Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணிலிருந்து விண் நோக்கிப் பாய்ந்த நீர்:யாழ்ப்பாணத்தில் அதிசயம்(படங்கள் வீடியோ இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்த நீர் நவாலியில் சம்பவம் பீதியால் மக்கள் ஓட்டம்

[13 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 7:25 மு.ப இலங்கை]

நவாலி, டிசெ. 13

வயல் நிலத்தில் தேங்கி இருந்த மழை நீர் திடீ ரெனப் பெருஞ் சத்தத்துடன் வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று சுழன்று பாய்ந்தது. இதனைப் பார்த்த மக்கள் "சுனாமி” அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர்.

நவாலி மேற்குப் பகுதியில் நேற்று நண்பகல் நேரம் இந்த அச்சமூட்டும் சம்பவம் இடம்பெற்றது. இது மினிச் சூறாவளியாக இருக்கலாம் என வளிமண்டல வியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரிவித்தார்.

நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளத்துக் கும் இடைப்பட்ட பகுதியில் இந்த அச்சுறுத்தும் இயற் கைச் சீற்றம் இடம்பெற்றது.

""நண்பகல் 12.50 மணியளவில், பெரும் உறிஞ்சு குழல் வைத்து உறிஞ்சுவது போன்ற போன்ற சத்தம் கேட்டது. வழக்கையாற்றுப் படுக்கைக்கு அருகில் இருந்த வயல் நிலங்களில் இருந்த நீர் திடீரென வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று பெருஞ் சுழலா கப் பாய்ந்தது. இதனால் வானத்துக்கும் நிலத்துக்கும் இடையில் கரும்புகை வடிவிலான ஒரு நூல் தொடுப்பு ஏற்பட்டது' என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

""வானில் றொக்கெட் சென்றால் ஏற்படும் அடையாளம் போன்று அது இருந்தது' என்றார்றொருவர்.

சுமார் அரை மணி நேரம் இவ்வாறு தண்ணீர் வான் நோக்கி உறிஞ்சப்பட்டது எனப் பிரதேசவாசிகள் கூறினர்.

சூறாவளி போன்று நீர் வான் நோக்கி இழுக்கப்பட்டதைக் கண்ட, வயல் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதற்றமடைந்து ஓட்டம் எடுத்தனர். அப்பகுதி வீடுகளில் இருந்தவர்களும் பயத்தில் வீதிகளுக்கு விரைந்தனர். சுனாமி ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் மக்கள் இடம்பெயர்வதற்கும் ஆயத்தமாகினர்.

எனினும் துணிச்சல் மிக்க இளைஞர்கள் சிலர் தண்ணீர் வான் நோக்கி இழுக்கப்படுவதை அருகில் சென்று தமது கமெரா மொபைல் போன்கள் மூலமாகப் பதிவு செய்தனர்.

விடயம் காட்டுத் தீ போலப் பரவியதில் சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுண்டாய் பகுதியில் கடல் உள்வாங்கிக் கொண்டதாகவும் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. கொழும்பில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இது குறித்த விசாரிப்புக்களும் வந்தன.

இதற்கு முன்னர் ஒரு போதும் இவ்வாறான இயற்கைச் சீற்றங்கள் இப்பகுதியில் இடம்பெற்றதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த விநோத இயற்கைச் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:

இவ்வாறான சம்பவம் சாதாரணமாகவே இடம்பெறக் கூடியது. இதனை மினி சூறாவளி என்று கூறலாம். கடலிலும் தரையிலும் இது ஏற்படலாம்.

வளிமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இவ்வாறான மினி சூறாவளிகள் ஏற்படுகின்றன. கடந்த இரு தினங்களாக அதிக வெப்பநிலை நிலவியது. அதனாலேயே இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம்.

சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான சூறாவளிகள் உயிர் மற்றும் உடைமைக்கும் சேதங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே மக்கள் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.

uthayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவாலியில் நேற்று நண்பகலுக்குச் சற்றுப் பின்னர் வயல் பரப்பிலிருந்து விண் நோக்கி நீர் உறிஞ்சப்பட்டதை தத்ரூபமாக விபரிக்கும் வீடியோ காட்சி.

thx

http://www.newjaffna.com/

Edited by pirasath20

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட இணைப்பிற்கு நன்றி pirasath20

இரண்டாவது இணைப்பு வேலை செய்யவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

This looks like a mini tornado /twister. Tornado happens in many parts of the world especially in Florida, USA.

Last year, hundreds of houses were blown away and many injured and some were killed in Midlands, UK.

http://en.wikipedia.org/wiki/Tornado

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இருந்து நீர் விண்னுக்கு உறிஞ்சப்படுவதை ஊரில் சொல்லக் கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் பார்க்கவில்லை.

குவீன் சொன்ன மாதிரி மினி ரொர்னாடோ என நினைக்கின்றேன். அநேகமாக அமெரிக்காவில் இது வீடு, கார் எல்லாவற்றையும் தூக்கி வேறு இடத்தில் வைத்து விடும்.

மழை பெய்யும் போது... மீனும் சேர்ந்து விழுவது என்பது, நிலத்திலிருந்து இழுக்கப் பட்ட நீருடன் மேலெ சென்ற மீனே கீழே விழுவது. இணைப்பிற்கு நன்றி பிரசாந்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.