Jump to content

ஜேர்மனி செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டி பொறாமை பதவிஆசை

எல்லோரும் தலைவராகவேண்டும்

எல்வோரும் அறிவிப்பாளர்கள்

ஆகவேண்டும் எல்லோரும் பணிப்பாளர்கள் ஆக வேண்டும்

இன்னும் பல ஆனால் எல்லோராலும் எல்லாம் முடியாது

இதனால் வருவதுதான் சங்கங்களும் சங்கடங்களும் பாதிக்கப்படுவது யார் அவர்கள்

அல்ல

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply

ஜேர்மனியில் ஓரளவாவது தகமை உள்ளவர்கள்தான் அப்போது சங்கங்களையோ அமைப்புகளையோ ஊடகங்களையோ உருவாக்கினார்கள்.. பின்னர் அதற்குள் தகமையில்லாத வான்கோழிகள் ஒன்றுமில்லாத அகதிப்பட்டத்தை கொஞ்சமாவது களிம்பு தடவி உருமாற்ற உள்ளே நுழைந்து.. போலியாக பெயர் எடுப்பதற்காக ஏதேதோ செய்யப்போய்.. ஈற்றில் சங்கமென்றால் சங்கடங்களாகிவிட்டன.. இதுதான் எனது அனுபவம்.

Link to comment
Share on other sites

எதிரியானாலும் அவனது திறமையை மதிப்போமேயானால் சங்கடங்கள் பதவி ஆசைகள் போலியான பதவி ஆசைகள் வர சந்தற்பம் இல்லாது போகிறது.

திறமைக்கு மதிப்பு கொடுப்போமேயானால் களிம்பு புhசவேண்டி வராது.

எம்மையே நாம் சில சமயங்களில் ஆளமுடியாது தோற்று விடுகிறோம். பிறகெப்படி சங்கம்...? ( உணர்வு ஆதிக்கங்களால்... கோபம் அழுகை .. வெறுமை... )

நட்புடன்

பாரதி.

Link to comment
Share on other sites

திறமைக்கு மதிப்புகொடுக்கின்ற தமிழ்சமுதாயம் என்று தான் புலம்பெயர்வாழ்வியல் சுழலில் உருவாகும் ?

Link to comment
Share on other sites

திறமைக்கு மதிப்புகொடுக்கின்ற தமிழ்சமுதாயம் என்று தான் புலம்பெயர்வாழ்வியல் சுழலில் உருவாகும் ?

வாய்ப்புக்கள் குறைவுதான்.

ஏனெனில் இங்குள்ள பல திறமைசாலிகளே தங்களை யார் என்று இனங்கண்டுகொள்ள முடியாமல் இருக்கின்றனர்.

ஏன் மற்றவர் திறமையை அழிக்கவேண்டும்?அல்லது மற்றவர்களை வளரவிடக்கூடாது என்ற மனப்பக்குவம் இன்னுமொரு திறமைசாலிக்கு வருகிறது என்றால் அது அவரிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை.

எனக்குத்தெரிந்த ஒரு பல்கலைக் கலைஞன் ஒருவர் அடிக்கடி இப்படிச் சொல்லுவார்.அதாவது ஒரு திறமைசாலியால் இன்னுமொரு திறமைசாலியை முந்திக்கொண்டு செல்ல முடியமே தவிர இன்னுமொரு திறமையையோ கலைஞனையோ அழிக்க முடியாது என்பார்.

இது முற்றிலும் உண்மை.அதாவது எப்போது திறமைசாலிகள் தங்களை தமது திறமையை முழுமையாக நம்பி தனக்கு முன்னால் இருப்பவரை விட முயற்சியுடன்,தன்னைத்தானே மெரூகூட்டி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பாரோ அப்போது அவர் மற்றவரைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டார் மற்றவர் திறமைகளை மதிக்கத் தவறவும் மாட்டார்.

எனவே முதலில் (ஏதோவொரு வகையில்) இவர்களிடம் உருவாகும், பொறாமையை உருவாக்கும் தாழ்வு மனப்பாண்மை ஒழியுமானால் சந்தியா விரும்புவது போன்று ஒரு காலம் உருவாகும்.

ஆனால்....? நடக்குமா என்று பார்த்தால்,வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • 11 months later...

þýறு t.t.n. ¦¾¡¨Ä측ðº¢Â¢ø §ƒ÷Áɢ¢ø «¸¾¢¸û Á£Ç¡öவு ±ýÈ ¿¢¸ú ¿¨¼¦ÀÈ þரு츢ýÈது.

¿£Ä À¡Š§À¡ð ÀüȢ ¸ருòதுì¸ளுõ þ¼õ¦ÀÈ þரு츢ýÈது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தகவலால் எம் உறவுகள் நன்மை அடைவார்கள் .தகவலுக்கு நன்றி. நேரம் , நாள் என்பவற்றையும் தெரிவித்தீர்கள் என்றால் வசதியாக இருக்கும் உறவுகளுக்கு

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஜேர்மனியத் தமிழரின் சட்டப்பிரச்சினையை அரசியலாக்க தமிழ்த் துரோகிகள் திட்டம் - தமிழ் தினசரி தவறான தகவல்.

