Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழதேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன்

Featured Replies

தமிழீழதேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன்

வீரச்சாவடைந்ததாகச் சொல்லப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன நிறுவனத்தின் மற்றும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளராக இருந்து முள்ளிவாய்க்காலில் வீரச்சாவினை தழுவிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட சேரலாதன் தற்போது உயிருடன் இருப்பதாக தெரியவருகின்றது.

சிறீலங்கா இராணுவத்துடனான இறுதிக்கட்ட சண்டையில் காலில் காயம் அடைந்த இவர் சக போராளியிடம் தான் காயப்பட்டுவிட்டதாகவும,; குப்பி கடிக்கப்போவதாகவும், தன்னை விட்டுவிட்டு போகும்படியும் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது.

இதன் காரணமாக சமர்க்களத்தில் நின்ற போராளிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டனர். இதை அறிந்த தலைமைப்பீடம் சேரலாதனுக்கு கேணல் நிலையை வழங்கியதோடு அவரது குடும்பமும் வீரச்சாவு நிகழ்வை நடத்தியிருந்தனர்.

ஆனால் இவர் குப்பியை கடிப்பதற்கு முன்பாகவே கடும் இரத்தப்போக்கால் மயக்கமடைந்துவிட்டார்.

அப்பகுதிக்கு வந்த இராணுவம் இவரை தூக்கிச்சென்று பல மாதங்களாக தீவிர சிகிச்சை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சுயநினைவு திரும்பிய சேரலாதன், தான் நிதர்சனப்பொறுப்பாளர் என தன்னை அடையாளம் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தற்போது இலங்கை இராணுவத்தின் தடுப்புமுகாம் ஒன்றிற்கு மாற்றப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2010/04/01/ltte-media-in-charge-cheralathan-is-alive.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

நன்றி இறைவன்

இதுவும் முட்டாள்தின செய்தியோ இல்லாட்டிக்கு உண்மைச்செய்தியோ..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செய்தி

நன்றி இறைவன்

தெரிந்துதான் நல்லசெய்தி என்று நன்றி சொல்கின்றீர்களா?

அதுவும் இராணுவகாலடியில் இருந்து அனுபவிருப்பவருக்கு?????

என்ன உலகமடா இது?

சிறு திருத்தம் இறைவன் . கேணல் சேரலாதன் வீரச்சாவடைந்ததாக கூறபட்ட இடம் முள்ளிவாய்க்கால் இல்லை ..அவர் ஆனந்தபுரம் முற்றுகை உடைப்பு சமரில் தான் வீரச்சாவடைந்ததாக கூறபட்டது. இது 2009 சித்திரை மாதம் முதல் வாரத்தில் அதாவது இன்றைய நாட்களில் இடம் பெற்ற சம்பவம். சரியாக ஒரு வருடத்தில் இந்த தகவலை கசிய விட காரணம் என்ன என்ன என்று புத்தி உள்ளவர்கள் ஆராய்ந்து பார்க்கலாம் தானே ..

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்துதான் நல்லசெய்தி என்று நன்றி சொல்கின்றீர்களா?

அதுவும் இராணுவகாலடியில் இருந்து அனுபவிருப்பவருக்கு?????

என்ன உலகமடா இது?

தெரிந்துதான் சொல்கிறேன்

அந்த உயிரை நான் மதிக்கின்றேன்

எங்கிருந்தாலும் வாழ்க என்பது இதைத்தான் நண்பரே...

நீங்கள் இதைவிட அவர் இறந்திருக்கணும் என்ற பகுதியோ.....??

தெரிந்துதான் நல்லசெய்தி என்று நன்றி சொல்கின்றீர்களா?

அதுவும் இராணுவகாலடியில் இருந்து அனுபவிருப்பவருக்கு?????

என்ன உலகமடா இது?

ஏன் குமாரசாமி அண்ணா இளம்பருதி, பாப்பா அவர்களும் தான் இராணுவகாலடியில் இருந்து அனுபவிக்கின்றனர். எந்த வகை அனுபவிப்பை நீங்கள் கூறுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

நன்றி இறைவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்துதான் சொல்கிறேன்

அந்த உயிரை நான் மதிக்கின்றேன்

எங்கிருந்தாலும் வாழ்க என்பது இதைத்தான் நண்பரே...

நீங்கள் இதைவிட அவர் இறந்திருக்கணும் என்ற பகுதியோ.....??

உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றேன்.உங்கள் உணர்வு தெரியாமல் எழுதிவிட்டேன்.மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றேன்.உங்கள் உணர்வு தெரியாமல் எழுதிவிட்டேன்.மன்னிக்கவும்

குமாரசாமி அண்ணா

இது சரியா

இது தகுமா

எனக்கு இந்த காலில் விழுபவர்களை ஏற்கனவே தெரியும்

கவிழ்ப்பதற்கு மட்டுமே என்று...

இருந்தாலும் இது அதிகம் தங்களின் வயதுக்கு....

நான் இதுவரை எவரையும் கும்பிட்டதில்லை

எனக்கும் கை கூப்பி எவரும் வணக்கம் சொல்ல அனுமதித்ததில்லை

தமிழர்களது கை கூப்பும் வழக்கத்துக்கு நான் எதிரானவன்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.