Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ. நா. சொல்கின்றது "படங்கள்" சான்றாகலாம்

Featured Replies

வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் வெளியான புதிய படங்களை போர்க்குற்ற ஆதாரங்களாக பயன்படுத்தலாமா என "இன்ரர் சிட்டி பிரஸ்" ஊடகவியலாளர் கேட்டபோது தாம் அவற்றை ஆதாரங்களாக பார்ப்போம் என ஐ.நா. அதிகாரி பார்ஹான் ஹாக் தெரிவித்தார்.

இந்த ஒளிப்பதிவில் 18 ஆம் நிமிடத்தில் இருந்து இந்த பதிவை (கேள்வி - பதில்) பார்க்கலாம்

http://www.unmultimedia.org/tv/webcast/2010/11/daily-press-briefing-16.html

வரும் தை மாதம் சூடானில் (டார்பூர் - Darfur எனவும் ஒரு நகரத்தின் பேரில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் ) ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதன் முடிவில் ஐம்பது வீதம் + ஒரு வாக்கு கிடைக்கும் பொழுது தெற்கு சூடான் தனியே பிரிந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

Southern Sudanese independence referendum, 2011: http://en.wikipedia....eferendum,_2011

இதற்கு தற்போதைய சூடானின் அரசு இணங்கியதுக்கு ஒரு காரணம் நடந்த இன படுகொலைகளும் அதை விசாரித்து அதன் மூலம் அந்த நாட்டு அதிபர் யுத்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதும் ஒரு காரணம்.இதற்கு பின்னால் அமெரிக்காவும் உள்ளது.

எனவே நாமும் முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்களை ஐ. நா. க்கு மார்கழி 15 முன் அனுப்பி வைப்போம். இது ஒரு மக்கள் வாக்கெடுப்புக்கும் இட்டுச்செல்லும் என நம்புவோம்.

இதன் முழுக்கட்டுரை ஆங்கிலத்தில்

http://www.innercitypress.com/banex3sri111210.html

===================================================

போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில் கோட்டை விட்டு விடுவோமா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=77513)

யுத்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சூடானின் அதிபர்

The Darfur Genocide: A Present Reality

Edited by akootha

  • தொடங்கியவர்

சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதா அல்லது இல்லையா என்பது நிபுணர் குழுவைச் சார்ந்த விடயம் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி குரல்தரவல்ல அதிகாரி Farhan Haq தெரிவித்துள்ளார்.

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள், மனிதவுரிiமை அமைப்புக்கள் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியன வெளியிட்டு வருகின்றன.

இப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை கடந்த புதன்கிழமை அல் ஜசீரா தொலைக்காட்சியும் வெளியிட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோன்று, சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த மாதம் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த போது இப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை உலகத் தமிழர் பேரவையும் வெளியிட்டிருந்தது.

இந் நிலையில், இப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த இத்தகைய ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு ஏற்றுக் கொள்ளுமா என இன்னர் சிற்றி பிரஸ் Farhan Haqயிடம் கேட்டிருந்தது.

இன்னர் சிற்றி பிரஸின் இக் கேள்விக்கு பதில் அளித்த Farhan Haq, இத்தகைய ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதா அல்லது இல்லையா என்பது நிபுணர் குழுவைச் சார்ந்த விடயம் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சாட்சியம் அளிப்பது தொடர்பில் நிபுணர்கள் குழுவின் அறிவிப்பு இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் இணையத்தளத்தில் வெளியிடப்படாமை குறித்தும் இன்னர் சிற்றி பிரஸ் விசனம் தெரிவித்துள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={2C53884E-C731-4665-80CF-A15E13C03BE1}

1000 புகைப்படங்கள்

100 காணொளி

இதைவிட வேற என்ன ஆதாரம் வேணுமாம் இந்த நாசமறுத்து போவனுகளுக்கு?

  • தொடங்கியவர்

-- உறவுகளே இல்லாமல் அழிக்கப்படவர்கள் சார்பில் நாங்களே உறவுகளாகவும்;

-- அமைப்புக்களாகவும்;

-- தனிப்பட்ட ரீதியிலும்;

படங்களையும் , காணமல் போனோர் விபரங்களையும் அனுப்புவோம்.

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடவேண்டாம் !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.