Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளர்ந்த பிள்ளைகளும் அவர்களது கனவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த பிள்ளைகளும் அவர்களது கனவுகளும்

பிள்ளை வளர்ப்பு பற்றி இங்கு பரவலாக பலவாறாக எழுதப்படுகிறது.

பெற்றோரின் கடமைகள் பற்றியும் பிள்ளைகளது எதிர்காலம் பற்றிய அவர்களது கனவுகள் பற்றியும் அவர்களது வரட்டுக்கௌரவங்கள் பற்றியும் ஏன் தனது பிள்ளைகளை குறிப்பிட்ட துறையில் மட்டுமே ஜொலிக்கவேண்டும் என்ற நப்பாசை பற்றியும் கூட இங்கு பலர் எழுதக்கண்டிருக்கின்றோம்.

அதேநேரம் அவர்களால் ஒருவாக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியோ அல்லது அவர்களது தற்போதைய வாழ்வு சம்பந்தமாகவோ அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராயாது விட்டுவிட்டோம்

இங்கு எழுதும் பலர் பெரும் பதவிகளில் இருப்பவர்கள் என்பது எமக்கு தெரியும்

அவர்களை ஒருவாக்கியதும் இதேநோக்கம் கொண்ட பெற்றோரே என்பதை நாம் அறிவோமாயின்

இவர்களிடம் இதே கேள்வியை வைத்தாலென்ன....?

அதாவது

தங்களது கனவுகள் எப்படி இருந்தது..???

அநேகமான பெற்றோரின் கனவுகள் ஒரே மாதிரியாக

அதாவது

தமது பிள்ளைகளை வைத்தியர் அல்லது பொறியியலாளர் ஆக ஆக்குவதாகவே இருந்தது என்ற குறைபாடு உள்ளது

அதற்குள் தாங்களும் மாட்டிக்கொண்டீர்களா..???

அதனால்

நன்மையடைந்தீர்களா...???

அல்லது

வேறு இலட்சியத்தை அல்லது தங்களுக்கு இருந்த வேறொரு திறமையை மழுங்கடித்துவிட்டதாக இன்றும் நினைக்கின்றீர்களா...???

தங்களது பெற்றோர் தங்களை எவ்வாறு வரவேண்டும் என்று உருவாக்கினார்கள்...???

அவர்கள் இதனைத்தீர்மானித்ததற்கு...

தங்களிடம் இருந்த திறமை காரணமா..???

அல்லது

அவர்களின் கௌரவம் காரணமா...???

அதனால்

தாங்கள் வென்றீர்களா..???

அல்லது

இன்றும் தோற்றதாக நினைக்கின்றீர்களா...???

இன்று தாங்கள் இருக்கும் நிலைக்கு

தங்களது பெற்றோருக்கு நன்றி சொல்கின்றீர்களா...???

இல்லை.........?????????

இதற்கு தாங்கள் எழுதும் கருத்துக்கள் எமது அடுத்த தலைமுறையை ஒழுங்கு படுத்த எமக்கு உதவும்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் எனது பெற்ரோர் இதைத்தான் நான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதும் இல்லை. ஆலோசனை கூறியதும் இல்லை. நான் படிப்பதற்கு என்ன தேவையோ அவற்றை மட்டும் எந்தக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் பெற்றுக் கொடுத்தார்கள். என்னுள்ளே ஒரு பொறுப்புணர்வு ஏற்பட்டதற்கு அவர்களது இந்த அணுகுமுறையே காரணம் என நினைக்கிறேன். :D

தாயகத்தைப் பொறுத்தவரையில் வைத்திய, பொறியியலாளர் அல்லது கணினிப்படிப்பு என்று அனேகர்கள் செல்கிறார்கள். படித்தவர்களில் எத்தனைபேர் அதே துறையில் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கெடுத்தால் பல உண்மைகள் வெளிவரும். :icon_idea: பெருமைக்குப் படித்துவிட்டு பிற்பாடு வேறு தொழில்களுக்குச் செல்வதால் இன்னுமொரு திறமைசாலி பாதிக்கப்படுகிறான் என்பதை யாரும் கவனிப்பதில்லை. :icon_idea:

வளர்ந்த பிள்ளைகளும் அவர்களது கனவுகளும்

தங்களது கனவுகள் எப்படி இருந்தது..???

க.பொ.உ. தரம் வரும் வரை கனவுகள் என்று இருக்கவில்லை. அதன் பின் கணினித்துறை மீது நாட்டம் வந்தது.

