Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரணதண்டனை

Featured Replies

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள், அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. தலையை வாளினால் அல்லது வேறு முறைகள் மூலம் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், மின்கம்பத்தில் கட்டிவைத்துச் சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.

கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த மரணதண்டனை அவசியமா? ஒருவருடைய உயிரைப்பறிக்கின்ற அதிகாரத்தை சட்டம் என்ற போர்வையில் எடுக்கலாமா? ஒருவர் மரணதண்டனைக்குரிய குற்றம் செய்யும் பொழுது அதன் மூலகாரணத்தை ஆராய்ந்து மூலவேரை வெட்டுவது அந்த குற்றம் திரும்பி வராது தடுக்கும் அல்லவா? உதாரணமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவருக்கு மீண்டும் வன்புணர்வில் ஈடுபடாதவாறு இனப்பெருக்க உறுப்பை சேதம் செய்து விடுதல். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து மீண்டும் வெளியே வராதவாறு சிறையில் அடைப்பதற்கான சட்ட ஓட்டைகளை அடைத்து இறுக்குதல் என்பனவற்ரைக் குறிப்படலாம். இது பற்றிய கள நண்பர்களது கருத்துகளையும் எதிர்பர்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

------

இந்த மரணதண்டனை அவசியமா? ஒருவருடைய உயிரைப்பறிக்கின்ற அதிகாரத்தை சட்டம் என்ற போர்வையில் எடுக்கலாமா? ஒருவர் மரணதண்டனைக்குரிய குற்றம் செய்யும் பொழுது அதன் மூலகாரணத்தை ஆராய்ந்து மூலவேரை வெட்டுவது அந்த குற்றம் திரும்பி வராது தடுக்கும் அல்லவா? உதாரணமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவருக்கு மீண்டும் வன்புணர்வில் ஈடுபடாதவாறு இனப்பெருக்க உறுப்பை சேதம் செய்து விடுதல். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து மீண்டும் வெளியே வராதவாறு சிறையில் அடைப்பதற்கான சட்ட ஓட்டைகளை அடைத்து இறுக்குதல் என்பனவற்ரைக் குறிப்படலாம்.

பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரின் இனப்பெருக்க உறுப்பை சேதம் செய்த பின் உயிர்வாழ அனுமதிப்பதை விட......

நேரடியாகவே.... மரண தண்டனை கொடுப்பது வேதனை குறைந்ததாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை உண்மையில் ஒரு தண்டனையே அல்ல.அது மிகவும் அநாகரிகமான செயல் ஒரு உயிரை எங்களால் (தற்போதைய விஞ்ஞான அறிவின் அடிப்படையில்)ஆய்வு கூடத்தில் உருவாக்க முடியாது.அதை அழிக்கும் உரிமையும் எங்களுக்குக் கிடையாது.

அத்துடன் ஒரு குற்ரம் செய்தவர் இலகுவாக அதில் இருந்து விடுபட அது வழிசமைத்துக் கொடுக்கின்றது.ஒரு கொலை செய்தவனின் மனச்சாட்சி அவனைச் சித்திரவதை செய்யும்.அதே போலப் பாலியல் குற்றங்கள் செய்தவர்களையும் நீண்ட காலங்கள் சிறையில் வைத்திருப்பதன் மூலம், அவர்கள் தாங்கள் செய்ததை நினைத்து வருந்துவார்கள்.சில வேளைகளில் அவர்கள் திருந்தவும் கூடும்.அத்துடன் பல தடவைகளில் உண்மையான குற்றவாளி தப்பிப் போக, வேறொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

  • 2 years later...
  • தொடங்கியவர்

மரண தண்டனை உண்மையில் ஒரு தண்டனையே அல்ல.அது மிகவும் அநாகரிகமான செயல் ஒரு உயிரை எங்களால் (தற்போதைய விஞ்ஞான அறிவின் அடிப்படையில்)ஆய்வு கூடத்தில் உருவாக்க முடியாது.அதை அழிக்கும் உரிமையும் எங்களுக்குக் கிடையாது.

அத்துடன் ஒரு குற்ரம் செய்தவர் இலகுவாக அதில் இருந்து விடுபட அது வழிசமைத்துக் கொடுக்கின்றது.ஒரு கொலை செய்தவனின் மனச்சாட்சி அவனைச் சித்திரவதை செய்யும்.அதே போலப் பாலியல் குற்றங்கள் செய்தவர்களையும் நீண்ட காலங்கள் சிறையில் வைத்திருப்பதன் மூலம், அவர்கள் தாங்கள் செய்ததை நினைத்து வருந்துவார்கள்.சில வேளைகளில் அவர்கள் திருந்தவும் கூடும்.அத்துடன் பல தடவைகளில் உண்மையான குற்றவாளி தப்பிப் போக, வேறொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

 

இன்றைய காலகட்டங்களில் இவைகள்தான் இன்றைய உலகில் அதிகம் நடைபெறுகின்றது .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புங்கையூரன்  :)  :)  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.