Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம்.

தொடர்புகளிற்கு www.nesakkaram@gmail.com

1)ஜெகநாதன் சுதாநாதன்

CIMG0665.jpg

Picture002.jpg

Picture001.jpg

2)பெயர் – தனராஜா தனரஞ்சன் கற்கும் ஆண்டு – 3ம் வருடம் (இன்னும் இரண்டு வருடங்கள் கற்க வேண்டும்) யாழ் பல்கலைக்கழகம்.வணிகத்துறை.

3)பெயர் - நீலகண்டன் சசிகுமார்

கற்கும் வருடம் – 4ம் வருடம் (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைப்பிரிவு.

4)பெயர் - துரைராஜா ராதீபன்

கற்கும் ஆண்டு – 3ம் வருடம். (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைப்பிரிவு.

5)பெயர் - குணரத்தினம் கெளதமன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைத்துறை.

6)பெயர் - குமாரசாமி குகன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

வணிகத்துறை.

7)பெயர் - பாலசிங்கம் பாலகுமாரன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

முகாமைத்துவம்.

8)பெயர் - மாயன் சுகந்தன்

கற்கும் வருடம் – இரண்டாம் வருடம்

யாழ் பல்கலைக்கழகம்.

விளையாட்டு விஞ்ஞானம்.

9)பெயர் - கனகரத்தினம் மயூரன்

கற்கும் வருடம் – 2ம் வருடம்.

யாழ் பல்கலைக்கழகம்.

விளையாட்டு விஞ்ஞானம்.

10)பெயர் - கணபதிப்பிள்ளை கஜேந்திரவேல்

கற்கும் வருடம் – 3ம் வருடம்.

யாழ் பல்கலைக்கழகம்.

முகாமைத்துவ பீடம்.

11)பெயர் – சுந்துரலிங்கம் பிரநந்தன்

கற்கும் வருடம் – 3ம்வருடம்

யாழ் பல்கலைக்கழகம்.

நாடகமும் அரங்கியலும் சிறப்புக்கலை.

Edited by sathiri

உங்கள் இந்தப் பணிக்கு நிச்சயம் எனது ஆதரவையும் எனது நண்பர்களின் அதரவையும் பெற்று தர முனைகிறேன்!

உங்கள் இந்தப் பணிக்கு நிச்சயம் எனது ஆதரவையும் எனது நண்பர்களின் அதரவையும் பெற்று தர முனைகிறேன்!

.... முடியல! :D:D:D:lol::lol::D:o:o:o:o

... தயவு செய்து நீங்கள் கொடுக்க முடியுமானால் கொடுங்கள் இல்லை இதுவரை நான் கொடுத்தனான் என்று அதையாவது சொல்லுங்கள்!! அதை விடுத்து தொடர்ந்து சுத்து மாத்துக்கள்! ... அங்குள்ளவர்களுக்கு இது வாழ்வாதராப்பிரட்சனை, அதனுடன் விளையாடாதீர்கள்! :D

... தயவு செய்து நீங்கள் கொடுக்க முடியுமானால் கொடுங்கள் இல்லை இதுவரை நான் கொடுத்தனான் என்று அதையாவது சொல்லுங்கள்!! அதை விடுத்து தொடர்ந்து சுத்து மாத்துக்கள்! ... அங்குள்ளவர்களுக்கு இது வாழ்வாதராப்பிரட்சனை, அதனுடன் விளையாடாதீர்கள்! :D

விளம்பரம் செய்வது நம் தொழில் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் தர்க்கமோ

குதர்க்கமோ வேண்டாம்

யார் குத்தினாலும் அரிசியானால் சரி...

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சாத்து நான் கேட்ட விசயத்தையும் யோசிக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்து நான் கேட்ட விசயத்தையும் யோசிக்கவும்

சஜீவன் நீங்கள் கேட்ட கூப்பன்கள் செய்யும் விடயத்தில்தான் நான் தற்சமயம் முழு கவனமெடுத்து அதனை வடிவமைப்பதற்காக கொடுத்துள்ளேன் விரைவில் கிடைக்கும் நன்றி

நேசக்கர உறுப்பினர்களுக்கு,

இத்திரியிலுள்ள சுதாநாதனுக்கான உதவிகரம் என்பது மனிதாபிமான செயல், செய்தே தீர வேண்டும், அதில் இரண்டாம் கருத்தில்லை.

