Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 லட்ச ரூபாய்,இரண்டு கார்கள் பெற்றுக்கொண்டு விவாகரத்துக்கு சம்மதித்த ரமலத். பிரபுதேவா,நயன்தாரா நிம்மதி.

Featured Replies

பரஸ்பர விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி லதா மனு தாக்கல் செய்தனர்.

நடிகர் பிரபுதேவாவுக்கும், ரமலத்பேகம் என்கிற லதாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது, பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து சுற்றி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.இந்நிலையில், சென்னை குடும்ப நல கோர்ட்டில் லதா தாக்கல் செய்த மனுவில், "எனது கணவர் பிரபுதேவா, நடிகை நயன்தாராவுடன் சேர்ந்து சுற்றுகிறார். வீட்டுக்கும் வருவதில்லை. மாதச்செலவுக்கும் பணம் தருவதில்லை. அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். அவரை நம்பி தான் நாங்கள் உள்ளோம். எங்களுடன் சேர்ந்து குடும்பம் நடத்த பிரபுதேவாவுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.

அதன்பின், ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், "நடிகை நயன்தாராவை திருமணம் செய்ய பிரபுதேவா உத்தேசித்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார். இவ்வழக்கில், பிரபுதேவா, நயன்தாரா இருவரும் ஆஜராக, சென்னை குடும்ப நல கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இருவரும் ஆஜராகவில்லை.இருவருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜனவரி 21ம் தேதிக்கு விசாரணையை குடும்ப நல கோர்ட் தள்ளி வைத்தது. இருவரும் கோர்ட்டில் ஆஜராவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. நடிகர் பிரபுதேவாவும், மனைவி லதாவும் நேற்று திடீரென குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தனர்.இருவரும் சேர்ந்து பரஸ்பர விவாகரத்து கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:எங்களுக்கு 1995ம் ஆண்டு ஆகஸ்டில், இந்து முறைப்படி திருமணம் நடந்தது. எங்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் பசவராஜு, 2008ம் ஆண்டு டிசம்பரில் இறந்தான். 2003ல் ரிஷி ராகவேந்திரா தேவா, 2008ம் ஆண்டு ஜனவரியில் ஆதி தேவா பிறந்தனர். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சேர்ந்து வாழ்வதில் இருவருக்கும் கஷ்டம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்கிற நிலைக்கு வந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். எங்களை சேர்த்து வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் பலனளிக்கவில்லை. எனவே, பரஸ்பர விவாகரத்து கோருகிறோம்.குடும்ப நல கோர்ட்டில் நான் (லதா) தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெறுகிறேன். மனம் ஒப்புதலின்படி இந்த மனுவை நாங்கள் தாக்கல் செய்கிறோம்.

எனக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தருவதற்கு பிரபுதேவா ஒப்புக் கொண்டுள்ளார். டாடா இனோவா கார், மகேந்திரா கார் தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். சென்னை திருமங்கலத்தில் இடம், 500 சதுரடியில் கட்டப்பட்ட கட்டுமானத்தை எனக்கு தருவதாக பிரபுதேவா ஒப்புக் கொண்டுள்ளார். பிப்ரவரிக்குள் ஐந்து லட்ச ரூபாய், சாட்சியம் அளிப்பதற்கு முன் ஐந்து லட்ச என மொத்தம் 10 லட்ச ரூபாய் தருவதற்கு பிரபுதேவா சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால், எதிர்காலத்தில் ஜீவனாம்சம் நான் கோர மாட்டேன் என உறுதியளிக்கிறேன்.இரண்டு குழந்தைகளுக்கும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொத்துக்களை நான் (பிரபுதேவா) எழுதி வைக்கிறேன்.

அவர்களுக்கு மேஜர் வயது வரும் வரை நானும், லதாவும் பொறுப்பாளர்களாக இருப்போம். அதில் கிடைக்கும் வருவாயை இருவரும் சமமாக பிரித்து கொள்வோம். (22 சென்ட் இடம், வீடு மற்றும் கட்டடம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது)உயர்கல்வி முடிக்கும் வரை, குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவச் செலவை பிரபுதேவா ஏற்க வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கும், ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் கொண்டாபூர் கிராமத்தில் உள்ள, வீடுகள் மற்றும் நிலங்களை பிரபுதேவா எழுதி வைக்கிறார். அவர்கள் இருவரும் மேஜர் வயது வரும் வரை, இந்த சொத்துக்களுக்கு பிரபுதேவா தான் பொறுப்பாளராக இருப்பார்.எங்களுக்குள் உள்ள இந்த ஏற்பாடுகள், பரஸ்பர விவாகரத்தை கோர்ட் வழங்கிய நாள் முதல் அமலுக்கு வரும். இரண்டு குழந்தைகளையும், விரும்பியபடி பிரபுதேவா பார்த்து கொள்ளலாம். அவர் விரும்பியபடி, குழந்தைகளை எந்த இடத்துக்கும் அழைத்து செல்லலாம். அசையும், அசையா சொத்து தொடர்பாக எந்த உரிமையும் கோர மாட்டோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

படங்கள் மற்றும் வீடியோ பார்க்க.....

http://www.thedipaar.com/news/news.php?id=22566

  • கருத்துக்கள உறவுகள்

ரம்லத்துக்கு நிம்மதி, ஒருமாதிரி மூக்கனான் கயிற்றை நயனிடம் கொடுத்திட்டா! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ரம்லத்துக்கு நிம்மதி, ஒருமாதிரி மூக்கனான் கயிற்றை நயனிடம் கொடுத்திட்டா! :icon_idea:

நயன் மூக்கணாம் கயித்தை, பிறகு யாருக்கு கொடுக்கிறதாம். பாவம் நயன், மாட்டுப் பட்டுப் போச்சுது. :lol::D:unsure:

  • தொடங்கியவர்

நயன் மூக்கணாம் கயித்தை, பிறகு யாருக்கு கொடுக்கிறதாம். பாவம் நயன், மாட்டுப் பட்டுப் போச்சுது. :unsure::lol::icon_idea:

ஹன்சிகா மோத்வானி ரெடியாக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹன்சிகா மோத்வானி ரெடியாக இருக்கிறார்.

அட..,அது வேறையா....

பிரபுதேவாவின், சுப்பிரமணியத்தை நயன் இப்பவே..... புடுங்கி எறிய வேணும்.banana_smiley_013.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.