Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் தடை

Featured Replies

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்து சிறப்புத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக கடந்த 1991 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டுள்ள தடையை, இந்திய அரசு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. இதன்படி கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையடுத்து, மத்திய தீர்ப்பாயம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது.

டெல்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம் ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் சென்னை, உதகமண்டலம், டெல்லியில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள நிலையில், இந்தியாவில் அந்த இயக்கத்தின் மீதான தடையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என,தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் வாதிட்டனர்.

இவர்கள் தவிர மேலும் பலரது கருத்துக்களை தீர்ப்பாயம் கேட்டறிந்தது.

இந்நிலையில் இத்தீர்ப்பாயத்தின் நீதிபதி விக்ரம் ஜித் சென் முன் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது செல்லும் என கூறி, அத்தடை நீட்டிப்பை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார் அவர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் ரகசியமாக இயங்கி வருவதாக மத்திய உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை நீட்டிப்பை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

http://www.thedipaar.com/news/news.php?id=20928

  • கருத்துக்கள உறவுகள்

அழிந்த இயக்கத்துக்கு தடை விதிக்கும் நாடாக இந்தியா விளங்குவது " பயந்த பீச்சாண்டி தனத்தை" :lol: காட்டுகிறது.இந்த லட்சணத்தில் பாகிஸ்தானையும் ,சீனாவையும் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று பார்ப்போம். இலங்கை கறிவேப்பிலையாக இந்தியாவை பாவித்ததை இப்போது உணர்ந்திருப்பார்கள்.இன்னும் நிறையவே காத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யார் பயங்கரவாதிகள்??

  • கருத்துக்கள உறவுகள்

அழிந்த இயக்கத்துக்கு தடை விதிக்கும் நாடாக இந்தியா விளங்குவது ".

முதலில் அழிந்த இயக்கம் என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றோமா..?

நாம் ஏற்காத ஒன்றை

ஆசியாவின் வல்லரசை ஏற்கும் படி சொல்வது பொருத்தமா....?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அழிந்த இயக்கம் என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றோமா..?

நாம் ஏற்காத ஒன்றை

ஆசியாவின் வல்லரசை ஏற்கும் படி சொல்வது பொருத்தமா....?

தோழர் விசுகுக்கு இந்த பாடல் :lol:

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_7/poovukkul%20poogambam/3546.mp3&OBT_fname=3546.mp3

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான தடையை 2 ஆண்டுகள் நீட்டித்தது செல்லும் : தீர்ப்பாயம்

புதுடெல்லி, நவ.12,2010: இந்தியாவில் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதால், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை, டெல்லி, சென்னை மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான தீர்பாயத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணையின் முடிவில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதி விக்ரம்ஜித் சென், "விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் எஞ்சியுள்ளவர்கள், இந்திய மண்ணை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

எனவே, அந்த இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, கடந்த மே 14 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு உறுதி செய்யப்படுகிறது," என்றார் நீதிபதி.

புலிகள் மீதான தடை நீட்டிப்பை ரத்து செய்யக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் தீர்ப்பாயத்தில் வாதிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன்

இந்த தடை நீடிப்பு பல விடயங்களை சொல்லுகின்றது.

முதலாவதாக இந்தியாவின் வங்குரோத்து வெளிவிவகார அரசியல் கொள்கை. சீனாவின் வளர்ச்சி அதன் இந்திய அயல்நாடுகளில் இராணுவ பொருளாதார ஆதிக்கம் இந்தியாவின் இருப்பையே கேள்விக்குறியாக்குகின்றது. இந்த வேளையில் இன்னும் இந்தியா ஏன் இதை தெரிந்தும் கண்ணை மூடுவது புதிராக இருக்கின்றது.

வெளியில் இன்னும் புலிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என்றால் அந்த இருப்பிற்குரிய மூல சிங்கள கொள்கைகள் இருப்பதே காரணம். இந்திய அரசு தமிழர்களை பலமுறை அரசியல் தீர்வு பெற்றுத்தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டது. இது இந்திய அரசின் நயவஞ்சகத்தை இல்லை அதன் கையாலாகாத வல்லரசு பலத்தை காட்டுகின்றது.

இன்னொன்றை இந்தியா சொல்லுகின்றது. தான் ஒட்டு மொத்த தமிழினத்தையும் அடிமையாக வைத்திருக்க இந்த தடை தேவை என்பதே அது.

Edited by akootha

உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நீதியை விற்றுவிட்டார்.

வாழ்க காந்தி தேசம்!

இந்திய பயங்கரவாத அரச இயந்திரங்களிடம் இருந்து இதற்குமேல் எதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்திய பயங்கரவாத அரச இயந்திரங்களிடம் இருந்து இதற்குமேல் எதையும் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அழிந்த இயக்கம் என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றோமா..?

நாம் ஏற்காத ஒன்றை

ஆசியாவின் வல்லரசை ஏற்கும் படி சொல்வது பொருத்தமா....?

ஏற்கிறோமோ இல்லையோ என்பதல்ல பிரச்சனை.அவர்கள் இல்லை என்பதை நாமும் ,வி.புலிகளும் அடக்கி வாசிப்பதன் மூலம் உலகெல்லாம் உள்ள "பயங்கரவாதிகள்" தடையை எடுக்க வேண்டும்.இல்லையேல் இருக்கும் சிலரையும் காட்டிக்கொடுத்து,இதனை சாட்டாக வைத்து இலங்கை அரசு அவசரகால சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைத்து தமிழ் மக்களை வதைக்கிறது. மேலும் போராடி இறந்த போராளிகள்,சரணடைந்த 10000 க்கு மேற்பட்ட போராளிகளை தவிர வேறு யாரும் எஞ்சி இருப்பார்கள் என நான் (தமிழீழத்தில்) நினைக்கவில்லை.

ஒரு பேச்சுக்கு புலிகள் இருக்கிறார்கள் என்பதால் என்ன லாபம் எமக்கு கிடைக்கப்போகிறது?. மீண்டும் அவர்கள் எல்லாம் செய்வார்கள் நாம் "மானாட மயிலாட" பார்ப்போம் யுகத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப்போகிறோமா?

இன்று மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்திற்கு தேவை இல்லை.

1970 களில் ஆயுதப்போராட்டம் தொடங்கியபோது எமது நியாயம் சர்வதேசத்திற்கு தெரிந்திருக்கவில்லை. புலத்தில் பலம் இருக்கவில்லை.

"ஓடு மீன் ஓடி உறு மீன் வரும்வரை வாடி இருந்ததாம் கொக்கு" : மாறிவரும் உலக அரசியல் பாதைகளில் மாற்றம் வரும். அதுவரை அந்த மாற்றத்துக்கும் எமது ஒற்றுமையை கட்டி காத்து ஒரு பொருளாதார அரசியல் பலமாக இருக்க வேண்டும்.

காலம் கனியும்.

இலவுகாத்த கிளியாக இல்லாமல் இருந்தால் சரி.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.