ஆனால் நான் கீழ் குறிப்பிடுபவைபற்றியும் கவனத்தில் எடுக்குக. இங்கு பலர் உதவிக்கரம் பல்கலைக்கழகங்களில் இருந்து கோரியுள்ளனர், அவர்களில் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உடபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல் தவிக்க முடியாது. ஆனால் அங்கு பல்கலைக்கழகங்களில் கற்கும் அனேகமானவர்களுக்கு மகாபொல உதவித்தொகை கிடைக்கிறது, சொல்லப்போனால் இத்தொகை அவர்களின் செலவீனங்களுக்கு ஓரளவாவது போதுமானது, பல்கலைக்கழக வாழ்வில் இருந்த யாழ்கள உறுப்பினர்களுக்கு இது தெரியும். அதனை விட பல்கலைக்கழக மானவர்கள் வாரத்தில் சிலமணிநேரமாவது ரியூஷன் கொடுப்பதன் மூலம் தமது சில செலவீனங்களையாவது ஏற்கிறார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டவர்களின் விபரங்கள் சரியாக தெரியவில்லையாயினும், உதவிகள் உண்மையாக செய்யப்பட வேண்டியவர்கள் ஆயிரம் இருக்கிறார்கள். குடும்பத்தலைவர்கள் சிங்களத்தினால் கொல்லப்பட்டு குடும்பச்சுமையை சுமக்க முடியாமல் ஆயிரம் தமிழ் விதவைகள், ... இப்படிப்பலபல.

... செய்யும் உதவிகள் ... செய்யப்பட வேண்டியவர்களுக்கு(இனங்கண்டு) தயவுசெய்து செய்யுங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கடைசிநேர கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்ட மாணவர்கள் பலர் கடைசி நேரச்சமரின் போது இராணுவத்திடம் சரணடைந்து தடைமுகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் அடைபட்டு தற்போது வெளியில் வந்து மீளவும் கற்கச் சென்றிருக்கிறார்கள். இம்மாணவர்கள் தமது அடிப்படை கல்விக்கான வசதிகளையோ அல்லது தமக்கான அன்றாட தேவைகளை நிறவு செய்யும் வகையிலோ எதுவித வருமானமும் இன்றியுள்ளார்கள். இவர்களில் பலர் குடும்பங்கள் முழுவதையும் இழந்துள்ளார்கள். பலர் குடும்பங்கள் முகாம்களிலும் மீள்குடியேற்றத்திலும் போயிருக்கிறார்கள். தமது வாழ்வுக்கான எந்தவிதமான வசதிகளும் இல்லாது தறப்பாள்களின் கீழும் இடிந்த கட்டடங்களிலும் வாழ்வை ஆரம்பித்துள்ளனர்.

இத்தகைய குடும்பங்களிலிருந்து வந்திருக்கின்ற இந்த மாணவர்களது மனமும் உடலும் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேதான் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கற்று முடித்திருக்க வேண்டிய வயதில் கட்டாயப்பிடியில் பிடிபட்டு தங்கள் கற்கை வயதைத் தாண்டியே கற்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருடனும் பேசுகின்ற போது அவர்களது இழப்பும் ஈடுசெய்ய முடியாத காயங்களையும் தான் உணர முடிகிறது. இத்தைகைய மாணவர்களுக்கான உதவியை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கேட்டு நிற்கின்ற தருணத்தில் சிலருடைய சந்தேகங்கள் இந்த மாணவர்களுக்கான உதவிகள் பெறுதலில் சரியான தெளிவின்மைலைக் காட்டுகிறது. இது தொடர்பான ஒரு தெளிவினை நேசக்கரம் யாழ்மாவட்ட தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வனிடமிருந்து ஒலிப்பதிவு செய்து உங்களிடம் எடுத்துவருகிறோம்.

audio.gifதீபச்செல்வனின் கருத்தை ஒலிவடிவில் கேட்க இங்கே அழுத்துங்கள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கர உறுப்பினர்களுக்கு,

இத்திரியிலுள்ள சுதாநாதனுக்கான உதவிகரம் என்பது மனிதாபிமான செயல், செய்தே தீர வேண்டும், அதில் இரண்டாம் கருத்தில்லை.

