Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறப்போர் நல இல்லம்- அருட் தேவதை அன்னை தெரெஸா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறப்போர் நல இல்லம்- அருட் தேவதை அன்னை தெரெஸா

mother_teresa_love.jpg

தோன்றிய வரலாறு:

1950 ஆண்டில் அன்னை தெரேசாவின் இலட்சிய பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது... அவர் இதுவரை ஏழை எளியவர் பற்றிய சிந்தனைகளிலேயே முழ்கி இருந்தார்..அவர்களின் அறியாமையை அகற்றி கல்வி வெளிச்சத்தினை தருவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவ்வாறு வறியவர்களுக்கு மட்டும் உதவினால் போதாதாது சாக இருக்கின்றவர்களுக்கும் உதவிட வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்களில் தான் ஏற்பட்டது.

ஒரு முறை அன்னையும் அவர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மிக்கேல் கோமஸும் ஒர் அலுவல் பொருட்டு டிராம் வண்டியில் ஏறுவதற்காக நின்றிருந்தனர்.அந்த டிராம் வண்டி நிறுத்ததற்கு எதிரேயே அரசு மருத்துவமனை இருந்தது. இதன் பெயர் நில்ரதன் அரசு மருத்துவமனை என்பதாகும்.அதன் முகப்பில் உள்ள பெரிய மரத்தடியில் ஒரு நோயாளி முடங்கி கிடந்தான். அதை கண்ட அன்னை கோமஸ் மிகப்பெரிய மருத்துவமனை வெளியே தான் ஒரு நோயாளி முடங்கிகிடக்கிறார் ஆனால் ஒருவரும் கண்டு கொள்ளவில்லையே என வினவினார்.. இடையில் எதிர்பார்த்த டிராம் வண்டி வந்துவிட்டதால் அவனை குறித்த பேச்சு தடைபட்டது.

இரண்டு மணிநேரம் கழித்து அலுவலை முடித்து கொண்டு இருவரும் வீடு திரும்பினர்.. டிராம் வண்டி நின்ற உடன் நேராக வீட்டிற்கு செல்லாமல் எதிரே உள்ள மருத்துவமனை பக்கம் பார்த்தார்.அந்த நோயாளி இன்னும் மரத்தடியிலேயே உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அன்னை அவனருகில் சென்றார் எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் என்ற நிலையில் அவன் துடித்து கொண்டிருந்தான்.அதனை கண்ட அன்னையின் கண்கள் கலங்கின.அந்த பிணியாளனை மருத்துவமனையில் சேர்த்து கொள்ளுமாறு அங்குள்ள அதிகாரிகளிடம் மன்றாடினார்.அதிகாரிகளோ மறுத்துவிட்டனர். அவர்களின் போக்கு அன்னைக்கு வியப்பையும் துயரையும் கொடுத்தது.

உயிர் பிழைக்க இருப்போருக்கு தான் மருத்துவம்.. உயிரை இழக்க போகின்றவர்களுக்கு அல்ல என்ற அதிகாரிகளின் வாதம் எந்த வகையில் நியாயம் என்ற உறுத்தல் அன்னையின் மனதில் எழுந்தது. அவர் மருத்துவமனையில் இருந்த வெளிவந்த பார்த்த போது அந்த நோயாளி இறந்தே போனான்.அந்த அவல காட்சியை கண்ட அன்னையால் அழுகையை அடக்க முடியவில்லை.அருகில் நின்ற மைக்கல் கோமசிடம் யாருக்கு தெரியும் ஒரு குவளை நீருக்காக கூட அவன் போராடி இருக்கலாம் அல்லவா என்று புலம்பினார்.

சில நொடிகளில் அவருடைய கண்களில் ஒளி பளிச்சிட்டது கோமஸ் இந்த நோயாளிகளுக்கு நிம்மதியாக வாழத்தான் கொடுத்து வைக்க வில்லை.. அமைதியாக இறப்பதற்காவது நாம் வழி வகை செய்தாக வேண்டும் என்ற கருத்துமணிகள் உதிர்ந்தன..

சொல்லிய அன்னை அத்தோடு நிற்கவில்லை ..அதற்கான செயல் திட்டங்களை வகுக்கும் வேளையிலும் இறங்கிவிட்டார்.சிலர் மலையை உருட்டுவேன். மழைசரத்தை கோர்த்து மணிச்சரம் ஆக்குவேன்..என்று கர்புர் என உறுமுவார்கள்.. அனனை அவர்களோ வீண் பேச்சுகாரார் அல்லர்.சொன்னபடி சொன்னதை செய்து முடிக்கும் சிந்தனையாளர்.செயல் முறைகளில் இறங்கினார்.. கல்கத்தாவில் உள்ள மாதா கோயிலுக்கு சென்றார்.அங்குள்ள மத குருமார்களிடம் தனது எண்ணத்தினை வெளியிட்டார். எங்காவது இடம் பார்த்து கொடுக்கும்படி கேட்டார்..அவர்கள் தற்காலிகமாக மாதா கோயிலின் அருகில் இருக்கும் ஒரு சிறிய கட்டிடத்தினை தருவதற்கு இசைவு தந்தார்கள்.

