Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்சவிற்கு கருத்துச் சுதந்திரத்தை விலைபேசும் ஜீவன் ஹூல்

Featured Replies

உலகின் மிகக் கொடுமையான சர்வாதிகாரிகளில் ஒருவருக்குப் தனது பாசிசக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தல் என்பதைக் கருத்துச் சுதந்திரத்தின் தலையங்கத்தில் நியாயப்படுத்தலாமா?

கொல்லப்படுபவனும் கொலையாளியும் சமமான உரிமை கொண்டவர்களாக கருதமுடியுமா??

முதலாளித்துவம் வழங்கும் குறைந்தபட்ச ஜனநாயகங்களின் அடிப்படையிலேயே சிறைக்குள் வாழவேண்டிய குற்றவாளி, சமூகவிரோதி, மக்களின் பெயரால் உலாவர முடியுமா???

ஆம் என்கிறார் யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முக்கிய பொறுப்பிற்கு தன்னை நியமிக்கக் கோரும் ரட்ணஜீவன் ஹூல்.

ஒக்ஸ்போர்ட் யூனியனின் மகிந்த ராஜபக்சவைப் பேச அனுமதி மறுத்தமை கருத்துச் சுதந்திர மறுப்பாகும் என்கிறார். ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்தை நிறுவத் தவறிவிட்டது என்கிறார். முன்னதாக கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவில் சார்சியமளித்த பேராசிரியர் ஹூல், டக்களஸ் தேவானந்தா ஜனாதிபதி ஆகியோரைப் பாராட்டியிருந்தார்.

வடகிழக்கு இலங்கைப் புலனாய்வுத்துறையின் ஆட்சிக்குள் இருக்கிறது என்கிறது ஜே.வி,பி. மகிந்த ராஜபக்ச அப்படி இருப்பதெல்லாம் நியாயமானது தான் என்கிறார். இனச்சுத்திகரிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் பெயரால் நியாயப்படுத்துகிறது இலங்கை அரசு. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் சாட்சியின்றிக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் இரத்தவாடையை இன்னமும் சுவாசிக்க முடிகிறது.

இவை அனைத்தையும் மீறி பாழாய்ப்போன தனது துணைவேந்தர் பதவிக்காக மகிந்த ராஜபக்சவிற்கு கருத்துச் சுதந்திரம் கோருகிறார் ரட்ணஜீவன் ஹூல்.

ஒக்ஸ்போர்ட் உரை நிறுத்தப்பட்டதான சிங்கள் தமிழ் இனவாதச் சக்திகளை வலிமைபெறச் செய்யும் என்று மேலும் சிலாகிக்கிறார் அவர். திட்டமிட்ட குடியேற்றங்கள், திடீரென முளைக்கும் பௌத்த விகாரைகள், காணாமல் போகும் மனித உரிமையாளர்கள் – பத்திரிகையாளர்கள், கொல்லபடும் கைதிகள், பௌத்த சிங்கள் இனவெறி உரைகள் இப்படி அனைத்தும் இனவாதத்தைத் தூண்டுவது பேராசிரியர் ஹூலுக்குத் தெரியாமல் போனது அவமானம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராவதற்காக இலங்கையின் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் நலன்களை அடகுவைத்திருக்கிறார்.

ஏற்கனவே ஊழல் சகதிக்குள் அமிழ்ந்திருக்கும் பல்கலைக்கழத்தின் எதிர்காலம் துயர்படிந்தாகவே காணப்படுகிறது. மறுபடி மறுபடி வியாபாரிகள் தமது சொந்த நலன்களுக்காக மக்களின் நலன்களை விற்பனைசெய்கிறார்கள்.

http://www.eelampress.com/2010/12/8401/

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தில் புத்திசீவிகள் என்ற போர்வையில் உலா வரும் சில ஜென்மங்கள் இனத்துக்கே சாபக்கேடு.

இது துரையப்பா தொடங்கி கூல் வரை தொடர்கிறது.

சந்திரிக்காவிற்கு ஒரு சிறீதரன்.. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமைகள் அமைப்பு வைச்சு பிழைப்பை ஓட்டினான்..

இப்ப இவர் கூல்.

இவர்கள் பட்டம் பெற்றது.. ஒரு துறையில்.. பேசுவதோ அரசியல்... ஆசையோ பதவி.. விலையோ ஒட்டு மொத்த இனத்தின் அழிவு.

இதனால் தான் இந்த ஜென்மங்களை துப்பாக்கியால் எதிர்கொள்ள வேண்டி வந்தது.

இப்படி ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனத்துக்கு உழைக்கிற அனைவரும்.. துப்பாக்கியால் அழிந்ததே வரலாறு.. அது காந்தியில் இருந்து நீலன் திருச்செல்வம் வரைக்கும் வரும்.

இவர்களுக்கு தமிழர்கள் என்ற அடையாளம் வியாபாரத்துக்கான பதவிக்கான ஒரு முதலீடு. அவ்வளவே.

  • தொடங்கியவர்

இந்த "படித்த", "பட்டம் பெற்ற", "மனித உரிமை பேசும்" மேதாவிகளை துப்பாக்கி தவிர்ந்த ஏனைய முறைகளில் எதிர்கொள்ள வேண்டும். அது ஒரு சனநாயக முறையாக இருக்க வேண்டும், இதன் மூலம் மட்டுமே இவர்களின் துரோகத்தனத்தை முழுமையாக வெல்லலாம்.

"யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முக்கிய பொறுப்பிற்கு தன்னை நியமிக்கக் கோரும் ரட்ணஜீவன் ஹூல்" - ஒற்றையாட்சி முறை இல்லாமல் போகவேண்டும், அதுவரை மகிந்தரே நியமிக்கலாம்?

மகிந்தரையும் ஈரான், வட கொரியாவின் அதிபர்களுடன் ஒப்பிட வைக்கப்படல் வேண்டும். அப்போது இந்த ஒட்டுண்ணிகளின் சாயமும் வெளுத்துப்போய் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கருத்துக்களை இவர் இப்போ அள்ளி எறிவதன் நோக்கம் தனது இரண்டாம் நிலையில் (வாக்களிப்பில்) இருந்து மகிந்தவின் பிரத்தியேக கட்டளை மூலம் தனது பதவியை பெற்றுக்கொள்ள நாக்கை தொங்கப்போடும் படித்த சுயநலவாதி.புலிகள் போன பின் புற்றீசல்களாக தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் கூட்டத்தில் இவரும் ஒருவர்.

இவருடைய விசிறிகள் யாழில்(களம்) இன்றுமுள்ளனர். :D

Edited by nunavilan

கூழை ஏசாதீர்கள்???? ... அது யாழ் துணை வேந்தர் பதவிக்காக குத்திக்கரணம் அடித்துக் கொண்டிருக்கிறது!!

... அங்கு அத்தியடிக்குத்தியின் கையாளுக்கே(தற்போதைய துணை வேந்தர்), குத்தியின் ஆதரவாம்!!! ... அதை விட கூழுக்கு, மகிந்தவின் வலதுகரமும், ஏசியன் ரிபியூன் கே.ரி இராஜசிங்கமும் எதிர்ப்பாம்!!! ... கூழின், தற்போதைய ஆதரவாளர்கள் கொன்ஸன்ரைனும்/ஜெயபாலன் கூட்டும், கேபியும் ஆதரவாம்!!! ... ஒட்டுக்குழுக்களிடையே பலப்பரீட்சை!!! எந்த ஒட்டுக்குழு இறுதியில் மகிந்தவின் அரவணைப்பை பெறப்போகிறது என்பதில்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.