Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின் உத்தியோகப்பற்றற்ற அமெரிக்க விஜயத்தின் புதிய திடுக் தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் உத்தியோகப்பற்றற்ற அமெரிக்க விஜயத்தின் புதிய திடுக் தகவல்!

சனி, 22 ஜனவரி 2011 16:18

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றமை குறித்து பல்வேறு தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்கம் அந்த விஜயத்தினை ஜனாதிபதியின் தனிப்பட்ட விஜயம் என கூற பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.

எனினும் அனேகாரின் கருத்து, அது அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த திடீர் விஜயம் இடம்பெற்றது என்பது.

இதுதொடர்பாக நேற்றைய தினம் வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அன்றாட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுகுறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் பிலிப்ஸ் ஜே. க்றோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட விஜயம் என ஒப்புவிக்க முயற்சிகளை மேற்கொண்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது, ஜனாதிபதி எந்தவொரு அமெரிக்க இராஜாங்க அதிகரிகளையும் சந்திக்கவில்லை. இங்கையின் முன்னாள் தூதுவரும் தெற்காசியாவுக்கான பிரதிச் செயலாளர் ரொபர்ட் பிளேக் அப்போது டெக்சாஸ் நகரில் இருந்ததாகவும் அவரை சந்திக்கவில்லையா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு க்ரோல் பதிலளிக்கையில் பிளேக் அவர்கள் பல்கலைக்கழக விரிவுரை ஒன்றுக்காக அங்கு சென்றுள்ளதாகவும் தனக்கு தெரிந்த அளவில் எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களுக்கும் ஒழுங்கு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார். இவ்வாறான பல்வேறு குறுக்குக் கேள்விகளை ஊடகவியலாளர்கள் எழுப்பிய போது அதனை க்ரோல் மழுப்பியுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குகின்றமை இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளர்.

ஜனாதிபதி அவரசமாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையின் சிரேஷ்ட உறுப்பினராகக் கருதப்படும் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ரிச்சர் ஆர்மிடேஜ்ஐ சந்தித்துள்ளார்.

அத்துடன் அவரது இந்த விஜயம் தொடர்பாக குடும்ப அங்கத்தினர் எவரையும் முதலில் தொடர்புகொள்ள முடியவில்லை, அதுகுறித்து அனைத்து செயலாளர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதும் இந்த விஜயம் குறித்து பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.

ஜனாதிபதியின் பாரியார் மற்றும் முத்த மகனான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் டுபாய் நகரில் இருந்து இணைந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் அவர்கள் நேற்றைய தினம் ஹூஸ்டன் நகரில் தரை இறங்கியதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் 22 பேர் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தனிப்பட்ட விஜயம் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊடகங்கள் கூற முயற்சித்து வந்த போதிலும் அவரை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புடைய எவரும் சமூகமளித்திருக்கவில்லை.

அவருடைய உறவினரான அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தற்போது மெக்சிகொவிற்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு கலந்து கொள்வதற்காக இங்கையின் முன்னாள் தூதுவரும் தெற்காசியாவுக்கான பிரதிச் செயலருமான ரொபர்ட் பிளேக் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக சொற்பொழிவொன்றை ஆற்றியுள்ளதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.

அத்துடன் புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் நேற்றைய தினம் டெக்சாஸில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இங்கைக்கு உதவிகளை வழங்கும் சீன ஜனாதிபதி உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் தற்போது அமெரிக்காவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilcnn.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை ஆருக்கோ ஆப்படிப்பு நடக்குது.கடவுளேயெண்டு நான் நினைக்கிறமாதிரி நடந்துது எண்டால் சந்தோசம் :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை ஆருக்கோ ஆப்படிப்பு நடக்குது.கடவுளேயெண்டு நான் நினைக்கிறமாதிரி நடந்துது எண்டால் சந்தோசம் :)

என்ன நினைச்சனீங்கள் கு.மா அண்ணை?. :):)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நினைச்சனீங்கள் கு.மா அண்ணை?. :):)

கு.சா. அண்ணா, ஆப்பை பற்றி என்ன நினைச்சனீங்கள், எண்டு சொல்லுங்கோ ப்ளீஸ். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நான் ஒண்டும் சொல்லமாட்டன்.

ஏனெண்டால் ...நான் சொல்லுறதொண்டும் இப்ப பலிக்குதுதில்லை.

ஆனால் அது நடக்கோணும்...நடக்கும்.....அவங்கள் முதல்லை அழியோணும் ...சிதறோணும்.அப்பதான் எங்களுக்கு விடிவு :(

இப்ப நான் ஒண்டும் சொல்லமாட்டன்.

ஏனெண்டால் ...நான் சொல்லுறதொண்டும் இப்ப பலிக்குதுதில்லை.

ஆனால் அது நடக்கோணும்...நடக்கும்.....அவங்கள் முதல்லை அழியோணும் ...சிதறோணும்.அப்பதான் எங்களுக்கு விடிவு :(

இந்தியா தானே அது....?? :) :) :)

அதறுது பதறுது கதறுது எண்டு கவிஞர் மாதிரி எழுதுறீயள்....

Edited by தயா

அதறுது பதறுது கதறுது எண்டு கவிஞர் மாதிரி எழுதுறீயள்....

அது என்ன கவிஞர் மாதிரி .....அவர் கவிஞரே தான் இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை ஆருக்கோ ஆப்படிப்பு நடக்குது.கடவுளேயெண்டு நான் நினைக்கிறமாதிரி நடந்துது எண்டால் சந்தோசம் :)

நீங்கள் வேற அண்ணா அவன் எப்படியாவது மகிந்தவை தப்ப வைக்கப் பாடுபடுகிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.