தமது பிள்ளைகளை வைத்தியர் அல்லது பொறியியலாளர் ஆக ஆக்குவதாகவே இருந்தது என்ற குறைபாடு உள்ளது

அதற்குள் தாங்களும் மாட்டிக்கொண்டீர்களா..???

இல்லை.

வேறு இலட்சியத்தை அல்லது தங்களுக்கு இருந்த வேறொரு திறமையை மழுங்கடித்துவிட்டதாக இன்றும் நினைக்கின்றீர்களா...???

நாட்டு சூழ்நிலைகளால், வீடுக் கட்டுப்பாடுகள் காரணமாக, வேறு சில துறைகளில் திறமைகளை வளர்க்க முடியாமல் போய்விட்டது.

தங்களது பெற்றோர் தங்களை எவ்வாறு வரவேண்டும் என்று உருவாக்கினார்கள்...???

அவர்கள் இதனைத்தீர்மானித்ததற்கு...

தங்களிடம் இருந்த திறமை காரணமா..???

அல்லது

அவர்களின் கௌரவம் காரணமா...???

அதனால்

தாங்கள் வென்றீர்களா..???

அல்லது

இன்றும் தோற்றதாக நினைக்கின்றீர்களா...???

அப்பா நன்றாக படிக்க வேண்டும் என்று மட்டும் ஊக்குவிப்பவர். அம்மா எமது படிப்பைப் பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை.

படிப்பில் ஆரவமுள்ள நல்ல நண்பிகள் கிடைத்து, நல்ல ஆசிரியர்கள், இவையிரண்டும் எனது படிப்புத் திறமை உயர்நிலை அடையக் காரணமாக இருந்தது.

படிப்பில் நாட்டமில்லாத நண்பிகளின் கூட்டால், திறமை இருந்தவர்களும் பின்னடைவுகளை சந்தித்ததையும் பாடசாலை வாழ்வில் கண்டோம்.

இன்று தாங்கள் இருக்கும் நிலைக்கு

தங்களது பெற்றோருக்கு நன்றி சொல்கின்றீர்களா...???

நிச்சயமாக நன்றி சொல்லவேண்டும்.

அவ்வப்போது அவர்கள் கூறும் சில விடயங்கள் பாவற்காய் போலத்தான் இருக்கும். ஆனாலும், அவர்கள் கண்டிப்புக்கள் எம்மை பாதுகாத்தன என்பதே உண்மை. அப்போது நாம் சரி என நினைத்த சில விடயங்கள், தற்போது தவறென புரிகிறது.

எனவே பிள்ளைகளை தத்தமது விருப்பத்துக்கு முழுவதுமாக, தவறெனத் தெரிந்தும், அனுமதிக்கும் பெற்றோர்கள், தமது கடமைகளை சரிவரச் செய்யாதவர்கள் என்று தான் கூறவேண்டும்.

அதனால் பிள்ளைகள் பின்னடைவுகளை பிற்காலத்தில் சந்தித்துவருவது நாம் எமது சூழலில் காணக் கூடிய ஒரு விடயம்.

ஒரு சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டில் கூட, கட்டுப்பாடுகள் (விதிகள்) இல்லை என்றால் சுவாரசியம் இருக்காது. வாழ்வு அர்த்தமுடையதாக அமைய ஆங்காங்கே தேவையான கட்டுப்பாடுகளை, பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக இருந்தாலும், பேணவேண்டியது பொறுப்புள்ள பெற்றோர்கள் கடமை.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவ்வப்போது அவர்கள் கூறும் சில விடயங்கள் பாவற்காய் போலத்தான் இருக்கும். ஆனாலும், அவர்கள் கண்டிப்புக்கள் எம்மை பாதுகாத்தன என்பதே உண்மை. அப்போது நாம் சரி என நினைத்த சில விடயங்கள், தற்போது தவறென புரிகிறது.

எனவே பிள்ளைகளை தத்தமது விருப்பத்துக்கு முழுவதுமாக, தவறெனத் தெரிந்தும், அனுமதிக்கும் பெற்றோர்கள், தமது கடமைகளை சரிவரச் செய்யாதவர்கள் என்று தான் கூறவேண்டும்.

அதனால் பிள்ளைகள் பின்னடைவுகளை பிற்காலத்தில் சந்தித்துவருவது நாம் எமது சூழலில் காணக் கூடிய ஒரு விடயம்.

ஒரு சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டில் கூட, கட்டுப்பாடுகள் (விதிகள்) இல்லை என்றால் சுவாரசியம் இருக்காது. வாழ்வு அர்த்தமுடையதாக அமைய ஆங்காங்கே தேவையான கட்டுப்பாடுகளை, பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக இருந்தாலும், பேணவேண்டியது பொறுப்புள்ள பெற்றோர்கள் கடமை.