ஆனால் நான் கீழ் குறிப்பிடுபவைபற்றியும் கவனத்தில் எடுக்குக. இங்கு பலர் உதவிக்கரம் பல்கலைக்கழகங்களில் இருந்து கோரியுள்ளனர், அவர்களில் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உடபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல் தவிக்க முடியாது. ஆனால் அங்கு பல்கலைக்கழகங்களில் கற்கும் அனேகமானவர்களுக்கு மகாபொல உதவித்தொகை கிடைக்கிறது, சொல்லப்போனால் இத்தொகை அவர்களின் செலவீனங்களுக்கு ஓரளவாவது போதுமானது, பல்கலைக்கழக வாழ்வில் இருந்த யாழ்கள உறுப்பினர்களுக்கு இது தெரியும். அதனை விட பல்கலைக்கழக மானவர்கள் வாரத்தில் சிலமணிநேரமாவது ரியூஷன் கொடுப்பதன் மூலம் தமது சில செலவீனங்களையாவது ஏற்கிறார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டவர்களின் விபரங்கள் சரியாக தெரியவில்லையாயினும், உதவிகள் உண்மையாக செய்யப்பட வேண்டியவர்கள் ஆயிரம் இருக்கிறார்கள். குடும்பத்தலைவர்கள் சிங்களத்தினால் கொல்லப்பட்டு குடும்பச்சுமையை சுமக்க முடியாமல் ஆயிரம் தமிழ் விதவைகள், ... இப்படிப்பலபல.

... செய்யும் உதவிகள் ... செய்யப்பட வேண்டியவர்களுக்கு(இனங்கண்டு) தயவுசெய்து செய்யுங்கள் ...

வணக்கம்,

உங்கள் கேள்விகள் மற்றும் மகாபொல உதவி தொடர்பான கேள்விகளுக்கும் தீபச்செல்வனின் கருத்தில் பதில்கள் உள்ளன. கேளுங்கள். மேலதிகமான கேள்விகள் இருப்பின் எழுதுங்கள். பதில் தர முயற்சிக்கிறோம்.

மற்றும் நீங்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழக காலம் போலல்ல இந்த மாணவர்களின் நிலை. இவர்கள் கட்டாயமாக களங்களுக்க இழுக்கப்பட்டு தற்போது விடுதலையாகி வந்துள்ளார்கள். இவர்களுக்கான அனுமதி கூட 6மாதங்களுக்கே செல்லுபடியானதாக உள்ளது. ரியூசன் குடுத்து தங்கள் செலவை ஈடுசெய்ய பொருத்தமான காலமும் இப்போது இல்லை. ரியூசன்கள் நிறுவனமயமாகி ஊருக்கு 10 நிறுவனங்கள் தோன்றியுள்ள நிலையில் இவர்களால் அதையும் செய்ய முடியாதுள்ளது. மற்றும் இந்த மாணவர்களிடம் வந்து கற்று முன்னெறட்டும் தமது பிள்ளைகள் என்று நினைத்து இவர்களிடம் கற்க எந்தப்பெற்றோரும் தயாராகவும் இல்லை.

நேசக்கரம் உதவி தேவைப்படுவோரை இனங்கண்டு சரியான ஆதாரப்படுத்தலின் பின்னே உதவிகயைள வழங்கி வருகிறது. அதைத்தான் செய்யவும் விரும்புகிறோம். இன்று உங்கள் சந்தேகம் தெளிய வைக்கவும் இதுபோன்ற சந்தேகங்கள் யாருக்கும் ஏற்படாமலிருக்க தொலைபேசி செலவளித்து தீபச்செல்வனின் கருத்தை பதிவு செய்து கொண்டு வருகிறோம்.

