Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்திலிந்து விலகுகிறார் வி்த்தியாதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்திலிந்து விலகுகிறார் வி்த்தியாதரன்

[ வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010, 12:20 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இருந்து வெளிவரும் 'உதயன்' மற்றும் 'சுடரொளி' ஏடுகளின் ஆசிரியர் ந. வித்தியாதரன் அந்த பணியில் இருந்து இன்று முதல் விலகிச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

25 வருடங்கள் 'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்தில் பணியாற்றிய நடேசபிள்ளை வித்தியாதரன், தனது ஊடகவியல் பணியை 'தினபதி' நாளேட்டில் இருந்து தொடங்கினார்.

எம். டி. குணசேன நிறுவனத்தின் தமிழ் நாளேடாக வெளிவந்த 'தினபதி' மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான 'சிந்தாமணி' ஆகியவற்றின் ஆசிரியராகப் புகழ் பெற்ற ஈழத் தமிழ் ஊடகவியலாளர் எஸ். டி. சிவநாயகம் விளங்கினார்.

பின்னர் - ஈஸ்வரபாதம் சரவணபவனின் நி்ர்வாக இயக்கத்தில் 'உதயன்' பத்திரிகையில் 15 வருடங்களும், 'சுடரொளி' பத்திரிகையின் தலைமை ஆசிரியராக 10 வருடங்களும் வித்தியாதரன் பணியாற்றி வந்தார்.

ஊடகத்துறையில் இருந்த காலத்தில் - தமிழ் தேசியத்திற்கு ஆதரவாய் இருந்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நெருக்கமான தொடர்பையும் வித்தியாதரன் பேணி வந்தார்.

சிறிலங்கா அரச ஆதரவு சக்திகளால் மிகத் தீவிரமான கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த போதும் ஊடகப் பணியைத் துணிந்து செய்ததனால் - சிறிலங்கா காவற்துறையால் கடத்தப்பட்டு அவர் சிறையிடப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வித்தியாதரன் சிறையிடப்பட்டிருந்த காலத்தில் அவரது கைது தொடர்பாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்ச, வித்தியாதரன் நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர் என்றும், அவரது கைகள் இரத்தக்கறை படிந்தவை எனவும், அவரது விடுதலை பற்றிப் பேசுகின்றவர்களது கைகளும் இரத்தக் கறை படிந்தவையே என்றும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20100430101024

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் விலகேல்லயே!!!!!

விலகீட்டதா ரெண்டு கிழமைக்கு முதல் செய்தி போடுபட்டுது! :mellow:

இன்னும் விலகேல்லயே!!!!!

விலகீட்டதா ரெண்டு கிழமைக்கு முதல் செய்தி போடுபட்டுது! :mellow:

:huh:ஒருவேளை நித்தியானந்தா தான் ஆசிரமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகி விட்டதாக அறிக்கை விட்டது போலவே, இதுவும் இருக்கும். :)

:mellow:ஒருவேளை நித்தியானந்தா தான் ஆசிரமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகி விட்டதாக அறிக்கை விட்டது போலவே, இதுவும் இருக்கும். :huh:

உண்மைதான்

வித்தியாதரனின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதே. அவர் சொல்கிறார் 2 மாதங்களுக்கு முன்பே விலகல் கடிதம் கொடுத்து விட்டதாக.

அதைவிட தனக்கு த.தே.கூ சார்பாக போட்டியிட வந்த வாய்ப்பை நிராகரித்ததாக. அவர் சொல்வதும், அவருடைய செயலும் ஒன்றோடொன்று பொருந்துகின்றது. இனியாவது அவரை விமர்சிப்பதை நாங்கள் தவிர்க்க வேண்டும்.

அவருடைய முழு செவ்வியை இங்கே அழுத்தி பார்க்கவும் Noted Editor of Sri Lanka’s Tamil ‘Udayan’, ‘Sudar Oli’ resigns.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.