Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிக்கப்பட்ட எமது 150 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தாருங்கள் - பட்டிப்பளை மக்கள்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010

பட்டிப்பளை,பச்சைக்கொடி,சுவாமிமலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிழியாமடு கறுவாசோலை கண்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 150 ஏக்கர் காணிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து காணி உரிமையாளர்களுக்கு இவ்வருட செய்கை பண்ணுவதற்கு குத்தகையைப் பெற்றுக்கொடுப்பதுடன், தொடர்ந்து காணியுரிமையாளர்களுக்கு காணியினை மீட்டு வழங்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள மகஜரில் தெரிவித்துள்ளதாவது;இக்காணிகளுக்கான ஆவணங்கள் அரசினால் அப்போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன. 1986,1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் இப்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தங்களது காணிகளை விட்டுவிட்டு வெளியேறியிருந்தனர்.

சமாதான சூழ்நிலையின் பின்னர் அரச அதிகாரிகள்,மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கையினால் 01.11.2009 ஆம் திகதி முதல் மக்கள் இப்பகுதிக்குச் சென்று தமது விவசாய நடவடிக்கையினை ஆரம்பித்தனர்.

இவ்வேளையில்,தமிழ் மக்களது விவசாயக் காணிகளில் பெரும்பான்மையின மக்கள் உழவு வேலைகளை ஆரம்பித்திருந்தனர். இரு சாராருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. உரிமையாளர்கள், அத்துமீறியவர்களைத் தொடர்புகொண்டபோது இவ்வருடத்துடன் காணியை விட்டுத்தருவதாகக் கூறினர். இதனால் முரண்பாட்டைத் தவிர்க்க விட்டுக்கொடுத்து பொறுத்திருந்தனர்.

2010 காணியுரிமையாளர்கள் விவசாயச் செய்கையினை ஆரம்பித்தனர். எனினும் சில பெரும்பான்மையினர் இரவோடு இரவாக அத்துமீறி நெல்லை விதைத்தனர். இது தொடர்பாக உரிமையாளர்கள் தொடர்புகொள்ளும்போது பிரச்சினை எழுகின்றது.

இது தொடர்பாக காணியுரிமையாளர்கள் 11.11.2010 வக்கியல்ல பொலிஸில் முறைப்பாடு செ ய்தபோது இதனைத் தங்களால் தீர்க்க முடியாது. பிரதேச செயலாளர் மூலம் தீர்க்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இம்மக்களின் நிலைமையினைக் கருத்தில் கொண்டு அத்துமீறலை தடுத்து நிறுத்தி இப்போகச் செய்கைக்காக காணியுரிமையாளர்களுக்கு குத்தகை பெற்றுக்கொடுப்பதுடன், அடுத்த போகச் செய்கைக்கு முன் காணியுரிமையாளர்களாகிய தமிழ் மக்கள் வேளாண்மை செய்ய காணிகளை மீட்டுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பதுடன், குடியிருப்பதற்கு தேவையான நடவடிக்கையெடுக்குமாறும் அக்கடிதத்தில் கோரியுள்ளார்

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.