Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாணமே ஆயுதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணமே ஆயுதம்

எட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் துணிச்சல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த பூமி இன்று ஆணின் கையில் இருக்கிறது. யுத்தத்தின்போது, ஒருநாட்டின் படை, வேறொரு நாட்டிற்குள் நுழையும் போது அந்நாட்டின் ஆண்களை சித்திரவதைச் செய்து கொல்கிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மனித குரூரங்களைச் சோதனை செய்து பார்க்கும் ஆய்வுக்கூடங்களாக யுத்த கலகபூமி மாறிவிடுகிறது. எந்த ஒரு சமூக வன்முறை நிகழ்வுகளிலும் பெண்களே பெருமளவு பாதிக்கப்படுவதும், குறிப்பாக அவர்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதும் மிக இயல்பாக நிகழ்ந்து வருவதற்குக் காரணம், ஆணின் ஆதார அச்சமாக பெண் இருப்பதுதான். இதனால் இனத்தொடர்ச்சியை பெருக்கும் மையம் அழிக்கப்படுகிறது. இது அச்சமூகத்துக்குச் செய்யும் பெரும் தண்டனையாக யுத்தத்தில் கருதப்படுகிறது.

அமைதியை நிலைநாட்டச் சென்ற இந்திய நாட்டு ராணுவம் இலங்கையில் தமிழ்ப் பெண்களைத் தாக்கி வன்புணர்ச்சியில் ஈடுபட்டது. (சமீபத்தில் கனடாவிலிருந்து வெளிவரும் ‘மற்றது’ பத்திரிகையின் முதல் இதழில் பிரசுரமான பேட்டியில், பார்வதி கந்தசாமி இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களையும் அந்நிகழ்வுக்குப் பிறகான பின்விளைவுகளையும் பேசுகிறார்.) இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போதும் 2002இல் நிகழ்ந்த குஜராத் கலவரங்களின்போதும் என, எல்லா இடங்களிலும் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிக் கொன்றது யுத்ததாக்குதல் தர்மமாகக் கைபிடிக்கப்படுவதன் அடிப்படை என்ன? இக்குற்றங்களுக்கான தண்டனைகளை இவர்கள் பெற்றதுண்டா? இவர்களுக்கெல்லாம் தண்டனையளிக்கும் அதிகாரம் யாருக்குள்ளது? இவர்கள் எப்படி சட்டத்திற்கு உட்படாமல் தப்பிக்க முடிகிறது? இக்கேள்விகள் நீண்டுகொண்டே போகும்...

பிற நாடு, பிற மதம் என்ற காரணங்களுக்காக இக்குற்றங்கள் நிகழ்ந்தன என்றால், சமீபத்தில் மணிப்பூரில் நடந்த அஸ்ஸாம் ரைபிள் படைப்பிரிவினரின் அத்துமீறல்களுக்கும் கொலைகளுக்கும் என்ன காரணம் கூற முடியும்? இரண்டு பால்களுக்கு இடையிலான, இரண்டு நபர்களுக்கிடையிலான, இரு குடும்பம், இரு இனக்குழு, இரு நிலப்பகுதிகளுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தமே சமூகம் என்ற கட்டமைப்பு. இச்சமூகக் கட்டமைப்பை, ஒழுங்கமைப்பை நிர்வாகம் செய்ய உருவானவையே அரசு எனப்படுகிறது. தனிமனிதர்களுக்கிடையில் உருவாகும் வன்முறை என்பது, சமூக வன்முறையாகவும், இச்சமூக வன்முறையை தடுக்க, ஒடுக்க, ஒரு முடிவுக்குக் கொண்டுவர மேலிருந்து சமூகத்தின்மீது அரசு தொடுப்பது அரசு வன்முறையாகவும் உள்ளது. இந்த இரண்டுவித வன்முறைகள் இன்று ஒரே வடிவம் அடைந்துள்ளன. அரசு இயந்திரம் பாதுகாக்கப்பட அரசே சமூகத்தில் வன்முறையைத் தூண்டிவிடுவதும், வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதும் இன்று சகஜமான நிகழ்வாகி வருகிறது. உள்ளூர் ரௌடிகள் ஊராரை மிரட்டி தங்களின் தேவைகளை அடைய அடியாட்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு கோழி பிரியாணியும் வடி சாராயமும் கொடுத்து வளர்த்து வருவதுபோல், அரசு என்பதும் போலீஸ், இராணுவம் போன்ற அடியாட்களை தீனி போட்டு வளர்த்து வருகிறது. இவர்கள் பொழுது போக்காகச் செய்துவரும் என்கௌண்டர், காலங்காலமாகப் பெண்ணுடல்மீது ஆணுடல் கொள்ளும் வெற்றியாகக் கருதப்படும் வன்புணர்ச்சி போன்றவை இன்று இந்திய பீனல்கோடால் அங்கீகரிக்கப்படும் விசாரணை யுத்தியாக மாறினாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த அளவிற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை குக்கிராம போலீஸ் டெண்டிலிருந்து எல்லைப்பாதுகாப்புப்படையின் வரம்புக்குட்பட்ட ஆறுதிணையிலும் (பனி பொழியும் நிலத்தையும் சேர்த்து) வெளியில் தெரியவரும் ஒரு பங்குச் செய்திகளே நம் மரத்துபோன மூளைக்கு உயர் அழுத்த மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இயல்பிலேயே வன்முறையை தன் இயங்குதலாகக் கொண்ட மனித மிருகத்தைப் பண்படுத்த உருவாக்கப்பட்ட நீதி போதனைகள் இங்கு அதிகம். மனதை அடக்கவும் கட்டுப்படுத்தவும் அனைத்து மதங்களும் சொல்லிக் கொடுக்கின்றன. மனிதருக்கு மட்டுமல்ல, பிற ஜீவராசிகளுக்கும் தீங்கு இழைக்காதே என்கிறது பௌத்தம். சமணமும் இதையேதான் பேசுகிறது. இதெல்லாம் அளித்த வாழ்வியல் நெறியிலிருந்தும் அறத்திலிருந்தும் இந்த மண் எப்பொழுதோ துண்டித்துக்கொண்டது. இனி எந்தத் தத்துவ அறங்களாலும் வன்முறையின் பிடியிலிருந்துச் சமானிய மனிதர்களைக் காப்பாற்ற முடியாத காலத்தில் நிற்கிறோம். மனிதன், தான் சார்ந்த குழு அடையாளத்துடன் இருக்கும்போது பிற குழு எதிரியாகிறது. தான் சார்ந்த மத அடையாளத்துடன் இருக்கும்போது பிற மதம் எதிரியாகிறது. தான் சார்ந்த சாதி அடையாளத்துடன் இருக்கும்போது பிற சாதி எதிரியாகிறது. தான் சார்ந்த குடும்ப அடையாளத்துடன் இருக்கும்போது பிற குடும்பம் எதிரியாகிறது. குடும்பத்துள் ஆண் சார்ந்த அடையாளத்துடன் இருக்கும் போது அவனுக்கு பெண் எதிரியாகிறாள். இந்த வாக்கியங்களை அப்படியே திருப்பி அடுக்குங்கள்; குடும்பத்துக்குள் ஆண் சார்ந்த அடையாளத்துள் இருக்கும்போது அவனுக்கு பெண் எதிரியாகிறாள். மனிதகுல வன்முறையின் மூலச் சுரப்பு இங்கிருந்துதான் துவங்குகிறது. மனித வன்முறைக்கு அடிப்படை அலகாக ஆண், பெண் எதிரிடை உள்ளது. இந்த நுண்ணிய மனக்கூறு, ஆணின் எல்லா கால வெளிகளிலும் அவனது மூளைச்செல்களின் செய்தியை அவனது ஆழ்மனதில் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த வன்மம் தொடர்ந்து பெண்ணுடலை வேட்டையாடுவதற்கான வெறியை அளிக்கிறது. மானுடவியல் அறிஞர்கள் மற்றும் மனோதத்துவ ஆய்வாளர்கள் வேறு என்ன காரணங்களை அளிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இது பற்றி சிந்திக்கும்போது, இப்படித்தான் காரணங்களைக் கண்டடைய முடிகிறது.