நிர்மல் இருதயம்

அவர் அவ்வாறு இறப்போர் நல இல்லத்திற்கு சூட்டிய பெயர் "நிர்மல் இருதயம்" எனபதாகும்.

நாளுக்குநாள் பிணியாளர் வருகை அதிகரித்ததையொட்டி வேறு இடத்தினை தேர்வு செய்யவேண்டிய நிலைமை அன்னைக்கு ஏற்பட்டது.. கல்கத்தா காளி கோயிலுக்கு அருகில் தர்மஸ்தலா என்னும் கட்டிடம் இருந்தது . அது பயணியர் விடுதியாக செயல்பட்டு வந்தது அந்த கட்டிடத்தில் தனது நிர்மல் இருதயத்தின் செயல்பாட்டை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அன்னைக்கு ஏற்பட்டது.அதனை செயற்படுத்து பொருட்டு.. காவல் துறை ஆணையரையும்... மாநகாராட்சி அதிகாரிகளையும் அணுகினார்.. அன்னையின் சேவையை நன்குணர்ந்த அவர்கள். அவருடைய கோரிக்கைக்கு ஒப்புதல் நல்கினர்..1952 முதல் அந்த கட்டிடம் தனது செயல்பாடுகளை தொடங்கியது...

அன்னை எதிர் நோக்கிய சிக்கல்கள்

நாளுக்குநாள் அதிகரிக்கும் பிணியாளர்கூட்டமும் அன்னையின் சேவை உள்ளமும் கல்கத்தா காளி கோயில் பூசாரிகளுக்கும் அவர்தம் அடியவர்களுக்கும் கிலி கொள்ள ஆரம்பித்தது..இந்து சமய நோயாளிகளையும் .. ஏழைகளையும் அன்னை மதமாற்றம் செய்து வருவதாக குற்ற சாட்டுகளை அள்ளி வீசினர்.அச்சம் ஆத்திரமாக வளர்ந்தது..அவர்தம் வசை மொழிகள் அன்னையின் செவிகளை தீய்த்தன.. வன்முறை செயல்கள் நெஞ்சத்தினை துயர் கொள்ள செய்தன.. எனவே காவல் துறையின் உதவியோடு தனது சேவையை தொடரவேண்டிய நிலைக்கு அன்னை தள்ளப்பட்டார்.ஆனாலும் பூசாரிகளூம் அவர்களது கூட்டமும் அடங்கிய பாடு இல்லை.. கூச்சலை எழுப்பினர் குழப்பம் விளைவித்தனர்..அவர்களது வன்முறை போக்கால்..நோயாளர் பலர் அச்சத்திற்கு உள்ளாவதையும் மனநிம்மதி இழப்பதையும் கண்ணுற்ற அன்னை.. எவ்வாறாகினும் இந்த சிக்கலுக்கு தீர்வு காணபடவேண்டும் என நேராக அவர்களிடம் சென்றார்.."என்னை எதுவேண்டுமானலும் செய்து கொள்ளுங்கள் என்னை நம்பி வந்துள்ள நோயாளிகளை தயவு செய்து தொல்லை படுத்தாதீர்கள்" என உளமுருக முறையிட்டார்.ஆனாலும் பூசாரிகளின் கல்நெஞ்சம் கரையவில்லை...

நேரடி கிளர்ச்சியை மட்டுமே சந்தித்த அன்னைக்கு அரசியல் ரீதியாகவும் தொல்லை தர ஆரம்பித்துவிட்டனர்.. ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரை அணுகி ... இந்து சமயத்தவர் பலரை அன்னை மதமாற்றம் செய்வதாகவும்.. அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என அழுத்தம் திருத்தமாக கூறினர்.அதைகேட்ட அரசியல் தலைவருக்கோ அவர்களது வேண்டுகோளை தட்ட முடியவில்லை.. பின்னர் கூடியிருந்த கூட்டதிடம் நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமனால் அங்கிருந்து அவரை வெளியேற்றாமல் நான் ஓயபோவதில்லை என்று சூளுரைத்தார்.. கூடி இருந்த கூட்டமும் ஆரவாரம் செய்தது..