( சனிக்கிழமை, 13 நவம்பர் 2004 ) ( குமரப்பா )

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உலகிலேயே முதன் முறையாகத் தமிழ்ச்சட்ட சேவைப்பிரிவு நடாத்தும் ஜேர்மனிய சட்டவல்லுநர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் எனத்தமிழ் ஊடகமொன்றில் வெளிவந்த செய்தி தவறானது என்பதை நிதர்சனம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஜேர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை அரசியலாக்க சில தமிழ்;த்தேசவிரோதிகள் முயன்று வருகின்றார்கள். தமிழ் மக்களின் பிரச்சனையைப் பயன்படுத்தித் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஜேர்மனிய ஒருங்கிணைப்பாளர் எனப்படும் ஒருவர் அரசியல் இலாபம் தேடும் நோக்குடன் அரசியல் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

கடந்த ஏழு வருடங்களாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் வழக்குகளில் பல ஆயிரம் தமிழர்களை நாடுகடத்த தீவிரமாக உழைத்த தமிழரே தற்போது தமிழ் மக்களுக்கு உதவுவது போன்ற ஒரு செயலில் இறங்கியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான கட்சியின் செல்லப்பிள்ளையான இவர் முன்னைநாள் ஜேர்மனிய பிரதி உள்துறை அமைச்சர் ஒருவர் ஊடாக பல தமிழர்களை நாடுகடத்தக் காரணமாக இருந்தவர். வறுமைக் கோட்டுக்குள் வாழும் இடம்பெயர்ந்த அகதிகளுக்கு இலவசமாக இவர்கள் எதனையும் செய்யவில்லை என்பதும் நிதர்சனத்தின் ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் வாழும் தமிழர்களும் தமிழ் தினசரி பத்திரிகைகளும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்.

¿ýÈ¢ - ¿¢¾÷ºÉõ

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கைத் தமிழர் பத்தாயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

ஜேர்மனியில் புகலிம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களில் 10 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இவ்வருடம் இது வரையும் ஆயிரம் பேர் வரை இலங்கைக்குப் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என ஜேர்மனியிலுள்ள புகலிட மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Link to comment
Share on other sites

அண்மையில் பேர்லினிலுள்ள சிறீலங்கா துாதுவராலயத்துக்கு சென்றிருந்தேன். வழமையாக அங்கு வருகை தருவோரின் அலுவல்களைக் கவனிக்க மூவர் இருப்பார்கள். அன்று ஒரு பெண்மணிதான் இருந்தார்.. வெளியே 2 ஜேர்மனியர் காத்திருந்தனர். இறுதியில்தான் தெரிந்தது.. மற்ற இருவரும் உள்ளே அவசரகால கடவுச்சீட்டுகளை தயாரித்து, ஒரு கொத்தாக அந்த இரு ஜேர்மன் அதிகாரிகளிடம் கொடுத்தனர். ஆக, திருப்பி அனுப்புதல் துரித கதியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெட்டதிலும் ஒரு நல்லது பாருங்கோ இதாலை கன யேர்மன் வாழ் தமிழர் அவசர அவசரமா பிள்ளையழுக்கு தமிழ் படிப்பிக்கினமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெட்டதிலும் ஒரு நல்லது பாருங்கோ இதாலை கன யேர்மன் வாழ் தமிழர் அவசர அவசரமா பிள்ளையழுக்கு தமிழ் படிப்பிக்கினமாம்

ஓமோம் சும்மா உப்பிடிக்கனவு காணுங்கோ. கெட்டதிலையும் ஒரு நல்லதெண்டு சொல்லிக்கொண்டே இருங்கோ. குறிப்பிட்ட விகிதமான பிள்ளைகள் தமிழ் படிக்கன்றனர். படித்துக்கொண்டிருக்கின்றனர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி புலத்திலை பாருங்டகோ ஆண்களை விட பெண்களிற்குதான் உடனை தமிழ் மறக்கிது அதிலை ஏதும் விசேட காரணம் இருக்கே???

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

யேர்மனியில் நீலக்கடவுச்சீட்டு வைத்திருப்போர் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்.

யேர்மனியிலுள்ள ஒபகவுசன் நகர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து முன்னர் அரசியல் தஞ்சம் கேட்டு நீலக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை ஒரு வருடத்திற்குத் திருப்பி அனுப்பமாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதனால் ஜேர்மனிய ஓபகவுசன் நகரத்தில் வசித்துவரும் பல நூறு ஈழத்தமிழ் உறவுகளுக்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் எத்தகைய பாதிப்புகளும் உடனடியாக ஏற்படாது என அறியமுடிகிறது. இதேநேரம் பிறமாவட்டங்கள் சிலவற்றில் தொடர்ந்தும் நீலக்கடவுச்சீட்டுள்ளோர் பல் நாடுகடத்தப்பட்டு வருகின்றமை ஈழத்தமிழ் உறவுகளால் கவனிக்கபடவேண்டுமென்று ஜேர்மனிய சட்ட உதவியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நன்றி: nitharsanam

Link to comment
Share on other sites

  • 1 month later...

கனடாவுக்கு இலவசமாக தொலைபேசியில் கதைக்க... 01015 என்ற இலக்கம் அழுத்தி பிறகு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கங்களையும் அழுத்தி கதைக்கலாம்.

கதைத்துவிட்டு என்ன என்று ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் அழுத்தி கதைத்து பார்ப்பது தானே... ஏன் மாதக்கடைசியில் பில்லோடை வரும் என்ற பயமா..?

Link to comment
Share on other sites

கதைத்துவிட்டேன். இலவசம் என்றுதான் சொல்கிறது. மற்றவர்களின் அபிப்பிராயங்களையும் கேட்கத்தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..எதுக்கும் பில் வர பாத்திட்டு சொலுங்கோ...ஒருக்கால். :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவுக்கு இலவசமாக தொலைபேசியில் கதைக்க... 01015 என்ற இலக்கம் அழுத்தி பிறகு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கங்களையும் அழுத்தி கதைக்கலாம்.

கதைத்துவிட்டு என்ன என்று ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.

கவனம் நிச்சயம் பில் வரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.