Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளின் வாகனங்கள் உயர்மட்ட அமைச்சரால் 200 கோடி ரூபாவுக்கு விற்பனை!

Featured Replies

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவற்றுக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் கம்பஹாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போரினால் சேதமடைந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் வாகனங்கள் பெருவாரியாக கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றில் லான்ட் குரூஸர், லான்ட் ரோவர், இன்ரர் கூலர், குண்டு துளைக்காத வாகனங்கள் ஆகியவை அடங்கும்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட சேதமடைந்த வாகனங்கள் கம்பஹா மாவட்டத்தில் திருத்தப்பட்டு, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, உரிமையாளர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு சுமார் 200 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, குறிப்பிட்ட கம்பஹா மாவட்ட அமைச்சரின் பிரசார பணிக்காக பயன்படுத்தப்பட்டன என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

http://www.eelanationnews.com/sri-lanka-news/106-colombo/2144

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வெளிநாட்டில நம்மடையாக்களில சிலர் எங்களிட்ட விடுதலைப்போரட்டத்தை காட்டி வாங்கிய பணத்தில வீடும் காரும் கடையும் மற்றும் இதர சொத்துக்களும் வாங்கிக்குவிக்கேக்க இதென்ன பிரமாதம்???????.......

இங்க வெளிநாட்டில நம்மடையாக்களில சிலர் எங்களிட்ட விடுதலைப்போரட்டத்தை காட்டி வாங்கிய பணத்தில வீடும் காரும் கடையும் மற்றும் இதர சொத்துக்களும் வாங்கிக்குவிக்கேக்க இதென்ன பிரமாதம்???????.......

நீரும் வேலை செய்திருந்தா உமக்கும் பங்கு கிடைத்திருக்கும். சும்மா நரம்பில்லா நாக்காலஎதையும் கதைப்பியள்.

அப்படிதான் எடுத்தாலும் சரி அவன் வைச்சிருக்கட்டேன். அவன் தானே றோட்டில அலைஞ்சு திட்டு வேண்டி காசு சேர்த்து உதவி செய்தவன்.

நீரும் வேலை செய்திருந்தா உமக்கும் பங்கு கிடைத்திருக்கும். சும்மா நரம்பில்லா நாக்காலஎதையும் கதைப்பியள்.

அப்படிதான் எடுத்தாலும் சரி அவன் வைச்சிருக்கட்டேன். அவன் தானே றோட்டில அலைஞ்சு திட்டு வேண்டி காசு சேர்த்து உதவி செய்தவன்.

வங்கியிலை பேசினான் கடனாய் கொஞ்ச காசு தாறம் எண்டு அவங்களும் ஒத்து கொண்டு இருக்கிறாங்கள்.... அந்த காசை போட்டு ஒரு கடை எடுப்பம் எண்டு நினைச்சு கொண்டு இருந்தன்...

இப்ப உந்த கூட்டம் ஆடுகிற கூத்தை பாத்தால் ஏன் எனக்கு இப்ப தேவை இல்லாத வேலை எண்டு கிடக்கு... நான் நினக்கிறன் இங்க பணக்காறராக இருக்கும் எல்லா தமிழரும் இவர்களின் காசிலை தான் பெரிய ஆக்களாக வந்து இருக்கிறார்கள் எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

தயா நான் இங்க காசு சேர்த்தவை எல்லாம் வீடும் காரும் வாங்கி குடியும் குடித்தனமுமாய் இருக்கினம் எண்டு சொல்ல வரேல்ல தாயகத்திற்காக உண்மையான விசுவாசத்தோட பனியிலயும் மழையிலயும் நனைந்து காசு சேர்த்து இங்க இருக்கிற பெரும் தலையளிட்ட குடுத்த எத்தனையோ விசுவாசிகள் இருக்கினம். ஆனால் காசு சேர்த்த எல்லாரும் காசை கொடுக்கவேண்டிய இடத்தில கொடுத்தினம் என்றும் அதேபோல காசை வாங்கின பெரும் தலையள் எல்லாம் காசை சேர்கக வேண்டிய இடத்தில சேர்த்தினம் எண்டும் உங்களால மனம் திறந்து சொல்ல முடியுமா? மே 18 ற்கு பிறகு எந்த போராட்டித்திற்கு காசு அனுப்பினவை? மே 18ற்கு முன்னர் முழுக்காசையும் அனுப்பி முடிக்கவில்லைதானே? அப்பிடியானால் மே18ற்கு பிறகு இங்க இருக்கிற நெடிய பெரும் தலையள் என்ன செய்தவை அங்க கஸ்ரப்படுற சனத்திற்கு? யாரவது அப்பிடி ஒரு செய்தி கேள்விப்பட்டனியளோ?