ஒருநாள் "உண்மை நிலையை கண்டறிவதற்காக" அந்த இல்லத்திற்கு திடீர் விசிட்டை அந்த அரசியல் தலைவர் மேற்கொண்டார். நேரடியாக அந்த இல்லத்திற்கு சென்றார்.பெரிய அரசியல் தலைவர் வருவதையிட்டு மகிழ்ச்சியடைந்த அன்னை அவர்கள் தானே அனைத்து பகுதிகளையும் சுற்று காட்டுவதாக கூறினார்..குற்றம் காணவந்த அரசியல் தலைவரோ எல்லாம் எனக்கு தெரியும்.. உங்கள் வேலை மட்டும் பாருங்கள் நானே பார்வையிட்டு கொள்கிறேன்.. என இறுமாப்போடு கூறிவிட்டு அனைத்து பகுதிகளையும் பார்வையிட தொடங்கினார்.

உருகுலைந்த நிலையில் இருக்கும் நோயாளிகளையும்... அவர்களுக்கு கருணையுடன் பணிவிடை செய்வதையும்.. உணவு ஊட்டுவதையும்.. ஊசி மருந்து மாத்திரைகள் தரப்படவதையும் கண்ணுற்ற அரசியல் தலைவருக்கு கண்கள் கலங்கின. எந்த வித அருவெறுப்பும் இன்றி புன்னகை பூக்கும் முகத்துடன் அவர்கள் செய்யும் பணிவிடைகள் அவரது நெஞ்சத்தினை உலுக்கியது. இல்லத்தினை பார்வையிட்டு முடித்த பின்னர் வெளிவந்ததும் அங்கு கூடியிருந்தா ஆயிரக்காணக்கான பூசாரிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களிடம்... பின்வருமாறு கூறினார்... நான் அந்த பெண்மணியை வெளியேற்றுவதாக உங்களிடம் வாக்கு கொடுத்துவிட்டு வந்தேன்... ஆம் இப்போதும் அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.. பின்வாங்கவில்லை ... அதற்கு முன்பு நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழி தரவேண்டும்... இங்குள்ள அருவெறுக்க தக்க நோயாளிகளை எல்லாம் புன்முகத்துடன் இங்குள்ள கன்னியர் கவனிக்கின்றனர்..அதே போல சேவை செய்ய உங்களுடைய தாய்மார்கள் அக்கா தங்கைகளை இங்கு அனுப்பிவைக்க வேண்டும்..அப்படி நீங்கள் அழைத்துவந்துவிட்டால் ..அந்த பெண்மணியை அகற்றவேண்டியது எனது பொறுப்பு என்றார்.இதை கேட்ட எதிர்பார்களோ முகத்தினை தொங்க போட்டு கொண்டு கலைந்து செல்ல ஆரம்பித்தனர்..

எலும்புருக்கி நோய்க்கு ஆளான தலைமை பூசாரி.

அன்னைக்கு எதிராக கிளர்ச்சியை உண்டுபண்ணிய தலைமை பூசாரியே ஒருநாள் எலும்புருக்கி நோய்க்கு ஆளானார்..இறப்பது உறுதி என்ற நிலையில் உறவினர் யாரும் உதவ முன்வராத நிலையில்.. கவனிப்பார் யாரும் அற்று . நிர்மல் இதயத்தினை நாடி வந்தார்..தங்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டிவிட்டவர் என அன்னை அவர்கள் சிறிதளவும் வெறுப்போ... ஆத்திரமோ கொள்ளவில்லை.. அனைவரையும் போலவே அவரையும் வரவேற்றார்..அன்னையின் கால்களின் விழுந்த அவர்..பின்னர் எழுந்து.. நான் 30 ஆண்டுகளாக காளிக்கு பணிசெய்தேன் .. ஆனால் அந்த காளி இப்போது மனித உருவில் தன் எதிரெ நிற்பதாக.. கண்ணீர்க் மல்க கூறினார் இறக்கும் தருணத்தில் அப்பூசாரி கூறிய வார்த்தைகள் அன்னை அவர்களுடைய சேவைகளுக்கு கிடைத்த வெற்றி மாலை அல்லவா?

நன்றி: தமிழ்நாடு அரசு ஆசியர் பயிற்சி புத்தகம்...

பல விடயங்கள் அன்னையை பற்றி அறியதந்தமைக்கு நன்றிகள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்கள் அன்னையை பற்றி அறியதந்தமைக்கு நன்றிகள்...!

மிக்க நன்றி தோழர் ஈழமகள்..

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான் பதிவு...தேடி இணைத்தமைக்கு நன்றி ........தொண்டர்களுக்கும் சோதனைகளும் .... வேதனைகளும் ..சங்கடங்களும் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான் பதிவு...தேடி இணைத்தமைக்கு நன்றி ........தொண்டர்களுக்கும் சோதனைகளும் .... வேதனைகளும் ..சங்கடங்களும் இருக்கும்.

நன்றி சகோதரி நிலாமதி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.