Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எது பயங்கரவாதம் உலகின் முன் எழும் புதிய கேள்வி…

Featured Replies

பயங்கரவாத தாக்குதலுக்கு இரகசிய உத்தரவிட்ட ஆட்சித்தலைவர் முபாரக்கின் கடிதமும், சிறீலங்கா பிரதமர் உரையும் ஓர் ஒப்பீடு..

இன்று வெளியாகியுள்ள இரண்டு செய்திகள் பயங்கரவாதத்தின் முகமூடிகளை கிழித்தெறிவதாக இருக்கின்றன. ஒன்று சிறீலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்தினா ஆற்றிய உரை மற்றையது எகித்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக்கின் இரகசிய கடிதம். இந்த இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மையான பயங்கரவாதமா ? இல்லை பம்மாத்து பயங்கரவாதமா ? உலக ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்ற கேள்வி எழும் .

பொட்டம்மானின் சகாவின் உதவியுடன் தமிழகத்தில் புலிகளின் ஆயுதப் பயிற்சி மூன்று முகாம்களில் நடைபெறுவதாகக் கூறியுள்ளார் சிறீலங்கா பிரதமர். அத்தோடு தமிழக தலைவர்களை குறிவைத்து இது நடப்பதாகவும் கூறியுள்ளார். இவருடைய உரைக்கு கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க இப்படியான செய்திகள் மூலமாக மக்களை குழப்ப வேண்டாம் என்று கேட்டுள்ளார். ரஜீவ்காந்தி கொலை வழக்கு சந்தேக நபரான கே.பியை அரவணைத்து வைத்துக் கொண்டு, இந்தியாவில் புலிகள் முகாம்பற்றி எதற்காக பேசுகிறீர்கள் என்றும் வினவியுள்ளார் – இது சிறீலங்கா செய்தி

இவரது பேச்சு வெளியான தருணம் எகிப்தில் சில கடிதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2005ம் ஆண்டு எகிப்திய நகரமான ஷாம் அல் ஷேக்கில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது உளவுப் பிரிவின் மூலமாக நடாத்தியது அந் நாட்டின் முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக்கே என்று அந்தச் செய்தி கூறுகிறது. ஆட்சியை விட்டு விலகிப் போவதற்கு முன்னர் அவர் எரித்த பெருந்தொகையான இரகசிய ஆவணங்களில் தப்பியுள்ள ஓர் ஆவணம் இந்த இரகசியத்தை இன்று பரகசியமாக்கியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக தாம் போராடுகிறோம் என்று உலக அரங்கிற்குக் காட்டுவதற்காக அந்த பம்மாத்து பயங்கரவாதம் அரங்கேறியுள்ளது. இது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன. பயங்கரவாதம் என்ற சொற் பிரயோகம் எப்படி தப்பாகவும், கச்சிதமாகவும் பயன்படுத்தப்பட்டு சிலரது ஆட்சிகள் நடைபெறுகின்றன என்பதற்கு எகிப்தில் ஓர் உதாரணம் கிடைத்துள்ளது. உண்மை நிரூபிக்கப்படுமானால் முபாரக் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரும்.

2001 செப் 11 உடன் ஆரம்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தற்போது மறு மதிப்பீடுகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது. வடஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளல் நடைபெறும் மக்கள் ஆர்பாட்டங்கள் பம்மாத்து பயங்கரவாத பொய்களை பரப்பி ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களை இறக்கிக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள், ஐ.நா போன்றவற்றில் இந்த பம்மாத்து பயங்கரவாதம் புதிய ஆய்வுக்கு வந்துள்ளது. அந்த விவகாரம் அடுத்த அத்தியாயமாக கிளப்பப்படுவதற்காகவே எகிப்திலிருந்து ஓர் இரகசியம் அம்பலமாக்கப்பட்டுள்ளது. இதேபாணியில் மேலும் பல உண்மைகள் வெளிவரப்போவதை இன்றைய உலக நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

மக்களுக்கு பொய்யான பயங்கரவாதத் தகவலைக் கொடுத்தார். அதை ஆதாரமாக வைத்து நாட்டை போருக்குள் மாட்டினார் என்ற கோணத்திலான விசாரணைகள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயர் மீது நடாத்தப்பட்டுள்ளன. சிறீலங்கா மட்டும் இதுபோன்ற விசாரணைகளுக்கு விதிவிலக்காக நாடல்ல. பயங்கரவாதம் என்பது மன்னிக்க முடியாத குற்றச்செயல்தான் ஆனால் பம்மாத்து பயங்கரவாதம் அதைவிட பெரிய குற்றச் செயலாகும்.

நுணலும் தன் வாயால் கெடும் – பழமொழி.

http://www.alaikal.com/news/?p=60377

  • தொடங்கியவர்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரகசிய உத்தரவிட்டது முபாரக்

பதவி விலகி ஓடிப்போன எகிப்திய முன்னாள் இராணுவ சர்வாதிகாரியான கொஸ்னி முபாரக் பதவி விலகும் இறுதித் தருணத்தில் பணத்தை மாற்றுவதில் மட்டுமல்ல, இரகசிய ஆவணங்களை எரிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்திருக்கிறார். இவரால் எரியூட்டப்பட்ட ஆவணங்கள் போக எஞ்சிய ஆவணங்கள் சில தற்போது எகிப்திய எதிரணியினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் எகிப்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி பின் லேடன் அல்ல முபாரக்கே என்று தெரிவிக்கின்றன.

