Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதல்

‐ பத்மினி – மற்றும் சிதம்பரநாதன் மயிரிழையில் தப்பித்தனர்‐ GTN செய்தியாளர்‐

ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சிரேஸ்ஸ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் ஆகியோர் மயிரிழையில் தப்பியுள்ளனர்:‐

இன்று இரவு கந்தர் மடம் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் அலுவலகத்தில் ஜே.வீ.பியின் முக்கியஸ்த்தர்கள் உரையாடிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்ஹந்தும்நெத்தி உள்ளிட்ட நால்வர் யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணமால் போனவர்கள் தொடர்பில் நாம் இலய்கையர் அமைப்பு நாளைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த இருந்தது. இதற்கு காணாமல் போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஆதரவு உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஆதரவை இந்த அமைப்பு வேண்டியிருந்தது என ஜீரீஎன் செய்தியாளர் கூறியுள்ளார். இது குறித்து கலந்துரையாடுவதற்கு பத்மினி சிதம்பரநாதனின் அலுவலகத்திற்கு ஜேவீபீ தரப்பினர் சென்றுள்ளனர். இங்கு நட்பு ரீதியாக பத்மினி மற்றும் கணவர் சிதம்பரநாதன் ஆகியோருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது 6ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பத்மினி மற்றும் சிதம்பரநாதன் ஆகியோர் ஓடி கதவொன்றை பூட்டி இதில் இருந்து தப்பித்துக்கொண்டனர். எனினும் தான் நாடாளுமன்ற உறுப்பினர் என அறிமுகப்படுத்திய போதிலும் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதுடன் அவரது உதவியாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் படுகாயம் அடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=32419&cat=1

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த கோத்தபாயவின் அணி

சேதமேதுமின்றி வீடு திரும்பியது...

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த கோத்தபாயவின் அணி

சேதமேதுமின்றி வீடு திரும்பியது...

ஐயா!!!! விசுகு அவர்களே!!!

ஏன் டக்ள்ஷ் குறூப் எங்கே???

ஐயா!!!! விசுகு அவர்களே!!!

ஏன் டக்ள்ஷ் குறூப் எங்கே???

அவர்கள் தான் இவர்கள்,36_1_19.gif

சிங்களத்தில் ஒரு பழமொழி ஒண்டு இருக்கு.. (தமிழர்களை) ஓடும்வரை அடித்தல் மட்டுமே தமிழருக்கு விளங்கக்கூடிய மொழியெண்டு..

Edited by Panangkai

ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதல்

எல்லாம் நன்மைக்கே

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இலங்கையர் அமைப்புக்கும் பத்மினி சிதம்பரநாதனுக்கும் என்ன தொடர்பு?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா!!!! விசுகு அவர்களே!!!

ஏன் டக்ள்ஷ் குறூப் எங்கே???

அவர் எப்போ செயலாற்றுபவர்களை வைத்திருந்தார்.....?

என்னிடம் உள்ளவர்கள் எல்லோரும் ஏதாவது உழைக்கலாமா என்று சேர்ந்த கூட்டம் என்று அவரே சொல்லியுள்ளார்.

அவருடன் படுத்துக்கிடப்பதெல்லாம் யாரென்று அவருக்கே தெரியாதபோது...

அவருடைய ஆட்கள் எவருடைய வேலையை செய்கிறார்கள் என்று அவரை நொந்து என்ன பயன்.....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nov 14, 2010 / பகுதி: செய்தி /

பத்மினி சிதம்பரநாதனுடன் பேச்சுகளை நடத்திய ஜே.வி.பியினர் மீது தாக்குதல்: பலர் படுகாயம்

யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் வீட்டில் பேச்சுக்களை நடத்திய ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட குழு மீது யாழில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

வடக்கில் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை (15) மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று யாழ் வந்திருந்தது.

அவர்கள் இன்று (14) மாலை 6.30 மணியளவில் இது தொடர்பில் யாழ்மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனுடன் பேச்சுக்களை மேற்கொண்டிருந்தவேளை அங்கு ஐந்து உந்துருளிகளில் நுளைந்த ஆயுததாரிகள் ஜே.வி.பி உறுப்பினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெறவிருந்த காணாமல்போனவர்களின் உறவினர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும் நோக்கத்துடனே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜே.வி.பி உறுப்பினர்கள் தம்மை அடையாளம் காண்பித்த பின்னரும் அவர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பத்மினி சிதம்பரநாதனும், அவரது கணவரும் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டதால் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர்.

சிறீலங்கா அரசினாலும், ஈ.பி.டி.பி ஆயுததாரிகளாலும் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இன் நினைவுவிழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர்கள் பத்மினி வீட்டுக்கு வந்து பேச்சுக்களை மேற்கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து கந்தர்மடம் பகுதியில் பதற்றம் நிலவுவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இலங்கையர் அமைப்புக்கும் பத்மினி சிதம்பரநாதனுக்கும் என்ன தொடர்பு?

காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் எந்த ஒரு தமிழ் அமைப்பும், அக்கறை செலுத்தாத...பயந்த நிலையில், இருக்கும் போது.....

பத்மினி சிதம்பரநாதன், தனது தனிப்பட்ட முயற்சியால் ஜே.வி.பியுடன் இணைந்து போராட்டம் நடத்த முற்பட்டது பாராட்டக் கூடியதே.....

யார்மூலம் அரிசி குத்தப் படுகின்றது என்று பார்ப்பதை விட, இப்போ.... அரிசி கிடைத்தால் காணும் என்று சிந்திக்க வேண்டும்.

ஏன் யாழ்ப்பாணம் வந்தீர்கள் என சிங்களத்தில் கேட்டுத் தாக்கினார்கள்!

மோட்டார் சைக்கிளில் வந்த பலர் ஏன் யாழ்ப்பாணம் வந்தீர்கள் என சிங்களத்தில் கேட்டுத் தாக்கினார்கள் என ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராஜ லலித் குமார் தெரிவித்தார். இன்று மாலை ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ராஜா லலி;த் குமார் மற்றும் லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் லியனகே ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கூறுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாம் இலங்கையர் என்ற அமைப்பின் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 10 பேர் இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இத்தாக்குதல் தொடர்பாக யாழ். பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன் சிகேராவிடம் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெட்டியின் யாழ் விஜயம் தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார். நாளைய ஆர்ப்பாட்டம் குறித்தும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியின் கருத்தைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை

மூலம் தமிழ் மிரர்

"ஏன் டக்ள்ஷ் குறூப் எங்கே???"

கோத்தா அடிக்க இவர் டக்ளஸ் மனிதாபிமான உதவிகளை வழங்கினார் :unsure::lol::D:rolleyes: :rolleyes: :rolleyes:

http://www.tamil.dailymirror.lk/index.php/component/content/article/87---main/11156-2010-11-14-18-40-22.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.