Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரபு நாடுகளின் கொந்தழிப்பு இலங்கையினை எவ்வாறு பாதிக்கும்

Featured Replies

வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2011

போர்க்குற்றம், பொருளாதார நெருக்கடி, வெள்ளப்பெருக்கு ,உள்ளூர் அரசியல் அழுத்தம் என அல்லாடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு இப்போ இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருப்பது அரபு நாடுகளின் கொந்தழிப்பு.

.

யார் எதிர்த்தால் என்ன எமக்கு இருக்கவே இருக்கின்றது அரபு நாடுகள் அவர்கள் கேட்டால் வீசி எறிவார்கள் என்ற கோதாவில் மஹிந்த மடிச்சுக்கட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால் நிலமை இப்படி வரும் என்று நினைக்கவில்லை.

.

மஹிந்தவின் கஸ்டகாலத்திற்கு அரபு நாடுகளில் திடீர் கொந்தழிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன. இது தன்னியல்பாக வந்தால் பிரச்சினை இல்லையே ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற இலங்கையுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கும் வல்லரசு பிராந்தியங்களின் தூண்டுதலினாலேயே ஏற்பட்டு வருகின்றது.

.

அரபு நாடுகளான ஓமான், லிபியா,ட்யூனீசியா,எகிப்து, ஏமன் ஆகிய நாடுகளிலும் ஏன் ஈரானிலும் கூட ஏற்பட்ட எழுச்சி ஆர்ப்பாட்டங்களால் எண்ணெய், உணவு, வேலைவாய்ப்பு என பல்வேறு வழிகளில் உதவி பெற்று வந்த இலங்கையும் இலங்கை போன்ற நாடுகளுக்கும் தான் பெரும் பிரச்சினை.

.

அரபு நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாடு திரும்பவேண்டிய நிலை

+

இலங்கைக்கு எண்ணெய் மானியம் மற்றும் எண்ணெய் கடன் வழங்குவதில் தடைகள்

+

நிதி உதவிகளில் தடைகள்

+

இலங்கையில் கைத்தொழிலிற்கான பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் தடங்கல்

+

உணவுப்பொருள் உணவு மானியங்களைப்பெறுவதில் தடங்கல்

+

இலங்கை அபிவிருத்திக்கு பங்களிக்கும் ஈரான், லிபியா, போன்ற நாடுகளின் பொருளாதார தடங்கல்

+

இவ்வாறாக பல நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

+

இந்த நெருக்கடிகளினால் தமக்கு பெரும் ஆபத்து என இன்று மஹிந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பீலிக்ஸ் பெரேராவும் ஒத்துக்கொண்டுள்ளார். அவர் இன்று யா எலவில் நடந்த கூட்டமொன்றில் பேசுகையில்

இன்று முழு அரபும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. சூடான் விழுந்தது. அடுத்து ஓமான் இன்று விழுந்துள்ளது. லிபியா விழும் தருணத்தில் உள்ளது. எண்ணெய் வளங்கள் உடைய இவ்வாறான நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் உள்ளது.

அந்த நாடுகளை வீழ்த்தி மீண்டும் ஜனநாயக ரீதியில் அந்த எண்ணெய் வளத்தை பெற முயற்சிக்கின்றனர். இதனால் இலங்கைக்கும் ஆபத்து உள்ளது என கூறியுள்ளார்.

+

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சிபார்சின்படியே இனி இலங்கைக்கு எல்லாம் என்ற நிலமை வர சிறிதுகாலம் எடுக்காது. ஏனென்றால் அரபு நாடுகளில் ஜனனாயக ரீதியில் வரப்போகின்ற புதிய அரசுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க சார்பானதாக இருக்கவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

+

அத்துடன் மனித உரிமை மற்றும் போர்க்குற்றம் தொடர்பிலும் அரபு நாடுகளில் எழுச்சியினையும் அழுத்தங்களையும் காட்டி மஹிந்த அரசினை சர்வதேசம் மிரட்டி வருகின்றது. இந்த சூழலில் சீனா எவ்வாறு அரபு நாடுகளுக்கு இடர் ஏற்படும் போது மெளனம் காத்துவருகின்றதோ, எவ்வாறு சூடானில் அமெரிக்க தலையீட்டின் போது மெளனம் காத்து நின்றதோ அப்படித்தான் இலங்கைக்கும் அமைதி காக்கலாம் என்ற பீதியும் இலங்கைக்கு உண்டு.

+

ஆகவே நிச்சயமாக மஹிந்த அரசு அனைத்து நெருக்கடிகளையும் சமாளிக்க ஐரோப்பிய, அமெரிக்க அல்லது மீண்டும் இந்தியாவின் காலடியில் வீழவே வாய்ப்பிருக்கின்றது.

அப்படி இல்லாவிடின் உள்ளூரில் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் அரசியல் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புக்கள் எழலாம்.

நெருக்கடிகளில் இருந்து மீழ யாருடைய காலில் மஹிந்த விழுவார்?

ஈழ நாதம்

சிங்களத்தின் ஒரு பெரும் பொருளாதார வலு, மத்திய கிழக்கில் வேலை செய்யும் இலங்கையர்கள். கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த வருடம் அனுப்பியுள்ளார்கள். இதில் ஏற்படும் பாதிப்பு பல மேலதிக தாக்கங்களையும் ஏற்படுத்தும் : முக்கியமாக அவர்கள் அனுப்பும் பணத்தில் தங்கியிருந்த உள்நாட்டு பொருளாதாரம்.

அடுத்து தேயிலை ஏற்றுமதியும், முதலாவது அந்நிய நட்டு செலவாணி, அதிகளவில் இந்த பிரதேசங்களுக்கு நடப்பது. இதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த மாற்றங்கள், விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாடம் என்பன நிச்சயம் ஒரு அமைதியின்மைக்கு வழிவகுக்கும்.

இந்த மாற்றங்கள், விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாடம் என்பன நிச்சயம் ஒரு அமைதியின்மைக்கு வழிவகுக்கும்.

இப்ப புலிகளும் இல்லை,புலிகள் இருந்தால் ஆவது புலி பிடிக்க காசு வேணும் என்று பிச்சை எடுக்கலாம் ....பாவம் மகிந்தா....சில நேரம் கே.பி.உதவினாலும் உதவக்கூடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.