Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் போட்டியிடவில்லை: மதிமுக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிடவில்லை: மதிமுக அறிவிப்ப

சென்னை, மார்ச்.20: தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுவதால் 2011 தமிழகம், புதுவை சட்டப் பேரவை பொதுத் தேர்ததில் போட்டியிடுவதில்லை என மதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தீர்மானத்தின் விவரம்:

2006 ஆம் ஆண்டு முதல், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்த மதிமுக, தற்போது நடைபெற இருக்கின்ற தமிழகம், புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில், தொகுதிப் பங்கீட்டில் எழுந்து உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கின்றது.

2006 ஆம் ஆண்டு, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, அ.தி.மு.க. அவைத்தலைவர் கா.காளிமுத்து பொதுக்கூட்டத்தின் வாயிலாகவே, அ. தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமாறு, ம.தி.மு.க.வுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் பேசும்போது, ‘கூட்டணியில் நீங்கள் எதிர்பார்க்கின்ற ஒரு கட்சி இடம் பெறும்’ என்று, அதன் பொதுச் செயலாளர் அறிவிக்கவும் செய்தார்.

2004 பொதுத் தேர்தலுக்குப் பின், தி.மு.க. தலைமையின் அணுகுமுறையால் நடைபெற்ற சில நிகழ்வுகளால் ஏற்பட்ட காரணங்களால், மதிமுக தொண்டர்களுள் 90 விழுக்காட்டினரும், தலைமை நிர்வாகிகள், முன்னணித் தலைவர்களுள் பெரும்பான்மையோரும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. இடம் பெற வேண்டும் என்று விரும்பியதன் விளைவாக, அந்தக் கூட்டணியில் இடம் பெற்றது. தமிழகத்தில் 35 இடங்களும், புதுவையில் 2 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டன.

ம.தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால், பெரும்பாலோருடைய கருத்தினை ஏற்று, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால், பொதுச்செயலாளர் மீது துளியும் உண்மை இல்லாத பழியும், நிந்தனையும், தி.மு.க. தரப்பில் இருந்து சுமத்தப்பட்டன.

அந்தத் தேர்தலில், ம.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளைக் குறிவைத்து வீழ்த்திட முனைந்த தி.மு.கழகம், தமிழ்நாட்டிலேயே மற்ற தொகுதிகளை விட, மதிமுக போட்டியிட்ட தொகுதிகளில், பெரும் பணபலத்தைப் பிரயோகித்தது. அந்தத் தேர்தலில், வைகோ 213 தொகுதிகளில், தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

6 சட்டமன்றத் தொகுதிகளில், ம.தி.மு.க. வெற்றி பெற்றது; பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் தோற்றது.

2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அ. தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று.

அதனைத் தவிர்த்து, ம.தி.மு.க.வின் நாடு தழுவிய புயல் வேகப் பிரச்சாரம், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, நடுநிலை வாக்காளர்களின் ஆதரவையும் கவர்ந்தது என்பது உண்மை. அந்தத் தேர்தலில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை.

அதற்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில், அதிமுக மேற்கொண்ட முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை மதிமுக உறுதியாக ஆதரித்துச் செயல்பட்டது.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ம.தி.மு.க வெற்றி பெற்று இருந்த தொகுதி என்றபோதும், அதிமுகதானே போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனை ஏற்றுக் கொண்டது. கம்பம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அ.தி.மு.க.வின் முடிவை, ம.தி.மு.க ஏற்றுக் கொண்டது.

ஈழத்தமிழர் பிரச்சினையில், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் உள்ளிட்ட, முக்கியமான கொள்கைகளை, ம.தி.மு.கழகம் கூட்டணிக்காக ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது இல்லை.

ஏனெனில், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், ஈழத்தமிழர் பிரச்சினையில், ம.தி.மு.க.வின் நிலைப்பாடு, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதிலும், அ.தி.மு.க. அரசால் அனுமதிக்கப்பட்டு, தூத்துக்குடியில் அமைந்து உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றுவதிலும், ம.தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது இல்லை.

அதிமுக தொண்டர்கள், ம. தி.மு.க மீதும், அதன் பொதுச்செயலாளர் வைகோ மீதும், பரிவையும், அன்பையும் தொடர்ந்து காட்டி வந்து உள்ளனர்.

நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து, அதிமுக குழுவினருடன் ம.தி.மு.க. குழு, நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது.

கடந்த முறை போட்டியிட்ட 35 இடங்களை மீண்டும் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டது.

இரண்டாவது சுற்றுப் பேச்சுகளின்போது, 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரியது.

