பது தெரியாதமையால் வந்தவை. இங்கிலாந்தில் நடந்த வட்டுக்கோட்டை தீர்மான தேர்தலை மற்றய தரப்பின் ஆதரவோடுதான் நட்ந்தது.

அது கட்ந்து போய் இரு வேறு பாதைகளாகி நீண்ட காலம் அண்ணை. இது தற்காலிகமாக யாரை நம்புவது என்பது தெரியாதமையால் வந்தவை. இங்கிலாந்தில் நடந்த வட்டுக்கோட்டை தீர்மான தேர்தலை மற்றய தரப்பின் ஆதரவோடுதான் நட்ந்தது.

ஓமண்ணை அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் உள்ளுக்க பெரிய புடுங்குப்பாடு. கேட்டால் கோட்பாட்டு அடிப்படையாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழீழ அரசை நிச்சயம் உடைப்போம் :ரோகித போகல்லாகம

உந்தாள் தேவையில்லாமல் மினக்கெடுது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்” என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.

இந்த கட்டமைப்புக்களை முற்றாக அழித்தொழிப்பதற்கு பத்து வருடங்களும் ஆகலாம். கடந்த மே மாதம் போர் முடிவடைந்த பின்னரும் நாம், எமது இலக்குகளை மாற்றி அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறோம் என்றார். இலங்கை அரசை ஐ.நா. விளக்கம் கோரியிருப்பது தொடர்பாக கருத்து கூறுகையில் – சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியிருப்பது தமக்கு வியப்பளிக்கிறது.

மிகப்பாரதூரமான ஓரு விடயத்தை ஊடகவியலாளர் ஒருவரிடம் தான் அறிந்துகொண்டதாக அரசியல்வாதி ஒருவர் கூறினார் என்று தெரிவித்து அதனை ஆதாரமாக கொண்டு, ஐக்கிய நாடுகள் சபை எம்மிடம் விளக்கம் கோருகின்றது என்றால், இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு ஒன்றுமே இருக்கமுடியாது.

உண்மையிலேயே ஐ.நா. இந்த செயல் எமக்கு மிகுந்த வியப்பை அளித்துள்ளது. போர் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் கேள்விப்பட்ட சம்பவத்தை போர் முடிவடைந்து எட்டு மாதங்களின் பின்னர் பொன்சேகா வெளியிட்டிருக்கிறார் என்றால், இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை முதலில் உணரவேண்டும் என்றார்.

சில புலம்பெயர்தமிழரும் இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அச்சுறுத்தலாகதான் இருக்கிறார்கள் பாருங்கோ !

நாடு கடந்த தமிழீழ அரசை உடைக்கும் வேலைத்திட்டத்தில் சிங்களவருடன் ஒரு தொகுதி புலம்பெயர் தமிழர்களும் சேர்ந்திருப்பதாக கேள்வி ......

இதற்காக பெருவாரியாக பணமும் ஒதுக்கப்பட்டுள்தாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.