Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்சேவுக்கு நன்றி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.

Featured Replies

ராமநாதபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசன்அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கார் உட்பட பொருட்கள் திருட்டு போனது.

குற்றத்தில் ஈடுபட்டதாக வீரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏசுவடியான் என்பவர் கோர்டில் சரணடைந்தார்.

திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ., சார்பில் அறிக்கை ஒன்று ராமநாதபுரம் நிருபர்களுக்கு அனுப்பபட்டது. அவ்வறிக்கையில், ‘’எனது வீட்டில் களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசனுக்கும், எப்.3 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் நன்றி.

டெலிபோன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=32978

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவந்தானா அவன், நகரங்களின் தொடர்பே இல்லாத கிராமத்தில் இருந்து அமெரிக்காவை எச்சரிப்பதாக மேடையில் பேசிவன், வடிவேலுவைவிட பெரிய வெடிவேலுகள் எல்லாம் இந்தியாவில் இருகிறார்கள் போல் இருக்கு. :wub::wub::lol:

இவந்தானா அவன், நகரங்களின் தொடர்பே இல்லாத கிராமத்தில் இருந்து அமெரிக்காவை எச்சரிப்பதாக மேடையில் பேசிவன், வடிவேலுவைவிட பெரிய வெடிவேலுகள் எல்லாம் இந்தியாவில் இருகிறார்கள் போல் இருக்கு. :wub::wub::lol:

http://usetamil.forumotion.com

  • கருத்துக்கள உறவுகள்

ஹசன் அலியைத் தேர்ந்தெடுத்தது யார் குற்றம்? தேர்தலில் நிறுத்திய காங்கிரஸ்காரனின் குற்றமா? அல்லது ஓட்டுப் போட்ட மக்களின் குற்றமா? :wub::wub:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இது தாண்டா தமிழக(சிங்கள) காங்கிரசு!

1. வாசன் குருப் – பாபநாசம் பண்ணையார் சொந்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்… இந்த பண்ணையாரின் அடிபொடிகள்… சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி… காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது… இந்த பண்ணையார் கோஷ்டிதான்…யார் டெல்லி மேலிடத்தில் இருந்து வந்தாலும் சந்திப்பது இந்த கோஷ்டியைத்தான்..

2. கிருஷ்ணசாமி குருப் – இவரது கோஷ்டியில் இவரும் கள்ளு குடித்தால் உடம்புக்கு நல்லது என்ற பேமானி பேச்சு இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்… துணைக்கு மருமகன் அன்புமணி, ஒவ்வோரு தேர்தலிலும் குரங்குக்கு சவால் விடும் மருத்துவர் ராமதாஸ்

3. இளங்கோவன் குருப் – இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள்.அசல் கன்னடரான இவர் தமிழுக்கு ஏன் செம்மொழி?என வழக்கு போட துணிந்தவர்.. தமிழர்களுக்கு எதிரான இவரது சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது!

4. குமரி அனந்தன் – இவர் தனி’பனை’மரம்…பனைவாரிய தலைவர் இங்கு இனிமேல் குப்பை கொட்ட முடியாது என்று இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்… அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்…

5. செல்லகுமார் – இவரும் தனிமரம்…

6. மணிசங்கரய்யர் – இவரது கோஷ்டியில் இவரும்… இவரது கைத்தடியான ராஜ்குமார் மாயவரம் எம்.எல்.ஏ.வும்தான்… இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை… இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே… வேண்டியவர்கள் சிங்கள மக்கள்… ராஜ பக்சே இவரது வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சாந்தி முகூர்த்தம் வரை எல்லா வேலைகளையும் செவ்வனே செய்துவிட்டுதான் கொழும்பு சென்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..கூடுதல் தகுதி ‘ஐயர்’….

7. சிதம்பரம் – இவரது கோஷ்டியில் இவர்… இவரது ம்கன் கார்த்தி. ராகுல் காந்தி மூலமாக இளைஞர் அணி தலைவராக அடி போடுவதாக பேச்சு உலவுகிறது.. மற்றும் கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்…

8. கிருஷ்ணசாமி வாண்டையார் – இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்… கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் – பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி – துணை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்…

9. வசந்தக்குமார் – சோனியாவிற்கு நெருக்கமானவர் இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்… பொருட்களுக்கு… தனிமரம்…

10. ஜெயந்தி நடராஜன் – தனிமரம்… காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்…

11. டி.யசோதா – திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. – சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்…துணைக்கு போளூர் எம்.எல்.ஏ வரதன்

12. ஆர்.பிரபு – தனிமரம்… நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்…

13. பிட்டர் அல்போன்ஸ் – தனிமரம் – காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்… சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை… வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை… சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு… 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்… நிறைய அடிவாங்கியவர்…. காங்கிரஸ் என்றாலே என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிடாங்க என்று வடிவேல் போல அடிவாங்குபவர் என நிரூபிப்பவர்…

14. வேலூர் ஞானசேகரன் கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா..என சிங்கள தூதர் அம்சாவினால் பாராட்ட பெற்றவர்..மேலும் அவர் கொடுக்கும் விருந்தில் அவ்வப்போது கலந்து கொண்டு சிறப்பிப்பவர்..துணைக்கு சித்தன்..ராமநாதபுரம் எம்.எல் ஏ அசன் அலி..இதில் அசன் அலி ராமேசுவரத்திற்கு உயிரை பணையம் வைத்து வந்த ஈழ தமிழர்களிடம் “உங்களுக்கு அங்க என்ன பிரச்சனை?இங்கு வந்து ஏன் தொல்லை பண்ணுகிறீர்கள் திரும்பி போங்கள் என கத்திய பெருமைக்குரியவர்..

