Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்த நினைத்தவரை காட்டிக் கொடுத்தது ஸ்கை நியூஸ் ரகசிய கேமரா (வீடியோ நியூஸ் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சைமன் பியர்ட், 56 இளைஞர் ஆலோசகராக பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல இளைஞர்களுடன் பாலியல் ரீதியாக தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார்.

இணையத்தில் இருக்கும் பொது அரட்டை அறைக்குள் சென்று இளம் வயது பெண்களை தேடி அவர்களுடன் பேசுவது பின் அரட்டையை பாலியல் ரீதியில் திசை திருப்புவது உள்ளிட்ட வேலைகளை ஆறு வாரங்களாக முனைப்புடன் செய்து வந்த இவரை ரகசியமாக படம் பிடித்தனர் ஸ்கை செய்தி குழுவினர்.

தான் நிருபர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமல் 13 வயது சிறுமி அமியுடன் நட்புடன் முதலில் அரட்டையை துவங்கினார். முதலில் இணைய காமெராவில் தன படத்தை போட்ட சைமன் , பின் சிறுமி அமியையும் இணைய காமெராவில் வருமாறு வலியுறுத்தினார்.

பின்னர் சிறிது சிறிதாக பாலியல் ரீதியாக அரட்டையை திசை திருப்பிய சைமன் ஒரு கட்டத்தில் சிறுமியிடம் தன்னுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக் கொள்ளத் தயாரா என்றும் கேட்டதோடு இதை வெளியில் கூறி தன்னை போலீசில் மாட்டி விடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

பின்னர் இருவரும் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டு சைமன் அவர் வீட்டிலிருந்து கிளம்புவது முதற்கொண்டு குன்னேர்ஸ்புரி ரயில் நிலையத்தில் இருவதும் சந்திப்பது அனைத்தும் படம் பிடிக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகத்தினால் தான் படம் பிடிக்கப்படுகிறோம் என்பது தெரிந்து ஓடினார் சைமன்.

பின்னர் ஒரு கட்டத்தில் இணையத்தில் இது போன்று சிறுமிகளை தேடித் பிடித்து அவர்களை பாலியல் ரீதியில் தயார் செய்வது தனக்கு கை வந்த கலை என்றும் தான் செய்வது சட்டத்திற்கு புறம்பானது எனத் தெரியும் எனவும் ஸ்கை செய்தி நிறுவனத்திடம் ஒப்புக் கொண்டார்.

தற்போது சிறுவர்களை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1281186927&archive=&start_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

.

சைமன் பியர்ட்க்கு, இப்ப 56 வயது. 21 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து முடிய 77 வயதாகிவிடும்.

பென்சன் எடுக்கிற வயதிலை இது தேவையா?

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

சைமன் பியர்ட்க்கு, இப்ப 56 வயது. 21 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து முடிய 77 வயதாகிவிடும்.

பென்சன் எடுக்கிற வயதிலை இது தேவையா?

.

எப்படித் தான் உந்த கிழட்டுக்கு மனசு வந்திச்சொ தெரியல .. 22வருடம் சிறை தன்டனை போய் இருக்கட்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அளவுக்குப் புரையோடிப் போன சமூகமல்ல எம்முடையது. இதற்கு எமது வளர்ப்பும் எமது சமூகப் பண்பாட்டு விழுமியங்களுமே காரணம் என நினைக்கிறேன்.

இப்படியானவர்கள் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதை என்னவென்று சொல்வது?? :D

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குநாடுகளில் இவ்வாறானவர்கள் அதிகம். பொதுவாக பொதுப்போக்குவரத்து ஊடகங்களில் எல்லாம் இப்படி நடக்கிறார்கள். பார்க்கிற எமக்கே கொல்லனும் போல இருக்கும்.

ஸ்கை.. தன்னால் முடிந்ததைச் செய்துள்ளது.

இசைக்கலைஞன்.. நீங்கள் சொல்வது தவறு. இங்கே 13 வயது தமிழ் பெண் பிள்ளையை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான தமிழ் முதிர்வு ஆண்களும் இருக்கிறார்கள். அதுவும் பொலிஸின் தேடுதல் வலையில் கூடச் சிக்காமல்.

அதுமட்டுமன்றி வேற்றின சிறுமிகளை தவறாக நடத்தும் எம் இளைய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்...! ஆயிரத்தில் ஒன்றுதான் இப்படி கமராக்களுக்குள் சிக்குகின்றன. பல சிக்குவதில்லை..!

நான் கண்டிக்கிறேன்.. 70 வயதான ஒருவர் சிறுமி ஒருத்தியோடு தவறாக நடக்க முற்பட்டதற்காக யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் வைத்து மண்டையில் போடப்பட்டார். அப்படிப் போடனும். அதேவேளை யாழில் விபச்சாரம் செய்த பெண்ணும் போடப்பட்டார். அப்படிப் போடனும்.. இல்ல இதுகளைத் திருத்த முடியாது.

இவங்கள சிறையில அடைச்சு.. சாப்பாடு போட்டுக்கிட்டு வளர்த்து விடுறது வீண்..!

  • கருத்துக்கள உறவுகள்

.

சைமன் பியர்ட் திருமணம் முடித்து ஒருவனுக்கு ஒருத்தி என்னும் முறையில் வாழ்ந்திருந்தால்......

இப்போ அவருக்கு 25 வயதில் குழந்தைகளே இருந்திருப்பார்கள்.

தனிமையில் இருந்ததால்..... தான் செய்வது, தவறு என்று தெரிந்தும் செய்துள்ளார்.

அவருக்கு இளமையில் திருமணம் வெறுத்திருக்கிலாம், அதனால் வந்த வினை.

.

இளைஞர்களை வழிநடத்துபவரே தவறு செய்தால் - அது பல மடங்கு தவறாகவே கருதப்படும். போலிச் சாமியார்கள் அப்பாவி மக்களை ஏமாற்றுவது போலவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.