Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ

[ Tue,Feb 22, 2011, 01:40 pm ]

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் முன் வைத்த எந்தவொரு கோரிக்கைகளும் எந்தவொரு அடிப்படையிலும் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். செய்தி ஆசிரியர்கள் இன்று காலை சந்தித்து கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், இதன்போது பொருளாதார பிரச்சினை, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை மார்ச் 1 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

thaalamnews.com

  • கருத்துக்கள உறவுகள்

பல கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் நிராகரித்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைப் பற்றி பேச்சுவார்த்தை செய்கின்றது? சிலவேளை தமிழர்களை எப்படி கட்டம் கட்டமாக சிங்களவர்களாக மாற்றுவது என்று கூட்டுத்திட்டம் போடுகின்றார்களா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

பல கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் நிராகரித்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைப் பற்றி பேச்சுவார்த்தை செய்கின்றது? சிலவேளை தமிழர்களை எப்படி கட்டம் கட்டமாக சிங்களவர்களாக மாற்றுவது என்று கூட்டுத்திட்டம் போடுகின்றார்களா? :blink:

அதற்கு டக்களஸ் இருக்கிறாரே. பிறகு எதற்கு கூட்டமைப்பை. வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடாத்துகிறோம் என்று இரு சாராரும் படம் காட்டும் நிகழ்வு தான் இந்த சந்திப்புக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு டக்களஸ் இருக்கிறாரே. பிறகு எதற்கு கூட்டமைப்பை. வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடாத்துகிறோம் என்று இரு சாராரும் படம் காட்டும் நிகழ்வு தான் இந்த சந்திப்புக்கள்.

படம் வெளிநாட்டவருக்கா அல்லது வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வாழும் தமிழர்களுக்கா?

கடந்த இரண்டு வருடங்களாக எதையும் உருப்படியாகச் செய்யாதவர்கள், இனி என்னதான் செய்யப்போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் வெளிநாட்டவருக்கா அல்லது வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வாழும் தமிழர்களுக்கா?

கடந்த இரண்டு வருடங்களாக எதையும் உருப்படியாகச் செய்யாதவர்கள், இனி என்னதான் செய்யப்போகின்றார்கள்.

கிருபன் இது சரியான கேள்வியா?

இதே கேள்வியை தங்களை நோக்கி வீசுங்கள் முதலில்.

என்ன பதிலோ அதுதான் தமிழரது பதில் ராஜபக்ஸவுக்கு...... :(

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இது சரியான கேள்வியா?

இதே கேள்வியை தங்களை நோக்கி வீசுங்கள் முதலில்.

என்ன பதிலோ அதுதான் தமிழரது பதில் ராஜபக்ஸவுக்கு...... :(

கேள்வியை கேட்டுப் பார்த்த பின்னர்தான் பதிந்தேன்.

கூட்டமைப்பும் மகிந்த அரசும் இரு தடவை சந்தித்தாயிற்று, அடுத்த வாரமும் சந்திக்கப் போகின்றார்கள். ஆனால் மகிந்த யுத்த காலத்தில் புலிகளால் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படமாட்டாது என்று சொல்லுகின்றார். தமிழீழத்தை விட்டுவிட்டாலும், தமிழர்களின் நியாயமான பல கோரிக்கைகள் யுத்த காலத்தில் வைக்கப்பட்டிருந்தன. எனவே அரசியல் ரீதியாக பேச்சுக்களை மேற்கொள்ளாமல், பொருளாதாரம் எதிர்கால நடவடிக்கைகள் என்றெல்லாம் "கதை"ப்பது, புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார உதவிகளைப் பாவித்து சிங்களவர்களை தமிழர்களின் தாயகப் பகுதிகளை கபளீகரம் செய்ய உதவுவதிலேயே போய்முடியும். எனவே கூட்டமைப்பு தமிழர்களது பதிலை ராஜபக்ஸவுக்கு ஒருபோதும் சொல்லப் போவதில்லை (ராஜபச்ஸ தமிழர்களின் பதிலை எதிர்பார்த்தா அரசாங்கம் நடாத்துகின்றார்!)

