Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு : தமிழ்க் கூட்டமைப்பு மகிழ்ச்சி _

Featured Replies

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்றுக் கொள்வதையிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிக்கின்றது. அதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காண்பது மற்றும் வடக்குகிழக்கு பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏலவே கலந்துரையாடப்பட்டதற்கமைய தங்களுடன் ஒத்துழைத்து செயற்படவும் தயாராகவுள்ளது.

மேலும் இவ்விவகாரங்கள் தொடர்பில் எமக்கு அளித்த உத்தரவாதங்களுக்கு அமைய அவசியமான பொறிமுறை ஒன்றை தாங்கள் சாத்தியமானளவு விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். _

வீரகேசரி நாளேடு 11/19/2010 9:27:10 AM

சாத்தியமானளவு விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். _

நாங்களும் நம்புவோம்,, ஆனால் நடக்காது என்று தெரியும் இருந்தாலும் உறுதியாக நம்புவோம் ..... :lol:

"இவ்விவகாரங்கள் தொடர்பில் எமக்கு அளித்த உத்தரவாதங்களுக்கு அமைய அவசியமான பொறிமுறை ஒன்றை தாங்கள் சாத்தியமானளவு விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்."

இப்படியான அரசியல் அணுகுமுறையை கூட்டமைப்புக்கு பின்னால் நின்று சொல்லுவது இந்தியாவாகத்தான் இருக்கும். அந்த நாட்டின் அட்டவணைப்படி தான் இவர்கள் இயங்குகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் சனாதிபதி பதவி ஏற்புக்கு 'தமிழ் தேசிய கூட்டமைப்பு வாழ்த்து. இது எப்படி இருக்கு? முள்ளி வாய்க்காலில் 50000 ஆயிரம் தமிழர்களை கொன்ற முப்படைக்கும் பொறுப்பான மஹிந்த ராஜபக்சா , நீண்ட ஆட்சி செய்ய வாழ்த்துகிறார் தலைவர் சம்பந்தர்.

மகிந்தர் சனாதிபதி பதவி ஏற்புக்கு 'தமிழ் தேசிய கூட்டமைப்பு வாழ்த்து. இது எப்படி இருக்கு? முள்ளி வாய்க்காலில் 50000 ஆயிரம் தமிழர்களை கொன்ற முப்படைக்கும் பொறுப்பான மஹிந்த ராஜபக்சா , நீண்ட ஆட்சி செய்ய வாழ்த்துகிறார் தலைவர் சம்பந்தர்.

இவர்கள் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தால் நிச்சயமாக ஒரு பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த கும்பலுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ் மக்களை மிகவும் இழிநிலைக்கு சம்பந்தன் தள்ளியுள்ளார்.

இந்த ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடந்தபோது (சரியோ பிழையோ) சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த சம்பந்தர், தற்போது தனது தலையில் தானே மண்ணைப் போட்டுள்ளார்.

சாணக்கிய அரசியல் செய்யும் பக்குவம் இல்லை. முதுகெலும்பும் இல்லை. ஹக்கீமுக்கு கிடைக்க இருக்கும் மந்திரிப் பதவி மன சஞ்சலங்களை உருவாக்கியிருக்கும். வேறு வழியும் தெரியாததால் வீசுவதை பொறுக்கிக்கொள்ள சம்பந்தன் தலைமையிலான கூத்தமைப்பினர் இந்திய பிச்சைக்கார பாணியில் துடிக்கிறார்கள் போல தெரிகிறது.

மானம், ரோஷம், சூடு, சொரணை கெட்ட கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

:) இந்தியா சொல்லுவதுக்கேற்ப ஆடும்வரையிலும் தமிழ்க்கூட்டமைப்பிடம் சூடு சொரனை ,மானம் ரோசம் எதுவுமே இருக்கப்போவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த சாணக்கியமெல்லாம் இந்தியாவிடம் ஓடுவதும், பின்னர் இந்தியா குலையடித்து மகிந்தவிடமே திருப்பி அனுப்புவதும்தான். இதைத்தான் அப்போதிருந்தே செய்துவருகிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிப்படைய ஆராயும் எவருக்கும் இவர்களது இன்றைய நடத்தை ஆச்சரியமாக இருக்கப்போவதில்லை.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பில் கூட்டணியும் அமிர்தலிங்கமும் நடந்துகொண்ட விதமே போதும் அவர்களை யாரென்று அறிந்துகொள்வதற்கு. புலிகள் பலமாக இருந்த காலத்தில் மக்களின் செல்வாக்கிற்குப் பயந்து புலிகளுக்கு ஜால்ரா போட்டார்கள். இன்று புலிகளில்லை, மகிந்தவுக்கும் இந்தியாவுக்கும் போடுகிறார்கள். நாளை யாருக்கோ, எல்லாம் சம்பந்தருக்குத்தான் வெளிச்சம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.