கடந்த 2005 ம் ஆண்டு எகிப்தின் ஷாம் அல் ஷேக்கில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை நடாத்துவதற்கு இரகசிய உத்தரவிட்டவர் சாட்சாத் கொஸ்னி முபாரக்கே என்றும் தெரிவித்துள்ளனர். இந்த விவகரம் உறுதிப்படுத்தப்படுமானால் பாரிய சிக்கலில் முபாரக் அணி மாட்டுப்படும் என்று ஸீகல் பத்திரிகை தெரிவிக்கிறது. திரை மறைவில் ஓர் உளவுப் பிரிவை செயற்பட வைத்து, தாக்குதல்களை நடாத்துவது. பின் அதை பயங்கரவாதத் தாக்குதலாக ஊடகங்களில் பிரபலப்படுத்துவது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடாத்துகிறோமென மேலை நாடுகளை ஏமாற்றுவது, அப்பாவிகளைக் கொன்றபடி, நாட்டின் செல்வங்களை சூறையாடியபடி காலத்தை கொண்டு போவது என்ற கோட்பாட்டை எகிப்திய முன்னாள் அதிபரும் செய்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=60280

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மட்டுமா பயங்கரவாதிகள்.. பயங்கரவாதத்தை உச்சரித்துக் கொண்டு அதற்கு எதிராக போர் செய்து.. ஜனநாயகத்தை காப்பதாகப் பீற்றிக் கொள்ளும் மேற்குலக நாடுகளும் நேட்டோவும் இன்று லிபியாவில் வன்முறை மூலம் ஆட்சி மாற்றம் கோரி நிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கு உதவ முன் வந்துள்ளதோடு பிரான்ஸ் அவர்களை பகிரங்கமாக அங்கீகரித்து நிற்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம்.. கடாபி மீது தடைகளைக் கொண்டு வர சம்மதித்துள்ளது. அமெரிக்கா பிரிட்டன் படைப்பலப் பிரயோகம் குறித்து ஆலோசிக்கின்றனவாம்.

தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பு இனவாதிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்த போது அதனை பயங்கரவாதமாக உச்சரித்து தமிழர்கள் வன்முறை வழியைக் கைவிட்டு ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டி இன அழிப்புக்கு உதவி நின்றவர்கள்... இன்று லிபியாவில் அப்பாவி மக்களை குறைந்தளவு படைப் பயிற்சி அளித்து ஒரு மரபு வழி இராணுவத்தோடு சண்டை பிடிக்கவிட்டு அதனை அங்கீகரித்தும் நிற்கிறார்கள். கடாபி கொடியவரோ இல்லையோ... அது இரண்டாம் பட்சம். ஆனால் அவரும் சாக்குப் போக்கு தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் தான். அவரை அகற்ற வன்முறையை கையாள்வது பயங்கரவாதம் அல்ல... ஆனால் தமிழர்கள் தங்கள் பூர்வீக நிலத்தை மீட்டு.. உரிமையோடு வாழ நடத்திய போராட்டம் மட்டும் இவர்களுக்கு பயங்கரவாதமாகப் பட்டது ஏனோ...??!

இந்தப் பயங்கரவாதிகளை எங்கு போய் நிறுத்தி வைத்து நீதி கேட்பது. இத்தனை பேரழிவுக்கும் எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி தடை செய்த இந்த மேற்குலகம் பயங்கரவாதத்தை (வன்முறை ரீதியான போராட்டங்களை அமெரிக்க மேற்குலகம் சமீப காலமாக பயங்கரவாதமாக உச்சரித்து வந்துள்ளது) தமது தேவைக்கு ஏற்ப தூண்டிவிட்டு அங்கீகரிக்கும்... கூட்டத்திடம் யார் நீதி கேட்பது..?????????????????????!

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்றுமாம். :(:rolleyes::unsure::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை செய்பவர்கள் விடுதலைக்கு போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி தாங்கள் தப்பி விடுகிறார்கள். உலக வல்லரசுகள் என தம்மை கூறிக்கொள்பவர்கள் அழித்த, அழிக்கின்ற மக்களின் என்ணிக்கை எண்ணிலடங்காது.

ஈராக், ஆப்கானிஸ்தான் மக்களின் சுதந்திரத்தை பெற்றுத்தருவதாக கூறியவர்கள் அதே மக்களை மோதவிட்டு கூத்துப்பார்க்கிறார்கள்.போர்க்கைதிகளை வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள்.இவை எல்லாவற்றையும் செய்பவர்களே தமது மக்களின் சுதந்திரத்துக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் போடுபவர்கள் இவர்களே.

மேலும் பயங்கர ஆயுதங்களை செய்து உள்நாட்டு யுத்தம் செய்யும் நாடுகளுக்கு விற்பதன் மூலம் அதிக வருவாயை பெறுவது மட்டுமல்லாமல் அந்த நாடுகளை தமது ஆயுதங்களின் பரீட்சை களமாக்குகிறார்கள்.

http://www.aviationweek.com/aw/blogs/defense/index.jsp?plckController=Blog&plckScript=blogScript&plckElementId=blogDest&plckBlogPage=BlogViewPost&plckPostId=Blog%3A27ec4a53-dcc8-42d0-bd3a-01329aef79a7Post%3Ada4c45b6-f7ee-4030-af3f-2d937853ce32

ஐ.நா என்பது உலகின் எல்லா நாடுகளுக்கு நீதி நியாயங்களை பாரபட்சமின்றி வழங்க வேண்டிய நிறுவனம்.சிறிலங்காவில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டும் அதற்கான நீதியான ஒரு விசாரணையை ஆரம்பிக்காமல் 2 வருடத்தை இழுத்து அடித்துவிட்டு சில வாரங்களாக லிபியாவில் மக்கள் கொல்லப்பட்டதும் கண்டனக்குரல்களும் பொருளாதார தடையும் உடனடியாக நடை முறைப்படுத்துவதும் இவர்களின் பாரபட்சத்தையும் சுயநலத்தையும் காட்டவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.