Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் வளம்மிக்க சுண்ணாம்புக்கற்கள் காலிக்கு கடத்தப்படுகின்றது

Featured Replies

வடக்கின் வளம்மிக்க சுண்ணாம்புக்கற்கள் காலிக்கு கடத்தப்படுகின்றது

திகதி: 28.05.2010 // தமிழீழம்

வலிகாமம் வடக்கில் உள்ள வளம் மிக்க சுண்ணாம்புக்கற்களை அகழ்ந்து எடுத்துவரும் சிறிலங்கா அரசு அதனை தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்வதாக யாழ் மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை வினாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருவதாவது:

வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள சுண்ணாம்புக்கற்களை அதிக அளவான சிங்கள தொழிலளர்களை பயன்படுத்தி அகழ்ந்து எடுத்துவரும் சிறிலங்கா அரசு அதனை தென்னிலங்கையில் உள்ள காலிப்பகுதிக்கு கொண்டு செல்கின்றது.

சீமேந்து தயாரிப்புக்காக சுண்ணாம்புக் கற்கள் கப்பல் மூலமாகவும், ஏ-9 பாதை வழியாகவும் கொண்டு செல்லப்படுகின்றன. வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்வதை தடுத்து வரும் சிறீலங்கா அரசு பெருமளவான தொழிலாளர்களை பயன்படுத்தி சுண்ணாம்புக் கற்களை அகழ்ந்து வருகின்றது.

கீரிமலை, மாவிட்டபுரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் கற்கள் அகழ்ந்தெடுக்கப்படுவதால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வன்னிப்பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் ஒருவருடமாகியும் அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வருகின்றனர். 230 குடும்பங்கள் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு அரசு பின்னடித்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9226&cntnt01origid=53&cntnt01returnid=51

நல்லதுக்குதானுங்கோ...

இல்லாட்டி.. தமிழர்களெண்டா, பொதுவில விட்ட யாரு அகழுரது என்டு அடித்துக்கொள்ளுவார்கள். காசைக்காட்டி டென்டெர் எடுத்தால்.. ஈப்பிக்காரன் தூக்கிட்டு போய் சொத்துல முக்காவாசிய கேப்பான்.. எதுக்கு வம்பு.. கஸ்டப்பட்டதுகள் சுண்ணாம்பு கல்லுடைக்கப்போனாலும் துரோகிப்பட்டம்.

இப்ப வசந்தன்..

நாளை வசந்த்..

நாளையிண்டைக்கு வசந்த..

ஈனப்பிறவிகள்.. உங்கள நம்பினது சுத்த முட்டாள்த்தனம்...

  • கருத்துக்கள உறவுகள்

.

இனி......வெத்திலைக்கு தடவ சுண்ணாம்புக்கும் தட்டுப்பாடு வந்துடும் போலை......

.

அண்மையில் கீரிமலைக்கு போனபோது சுண்ணாம்பு அகழ்வை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன்.

கடல் - கடலை அடுத்து தார் ரோடு (நாம் போகமுடியாது). இருபக்கமும் உடைந்த வீடுகள் உண்டு. (கப்பலில் போய் வந்தவர்களுக்கு தெரியும்).

அந்த ரோட்டுக்கும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு எதிராக கீரிமலை செல்லும் ரோட்டுக்கும் இடையில் உள்ள 300m - 400m பகுதி தோண்டி எடுக்கப்பட்டு கப்பலில் தெற்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அங்கு பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன.

வேகமான அலை அடித்தால் இடைப்பகுதி அழிந்துவிடும். கடல் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு எதிராக கீரிமலை செல்லும் ரோட்டு வரைக்கும் வந்துவிடும்.

எம்முடன் வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நீண்டகாலம் தாமதித்தால் தமிழர் வளங்கள் சுரண்டப்பட்டுவிடும் என ஆதங்கப்பட்டனர்.

கீரிமலை கோவிலில் இருந்து 5 - 6 km தூரத்தில் புத்த விகாரை அமைக்கப்படுவதை பல்கலைக்கழக மாணவர்கள் கூடிச்சென்று காட்டினார்கள். அங்கிருந்த இராணுவத்தினரிடம் "இங்கு என்ன விசேசம்" என்று கேட்டேன். சங்கமித்தை வந்து இறங்கிய இடமென பணிவுடன் விபரித்தார்.

"இது முந்தி எங்களுக்கு தெரியாது, இப்ப தான் தெரிந்துகொண்டோம்" என்ற போது, தங்கள் அதிகாரி "தயா சந்தகிரி" சில வருடங்களின் முன்னர் எதோ ஞாபகார்த்த கல்லை கண்டெடுத்ததாக கூறி, ஒரு பகுதிக்கு எம்மைக் கூடிச் சென்று காட்டினார்.

அவர்கள் ஒரு வெற்று கல்லை வைத்துக்கொண்டு ஆக்கிரமித்துச் செல்கிறார்கள்.

நாம் கல்லை வணக்க வேண்டுமா? இல்லையா? என்று விவாதித்து, இருப்பவை எல்லாவற்றையும் உதறி வீசிவிட்டு, அழிந்து அழிந்து செல்கிறோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சுண்ணாம்புக்கல்லை சுரண்டுக் கொண்டு போய் சிங்களவன் வெத்திலை தானே போடப்போறான் என்றிட்டு டக்கிளஸ் கவுந்து கிடக்கிறான் போல. அவங்களும் அவங்களுக்கு ஒரு இயக்கங்களும்.. அதுகளுக்கு நாலு வால் பிடிகளும்..! :lol::wub: :wub: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.