நான் தங்களைச்சிறுபிள்ளை என்று நினைத்திருந்தேன்

ஆனால் பெரிய வார்த்தைகள்

நன்றி

தங்களது எழுத்துக்கள் எமது பிள்ளைகளை ஒழுங்கமைக்கப்பயன்படும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது 18 வயதில் எனது தந்தையை இழந்து விட்டேன்.எனது தாயாருக்கு படித்தால் போதும் என்று நினைக்க கூடிய அறிவே இருந்தது.ஆனால் எனது தந்தை இருக்கும் வரைக்கும் என்னை ஒரு மனிதனாகவே உருவாக்க நினைத்து என்னை வழர்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.ஏதாவது துறையை மனதில் நினைத்து என்னை வழர்த்திருந்து அந்த துறையில் நான் வெற்றி பெறாவிட்டிருந்தால் அது அவரின் மனதையும் எனது வாழ்க்கையையும் பாதிதித்து இருக்கும்.அவரின் இந்த வழர்ப்பு இன்று இங்கு போட்டிக்கு வாழந்தும் மன உழைச்சலில் திணறும் இந்த சமூகத்தில்(நான் வாழும் இடம்)நான் எந்த விதமான சஞ்சலலமும் இல்லாமால் வாழ வழி வகுத்து தந்திருக்குது என்று நினைக்கிறேன்.இந்த இடத்தில் எனது தந்தயை நன்றியுடன் நினைவுகூறிகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது 18 வயதில் எனது தந்தையை இழந்து விட்டேன்.எனது தாயாருக்கு படித்தால் போதும் என்று நினைக்க கூடிய அறிவே இருந்தது.ஆனால் எனது தந்தை இருக்கும் வரைக்கும் என்னை ஒரு மனிதனாகவே உருவாக்க நினைத்து என்னை வழர்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.ஏதாவது துறையை மனதில் நினைத்து என்னை வழர்த்திருந்து அந்த துறையில் நான் வெற்றி பெறாவிட்டிருந்தால் அது அவரின் மனதையும் எனது வாழ்க்கையையும் பாதிதித்து இருக்கும்.அவரின் இந்த வழர்ப்பு இன்று இங்கு போட்டிக்கு வாழந்தும் மன உழைச்சலில் திணறும் இந்த சமூகத்தில் (நான் வாழும் இடம்)நான் எந்த விதமான சஞ்சலலமும் இல்லாமால் வாழ வழி வகுத்து தந்திருக்குது என்று நினைக்கிறேன்.இந்த இடத்தில் எனது தந்தயை நன்றியுடன் நினைவுகூறிகின்றேன்.

உண்மைதான் சஜீவன்

எனது அடுத்த சந்ததியை இந்த சகதிக்குள் இருந்து மீட்பது பற்றியே அவர்களுடன் நான் அதிகம் விவாதிக்கின்றேன்.

அதிக நேரத்தை செலவிடுகின்றேன்.

ஏனெனில் மிகவும் பயங்கரமானதும், பிடித்தால் தற்கொலைவரை கொண்டுசெல்லாது விடாத நோய் இது.

நான் சில நாடுகளுக்கு சென்ற போது

அதிலும் முக்கியமாக பிரித்தானியா ஜேர்மனியிலுள்ளவர்களின் பிள்ளைகள் மீதான அழுத்தங்களை பார்த்து நடுநடிங்கிப்போனேன்

அடுத்தவீட்டுக்காரப்பிள்ளை என்ன செய்தாலும் எனது பிள்ளையும் செய்யணும்

அது பாடுவதானாலும் சரி உடம்பு மெலிய பாரம் தூக்குவதானாலும் சரி.

அப்படிஒரு போட்டி.

பாடுவதற்கு குரல்வளம் வேண்டும் என்பதெல்லாம் அடுத்த விடயம் அங்கு.....

காலையில் கண் விழித்ததிலிருந்து அந்த சிறுசுகள் ஓடும் ஓட்டத்தை பார்த்தபோது.......

நேரம் கிடைக்கும்போது இது பற்றியும் இங்கு பேசலாம்.

நன்றி தங்களது கருத்துக்கும் நேரத்திற்கும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய டிப்ஸ்களை ....வருங்காலத்தில் உதவிடுமாறு கூறிய தோழர் விசுகு அவர்களுக்கு நன்றிகள் பல :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.