4வருடங்கள் 3வருடங்கள் என மாணவர்கள் காவலரண்களென்றும் கட்டாயமென்றும் இருந்துவிட்டு வந்துள்ள இவர்களின் குரல்களையும் நேசக்கரம் இணையத்தில் பதிவு செய்து போட்டு வருகிறோம். அவற்றையும் கேளுங்கள்.

audio.gifமகாபொல உதவித்திட்டம் என்றால் என்ன எவர்களுக்கு மகாபொல உதவி கிடைக்கிறது ? சொல்கிறார் தீபச்செல்வன்

audio.gifஇனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப்பும் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. உயிர் வாழ்தலில் இருந்த விருப்பால் சாத்திரத்தை நம்பி சாத்திரம் கேட்டவனுக்கு மரணம் முடிவென சாத்திரமும் சொல்லியானபின் வாழ்வும் மரணமும் அவனோடு சண்டையிட்ட நாட்களவை. 2009 மேமாத முடிவுகளின் பின்னர் இவன் சாவிலிருந்து தப்பி சரணடைந்தான்….தனது நிலமைகளை எங்களோடு பகிரும் இந்த 28வயது இளைஞனின் குரலைக் கேளுங்கள்.

audio.gifஇந்தக் குரலுக்குரிய 31வயது நிரம்பிய மாணவன் தனது கற்கைக்காலம் தாண்டிய நிலையில் பல்கலைக்கழகம் வந்திருக்கிறான். கடந்த வருடம் 10ம் மாதம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள இவனுக்கு உறவுகள் என்று சொல்ல எவருமேயில்லை. 2006இல் தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்து போக 2009 தாயாரையும் இரு சகோதரர்களையும் இழந்து போனான். இறுதியில் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து முகாமுக்குப் போனான். முகாமிலிருந்து விடுபட்டு கற்றலுக்கென்று வந்த பின்னர்தான் வறுமையும் யாருமற்றுத் தவிக்கின்ற வெறுமையும் இவனை ஆட்கொண்டுள்ளது. யாருமேயில்லை இனிப் படித்தென்ன விட்டென்ன என்கிற நிலைமையில் இருந்தவனை நமது நேசக்கரம் யாழ்மாவட்டத் தொடர்பாளர் தீபச்செல்வனால் நேசக்கரத்திடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளான். இனி வாழ்வதில் என்ன இருக்கிறது என்கிற மனைநிலையில் இருந்தவனுடன் உரையாடிய போது அவனுக்கான ஆறுதலை ஆற்றுப்படுத்தலை செய்ய வேண்டிய நிலையில் இவனது மனநிலை இருப்பதை உணர முடிகிறது. இவனுடனான உரையாடலை ஒரு செவ்வியாக இல்லாமல் தோழமையுடன் அணுகிய போது அவன் சொன்னவற்றிலிருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்கிறோம்.

நெல்லையான்,

மேலுள்ள குரலுக்குரிய மாணவன் பல்கலைக்கழக உதவிகள் எப்படியுள்ளது என்பது பற்றியும் சொல்கிறான். கேளுங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் உதவி கோரிய 11மாணவர்களில் உதவி கிடைத்த அல்லது உதவிகள் கிடைப்பதற்கான உத்தரவாதங்கள் கிடைத்த மாணவர்கள்.

1)ஜெகநாதன் சுதாநாதன்.

5)பெயர் - குணரத்தினம் கெளதமன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைத்துறை.

13) சிறில் ரவிநேசன். (இம்மாணவன் புதிதாக கிடைத்த விபரத்திலிருந்து)

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் கிடைத்த விபரங்கள்

13)

14) சுகுமாரன் கயிலாயபிள்ளை

2ம் வருடம் முகாமைத்துவம்.

15) நிசாந்தினி கனகரத்தினம்

2ம் வருடம் வணிகத்துறை

இத்தோடு மேலும் 10 மாணவர்களுக்கான உதவி கோரல் விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.(இவர்களது பெயர் விபரங்கள் இங்கு இணைக்க முடியாமைக்கு வருந்துகிறோம். இம்மாணவர்கள் தமது பெயர்கள் வெளியில் வருவதால் பாதகாப்பு காரணங்களுக்காக அஞ்சுவதால் இங்கு தவிர்க்கிறோம்)

மொத்தம் 25மாணவர்களுக்கான உதவிகள் தேவைப்படுகிறது. உதவவிரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். விபரங்கள் தந்துதவுவோம். நேரடியாக நீங்கள் மாணவர்களுடன் கதைத்து நேரடியாகவே உங்கள் உதவிகளை வழங்கலாம்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Picture001-1.jpg

Picture003.jpg

Edited by sathiri

... முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியுமாம்! ... சிலதை எழுத வெளிக்கிட்டால் சனம் காறித்துப்பும் ... இப்போதைக்கு வேண்டாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.