இந்த வன்முறைகளிலிருந்து பெண் தன் உடலை எப்படி மீட்டுருவாக்கம் செய்வது. மஹாஸ்வேதா தேவி தனது ‘துரௌபதி’ கதையில் முன் வைக்கிறார்: ‘திரௌபதியின் கரிய உடல் மேலும் அருகில் வருகிறது. அதிகாரிக்குப் புரியாத ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். சிரிக்கச்சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. அந்த ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள், ‘‘துணி என்ன துணி..... யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும். ஆனா என்னைத் திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால்? சீ... நீ ஒரு ஆம்பிளையா...?’’

நாலாபக்கமும் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை புஷ் ஷர்ட்டின் மேல் ரத்தம் கலந்த எச்சிலைத் ‘‘தூ...’’ வென்று துப்புகிறாள்.

‘‘நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பிளை இங்க யாருமில்லை. என்மேல துணியைப் போட எவனையும் விடமாட்டேன். அப்போ என்ன செய்வே? வா... என்னைக் கௌண்ட்டர் பண்ணு... வா...கௌண்ட்டர் பண்ணு...’’

அருகில் நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும் அதிகாரியின் மேல் உரசுகிறாள். தனது ஆயுளில் முதல் முறையாக ஒரு நிராயுதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.’ (இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு: தொகுப்பு 2 -சிவசங்கரி)

ஜூலை 15ம் தேதி ‘அஸ்ஸாம் ரைப்பிள் தலைமையகம்’ முன்பு அரசுப்படையினர் அங்கு நிகழ்த்திவரும் என்கௌண்ட்டருக்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நிர்வாணமாக நின்று போராட்டம் நடத்தினர். வன்முறைக்கெதிராக ஆடையற்ற தன் உடலையே ஆயுதமாக நிறுத்தியுள்ளனர். நிர்வாணம் என்பதன் மகா அர்த்தம் இன்று எனக்கு விளங்கியது.

மாலதி மைத்ரி

நன்றி - குமுதம்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த போராட்ட படங்கள போட்டாத்தானே வடிவா விளங்கும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த போராட்ட படங்கள போட்டாத்தானே வடிவா விளங்கும். :)

படம் பாக்கிறதுக்கெண்டே கொஞ்சம் அலையுதுகள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் பாக்கிறதுக்கெண்டே கொஞ்சம் அலையுதுகள்?

போட்டா நீங்க பார்க்க மாட்டீங்களாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சிவப்பு குத்துவதே தங்களை உசுப்போத்தி போராடி படம் போடவைத்து.....???????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.