15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் – சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்… கோஷ்டி தெரியவில்லை…

16. அன்பரசு – இவரது கோஷ்டியில் இவரும்… இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு… ஜெவின் உண்மை தொண்டர்… சிறப்பு தகுதி… சிங்களர்களிடம் இருந்து… விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி…

17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் – இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்… அவ்வப்போது குரங்கு போல் தாவி கொண்டிருப்பார்…

18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி – முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்…

19. சுதர்சன நாச்சியப்பன் – இவரும் தனி மரம்… தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்…

20. தங்கபாலு – 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி… அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி… கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி… மாநில தலைவர்…தெலுங்கு வந்தேறி..பச்சை தமிழர்களை பார்த்து தமிழின துரோகி என்பார்..சமீபத்தில் விபச்சார புரோக்கர் சோனாவின் திருவாயால் ரெகுலர் கஷ்டமர் என புகழப்பட்டவர்

21.அடைகலராஜ் மூப்ஸ் கோஷ்டியில் இருந்த ஆள்… இந்தியன் வங்கியில் பல கோடி… மூப்ஸ் ஆதரவோடு கடன் வாங்கி… ஏமாற்றிய பேர்வழி… இப்போது இருக்கிறாரா என தெரியவில்லை…

இவரது தங்கை எமிலி திருச்சி முன்னாள் மேயர்… இவரது சகோதரி மகன் ஜெரோம் கடந்த தேர்தலில் திருவரங்கத்தில் தோல்வி அடைந்தவர்… இப்போது வாசன் கோஷ்டியில் உள்ளார்கள்…பெப்ஸி மார்க்கெட்டிங்கில் பார்ட்னர்..மேட்டுபாளையத்தில் உள்ள ப்ளாக் தண்டர் கூட அடைக்கலராஜுக்கு சொந்தமானதுதான்…

ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்… மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்… திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல… எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்…

  • கருத்துக்கள உறவுகள்

சாதி குறைந்தவர்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களில் அறிவுறுத்தல் பலகைகளை நாட்டுள்ளார்கள் என்று உந்த எம்.எல்.ஏ குமுதம் இணையத்தள தொலைக்காட்சிக்கு முன்பு பேட்டி கொடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். அம்சா(மகிந்தா) குடுக்கிற காசுக்கு நன்றாக புலி எதிர்ப்பு வேலைகளை தமிழ் நாட்டில் செய்து வரும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர். இவரைப் போல புலி எதிர்ப்பு வேலைகளை ஞானசேகரன் என்ற காங்கிரசு சட்டமன்ற செய்து வருகிறார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் தமிழினப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த காங்கிரசு அணியை வெற்றி பெற தமிழகத்து மக்கள் வாக்களித்தாலும் தமிழின புலி எதிர்ப்பு வாதிகளான இளங்கோவன், தங்கபாலு, மணிசங்கரய்யர் போன்றவர்களை தோல்வியடையச் செய்தவர்கள். வரும் சட்ட மன்றத்தேர்தலில் ஞானசேகரன், காசன் அலி போன்றவர்களை தமிழக வாக்களர்கள் வெற்றி பெறச்செய்வார்களா? தோற்றுப் போகச்செய்வார்களா?.

  • தொடங்கியவர்

சாதி குறைந்தவர்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களில் அறிவுறுத்தல் பலகைகளை நாட்டுள்ளார்கள் என்று உந்த எம்.எல்.ஏ குமுதம் இணையத்தள தொலைக்காட்சிக்கு முன்பு பேட்டி கொடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். அம்சா(மகிந்தா) குடுக்கிற காசுக்கு நன்றாக புலி எதிர்ப்பு வேலைகளை தமிழ் நாட்டில் செய்து வரும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர். இவரைப் போல புலி எதிர்ப்பு வேலைகளை ஞானசேகரன் என்ற காங்கிரசு சட்டமன்ற செய்து வருகிறார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் தமிழினப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த காங்கிரசு அணியை வெற்றி பெற தமிழகத்து மக்கள் வாக்களித்தாலும் தமிழின புலி எதிர்ப்பு வாதிகளான இளங்கோவன், தங்கபாலு, மணிசங்கரய்யர் போன்றவர்களை தோல்வியடையச் செய்தவர்கள். வரும் சட்ட மன்றத்தேர்தலில் ஞானசேகரன், காசன் அலி போன்றவர்களை தமிழக வாக்களர்கள் வெற்றி பெறச்செய்வார்களா? தோற்றுப் போகச்செய்வார்களா?.

அம்சா மட்டுமல்ல திவ்வியநாதன் எனும் அடிப்பொடி ஒண்டும் கத்தும்.....இவரின் வேலை தமிழகப்பத்திரிகளில் இலங்கை பற்றிய குறிப்பெடுத்து ராஜபக்ஸாவுக்கு அனுப்புவதாம் , இவருக்கு சரியான சம்பளமுமாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.