Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செலவிடும் போதே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது

Featured Replies

படித்ததில் பிடித்தது

உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி

செலவிடும் போதே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது

புதன், 6 அக்டோபர் 2010( 17:53 IST )

ஏழையாக இருப்பவனைவிடப் பணக்காரனாக இருப்பவனால் நல்லவனாக, விவேகமுள்ளவனாக, புத்திசாலியாக, ஈகைக் குணம் உடையவனாக இருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டமானதாகும்.

ஈகைக் குணத்திலும் நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒருவகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்புதமான ஒரு பற்று. நான் உறுதியாகக் கூறுவேன், அது ஒரு சாபம்.

ஆகவே உன்னிடம் பணம் இருந்தால் நீ செய்ய வேண்டிய முதல் காரியம் அதைக் கொடுத்துவிடுவதே. ஆனால், விவேகமில்லாமல் கொடுக்கக் கூடாது. பரோபகாரிகள் என்பவர்கள் கொடுப்பதைப் போல் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அப்படிப் கொடுப்பவர்கள் உள்ளத்தில் தான் மிகவும் நல்லவன், ஈகைக் குணமுடையவன், முக்கியமானவன் என்கிற உணர்வு நிரம்பிவிடுகிறது. நீ சாத்வீக முறையில் செயல்பட வேண்டும். அதாவது, பணத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஆகவே, ஒவ்வொருவனும், தன்னுடைய மிக உயர்ந்த உணர்வு நிலையிலிருந்து தன்னிடமுள்ள பணத்தை மிகப் பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். புழக்கத்தில் இருந்தால்தான் பணத்திற்கு மதிப்பு உண்டு என்பது முற்றிலும் உண்மை. பணத்தைச் செலவு செய்யும்போதுதான் அதனால் பயன் உண்டாகிறது. எல்லோருடைய விஷயத்திலும் அப்படித்தான்.

செல்வம் ஒரு சக்தி - முனூபே ஒரு தடவை நான் உங்களுக்கு இதைச் சொல்லியிருக்கிறேன் - அது இயற்கையின் ஒரு சக்தி, அது புழக்கத்திற்கு ஒரு சாதாரணமாக ஓர் இயங்கு சக்தியாக இருக்க வேண்டும். ஓடும் நீர் ஓர் இயங்கு சக்தியாக இருப்பதைப்போல. அது பொருள்களை உற்பத்தி செய்ய இணைத்து உருவாக்க உதவும். பணம் ஒரு வசதியான சாதனம், உண்மையில் அது பொருள்கள் முழு அளவிலும் தாராளமாகவும் புழக்கத்தில் இருக்கச் செய்ய பயன்படும் ஒரு சாதனம் மட்டுமே.

இந்த சக்தி, யார் அதை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவார்களோ அவர்கள் கையில் இருக்க வேண்டும். அதாவது, நான் தொடக்கத்தில் சொன்னதுபோல், ஏதோவொரு வகையில் சொந்த ஆசையையும் எல்லாவிதப் பற்றுகளையும் அறுத்துவிட்டவர்கள் கையில் இருக்க வேண்டும். இதோடு அவர்கள் இப்பூவுலகின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் பரந்த அறிவு விளக்கம் உடையவர்களாகவும் இந்தத் தேவைகளையெல்லாம் இணைத்து உருவாக்குவது எப்படி என்கிற பூரண ஞானமும், இந்தச் சாதனங்களைக் கொண்டு பண சக்தியைப் பயன்படுத்தும் திறமையும் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

இத்துடன் இந்த ஜீவர்களிடம் உயர்ந்த ஆன்மீக ஞானமும் இருந்தால் அவர்களால் இந்த சக்தியைப் பயன்படுத்தி தெய்வ ஆற்றல், சக்தி, அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறனுடையதான ஒன்றை புவி மீது படிப்படியாக உருவாக்க முடியும்.

- அ‌ன்னை

நன்றி

வெப்டுனியா

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது வருமானத்தில் 10 வீதமாவது எனது மக்களுக்கு உதவவேண்டும் என்று தீர்மானித்து அதை செய்துவருகின்றேன்

எனது கண்ணில் படும் எந்த விடயத்தையும் என்னால் முடியுமா என்று ஆராய்வேன்

முடியாதபோது

அதை எனது நண்பர்கள் உறவினர்களின் கண்களுக்கு கொண்டு செல்வேன்.

அதேநேரம் அப்படி ஏதாவது செய்தால் அல்லது செய்ய முடியாது போனவைகளை

அதை மற்றவர் பார்க்க எங்காவது பதிந்து விடுவேன்

அதற்கு காரணம்

நான் எனது நண்பர்கள் உறவினர்களை அடுத்து வேறு யாராவது இதை செயலாக்கட்டும் அல்லது இப்படி தாங்களும்செய்யமுயலட்டுமே என்றே.

அதை ஒருவராவது கணக்கிலெடுத்து செய்தால்........... என்ற நம்பிக்கையில்.

ஆனால் இனி அது சரியல்ல என்று முடிவெடுத்துள்ளேன்

காரணம் அதற்கு தம்பட்டம் என்றும் ஒரு பெயர் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நான் எனது வருமானத்தில் 10 வீதமாவது எனது மக்களுக்கு உதவவேண்டும் என்று தீர்மானித்து அதை செய்துவருகின்றேன்

எனது கண்ணில் படும் எந்த விடயத்தையும் என்னால் முடியுமா என்று ஆராய்வேன்

முடியாதபோது

அதை எனது நண்பர்கள் உறவினர்களின் கண்களுக்கு கொண்டு செல்வேன்.

அதேநேரம் அப்படி ஏதாவது செய்தால் அல்லது செய்ய முடியாது போனவைகளை

அதை மற்றவர் பார்க்க எங்காவது பதிந்து விடுவேன்

அதற்கு காரணம்

நான் எனது நண்பர்கள் உறவினர்களை அடுத்து வேறு யாராவது இதை செயலாக்கட்டும் அல்லது இப்படி தாங்களும்செய்யமுயலட்டுமே என்றே.

அதை ஒருவராவது கணக்கிலெடுத்து செய்தால்........... என்ற நம்பிக்கையில்.

ஆனால் இனி அது சரியல்ல என்று முடிவெடுத்துள்ளேன்

காரணம் அதற்கு தம்பட்டம் என்றும் ஒரு பெயர் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று எம் மக்கள் உள்ள நிலையில் நீங்கள் செய்பவற்றை வெளியில் சொல்ல வேண்டியது அவசியம். மற்றவர்களும் ஒரு உந்துதலால் தாங்களும் செய்ய வேண்டும் என யோசிப்பார்கள். அனுபவத்தில் கண்டது. நேசக்கரமே ஒரு நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதவ வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் தானாகவே வர வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.