Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதில் ஓர் காதல் பரிசு....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதில் ஓர் காதல் பரிசு.....

கவிதை - இளங்கவி

சேர்ந்த உதடுகளுக்கிடையில்

சீனப் பெருஞ் சுவராய்

அவளின் தலைமுடிகள

அவன் உதட்டை உறுத்தின........

அவள் மூச்சின் வெப்பம்

மூச்சால் வெளிவர மறுத்து

அவள் கண்களூடே வெளிவர

அவன் கண்களோ- அவளின

அனல் மூச்சின் வெப்பம் தாளாமல்

அதைத் தணிப்பதற்கு

வேறு இடம் தாவியது.......

அங்கே குளிரும் அறையில்

கொதி மலைகளின் தழுவல்.....

இரத்த நாடிகளின் வேகம்

அதன் உச்சத்தில் இருக்க...

இரத்த நாளங்களோ

அதற்குப் பக்கத் துணையிருக்க....

போதாது என்று-

அவன் ஏக்கம் கூடவும்.....

போதும் வரை போராடு என்று

அவளின் உணர்வும் சேரவும்....

அந்த அறையில்

சில நிமிடப் புயல்கள்....

சில கணங்கள் அமைதி....

பல நிமிட அணுயுத்தம்

இறுதியில் அமைதியாய்ப் போனது

அவ்வுடல்கள் சங்கமம்.........

கொதித்த உடல்

குளிர்வதாய் உணர்வொன்றும்.....

கொந்தளித்த கடல்

அமைதியான உணர்வுமாய்..

சங்கமித்து சத்தமின்றி கிடந்தன.....

------------

நாட்கள் மாதங்களாக

போர்க்கள் பூமியில்

முளைத்த பூச்செடியில்

மொட்டொன்று வந்து

அடிவயிற்றை தட்டுவதாய்

ஓர் உணர்வு.......

கடலில் முத்துக்குளித்து

அவள் கையில் கொடுத்ததாய்

அவனுக்குச் சந்தோசம்.....

அவன் தந்த முத்தை

தன் வயிற்றில்

பத்திரமாய் வைத்ததற்காய்

அவள் மனதில் சங்கீதம்..........

--------------

பத்துமாதம் வரை

அந்த பாசத்தேரின்

நேசத்துக்காய் இருந்தவன்....

அன்னைமுகம் காணும் அவசரத்தில்

அடி வயிற்றில்

ஆழமான ஓர் உதை

ஆனாலும் அவளுக்கு அது

இதமான ஓர் வதை.....

மொட்டைப் பார்க்க துடித்தது

அந்த ரோஜா....

அன்னைப் பூவை

முகரத்த துடித்தது

மலராத அம்மொட்டு.......

---------------

அவளுக்குப் பிரசவம்......

கால்கள் நடுங்க

கைகளோ கட்டிலைப் பிடுங்க...

இனிமையான குரலுக்கு

சொந்தக்காரரக் குயில்

உச்சஸ்தாயியில் கத்துகிறது.....

காதலுக்குப் பரிசு

இவ்வளவு கடுமையானதா......,!

அவன் மனம்

அதைக் கண்டு துடிக்கிறது.....

ஒரு மலரின் வேதனையில்

புதிதாய் ஓர் மொட்டு.....

அவலத்தின் கணங்களும்.....

அங்கே இரத்தக் குளங்களும்....

பின்னர் பிறக்கிறது சின்னச்சிட்டு......

--------------

வலி தந்து பிறந்த சிட்டு.....

வந்தபின் கத்துகிறான்......

வலி தாங்கிப் பெற்றவள்

வந்தமொட்டைக் கொஞ்சுகிறள்.....

ஆனாலும் தன்

காதல் தேவதையின்

பிரசவ வலியின் வேதனைகள்

அவன் குரலைக் கீறிவிட

அவன் குரலோ கரகரத்தது......

அடுத்த கணம் அவன்

மனமும் துடித்தது........

--------------

அடேய் ராஜபக்க்ஷ.

எத்தனை வலிகள் தாங்கிப் பெற்றெடுத்த

எம் சிசுக்களை அழித்தாய்....

அதன்பின்னால் இருந்த

எததனை காதலை அழித்தாய்.....

எத்தனை மனங்கள்.....

எவ்வளவு மானங்கள்....

எவ்வளவு சோகங்கள்.....

நமக்கு ஏனிந்த துயரங்கள்......

அடக்குமுறை ஆட்சிசெய்து

அதிகாரத் தோரணையில்

நான் வாழும் நாட்டில்

நீ வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும்

என் எதிர்ப்பு இருக்கும்

உன் மொதத்தக் குழாமும்

கூண்டில் ஏறும் வரை

நம் போராட்டம் நின்றுவிடாது........

உன் அதர்மமும் எங்க்களை

என்றுமே வென்று விடாது....

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

அழகான் காதல் பரிசாய் தொடங்கி ...இறுதியில் அவலதுக்குளான சாதரண குடிமகன்

அரசன்( என்று சொல்லபடுகிற ) மீது வெறுப்பை காறி

உமிழ்ந்து வஞ்சம் தீர்ப்பேன் என சபதம் எடுக்கிறது.கொதிக்கும்

எரிமலை குமுறல் போல....... . பாராட்டுகள. அழகான் கவிதை .

  • கருத்துக்கள உறவுகள்

விரசமாய் தொடங்கினாலும்

விடுதலைக்கு வழி சொல்கிறது

நன்றி ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.