Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன் சென்னையில் கைது மீண்டும் வந்தால் அனுமதியளிப்போம்- இலங்கை அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன் சென்னையில் கைது மீண்டும் வந்தால் அனுமதியளிப்போம்- இலங்கை அரசு Top News

[Tuesday, 2011-02-22 10:16:00]

சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன் இலங்கை அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பார்வதியம்மாளின் உருவப்படத்துடன் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாகச் சென்ற போது கைது செய்யப்பட்டார்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் அவரது உருவபொம்மையையும் எரித்தனர்.

இதையடுத்து சிறிலங்கா துணைத் தூரதரகத்தை முற்றுகையிடச் சென்ற திருமாவளவன் உள்ளிட்ட 300 இற்கும் அதிகமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தமிழ்நாடு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

இதேளை,கொழும்பு வந்த திருமாவளவன் அரசியல்வாதி என்றோ, அவர் பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வில் பங்கேற்க வந்தார் என்பது குறித்தோ தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் இலங்கை குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா. இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த திருமாவளவன் இலங்கை அதிகாரிகளால் வந்த விமானத்திலேயே சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா,

�யாழ்ப்பாணத்தில் மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் அங்கு செல்வது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதாலேயே திருமாவளவன் தலைமையிலான குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் அவர்கள் அரசியல்வாதிகள் என்றோ , அவர்கள் பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வில் பங்கேற்க வந்தனர் என்றோ எமக்குத் தெரியாது.

இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர்கள் திரும்பி வந்தால் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்� என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வுகள் ஆரம்மாவதற்கு சற்று முன்னதாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டு திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில்- இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான அவரை அரசியல்வாதி என்று தெரியாது என இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithy.com

திட்டமிட்டு திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில்- இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான அவரை அரசியல்வாதி என்று தெரியாது என இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது கூட தெரியாத இலங்கை அதிகாரிகள்

சிங்களம் செய்த இந்த நல்ல காரியத்துக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் செய்த இந்த நல்ல காரியத்துக்கு வாழ்த்துக்கள்!

என்ன நல்ல காரியம்? திருமாவளவன் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்தானே. அவரும் அவரது கட்சியினரும் தமிழீழ ஆதரவு உணர்வுடன்தானே செயற்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உதவியாளர்: என்னண்ணே.. நம்ம நிலைமை இப்பிடி ஆயிடிச்சு..! :unsure:

திருமா: உன்னையும் மேலை அனுப்பி இருப்பேன்னு அப்ப மகிந்த சொன்னப்ப எதுக்கு வம்புன்னு சும்மா சிரிச்சு வச்சேன்..! எதுக்கும் பிரியோசனம் இல்லை போலிருக்கே...! :( :( ஒருவேளை காலைத்தொட்டு கும்பிட்டிருந்தா இப்ப விசா குடுத்திருப்பானோ?! :unsure:

உதவியாளர்: அடுத்த வாட்டி ட்ரை பண்ணுங்கண்ணே..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உதவியாளர்: என்னண்ணே.. நம்ம நிலைமை இப்பிடி ஆயிடிச்சு..! :unsure:

திருமா: உன்னையும் மேலை அனுப்பி இருப்பேன்னு அப்ப மகிந்த சொன்னப்ப எதுக்கு வம்புன்னு சும்மா சிரிச்சு வச்சேன்..! எதுக்கும் பிரியோசனம் இல்லை போலிருக்கே...! :( :( ஒருவேளை காலைத்தொட்டு கும்பிட்டிருந்தா இப்ப விசா குடுத்திருப்பானோ?! :unsure:

உதவியாளர்: அடுத்த வாட்டி ட்ரை பண்ணுங்கண்ணே..! :wub:

நல்லாய் சொன்னீங்கள் டன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த திருமாவளவன் இலங்கை அதிகாரிகளால் வந்த விமானத்திலேயே சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

பார்வதியம்மாளை சென்னையில் வைத்து மத்திய அரசும் கருணாநிதி அரசும் திருப்பி அனுப்பியற்குப்

பதிலடியாக....... இலங்கை அரசு நடந்து கொண்டுள்ளது போலை உள்ளது.

இதனால், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் கருணாநிதிக்கும் நோஸ்கட் கொடுக்கப் பட்டுள்ளது.

Edited by தமிழ் சிறி

அவர் உயிருடன் நோய் வாய்ப்பட்டு இருக்கும் போது கவனியாமல் இறந்த பின் மட்டும் ஏன் போய் பார்க்க போறியள்?

எங்கள் பார்வதியமமாளை வைத்து இனி மேலும் நீங்கள் அரசியல் செய்ய முடியாது. அப்பிடி செய்ய நீங்கள் எடுத்த கடைசி முயற்சியாகிய இதுவும் தோல்வி.

இந்தியாவில் உங்கள் பிழைப்பை பார்த்து கொள்ளுங்கள். ஈழ தமிழன் இருக்கும் உலகத்தின் எந்த மூலைக்கு நீங்கள் போனாலும் உங்களுக்கு கிடைக்க போவது செருப்படிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொல்.திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டத்திற்கு புதுமையான விளக்கம் தரும் குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம்!

Posted by admin On February 23rd, 2011 at 5:28 am

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. உட்பட்ட குழுவினர் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளுக்காகவே இலங்கை வந்தனர் என குடிவரவு-குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரியாது என அதன் கட்டுப்பாட்டாளர் தயானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்னையிலிருந்து வந்த தொல்.திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டமை குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் இந்திய மீனவர் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசியல்வாதிகள் யாழ். குடாநாட்டுக்குச் சென்றால், அது மேலும் அதிகரிக்கும் என்ற காரணத்தினாலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தொல்.திருமாவளவன் உள்ளிட்ட குழுவினர் மீண்டும் வந்தால், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இதேவேளை, தாம் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளேன் என குடிவரவு-குடியகல்வு அதிகாரிகளிடம் தெளிவாக எடுத்துக் கூறியதாக தொல்.திருமாவளவன் சென்னை திரும்பியதும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.