Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசியச் சுடர் லெப்.பரமதேவா

Featured Replies

தமிழீழ விடுதலைப்போராட்டம் பாரிய பின்னடைவை சந்தித்து தமிழர்கள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு தமிழர் நிலங்களெல்லாம் சூறையாடப்பட்டு கொண்டிருக்கின்றது .கிழக்கில் பசில் ராஜபக்சவும் வெளிநாட்டு நிறுவனங்களும் வளம் மிக்க பகுதிகள் பலவற்றை தம் வசமாக்கிவிட்டனர் .மாலை மரியாதைகளுடன் தற்போது கிழக்கை வலம் வரும் அதிகாரம் மிக்கவர்களுக்கு இவை பற்றி எவ்வித சிந்தனைகளும் அற்ற நிலையில் தமிழ் மக்கள் தமது கையறு நிலையை எண்ணி வேதனைப் பட்டுக்கொண்டிருக்கின்ன்றனர் . 30 வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்றோதொரு சூழ்நிலையில் தமிழரின் விடுதலையை நெஞ்சில் நிறுத்தி போராடப்புறப்பட்ட இளம் வீரன் இரா.பரமதேவா என்கிற மறத்தமிழன் வீரமரணமடைந்து இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன.

என்றோ ஒரு நாள் இந்த வீரர்களின் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடுதலைப்புலிகள் இதழில் பரமதேவாவின் வீரச்சாவு நினைவாக வெளியாகிய நினைவுக்குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து அந்த மாவீரனுக்கு எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம் .

1983 செப்டெம்பர் 23 ந் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறான் பரமதேவா .1984 செப்டெம்பர் 22 ந் திகதி

களுவாஞ்சிக்குடி போலீஸ் நிலைய தாக்குதலின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைகிறான் பரமதேவா .மட்டக்களப்பு சிறை

உடைப்பு சம்பவத்தை புதியதோர் திருப்பமென்றும் ஓராண்டு நினைவு என்றும் சிலர் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது

சரியாக அதற்க்கு முதல்நாள் ஒரு போலீஸ் நிலையத்தின் மீது ஆயுத சன்னதனாய் கெரில்லாத் தாக்குதலை நடத்துகிறான் இந்த வீர மகன் .

ஒரு விடுதலை வீரனின் வாழ்க்கை இப்படித்தான் அமையமுடியும் .தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல் பிரிவு

படைத் தளபதியான லெப். இரா.பரமதேவா சிங்கள போலீஸ் கொமாண்டோக்கள் நிறைந்திருந்த களுவாஞ்சிகுடி போலீஸ் நிலைய

தாக்குதலுக்கு தலைமை தாங்கினான் .அஞ்சாத நெஞ்சனாக முன்னணியில் நின்று போரிட்ட பரமதேவா களத்திலே வீரமரணம் அடைந்தான் .

பரமதேவா மட்டக்களப்பு மண் சுமந்த வீரமகன் . 28 வயதான பரமதேவா நன்கு பயிற்ரப்பட்ட கெரில்லா போராளியாவார் .

19 வயது மாணவனாக மட்டக்களப்பு அரசினர் கல்லூரியின் உயர் வகுப்பு மாணவனாக இருந்த காலத்திலிருந்தே சிங்களபேரினவாதத்துக்கு எதிரான நடவடிக்கை

களில் பரமதேவா துடிப்போடு பங்குகொண்டிருந்தார் .1975 மே 22 ஆம் திகதி ஸ்ரீலங்கா குடியரசு தினத்தை பகிஷ்கரிக்க மாணவர்களை

அணிதிரட்டி போராடியமைக்காக பாடசாலையில் இருந்து பரமதேவா நீக்கப்பட்டார் . 1977 ஆம் ஆண்டு மட்டுநகரில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொலிசாரால் தேடப்பட்ட பரமதேவா அந்த இளம் வயதிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டான் . 1978 இல் இயக்க தேவைகளுக்காக செங்கலடி மக்கள்வங்கி

பணத்தை பறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா பொலிசாருடன் நடத்திய சண்டையில் கையின் மேற்பாகத்தில் குண்டு பாய்ந்த

நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டான் .

1981 ஸ்ரீலங்கா அரசு விடுதலை வீரன் பரமதேவாவுக்கு 8 வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது . நீதி மன்றத்தில் கூடி இருந்தோர்

குமுறி அழுதபோதும் பரமதேவா எப்போதும்போல சிரித்த முகத்தோடு அந்த தண்டனையை

ஏற்றுக்கொண்டான் . போகம்பர , வெலிக்கட, நியுமகசின் ,மகர ஆகிய சிறைச்சாலைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா

சிங்கள கைதிகள் மத்தியிலும் மரியாதைக்குரியவனாக இருந்திருக்கிறான் .1971 ஆண்டு ஏப்பிரல் கிளர்சியல் ஈடுபட்ட சிங்கள அரசியல்

கைதிகளுடன் சிறைச்சாலையில் பயன் மிகுந்த சர்சகைகளை பரமதேவா நடத்தி இருக்கிறன்.

1983 செப்டம்பர் 23 ந் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை உடைத்துக்கொண்டு தமிழ் ஈழ போராளிகள்

வெற்றிகமான நடவடிக்களில் பெரும் பங்கு வகுத்தவன் பரமதேவா .சிறையில் இருந்து தப்பியதும் அவன் ஓய்ந்து போய் நின்றுவிடவில்லை

தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆயுத போராட்ட பாதையில் மூலமே தமிழ் ஈழ இலட்ச்சியத்தை அடையமுடியும் என்பதில் அசையாத

நம்பிக்கை கொண்ட பரமதேவா விரைவிலே தமிழ் ஈழ மண்ணில் தனது கெரில்லா போராட்ட வாழ்க்கையை தொடங்கினான்.

விடுதலைப் புலிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலையத்தின் மீது நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதலில் பரமதேவா முன்னணி

வீரனாக நின்று செயல்பட்டான் கொக்கிளாயில் சிங்கள இராணுவத்தின் மீதான கெரில்லாத் தாக்குதலிலும் பரமதேவா முன்நின்றான்.

என்றும் சிரித்த முகத்தோடு காட்சி தரும் பரமதேவாவின் கூர்மையான அறிவையும் விடுதலைப் போராட்டத்தையும் போர்க்குணத்தையும்

மாறுபட்ட விடுதலை இயக்கங்கள் கூட அங்கீகரிக்கின்றன . கிழக்கு மாகாணத்தில் பரமதேவாவின் பெயரைத் தெரியாதவர்கள் யாரும்

இல்லை .பரமதேவாவுடன் சேர்ந்து களுவாஞ்சிக்குடிபொலிஸ் தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும்

தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கெரில்லாப் போராளியும் களத்திலேவீரமரணம்அடைந்தான்.

From: http://www.pakirvu.com/?p=3177

மிகவும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிக்கவர். பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியவர். கிழக்கில் காட்டுப் பிரதேச தளங்கள் அமைப்பதற்கான முன்னோடியாக இருந்தவர். தான் பிறந்த மண்ணில் நடத்தும் முதல் தாக்குதலை பகலிலேயே நடத்திக்காட்ட விரும்பினார். அதுவே அவருக்கு பாதகமாக அமைந்தது. பரமதேவா இருந்திருந்தால் கிழக்கின் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

candle180px.gif

வீர வணக்கங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.