மார்ச் 8 ஆம் நாள் நடைபெற்ற, நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போதுதான், ‘ம.தி.மு.க.வுக்கு ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும்’ என அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குறைந்தபட்சம், 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டபோதும், மார்ச் 12 ஆம் தேதியன்று, மேலும் ஒரு தொகுதி என ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாகக் கூறப்பட்டது.

மறுநாள், 13 ஆம் தேதி, அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து, 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 14 ஆம் தேதி காலை 11 மணி அளவில் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்த ஓ. பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் மார்ச் 13 ஆம் தேதி அன்று, அ.தி.மு.க. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளைக் கொடுக்க இயலாது என்றும், ஒரு தொகுதியைக் குறைத்து, ஏழு தொகுதிகளே தர முடியும் என்றும், தங்கள் கட்சித் தலைமை தெரிவிக்கச் சொன்னதாகக் கூறி விட்டுச் சென்றார்கள்.

இதன்மூலம், ம.தி.மு.க.வைப் புண்படச் செய்து, தாங்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று, அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டதை உணர முடிந்தது.

அதன்பின்னர், அதே நாளில், மாலை நான்கு மணி அளவில், ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும், வைகோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதல் நாள் கூறியபடி, 8 தொகுதிகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாக கூறினார்கள்.

15 ஆம் தேதி இரவு, அ. தி.மு.க. பொதுச்செயலாளரின் பிரதிநிதிகள், வைகோவை சந்தித்து, அதிகபட்சமாக 9 இடங்கள்தான் தர முடியும் என்று தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்கள்.

மறுநாள், 16 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில், மீண்டும் அதே பிரநிதிகள், முதல் நாள் இரவில் கூறியதையே திரும்பவும் உறுதிப்படுத்தி, இதை ஏற்றுக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட வருமாறு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அழைத்ததாகக் கூறினார்கள்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 23 இடங்கள் என்பதில் இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம்; நாங்கள் கேட்கும் 21 இடங்களைத் தருவதாக இருந்தால், உடன்பாடு குறித்துப் பேசுவோம்; அதைத் தவிர்த்து இனி பேசிப் பயன் இல்லை’ என்று கூறி விட்டார்.

அன்று மாலையிலேயே, ஏற்கனவே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 74 இடங்கள் போக, மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கும் அதி.மு.க. வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெறவில்லை என்பதை, அ.தி.மு.க. தலைமை அறிவித்தே விட்டது.

2006 ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த மதிமுகவை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திட வேண்டிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், திட்டமிட்டே உதாசீனப்படுத்தி விட்டது.

ம.தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால், 19 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில், ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும், ம.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை தாயகத்தில் சந்தித்து 12 தொகுதிகளைத் தருவதாக அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவித்தார்கள்.

ஏற்கனவே கூறியபடி, ம.தி.மு.க. கேட்கும் 21 தொகுதிகளைத் தருவதாக இருந்தால், தொகுதி உடன்பாட்டுக்கு இசைவு அளிக்க முடியும் என்று ம.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொகுதிப் பங்கீட்டில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும், தொண்டர்களின் உள்ளங்களை மிகக் கடுமையாகக் காயப்படுத்தி விட்டது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது, முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது.

அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை.

அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.

இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டி இடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு, ம.தி.மு.க. கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.

பெரியாரும், அண்ணாவும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மதிமுக, 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்; திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல்

ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=393064&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு.. ஆனால் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்கிற படிப்பினையைப் பெற்றுக்கொண்டால் சரி..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அ. தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று.

ம.தி.மு.க போட்டியிடாதது கவலைக்குரியது.அரசியல் பலமில்லாமல் எதுவும் செய்ய முடியாது. தனித்து போட்டியிட்டு தனது பலத்தை அ.தி.மு.கவுக்கு நிரூபித்து இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க போட்டியிடாதது கவலைக்குரியது.அரசியல் பலமில்லாமல் எதுவும் செய்ய முடியாது. தனித்து போட்டியிட்டு தனது பலத்தை அ.தி.மு.கவுக்கு நிரூபித்து இருக்கலாம்.

அதிமுக வுக்கு பலத்தை நிருபிக்க போனால் அது

திமுகவுக்கு சாதகமாகவே அமையும்.

ஒரு வேளை விஜயகாந் வெளியில் வந்திருந்தால் நல்லதெரு கூட்டணி வைத்திருக்கலாம்.

இந்த முடிவு தமிழின விரோதிகள் இருவருக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.