தயா நான் இங்க காசு சேர்த்தவை எல்லாம் வீடும் காரும் வாங்கி குடியும் குடித்தனமுமாய் இருக்கினம் எண்டு சொல்ல வரேல்ல தாயகத்திற்காக உண்மையான விசுவாசத்தோட பனியிலயும் மழையிலயும் நனைந்து காசு சேர்த்து இங்க இருக்கிற பெரும் தலையளிட்ட குடுத்த எத்தனையோ விசுவாசிகள் இருக்கினம். ஆனால் காசு சேர்த்த எல்லாரும் காசை கொடுக்கவேண்டிய இடத்தில கொடுத்தினம் என்றும் அதேபோல காசை வாங்கின பெரும் தலையள் எல்லாம் காசை சேர்கக வேண்டிய இடத்தில சேர்த்தினம் எண்டும் உங்களால மனம் திறந்து சொல்ல முடியுமா? மே 18 ற்கு பிறகு எந்த போராட்டித்திற்கு காசு அனுப்பினவை? மே 18ற்கு முன்னர் முழுக்காசையும் அனுப்பி முடிக்கவில்லைதானே? அப்பிடியானால் மே18ற்கு பிறகு இங்க இருக்கிற நெடிய பெரும் தலையள் என்ன செய்தவை அங்க கஸ்ரப்படுற சனத்திற்கு? யாரவது அப்பிடி ஒரு செய்தி கேள்விப்பட்டனியளோ?

நீங்கள் சொல்லுறது தான் உண்மை... நீங்கள் பிழை செய்த ஒருவரை குறித்து போசுவதானால் விலகி இருந்து வேடிக்கை பார்க்கலாம்.... ஆனால் போகிற போக்கில் எல்லார் மீதும் பழி போடுவது போல பொதுவாக பேசினால் என்ன சொல்வது...??

காசு வாங்கியவர்கள் சேர்த்தார்கள் இல்லை என்பது உள்ளை இருப்பவர்களுக்கும் அதுக்கு தலைமை ஏற்பவர்களுக்கும் தெரியாததா...?? காசு குடுக்கும் போது பற்று சீட்டு தர முடியாது எனும் போது காசும் என்னால் தரமுடியது எண்று சொல்லாதவர்கள் இருந்தார்கள் தானே...?? அப்படியான ஏமாற்று பேர்வளிகள் ஏமாற்ற செய்தவைகளை புரிந்து கொள்ள முயலாதது யாரின் தவறு என்கிறீர்கள்....?? அப்படி காசுகளை வாங்கியவர்கள் இனி எதுவும் பிரளாது எண்டு விலகிகொண்டு இருக்கிறார்களே... ?

எனக்கு தெரிய திருமணம் கூட செய்யாது 50 களை தாண்டியவர்கள் எல்லாம் கிளிந்த சட்டைகள் சாறங்களை மட்டும் வைத்து கொண்டு தாயகத்துக்காக வேலை எண்டு திரிபவர்களை எனக்கு தெரியும்... அப்படி திரிபவர்கள் வேலையே கிடைக்காமல் திரிந்தவர்கள் இல்லை... பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைகள் செய்தவர்கள் நிறுவனங்கள் நடத்தியவர்கள்...

நீங்கள் பொதுவாக சொல்பவர்களில் அவர்களும் அடங்குகின்றனர் எனும் போது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை...

Edited by தயா

[twitter][/twitter]

நீங்கள் சொல்லுறது தான் உண்மை... நீங்கள் பிழை செய்த ஒருவரை குறித்து போசுவதானால் விலகி இருந்து வேடிக்கை பார்க்கலாம்.... ஆனால் போகிற போக்கில் எல்லார் மீதும் பழி போடுவது போல பொதுவாக பேசினால் என்ன சொல்வது...??