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு இவ்வளவு பலம் இருக்கா...?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு இவ்வளவு பலம் இருக்கா...?

நன்றி

மக்கள் கூட்டமைப்புக்குத்தானே வாக்களித்தார்கள். நீங்கள் கூட அங்கிருந்தால் அவர்களுக்கு வாக்குத்தேடிப் பிரச்சாரம் செய்திருப்பீர்கள். வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் பலம் எப்படி என்று தெரியவரும்தானே!

மக்களிடம் வாக்கைப் பெற்றுக்கொள்ள வீர வசனங்கள் பேசுவதும், மகிந்தமுன்னர் பெட்டிப் பாம்பாக நிற்பதும் வழமையான விளையாட்டுக்கள்தானே. மக்களுக்கும் வேறு தெரிவுகள் இல்லாததால்தான் இவர்களை தம்முதுகில் சவாரிவிட அனுமதிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்

மக்களிடம் வாக்கைப் பெற்றுக்கொள்ள வீர வசனங்கள் பேசுவதும், மகிந்தமுன்னர் பெட்டிப் பாம்பாக நிற்பதும் வழமையான விளையாட்டுக்கள்தானே. மக்களுக்கும் வேறு தெரிவுகள் இல்லாததால்தான் இவர்களை தம்முதுகில் சவாரிவிட அனுமதிக்கின்றார்கள்.

நான் மட்டுமே தேசியப்பற்றாளன்

மற்றவன் எல்லாம் தேசத்துரோகி என்பதற்கும் தங்களது இந்த கருத்துக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

படம் வெளிநாட்டவருக்கா அல்லது வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வாழும் தமிழர்களுக்கா?

கடந்த இரண்டு வருடங்களாக எதையும் உருப்படியாகச் செய்யாதவர்கள், இனி என்னதான் செய்யப்போகின்றார்கள்.

கூட்டமைப்பினர் வெளிநாட்டில் வாழும் தமிழருக்கு படம் காட்ட மாட்டார்கள்.அவசியமும் இல்லை. வரும் உள்ளூராட்சி தேர்த்தலுக்கு தமது வாக்கு வங்கியை நிரப்ப காலம் காலமாக காட்டும் படம் காட்டல் தான்.இது. இம்முறை சற்று தூக்கல்.

மகிந்தவின் படம் காட்டல் வெளிநாடுகளில் இருந்து பெறும் உதவிகள், கடன் போன்றவற்றை பெறுதல். இதன் மூலம் தனது பையை நிரப்புதலும் , தெற்கை மேம்படுத்தலும்.மேலும் புலிகளின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற மாட்டேன் என்று தன்னை புறக்கணித்த புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு சவாலும் விடுவது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டுமே தேசியப்பற்றாளன்

மற்றவன் எல்லாம் தேசத்துரோகி என்பதற்கும் தங்களது இந்த கருத்துக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

அப்படி நீங்கள் எண்ணினால் அப்படியே இருக்கட்டும்.

நான் சொல்ல வருவது, கூட்டமைப்பு வெறும் உதட்டளவில்தான் தேசியத்தை தூக்கிவைத்திருக்கின்றது. மற்றும்படி இந்தியாவின் சொல்லையும், இந்தியாவின் வற்புறுத்தலால் இராஜபக்ஸவின் சொல்லையும் கேட்டுத்தான் நடக்கவேண்டிய நிலையில் உள்ளது. எனினும் தேர்தல் வரும்போது மக்களைக் கவர தேசிய முகத்தைக் காட்டும். மக்களும் அவர்கள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் தெரிந்த பேயைக் கட்டி வாழ்வதே மேல் என்று அவர்களைத் தேர்வு செய்வார்கள். அவ்வளவுதான்.

புலிகளின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற மாட்டேன் என்று தன்னை புறக்கணித்த புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு சவாலும் விடுவது போலுள்ளது.

உண்மைதான்.

கூட்டமைப்பை ஏன் குறை கூறுவான். ராஜபக்ஷவினாலேயே எதுவும் செய்துவிட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.