Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெஸ்ட் கிரிக்கெட்: 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில குட்டிப்பையன் சொல்வது அனைத்தும் சரி...ரணதுங்க மட்டும் ஆதரவு காட்டியிருக்கா விட்டால் முரளி தொடர்ந்து நிலைத்து நிற்பாரா என்பது சந்தேகமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் முரளி.கண்முன்னே வந்து சாதனை நிலை நாட்டிய ஒரு தமிழன்

முரளி எந்த வகையிலும் கப்டனுக்கு ஏற்ற நபரல்ல.கப்டன் பதவியை இவர் எடுத்திருந்தால் இவர் இந்த சாதனையை நிலை நாட்டியிருபாரோ தெரியாது. இலஙகை இன்று உலகில் ஒரு நல்ல ரீமாக இருப்பதற்கு இலங்கை ரீமில் இருப்பவர்களின் ஒற்றுமை பெரிய காரணம்.

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் (புஸ்பரகம?) பயிற்சி கொடுக்கின்றாரம்.இலங்கை அணி தேர்விற்கு யாழ் இந்து மாணவன் ஒருவனை அவர் தெரிவு செய்ய பெற்றோர் மறுத்துவிட்டார்களம் பிள்ளையின் படிப்பு தான் முக்கியமென்று.இவ்வளவுக்கும் அவரின் தாயார் இந்துக் கல்லூரியில் ஆசிரியராம்.

யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் சொன்னதில் என்ன தவறு பிடித்தீர்கள்.

விளையாட்டு...... எல்லாருக்கும், எப்பவும் சோறு போடாது.

படித்திருந்தால்..... எப்பவும், எங்கையும் வேலை செய்யலாம்.

இதனைத்தான்...... ஔவையார் கற்றவனுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்று கூறினார்.

கல்லாதவனுக்கு என்ன கூறினார் என்று நீங்களே..... கூறுங்கள்.

.

.

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவில் முறியடிக்க முடியாத சாதனை படைத்த முரளிதரனுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள். அவர் வடகிழக்கில் விளயாட்டுத்துறையை முன்னேற்ற உதவப் போவதாகவும் கூறியுள்ளார். அவர் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் யாழ் மத்திய கல்லூரியில் படித்தவர் எதிர் வீரசிங்கம். இவர் ஆசியாப் போட்டியில் ஒட்டப்போட்டியில் 1958ல் தங்கப்பதக்கத்தை வென்றவர். சிறிலங்கா முதன் முறையாக ஆசியப் போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் பெற்றது இவரால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கள ஊடகங்கள், கொழும்பு ஆங்கிலப்பத்திரிகைகள் எதிர் வீரசிங்க என்று செய்தி வெளியிட்டு தலைப்பில் இட்டன. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வூடகங்களுக்கு எதிர்ப்புக் கடிதங்கள் வந்தன. துடுப்பாட்டத்தில் இலங்கையில் சாதனை படைத்தவர் சதாசிவம். 1948ம் ஆண்டு இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர். அப்பொழுது இலங்கை டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதில்லை.

பாக்கியசோதி சரவணமுத்து சிறந்த துடுப்பாட்ட வீரர். இவரும் அக்காலத்தில் சிறிலங்கா அணிக்கு தலைமை வகித்தார். இவர் பெயரில் அமைந்த துடுப்பாட்ட மைதானம் தான் சரவணமுத்து துடுப்பாட்டரங்கம்.

40,50களில் யாழ்ப்பாணப்பாடசாலை துடுப்பாட்ட அணிகளில் சிறந்த விளையாட்டு வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். ஒருமுறை அவுஸ்திரெலியா அணியின் பாடசாலை அணி ஒன்று யாழ்ப்பாணத்தில் வந்து விளையாடுயது. அப்போட்டியில் யாழ்ப்பாண அணி வெற்றி பெறும் நிலையில் மழை குறுக்கிட்டதினால் போட்டி நிறுத்தப்பட்டது. அவுஸ்திரெலியா அணியில் விளையாடியவர்களில் இருவர் பிற்காலத்தில் அவுஸ்திரெலியா டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள். யாழ்ப்பாண அணியில் யாழ்மத்திய கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, பருத்தித்துறை காட்லிக் கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் இடம் பிடித்திருந்தார்கள்.

70களின் கடைசிக்காலத்தில் யாழ் மத்திய கல்லூரியில் சிறந்த பந்துவீச்சாளார் நகுலேஸ்வரன். தமிழன் என்ற காரணத்தினால் இவருக்கு சிறிலங்கா அணியில் இடம் கிடைக்கவில்லை .

சிறிலங்கா டெஸ்ட் அந்தஸ்தை 82ல் பெற்றது. அதில் விளையாடிய சில துடுப்பாட்ட வீரர்கள் இனவெறி நாடாக அப்பொழுது கருதப்பட்ட தென்னாபிரிக்காவில் சென்று விளையாடியதினால் இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். பலர் நீக்கப்பட்டதினால் இரு தமிழர்களை இலங்கை அணியில் சேர்ந்தார்கள். ஒருவர் வினோதன் ஜோன். சிறீதரன் ஜெகநாதன். இதில் வினோதன் ஜோன் நன்றாக நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தார். ஆனால் அதற்குப்பிறகு கண்டி அஸ்கிறியாவில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கு எதிரான போட்டியில் தமிழர் புனித கண்டியில் விளையாடக்கூடாது என்று பெளத்தபீடாதிபதி ஒருவர் சொன்னதினால் சேர்க்கப்படவில்லை.

முரளிதரன் சிறிலங்கா அணியில் 92ல் அவுஸ்திரெலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டார். அவர் சிறப்பாக அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தாலும் அதற்குப் பிறகு நடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சேர்க்கப்படவில்லை. இதில் இந்தியா வென்றது. கொழும்பு ஊடகங்கள் ஏன் முரளியைச் சேர்க்கவில்லை என்று அச்சமயத்தில் செய்தி வெளியிட்டன. 2வது போட்டியில் சேர்க்கப்பட்டார்.

டில்சன் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். தமிழ் தெரிந்தவர். சிறிலங்கா அணியில் தொடர்ந்து விளையாடுவதற்காக பெளத்த மதத்துக்கு மாறி பெயரையும் மாற்றிவிட்டார்.

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்று வந்ததும் அதே நிலா  :rolleyes: 

இன்று வந்ததும் அதே நிலா  :unsure: 
என்றும் உள்ளதும் அதே நிலா  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.