Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுமாறன் சொன்னால் சரி , நான் சொன்னால் தவறா- திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

67935211.jpg

'பிரபாகரன் வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று ஒரு பிரிவினர் சொல்லிக் கொண்டிருக்க, ‘இல்லை அவர் மீனவர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசினார் தொல்.திருமாவளவன்.‘பிரபாகரனை சாதி அடையாளத்தோடு ஒரு வட்டத்தில் சிக்க வைக்கலாமா?’எனக் கொந்தளிக்கின்றன தமிழ் அமைப்புகள்.

திருமாவளவனுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக திருமாவின் விளக்கத்தைக் கேட்டோம்.

‘‘2002-ம் ஆண்டு ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ எனும் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஈழத்திலிருந்து அழைப்பு வந்தது.எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், ஓவியர் மருது, இயக்குநர் புகழேந்தி ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தில் நடந்த அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்புகின்ற வழியில் பிரபாகரன் அவர்களை வன்னியில் சர்வதேச தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம்.

அன்று அவரோடு மத்திய உணவு சாப்பிட்டோம். அவருடைய சாப்பாட்டுத் தட்டிலிருந்து ஒரு கோழி இறைச்சித் துண்டை என் தட்டில் வைத்தார். ‘நான் இறைச்சி சாப்பிடுவதில்லை அண்ணா’ என்று சொன்னேன். அவர் அதிர்ச்சியடைந்தவராய் என்னைப் பார்த்து ‘நீங்கள் என்ன சைவ சிறுத்தையா?’ என்று கேட்டார். அனைவரும் சிரித்தோம். ‘இறைச்சி-யெல்லாம் சாப்பிட வேண்டும். அதுதான் உங்கள் உழைப்புக்கு சரியாக இருக்கும்’ என்றும் சொன்னார். ‘எனக்கு சிறுத்தை என்றால் ரொம்பப் பிடிக்கும்.அதனால் ‘சிறுத்தை சிறப்புப் படை அணி’என்று உருவாக்கியுள்ளோம்’ என்று சொன்னார்.

இவ்வளவு கடுமையான களத்திலும் இவ்வளவு நகைச்சுவை உணர்வோடு இருக்கிறாரே என்று வியந்து போனேன்.நாங்கள் கிளம்பும்போது அங்கிருந்த ஒரு தோழர் என்னிடம் வந்து ‘நாளை காலை அண்ணன் உங்களை தனியாகப் பார்க்க விரும்புகிறார்’ என்று சொன்னார். அருகில் இருந்த அண்ணன் பிரபாகரனைப் பார்த்தேன்.அவரும் அதை ஆமோதிப்-பதைப் போல புன்னகைத்தார்.

மறுநாள் காலையில் பிரபாகரனைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். முதல்நாள் நான் அண்ணனிடம் கொடுத்திருந்த எங்கள் கட்சியின் ‘தாய்மண்’ இதழ்களை அவர் படித்து விட்டு வந்திருந்தார். ‘தாய்மண் இதழ்களைப் படித்து இரவெல்லாம் எனக்கு மன உளைச்சலாக இருந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் சாதி அவலங்கள் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.தமிழ்நாட்டுத் தலைவர்கள் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்கள்?’ என்று கேட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிலவும் சாதிப் பிரச்னைகளைப் பற்றி நெடுநேரம் பேசினார். புலிகள் இயக்கம் சாதி அடையாளமே இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும்,சாதி வெறியர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கி வருவதாகவும் கூறி சில நிகழ்வுகளையும் கூறினார்.

அப்போது, ‘தொடக்கத்தில் என்னை ஒரு ‘கரையாளர்’ என்ற அளவில்தான் பார்த்தார்கள்.என்னுடைய திருமணத்திற்குக் கூட எதிர்ப்பு வந்தது. இப்போது ஈழத்தில் அப்படியொரு நிலை எதுவும் இல்லை’ என்று மிகுந்த உருக்கத்தோடும், கொதிப்போடும் பேசினார்.

ஒரு மணி நேர உரையாடலில் அவருடைய ஆவேசமான கருத்துகளையும்,அறிவுரைகளையும் ஒரு பள்ளி மாணவனாக அமைதியாக இருந்து கேட்டுக் கொண்டேன்.கடைசியாக விடைபெறும் போது அவரது மார்போடு என்னை கட்டி அணைத்து ‘இங்கு உங்களுக்காக ஓர் அண்ணன் இருக்கிறேன்.பெரிய மக்கள் திரள் உங்கள் பின்னால் இருக்கிறது. என்றைக்கும் எங்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு’ என்றெல்லாம் உணர்ச்சி பொங்க எனக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

இந்தத் தகவலைத்தான் கடந்த டிசம்பர் 11-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை மாநாட்டில் பேசினேன்.உங்களில் ஒருவர்தான் அண்ணன் பிரபாகரன். அவர் மீனவ சமூகத்தின் கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர். எனவே, உங்கள் தாழ்வு மனப்பான்மையை உதறி எறிந்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடை போடுங்கள்’என்று அந்த மேடையில் பேசினேன்.

அதை இப்போது ஒருமாதம் கழித்து பிரச்னை ஆக்குகிறார்கள். ‘எங்களிடம் பேசாத பிரபாகரன், திருமாவளவனிடமா இப்படியெல்லாம் பேசியிருப்பார்?’ என்பதிலிருந்து அவர்கள் என்ன மனநிலையிலிருந்து இந்த வாதத்தை வைக்கிறார்கள் என்பதை நேர்மையானவர்கள் புரிந்துகொள்வார்கள்.

சாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராடுகிற ஒருவனிடம்தான் சாதிச் சிக்கல்களைப் பற்றி பேசமுடியும். அதனால்தான் அண்ணன் பிரபாகரன் என்னிடம் மட்டும் தன் சாதி குறித்துப் பேசியிருக்கிறார் என்று நம்புகிறேன்.

இல்லாத செய்திகளைக் கூறி ஒரு மகத்தான போராளியை கொச்சைப்படுத்தும் அளவுக்கு அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறைகளை கொண்டவன் அல்ல நான். அவர் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், மீனவர்கள் அங்கு தீண்டத்தகாத சமூகம்தான் என்றும், அதனாலேயே பிரபாகரனின் தலைமையை ஏற்றுக்கொள்ள சிலர் மறுக்கிறார்கள் என்றும் 2001 ஜனவரி ‘தலித் முரசு’ இதழில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கூறியிருக்கிறார்.

பழ.நெடுமாறன் போன்றவர்கள் இங்கு எது சொன்னாலும் சரி.எதைச் செய்தாலும் சரி.18 மாதங்கள் பொடாவில் சிறைப்படுத்தியவர், விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கச் சொன்னது நான்தான் என்று மார்தட்டிக் கொள்கிற, பிரபாகரனை இந்தியாவிற்கு சிறைபிடித்துக் கொண்டுவந்து தூக்கிலிட வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய, செஞ்சோலை சிறுமிகளை குண்டுவீசி படுகொலை செய்தபோதும் ஒரு பெண்மணி என்ற முறையிலும் கண்டனம் தெரிவிக்காதவர்தான் செல்வி. ஜெயலலிதா.என்னை குறைசொல்கிறவர்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள்.இவர்களின்மனநிலையே இப்படி இருக்கும்போது என்னை இவர்கள் விமர்சிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை’’ என சிரித்தபடியே முடித்தார் திருமாவளவன்.

படங்கள்: ஞானமணி

- ப.ரஜினிகாந்த்

-குமுதம் ரிப்போட்டர்

-குமுதம் ரிப்போட்டர்

எதோ தலைவர் புண்ணியத்தில் உங்களுக்கு வாக்குகள் கிடைக்க வாழ்த்துக்கள்......

நீங்கள் எல்லாம் போராட்ட அரசியலைப்பற்றி கதைக்கிறதுக்கு தகுதி இருக்கோ தெரியாது....

தலைவர், உங்களை எல்லாம் அழைத்து விருந்து வைத்து அரசியல் பேசினாரே அதுதான் அவர் விட்ட மிக பெரிய பிழை... :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜில்லது கருத்துடன் ஒத்துப்போகிறேன். தலைவர் பெயரைச் சொல்லி வாக்குகளை எண்ணப்பாக்கினம். முள்ளிவாய்கால் சிங்களவனுக்கு மட்டுமல்ல தமிழநாட்டு அரசியல்வாதிக்கும் வாழ வழ்கை அமைத்துக்கொடுக்குது

ஜில்லது கருத்துடன் ஒத்துப்போகிறேன். தலைவர் பெயரைச் சொல்லி வாக்குகளை எண்ணப்பாக்கினம். முள்ளிவாய்கால் சிங்களவனுக்கு மட்டுமல்ல தமிழநாட்டு அரசியல்வாதிக்கும் வாழ வழ்கை அமைத்துக்கொடுக்குது

இவர்களை நம்பி இருந்த படியால் தான் நட்டாற்றில் விட்டார்கள். தமிழக கட்சிகள் செய்த பிழை ,பிழைப்பு எங்கள் வாழிவையே காவு கொண்டு அடிமை யாக்கி விட்டது..

தமிழகம் விழிப்பாக இருந்திருந்தால் இவ்வளவு அழிவையும் தந்திருக்க மாட்டார்கள்.

தமிழகம் காஸ்மீராக மாறுவதே ஒரே வழி. அங்குள்ள சக்திகளை ஊக்குவிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புலிகளை தூக்கில் இடவேண்டும்" என்று கதையாய் சொன்னவள் பாவியாம்.

புலிகளை தூக்கில் ஏற்றிய கரங்களை (கலைஞர்) அணைத்து முத்தம் கொடுப்பவன் சொல்கின்றான்!

திமுகவிற்கு, கனிமொழி வேசம் அம்மணப்பட்டதால், திருமாவேசத்தை றொம்பவே நம்பி இருக்கின்றார்கள், தமிழ் உணர்வாளர்களின் வாக்கருளைப் பெற.

திருமா! திமுகவின் நிழல்கூட தமிழனுக்கு விசம்தான்.

திருமா! திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருப்பவனிடம் இருக்கும் தமிழ் உணர்வு, மகிந்தாவிடம் சரண்புகுந்தவனிடம் இருக்கும் தமிழ் உணர்வை விட யோக்கியமானது அல்ல?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் நின்றிருந்தால் இவரையும் கொன்றிருப்பேன் என்று மகிந்த சொன்னபோது பதில்வார்த்தை பேசத்தெரியாது கூனிக்குறுகி பல்லிளித்து நின்றவர் பிறகு மீனவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை பற்றி பாடம் எடுத்தாராம்..! :rolleyes: விடாதீங்கப்பு ரீலு..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.