காசு வாங்கியவர்கள் சேர்த்தார்கள் இல்லை என்பது உள்ளை இருப்பவர்களுக்கும் அதுக்கு தலைமை ஏற்பவர்களுக்கும் தெரியாததா...?? காசு குடுக்கும் போது பற்று சீட்டு தர முடியாது எனும் போது காசும் என்னால் தரமுடியது எண்று சொல்லாதவர்கள் இருந்தார்கள் தானே...?? அப்படியான ஏமாற்று பேர்வளிகள் ஏமாற்ற செய்தவைகளை புரிந்து கொள்ள முயலாதது யாரின் தவறு என்கிறீர்கள்....?? அப்படி காசுகளை வாங்கியவர்கள் இனி எதுவும் பிரளாது எண்டு விலகிகொண்டு இருக்கிறார்களே... ?

எனக்கு தெரிய திருமணம் கூட செய்யாது 50 களை தாண்டியவர்கள் எல்லாம் கிளிந்த சட்டைகள் சாறங்களை மட்டும் வைத்து கொண்டு தாயகத்துக்காக வேலை எண்டு திரிபவர்களை எனக்கு தெரியும்... அப்படி திரிபவர்கள் வேலையே கிடைக்காமல் திரிந்தவர்கள் இல்லை... பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைகள் செய்தவர்கள் நிறுவனங்கள் நடத்தியவர்கள்...

நீங்கள் பொதுவாக சொல்பவர்களில் அவர்களும் அடங்குகின்றனர் எனும் போது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை...

நிச்சயமாக மக்களுக்காக வேலை செய்தவர்களை இப்படி கேவலபடுத்த கூடாது.

முள்ளிவாய்க்கால் வரை ஒழுங்காக நடந்தது. அதன்பின் கேட்க ஆள் இல்லை என்று தவறி இருக்கலாம்.

எனது நண்பர் ஒருவர் போராட்டத்திற்காகவே றோட்டு றோட்டாக அலைகிறார்

என்று விவாகரத்தில் முடிந்தது. இன்றுவரை அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

மீண்டும் அண்மையில் தொடர்பு கொண்ட போது தான் வேலை செய்த நாட்டை விட்டு வேறு நாட்டில் போய் இருக்கிறார்.

இப்படி எத்தனையோ பேர் தங்கள் முழு மனதோடு சேவை ஆற்றி உள்ளார்கள்.

[twitter][/twitter]

நிச்சயமாக மக்களுக்காக வேலை செய்தவர்களை இப்படி கேவலபடுத்த கூடாது.

முள்ளிவாய்க்கால் வரை ஒழுங்காக நடந்தது. அதன்பின் கேட்க ஆள் இல்லை என்று தவறி இருக்கலாம்.

எனது நண்பர் ஒருவர் போராட்டத்திற்காகவே றோட்டு றோட்டாக அலைகிறார் என்று விவாகரத்தில் முடிந்தது. இன்றுவரை அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. மீண்டும் அண்மையில் தொடர்பு கொண்ட போது தான் வேலை செய்த நாட்டை விட்டு வேறு நாட்டில் போய் இருக்கிறார்.

இப்படி எத்தனையோ பேர் தங்கள் முழு மனதோடு சேவை ஆற்றி உள்ளார்கள்.

புலத்திலும் சிலர் விடிவின் பின்னர் தான் கல்யாணம் காட்சி என்று பலத்த சவால்கள் மத்தியில் உழைத்தவர்கள் இருக்கிறார்கள். பிரதிபலன் பாராமல் மக்களுக்காக தியாகம் செய்த இவர்கள் இன்றும் குறைகளை பேசிக்கொண்டிருக்காமல், எளிமையானவர்களாக, ஆடம்பரமில்லாதவர்களா, தமெக்கென்று பெரிதும் ஒன்றும் இல்லாதவர்களாக விடா முயற்சியுடன், மக்களுக்காக வாழ்ந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.

அறியாமையால் ஒரு சிலரின் தவறுக்காக (அதுவும் பெரும்பாலும் கற்பனையில்) அனைவரையும் இழிவுபடுத்தும் கீழ்தர மனம் ஒருசிலரிடம் இருப்பது கவலையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.